Tuesday, October 22, 2013

இண்டர்நெட்டில் கரண்ட் பில் கட்டுவது எப்படி?

இண்டர்நெட்டில் கரண்ட் பில்
கட்டுவது எப்படி?

நம்மூரில் வரிசையில் நின்று ஏதேனும்
வேலையை முடிப்பது சத்திய
சோதனை மாதிரிதான். கரண்ட் பில்
கட்டணங்களை ஆன்
லைனிலேயே செலுத்துவது கஷ்டமா?
“இல்லை’ என்று சொல்லி அதற்கான
வழிமுறைகளைச் சொல்கிறார்
மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர்.
1. தமிழ்நாடு மின்சார வாரியத்தின்
இணைய தளமான www.tneb.inக்குப்
போகணும். இதன் முகப்பில் உள்ள
www.tangedco.gov.inங்கிற இணைய தளத்தைத்
தேர்ந்தெடுத்து, இதில் நம்மைப்
பதிவு பண்ணிக்குறதுதான் முதல்
ஸ்டெப்.
முதல்முறையா கட்டணம் செலுத்த
மட்டுமே ரிஜிஸ்ட்ரேஷன் தேவை.
2. இந்த இணைய தளத்தின் முகப்புப்
பக்கத்தில் உள்ள “பில்லிங் சர்வீஸ்’ங்கிற
ஆப்ஷனை நெருங்கினாலே, மேலும் சில
ஆப்ஷன்கள் அடங்கிய லிஸ்ட் தெரியும்.
3. அதில் “ஆன்லைன் பில் பேமண்ட்’ங்கிற
ஆப்ஷனைத் தேர்வு செய்யணும்.
புதுசா திறக்கிற பக்கத்தில்
“நியூ யூசர்’ங்கிற ஆப்ஷனை க்ளிக்
செஞ்சா, பதிவு பண்றதுக்கான ஸ்டெப்கள்
ஒன்றன் பின் ஒன்றாக வரும். எந்த
முகவரிக்குக் கட்டணம்
செலுத்துறோமோ அதன் “ரீஜன் நம்பர்’
முதலில் கேட்கப்படும் உதாரணமா,
கோடம்பாக்கம்ன்னா அதன் ரீஜன் நம்பர் 225.
எந்தெந்த ஊர்கள் எந்த ரீஜன்களில் வரும்ங்கிற
விவரங்களை இதே பக்கத்தில்
“மை ரீஜன்’ங்கிற பகுதிக்குப் போய்
தெரிஞ்சுக்கலாம்.
4. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப்
பண்ணணும்.
5. சில
விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர்
நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
6. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி,
மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின்
பெயர், முகவரி போன்ற விவரங்களைக்
கொடுக்க வேண்டும்.
7. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத்
தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல்
லிங்க் நம்மோட மெயில்
ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த
அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம்
ஆன்லைனிலேயே மின் கட்டணம்
செலுத்தலாம். ஒவ்வொரு முறையும்
கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான
யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த
வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள்
அடங்கிய இமெயில் நமக்கு வரும். கட்டிய
தொகைக்கான ரிசிப்ட் பெறுவதற்கான
வசதியும் இணைய தளத்தில் இருக்கு.
ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த
மாத
மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவ
ும் முடியும்.
ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின்
இணைப்புகளுக்குக் கட்டணம்
செலுத்தலாம்.

No comments:

Post a Comment