Monday, June 30, 2014

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!

1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!!
நீங்கள் காணும் இந்த புகைப்படம் இரவும் பகலும் வானவெளியில் சந்திக்கும் தருணத்தில் எடுக்கப்பட்டது. கொரிய தீபகற்பத்தின் மீது பறக்கும் செயற்கைக்கோள் உதவியுடன் இந்த அற்ப்புத புகைப்படம் எடுக்கப்பட்டது....! 

 
படித்ததில் பிடித்தது
****************************



உழவன் ஒருவனிடம் பெரிய தோட்டம் ஒன்று இருந்தது. அதில் காய்கறிகளை பயிரிட்டான் அவன். நாள்தோறும் ஒரு முயல் அந்தத் தோட்டத்திற்குள் நுழைந்து இலை, பிஞ்சுகளைத் தின்று வந்தது. அதைப் பிடிக்க அவன் பல முயற்சிகள் செய்தான். முயல் அவனிடம் சிக்கவே இல்லை.

எப்படியும் முயலைப் பிடித்தாக வேண்டும் என்று நினைத்த அவன் அரசனிடம் சென்றான். "அரசே என் தோட்டத்தை முயல் ஒன்று பாழாக்குகிறது. நீங்கள்தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றான். சிரித்த அரசன் 'ஒரு முயலைப் பிடிக்க உன்னால் முடியவில்லையா?" என்று கேட்டான்.

"அரசே! அந்த முயலுக்கு மாய மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். நான் அதைப் பார்த்துக் கல்லையோ கட்டையையோ வீசினாலும் அவை அதன் மீது படுவது இல்லை" என்றான் அவன்.

"நாளையே வேட்டை நாய்களுடன் நான் அங்கு வருகிறேன். முயலின் மாய மந்திரம் எதுவும் என் வேட்டை நாய்களிடம் செல்லாது. அந்த முயலைப் பிடித்த பிறகுதான் நான் அங்கிருந்து திரும்புவேன்" என்றான் அரசன்.

மகிழ்ச்சியுடன் தன் தோட்டத்திற்கு வந்தான் அவன். இனி முயலின் தொல்லை இருக்காது என்று நினைத்து அரசனுக்கும் அவன் வீரர்கட்கும் சிறப்பான விருந்திற்கு ஏற்பாடு செய்தான். மறுநாள் படை வீரர்கள், வேட்டைக்காரர்கள், நாய்கள் சூழ அரசன் அங்கு வந்தான்.

எல்லோரையும் வரவேற்ற உழவன் அவர் களுக்குச் சிறப்பாக விருந்து வைத்தான். விருந்து முடிந்தது. மகிழ்ச்சி அடைந்த அரசன் "இன்னும் சிறிது நேரத்தில் அந்த முயல் என்ன கதி ஆகிறது பார்" என்று வேட்டையாடப் புறப்பட்டான்.

வேட்டைக்காரர்கள் கொம்புகளை ஊதினார்கள். வேட்டை நாய்கள் பயங்கரமாகக் குரைத்துக் கொண்டே தோட்டத்திற்குள் பாய்ந்தன. புதரில் மறைந்திருந்த முயல் அச்சத்துடன் வெளியே வந்தது. அங்கிருந்த வேலியை நோக்கி ஓடியது.

அதைப் பார்த்த அரசன், "அந்த முயலைத் தப்ப விடாதீர்கள், பிடியுங்கள்" என்று கத்தியபடி வேலிப் பபக்கம் ஓடினான். வேட்டைக்காரர்களும் வீரர்களும் அரசனைத் தொடர்ந்து ஓடினார்கள்.

தப்பிக்க நினைத்த முயல் தோட்டத்திற்குள் அங்கும் இங்கும் ஓடியது. அவர்கள் அனைவரும் அதைத் துரத்தினார்கள். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வேட்டை நாய் பாய்ந்து அந்த முயலைக் கவ்விப்பிடித்தது. வெற்றிப் பெருமிதத்துடன் அந்த முயலை உழவரிடம் காட்டினான் அரசன். இவர்களின் முயல் பிடிக்கும் முயற்சியில் தன் அழகான தோட்டம் முற்றிலும் நாசமாகி விட்டதை அறிந்து வருந்தினான் உழவன்.

