Saturday, August 2, 2014

கண் தானம் செய்வது எப்படி?

கண் தானம் செய்வது எப்படி?


1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.
3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.

யார் கண்தானம் செய்ய முடியாது?
நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.
கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:
1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.
2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.
3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.
4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.
5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.
6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.
7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.
- எனவே , கண் தானம் செய்வோம்...!!! Please, donate your Eyes.

ஆடி மாதத்தின் முக்கிய சிறப்பு ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.

ஆடி மாதத்தின் முக்கிய சிறப்பு ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.



ஆடிப் பெருக்கு நன்னாளில், நதிப் பெண்ணான காவிரியை வணங்கினால் விவசாயம் செழிப்பது போல், கன்னிப்பெண்கள் இந்த நாளில் காவிரி நதிக்கரையில் வழிப்பட்டால் மனசுக்கு ஏற்ற மன்னவர் வாய்ப்பர், சுமங்கலிகள் வழிபட்டால் வம்ச விருத்தி, கணவனின் ஆயுள் கூடும் என்பதும் ஐதீகம்.

தமிழகத்தில் காவிரி நதி ஓடுகிற ஊர்களில் ஆடிப் பெருக்கு வைபவம் நடக்கிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலை, திருமாங்கல்யம், பழங்கள், கருமணி, சீர்வரிசை பொருட்கள், காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரியை வணங்கி, படைத்த மஞ்சள் சரடை பெரியவர்களிடம் கொடுத்து, பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகையிலும் கட்டிக்கொள்வார்கள்.

இதனால் வாழ்வில் தொட்டதெல்லாம் வளமாக அமையும் என்றும், குறிப்பாக புதுமணத் தம்பதியர்கள் காவிரிக் கரையில் குடும்பத்தோடு வந்து, திருமணத்தின் போது அணிவித்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, தாலிபிரித்து கட்டும் சடங்கு காவிரிக் கரையில் செய்வதால், காவிரிக் கரையில் தண்ணீரில் புரண்டோடுவதுப் போல் நம் வாழ்விலும் இன்பம் பெருகுமாம்.

ரெடிமேட் காவிரித் தண்ணீர் பாக்கெட்'ங்கறது இப்ப கேட்க புதுசா இருந்தாலும், போற போக்கை பாத்தா வரப்போற வருஷங்கள்ல காவிரித் தண்ணிய பாக்கெட்ல வித்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை..!

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?



மனிதர்களுக்கு பெரும்பாலும் சந்தோசத்தை கொடுப்பது
அவர்கள் மனது சந்தோசமாக இருக்கும் போதுதான்.
அந்த சந்தோசம் என்பது அவர்கள் நினைக்கும் நினைப்பை
பொறுத்துதான்.

ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்தில்
வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும்.
வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில்
காண வேண்டும்.

வெற்றி அடைவதை போன்று மனதில் உருவாக படுத்தி
பார்க்கும்போது தோல்வி அடைந்துவிடுவோம்
என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு
இல்லை.

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால்
நினைக்கும் போது அந்த காரியம் வெற்றி அடைந்து
விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும்
உங்கள் மனது ஏற்படுத்தி கொடுத்து விடும்.

உங்கள் மனதை சந்தோசமாக வைத்திருப்பதற்கு
இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளை துவக்கும் போது உங்கள் மனதில்
சந்தோசமான நிகழ்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.
அப்படி செய்யும் போது அந்த நாள் முழுவதும்
மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள்.
அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும்
காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான
ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.
அந்த இடத்தில ஒரு மகிழ்சிகரமான சூழ்நிலை உருவாகுவதற்கு
காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள்
வெகு சுலபமாக கவரப்பட்டுவிடுவீர்கள்.

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த
மகிழ்சிகரமான நிகழ்சிகளை படங்களாக மாட்டி வையுங்கள்.
அவை தந்த மகிழ்சிகரமான நினைவுகளை அடிக்கடி
நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள்.
வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.

உங்களுடைய அன்றாட வேலைகளை போல மனதில்
அடிக்கடி சந்தோசமான நிகழ்சிகளை நினைப்பதற்கு நேரம்
ஒதுக்க வேண்டும். அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான
நிகழ்சிகளை செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு
மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய
காரியத்தில் வெற்றியும் கிட்டும்.

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற
நினைவு வரும்போது உடனடியாக அதற்க்கு மாற்று மருந்தாக
நாம் வெற்றியடைய போகிறோம் நமக்கு சாதகமாக
அந்த காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.

உடனே அந்த தோல்வி எண்ணங்கள்
இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும்
நிச்சயமாக வெற்றி அடையும்.

எந்த சக்தியாலும் உங்களை தோல்வி அடைய செய்ய முடியாது
என்று அடிக்கடி எண்ணி கொண்டே இருங்கள். உங்களையும்
அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.

என்னதான் நம்முடைய மனதை சந்தோசமாக வைத்துகொள்ள
நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய
மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று
கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது.

தியானம் என்னும் அற்புத கலையினால் நம்முடைய
மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை
எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம் ...

மற்றவர்கள் உங்களை விரும்பசெய்வது எப்படி?

மற்றவர்கள் உங்களை விரும்பசெய்வது எப்படி? 

 

இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின் சுய சரிதையை படித்தோம் என்றால் அவர்களிடத்தில் ego என்ற குணமே இருக்காது. தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்கமாட்டார்கள்.

"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் ‍ பெரும் பணிவு என்பது பண்பாகும்" என்ற  பழைய திரைப்பட பாடலுக்கு ஏற்ப ஒருவர் தன்னை மாற்றி கொள்ள வேண்டும்.    