"சிறு வேலைக்குப் பெரியவர்கள் உதவி கேட்பது தவறு என்று உணராமல் போனேனே. என் அழகான தோட்டம் அழித்துவிட்டதே. ஒரு முயல் என்ன ஆயிரம் முயல்கள் பல நாட்கள் வந்திருந்தாலும் இப்படிப்பட்ட அழிவை ஏற்படுத்தி இருக்க முடியாதே. என் முட்டாள்தனத்தால் பேரழிவைத் தேடிக் கொண்டேன்" என்று வந்திருந்தான் அவன்.

நீதி :-
சின்ன பிரச்சனைகளுக்கு பெரிய முடிவு எடுக்க கூடாது..

Saturday, June 28, 2014

கம்ப்யூட்டர் துறை வேலைவாய்ப்பு - கம்ப்ளீட் கைடன்ஸ் ...

தொழிற்படிப்பு

    கம்ப்யூட்டர் துறை வேலைவாய்ப்பு - கம்ப்ளீட் கைடன்ஸ்

    'கம்ப்யூட்டர் துறை’யை... அதிக வருமானத்தை தரக்கூடிய துறை என்றே சொல்ல வேண்டும். இதன் மூலம், இன்றைக்கு எத்தனையோ குடும்பங்களின் நிலை, பெரும் உயரத்தைத் தொட்டிருக்கிறது.

    சாதாரண மளிகைக் கடைகள் தொடங்கி, பெரிய பெரிய நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் கம்ப்யூட்டர் ராஜ்ஜியம்தான். இதில், என்னென்ன வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன... எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பது போன்ற தகவல்கள்... 


    போட்டோஷாப்!
    பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா நிலைகளிலும் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கிறது. கேமரா, செல்போன் என்று எதைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தாலும்... அவற்றை டெவலப் செய்து பிரின்ட் போடுவது உள்ளிட்ட பணிகளுக்காக ஸ்டூடியோ அல்லது லேப் போன்றவற்றுக்குத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இங்கெல்லாம் பணிபுரிபவர்களுக்கு... அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன் 'போட்டோஷாப்' எனும் மென்பொருளை (சாஃப்ட்வேர்) கையாளும் திறன் பெற்றிருந்தாலே போதும் என்பதுதான் பணித்தகுதி. போட்டோஷாப் தெரிந்திருந்தால்... லேப்கள்தான் என்றில்லை, இன்னும் பல இடங்களிலும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. உங்களின் திறமையைப் பொறுத்து மாதத்துக்கு பல ஆயிரங்களை இத்துறையில் சம்பாதிக்க முடியும்!

     பலன் கொடுக்கும் பிரவுஸிங்!

    சொந்தமாக பிரவுஸிங் சென்டர் தொடங்குவது, கைகொடுக்கும் நல்ல தொழில். நான்கைந்து கம்ப்யூட்டர்கள் இருந்தாலே போதும்... இதை ஆரம்பித்துவிடலாம். கூடவே, பள்ளிக் குழந்தைகளுக்கான ஆக்டிவிட்டி தொடர்பான படங்கள் மற்றும் தகவல்களைத் தேடி எடுத்து, பிரின்ட் எடுத்துக் கொடுக்கும் வேலையையும் செய்யலாம். சமச்சீர் கல்வி வந்த பிறகு, இதற்கான தேவை கிராமங்களில்கூட தற்போது அதிகமாகிவிட்டது. கூடவே ஒரு ஜெராக்ஸ் மெஷினையும் வைத்துவிட்டால்... மாதத்துக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சுலபமாக லாபம் பார்க்க முடியும்.

    டேட்டா என்ட்ரி வேலை ரெடி!

     நிமிடத்துக்கு 30 வார்த்தைகளுக்கு மேல் டைப் செய்யத் தெரிந்திருந்தால் போதும்... பதிப்பகங்கள், டி.டி.பி மையங்கள், கல்வி நிறுவனங்கள், டேட்டா என்ட்ரி மையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இப்படிப்பட்டவர்களுக்கு டைப்பிங்கோடு சேர்த்து அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும் தெரிந்திருத்தல் அவசியம். மாதம் 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்!

    அலுவலகத்திலும் அசத்தலாம்!

     அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன், மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் சாஃப்ட்வேர் பற்றி தெரிந்திருந்தாலே போதும்... மளிகை கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால், ஜவுளிக் கடை... என பல இடங்களிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டர் இயக்கத் தெரிதல், மைக்ரோசாஃப்ட் ஆபீஸில் உள்ள வேர்டு, எக்ஸல், பவர் பாயின்ட்.. போன்றவற்றை கையாளத் தெரிதல் போன்ற திறமைகள் இருந்தால்... சுலபமாக வேலை வாய்ப்பு கிடைத்துவிடும். மாதத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

    கம்ப்யூட்டர் சுயதொழில்!

    அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு, பிரின்ட் எடுப்பது, ஸ்கேன் செய்வது போன்றவை தெரிந்திருந்தால் போதும்... சுலபமாக சுயதொழில் தொடங்கிவிடலாம். ஒன்று அல்லது இரண்டு கம்ப்யூட்டர்கள், ஒரு பிரின்ட்டர், ஒரு ஸ்கேனர் என இவற்றைக் கொண்டு... வீட்டிலோ அல்லது வாடகைக்கு அறை எடுத்தோ சொந்தமாக டி.டி.பி மையத்தைத் தொடங்கிவிடலாம். தெருவுக்கு தெரு இருக்கும் பொது தொலைபேசி மையங்களுக்கு அடுத்தபடியாக, பரவலாக இருப்பது... டி.டி.பி மையங்கள்தான். இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என பலருக்கும் இது கைகொடுக்கும். வெறும் 30 ஆயிரம் ரூபாய் முதலீட்டிலேயே தொடங்கிவிட முடியும். மாதம் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை லாபம் ஈட்டமுடியும்.

    பி.பி.ஓ!

     எத்தனையோ பேர் பல்வேறு காரணங்களால் தங்களின் படிப்பைத் தொடரமுடியாமல் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சரியான வாய்ப்பு... பி.பி.ஓ மையங்கள். இதில் சேர்வதற்கு அடிப்படை கம்ப்யூட்டர் அறிவும், ஆங்கிலம் உள்ளிட்ட ஏதாவது இரு மொழிகளில் சரளமாக பேசும் திறமையும் இருந்தாலே போதும். ஆரம்பத்தில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மட்டுமே இருந்த பி.பி.ஓ மையங்கள், இன்றைக்கு தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் செயல்பட்டு வருகின்றன. மாதம் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் இந்த மையங்களில் சுலபமாக சம்பாதிக்க முடியும்.

    பயிற்சி ஆசிரியர்!

     கம்ப்யூட்டர் துறையில் பட்டம் அல்லது டிப்ளமா படித்தவரா... கம்ப்யூட்டரில் பயிற்சி அளிக்கக்கூடிய அளவுக்குத் திறமை படைத்தவரா... உங்களுக்கு காத்திருக்கின்றன வேலைகள். உதாரணமாக, மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ் பற்றி தெளிவாகத் தெரிந்தவர்கள், அதைக் கற்றுக்கொடுக்கும் மையங்களில் ஆசிரியராகச் சேரலாம். சி, சி++ உள்ளிட்ட கம்ப்யூட்டர் மொழிகளில் திறமை வாய்ந்தவர்கள், அதற்கான பயிற்சி ஆசிரியராக சேரலாம். இவற்றுக்கான பயிற்சி மையங்கள் தமிழகத்தில் நிறையவே இருக்கின்றன. உங்களுடைய திறமையைப் பொறுத்து வேலையும் சம்பளமும் கிடைக்கும்!

    ஐ.டி ஊழியர்!