தற்பெருமை என்பது ஒருவரை மற்றவர்கள் அருவருக்க செய்து விடும். தற்பெருமை பேசும் ஒருவரை கண்டாலே தலை தெறிக்க ஓடி விடுவார்கள். சிலர் பார்த்தீர்கள் என்றால் வாயை திறந்தாலே தன்னை பற்றியே பேசி கொண்டு இருப்பார்கள். எதிரில் உட்கார்ந்து இருப்பவர் நெளிந்து கொண்டு இருப்பதை கூட புரிந்து கொள்ளாமால் அவர் பாட்டுக்கு தன்னுடைய சுய புராணத்தை பாடி கொண்டு இருப்பார். தற்பெருமை பேசும் ஒருவரை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள்.

தெரியாத விஷயத்தை அடக்கத்துடன் தெரிந்து கொள்ளுங்கள். வயது வித்தியாசம் பார்க்காதீர்கள். இவன் என்ன பெரிய ஆள் இவனிடம் நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைக்காதீர்கள். உங்களது அடக்கம் மற்றவர்கள் உங்களை நேசிக்க செய்யும்.

மற்றவர்களிடம் பழகும்போது எந்த வித சுய நலத்துடனும் பழகாதீர்கள். பின்னால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்திற்காக மற்றவர்களிடம் போலியாக பழகாதீர்கள்.
சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து  உங்களை பெரிதும் விரும்பசெய்யும்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கள்ளம் கபடமில்லாத நட்புடன் பழகுங்கள். அதே சமயத்தில் உங்கள் நட்பை மற்றவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காக பயன் படுத்த நினைக்கும்போது நாசூக்காக அந்த நட்பை அவர்கள் மனம் கோணாதபடி ஒதுங்கி கொள்ளுங்கள்.

நல்லவர்களுடைய நட்பு கிடைக்கும்போது உங்கள் நட்பு கிடைத்தமைக்கு அவர்கள் பெருமை படும்படி உங்கள் பழக்க வழக்கங்கள் எந்த வித சுயநலமும் இல்லாமல் இருக்க பார்த்து கொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள சில பிடிக்காத குணங்களை தவிர்த்து விடுங்கள். உதாரணமாக கோபம்,
ego போன்றவற்றை அடியோடு ஒழித்து விடுங்கள். ஏனென்றால் கோபம், ego போன்ற மனப்பான்மை உள்ளவர்களை பொதுவாக மற்றவர்கள் நேசிக்கமாட்டர்கள். பல நல்லவர்களின் நடப்பை இது போன்ற குணங்கள் இருந்தால் நீங்கள் இழக்க வேண்டி வரும்.

எல்லோரையும் விரும்ப கற்று கொள்ளுங்கள். யாரையும் வெறுக்க கூடாது. மற்றவர்களிடம் உங்களுக்கு பிடிக்க தகாத விசயங்கள் இருந்தால் அவர்கள் மாற்றி கொள்ளும் மன நிலையில் இல்லாமல் இருந்தால், அவர்கள் மனம் புண்படாதபடி நாசூக்காக ஒதுங்கி கொள்ளுங்கள்.

மற்றவர்களை மனம் திறந்து பாராட்ட கற்று கொள்ளுங்கள். உங்களிடம் ஒருவர் பேசும்போது அவருடைய பேச்சில் தெரியும் நல்ல பண்புகளை செயல்களை குணங்களை
மனம் திறந்து பாராட்டுங்கள். உங்கள் பாராட்டின் மூலமாக ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கின்றபோது அவர் உங்களை பன்மடங்கு விரும்புவார்.

மற்றவர்களின் துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறுங்கள். உங்களுடைய ஆறுதல் வார்த்தைகள் உங்களைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் அவர் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கும்.

சரி, மேலே கூறிய பண்புகளை மற்றவர்கள் விரும்ப வேண்டும் என்றால் கடை பிடிக்க முடியுமா?

சற்று சந்தேகம்தான். ஏனென்றால் ஒவ்வொருவருடைய வேலை, தொழில், குடும்ப சூழ்நிலை போன்ற காரணங்களினால் நல்ல பண்புகளாக இருந்தாலும் கடை பிடிக்க முடியாத சூழ்நிலை இருக்கும். அதனால் மற்றவர்கள் வெறுக்கும் நிலையிலோ அல்லது விரும்பாத சூழ்நிலையோ இருக்கலாம்.

அப்படி என்றால் இதற்க்கு என்னதான் தீர்வு? உங்கள் மனதுதான் அதற்கு சரியான தீர்வு அல்லது வழியை காட்டும். உங்கள் மனது சரியான தீர்வு அல்லது வழியை கட்ட தியானத்தின் துணையை நாடலாம்.

தியானம் பழகும்போது நட்பு மனப்பான்மை பெருகும். நட்பு மனப்பான்மை பெருகுகின்ற போது மற்றவர்கள் உங்களை அதிகம் நேசிக்க தொடங்கி விடுவார்கள். தியானத்தின் மூலம் interpersonal relationship அதிக அளவில் வளர்கின்றது என பல ஆராய்சிகள் தெரிவிக்கின்றன. தியானத்தின் மூலம் கோபம், ego, கள்ளம், கபடம், சூது, வாது போன்ற செய்கைகள், எண்ணங்கள் களைய படுகின்றன. சூது, வாது, கபடம் இல்லாத ஒருவரை பொதுவாக எல்லோருமே விரும்புவர்.

அதே போன்று உண்மையான நட்பு எது, பொய்மையான நட்பு எது, என்பதை மற்றவர்களை பார்த்த உடனேயே எடை போடசெய்யும் சக்தியும்  தியானத்திற்கு உண்டு. அதனால் போலியான நட்பு கொண்டவர்களை சுலபமாக அடையாளம் காண செய்யும் சக்தி தியானத்திற்கு உண்டு.

எனவே ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும்போது மற்றவர்கள் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.