    கம்ப்யூட்டர் துறையில் பட்டம் அல்லது டிப்ளமா படித்தவர்கள்... கம்ப்யூட்டர் அறிவுடன் ஏதேனும் ஒரு கம்ப்யூட்டர் மொழி தெரிந்திருந்தால், ஐ.டி நிறுவனங்களில் 'சாஃப்ட்வேர் புரோகிராமர்’ என்கிற வேலையை எளிதில் கைப்பற்ற முடியும். இதுமட்டுமில்லாமல் டெஸ்ட்டிங், வெப்-டிசைனிங் என பல்வேறு வேலை வாய்ப்புகளும் ஐ.டி நிறுவனங்களில் இருக்கின்றன. இதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடத்தும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு தேர்வாக வேண்டும். இன்றைக்கு ஐ.டி. நிறுவனங்களில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

    அனிமேஷன்!

    தற்போது... கார்ட்டூன் படங்கள், குழந்தைகளுக்கான பாடங்கள், விளம்பர படங்கள், திரைப்பட காட்சிகள் என்று எல்லாமே அனிமேஷன் மயமாகத்தான் இருக்கின்றன. இதனால் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், வீடியோ எடிட்டிங் நிறுவனங்கள் என்று பல இடங்களிலும் அனிமேஷன் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. பட்டப் படிப்போ, முதுகலை படிப்போ படித்திருக்க வேண்டும் என்பது மாதிரியான நிபந்தனைகள் எதுவும் இந்த வேலைக்கு இல்லை. அடிப்படை கம்ப்யூட்டர் அறிவுடன், அனிமேஷன் தெரிந்திருந்தாலே போதும். அனிமேஷன் கற்றுத்தரும் பயிற்சி மையங்கள் ஆங்காங்கே செயல்பட்டுவருகின்றன. 6 மாதமோ, ஒரு வருடமோதான் பயிற்சி. ஆனால், இதில் உங்களுடைய ஈடுபாட்டையும் புகுத்தினால்... இந்தத் துறையில் எளிதாகக் கலக்கலாம். சொந்தமாக அனிமேஷன் ஸ்டூடியோ தொடங்கியும் பணம் ஈட்ட முடியும்!

    கம்ப்யூட்டர் சென்டர்!

     கம்ப்யூட்டர் பற்றிய அறிவு இல்லாமலேயே... கம்ப்யூட்டர் துறையில் பணம் சம்பாதிக்க வழியுண்டு. எப்படி என்கிறீர்களா? வெரிசிம்பிள், சொந்தமாக கம்ப்யூட்டர் மையம் தொடங்குங்கள்! கம்ப்யூட்டர் பற்றி நன்றாக தெரிந்தவர்களை பணியில் அமர்த்தி, அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் என்று பலருக்கும் கம்ப்யூட்டர் பயிற்சி தரலாம். டி.டி.பி, ஜாப் டைப்பிங், பிரின்ட் போன்றவற்றையும் செய்து தரலாம். உங்களுக்கே கம்ப்யூட்டர் அறிவு இருக்கும்பட்சத்தில், கூடுதல் லாபம்தான்! ஓரிரு லட்சங்கள் முதலீடு செய்து... வீட்டிலோ அல்லது வாடகை இடத்திலோ மையத்தை ஆரம்பித்துவிடலாம். மாதம் குறைந்தது 10 ஆயிரம் ரூபாய் தொடங்கி, பல லட்சங்கள் வரை சம்பாதிக்கமுடியும். 'பயிற்சி வகுப்பு'கள் நடத்துவதென்றால், உரிய அரசுத்துறையிடம் அனுமதிபெற மறக்காதீர்கள்.

    - அவள் விகடன்

தண்ணீர்! தண்ணீர்!!

தண்ணீர்! தண்ணீர்!!



ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.

1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும். ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்.

நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!


வாழ்க்கையில் ஒருநாள் என்பது அவ்வளவு முக்கியமானதா என கேட்பவரா நீங்கள்? இன்று ஒருநாள் போனால் என்ன,  இன்னும் என் வாழ்நாளில் தான் ஆயிரகணக்கில் நாட்கள் உள்ளதே என ஒருநாளை சாதாரணமாக நினைப்பவரா?  அப்படியென்றால் இது உங்களுக்கான பக்கம் தான்!!
 

ஒருநாளை ஒரு நாள் என்று பார்க்காதீர்கள்! 24 மணி நேரம், 1140 நிமிடம், 86,400 நொடி இப்படி பார்த்து பழகுங்கள் எவ்வளவு பெரிதாக உள்ளது. இப்போது இதையே ஐந்து வருடங்கள் என்று பார்த்தால் நிச்சயம் உங்களுக்கு தலை சுற்றும்! ஆனால் இந்த ஐந்து வருடங்கள் சிறப்பாக இருக்க உங்களது ஒரு நாள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்தாலே போதும், நீங்கள் தினசரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில வழிகள் இதோ...


1. உங்கள் கனவுகளை நிறைவேற்றும் பயணத்தில் மகிழ்ச்சியை தேடி கொள்ளுங்கள்!! 

உங்களை வாழ்க்கைக்கான திட்டத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள், அதற்குபதில் எதிர்காலத்தில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்,  இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள். இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். அப்போது தானாகவே இன்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்துவிடும்.இன்று செய்ய வேண்டியதை சரியாக செய்யுங்கள் தனாக உங்கள் கனவு நிறைவேறும்.

2.இன்றைய நாளில் என்ன செய்தீர்கள் என்பதை எழுதி வைத்துக்கொள்ள பழகுங்கள்!


''ஒரு நாளின் முடிவில் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று எழுதி வைத்து பாருங்கள் அது இன்றைக்கு நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவு செய்துள்ளீர்கள் என்பதை காட்டும். வெறும் 15 நிமிடங்கள் நீங்கள் செய்த வேலையை எழுதி வைப்பது உங்களுக்கு வேலை மீதான செயல்திறனை அதிகரிக்கும்!' இன்று எது நீங்கள் நினைத்து உங்கள் புத்தகத்தில் இடம்பெறவில்லையோ அதனை சரிசெய்தாலே போதும்!

3.தினமும் ஒரு புதிய, பழக்கமில்லாத நபரோடு பேசுங்கள்

''புதிய பழக்கமில்லாதவர்கள் என்பது புதிய வாய்ப்புகளுக்கு சமம். இந்த வாய்ப்புகள் புதிய நண்பர்கள், புதிய யோசனைகள் மற்றும் உங்களுக்குள் இருக்கும் பயத்தையும், கூச்சததையும் போக்குவதாகவும், புதிய தொழில் துவங்குவதற்கான கருவியாக இருக்கும். உங்கள் வட்டத்தை பெரிது படுத்திக்கொள்ள பழகிவிட்டால் அது உங்கள் வேலை,மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை முடிவு செய்யும்.அதனால் தினமும் ஒரு புதிய பழக்கமில்லாத மனிதரோடு பேசுங்கள்.

4. நன்றாக கவனிக்க பழகி கொள்ளுங்கள்!

மக்கள் தங்களை பற்றி பேசுவதை பெரிதும் விரும்புவார்கள். அதனால் அவர்கள் பேசுவதிலிருந்து உங்களுக்கு தேவையானதை பெற அவர்களை பேசவிட்டு கவனியுங்கள். இது போன்ற மனிதர்களின் அனுபவம் எப்போதும் நமக்கு கைகொடுக்கும் சிக்கலான சூழல்களில் அவர்கள் செய்த தவறை பற்றி கூறியிருப்பார்கள் அதை நாம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பாடத்தையாவது அது கற்றுக்கொடுக்கும்.
 

 
5.குறைந்த நேரத்தை மட்டும் வீணாக்குங்கள்!! 

நேரத்தை வீணாக்காமல் நம்மால் வாழமுடியாது. ஆனால் நம்மால் குறைவான நேரத்தை வீணாக்க முடியும். வாழ்க்கை நாட்களால் உருவாக்கப்பட்டது, நாட்கள் நேரங்களாலும், நேரம் நிமிடங்களாலும் உருவாக்கப்பட்டவை. அதனால் நிமிடங்களை தாண்டி நாம் நொடியை மட்டும் வீணாக்கி கொள்ள கற்று கொள்ள வேண்டும்.இந்த விஷயத்தை நீங்கள் சரியாக கையாண்டால் உங்களால் வெற்றியை மட்டும் தான் பெறமுடியும்.

6. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள்.


உங்கள் அனுபவங்களை ஒரு விஷயத்தை நோக்கியே கொண்டு செல்லாதீர்கள்.. உங்கள் அனுபவங்களை திசை மாற்றி கொண்டே இருங்கள். உங்கள் அனுபவங்களை விரிவுபடுத்துங்கள். இது உங்களது புதுமையான ஐடியாக்களுக்கும், நல்ல முறையில் உங்களை மக்களோடு தொடார்புபடுத்திக்கொள்ள உதவும்.அந்த அனுபவத்தை உலகிற்கு பரிமாறுபவராக இருங்கள்: அது பலரை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்கும்.ஒரு சிறந்த அனுபவம் நல்ல சிந்தனையாளனை உருவாகியே தீரும்!

7. அவமானத்தோடும், சந்தேகத்தோடும் வேலை பார்க்க பழகுங்கள்!!

அனைவருக்கும் ஏதோ ஒரு சூழலில் அவமானத்தையும், சந்தேகத்தையும் எதிர்கொண்டு இருப்பார்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே இதை சமாளிக்க கற்றுக்கொண்டு இருப்பார்கள். இதனை சமாளிக்க பழகுங்கள். உங்கள் அவமானம் பாடத்தையும் கற்று கொடுக்கும்! உங்கள் மீதுள்ள சந்தேகம் உங்களை தெளிவு படுத்தும்.
 


 
8. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள்:

 உள்ளேயே இருந்து வேலை பார்ப்பது எளிது. வெளிச்சூழலுக்கு செல்லுங்கள். மிக உயரமான பகுதிகளுக்கு சென்று வாருங்கள், உளவியலாலர்களை சந்தியுங்கள். அது உங்களுக்குள் உள்ள புதுமையற்ற சதாரண மனிதனை புதுமைபடுத்துவதுடன்,உங்கள் அழுத்தத்தை குறைக்க உதவும் கருவியாகவும் அமையும்.

9.உங்களைவிட வித்தியாசமானவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்:


நீங்கள் சற்று தாராளமானவராக இருந்தால் வித்தியாசமான மனிதர்களின் நட்புக்குள் செல்லலாம். நீங்கள் நகரத்து எலியாக இருந்தால் நாட்டு எலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த தேடலில் நீங்கள் பல வித்தியாச மனிதர்களை அடையாளம் காட்டும். அவர்கள் மீதான புரிதல் மாறுபட்ட மனிதர்கள் உள்ள குழுவில் சரியான முடிவை எடுக்க பயனளிக்கும்.

10. குறைந்தபட்ச குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்:

ஒரு நாளைக்கு 15 பக்கங்கள் படிக்க வேண்டும், 20 புஷ்-அப்கள். இப்படி குறுகிய டார்கெட்டுகள் உங்களை பெரிய வேலைகளுக்கு பழக்கப்படுத்தும்! இந்த பயிற்சி பெரிய திட்டங்களை உடைத்து சிறிது சிறிதாக ஒரு நாளைக்கு எவ்வளவு என பிரித்துக் ஐந்து வருட திட்டத்தையும் ஒரு நாளைக்கு பிரித்து வெற்றியடைய உதவும்.


இன்னும் ஐந்து வருடம் கழித்து எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க தொடங்கிவிட்டால் இன்று உங்கள் வேலை என்னவெனில்......
உங்களுக்கான வேலை என்ன என்பதை இன்னோருவரை தீர்மானிக்க விடாமல் இருப்பது தான்!! இன்றைய நாளை உங்கள் பிடித்த மாதிரி செதுக்குங்கள் அது  இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

- ச.ஸ்ரீராம்

கல்விக் கடன் சிக்கல்கள், தீர்வுகள் - 1


கல்விக் கடன் சிக்கல்கள், தீர்வுகள் - 1 

ப்ளஸ்டூ படித்து முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேருவதற்கான காலம் இது. வங்கியில் கடன் வாங்கி படிக்க நினைக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பெருகிவிட்ட காலமிது. இந்த சமயத்தில், கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, இதுதொடர்பான ஐ.பி.ஏ. (இந்திய வங்கிகள் கூட்டமைப்பு) நெறிமுறைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்பது பொருத்தமான விஷயமாக இருக்கும் அல்லவா?

கல்விக் கடனைப் பெறுவதில் உள்ள பொதுவான பிரச்னைகளைப் பார்ப்போம். 

1. விண்ணப்பத்தைப் பெற அல்லது தர மறுப்பது !
ஒவ்வொரு வங்கியும், கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக தரவேண்டும். ஒரு மாணவருக்கு கல்விக் கடன் தரலாமா, வேண்டாமா என்பதை அந்த மாணவரிடமிருந்து விண்ணப்பம் பெற்றபிறகே சொல்லவேண்டும். விண்ணப்பம் வாங்குவதற்கு முன்னதாகவே கடன் கிடையாது என சொல்லி, அவர்களை மரியாதைக் குறைவிற்கு ஆளாக்குவது சரியாகாது. அதேபோல், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வங்கிகள் கட்டாயம் பெறவேண்டும். பெற்றவுடன் விண்ணப்பதாரருக்கு பற்றுச்சீட்டு (Acknowledge) வழங்கவேண்டும் என்பதும் கட்டாயம்.

2. விண்ணப்பத்தைப் பரிசீலிக்க  நீண்டகாலம் பிடிப்பது !
கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பெற்றதும் வங்கிகள் 15 நாட்களுக்குள் அதை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் தகுந்த காரணத்தோடு விண்ணப்பதாரருக்கு தெரியப்படுத்தவேண்டும். அப்படி தெரியப்படுத்தாதபட்சத்தில், வங்கி குறைதீர்க்கும் பிரிவில் மாணவ/மாணவியர் தெரியப்படுத்தலாம். வங்கி குறைதீர்க்கும் பிரிவிலிருந்து முறையான பதில் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்றால், ஆர்.பி.ஐ. வங்கி குறைதீர்ப்பாளர் அலுவலகத்தில் முறையிடலாம். 

3. மதிப்பெண்ணைக் காரணம் காட்டி கடன் தர மறுப்பது !

சில வங்கிகள் மதிப்பெண் குறைவாக இருக்கும் காரணத்தால் கல்விக் கடன் தர மறுக்கின்றன. ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, குறைந்தபட்ச மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. வங்கியானது ஐ.பி.ஏ. நெறிமுறைகளை அப்படியே அமல்படுத்தினால் மதிப்பெண்ணைக் காரணம்காட்டி கடன் தர மறுக்கக்கூடாது.

ஆனால், ஒவ்வொரு வங்கிக்கும் இந்த நெறிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்ய அதிகாரம் இருக்கிறது. மேனேஜ்மென்ட் கோட்டாவில் (சுயஉதவிக் கல்லூரிகளில்) இடம் கிடைத்த மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணைக் காரணம் காட்டி சில வங்கிகள் நிராகரிக்கலாம். அந்தக் கல்லூரிகளின் வளர்ச்சி, கல்லூரிகள் அமைத்துக்கொடுக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விஷயங்களில் குறைபாடுகள் இருப்பின் அதையும் காரணம் காட்டலாம். ஆனால், மெரிட் தகுதியுள்ள மாணவர்கள் சுய உதவிக் கல்லூரியில் இடம் கிடைத்தால், ஐ.பி.ஏ. நெறிமுறைகளுக்கு உட்பட்டவர்களாவர்.

4. கடன் தர அடமானம் (Security) கேட்பது !

ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, கடன் தொகை 4 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், எந்த பிணையமும் கேட்கக் கூடாது. 4-7.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், மூன்றாம் நபர் கேரன்டி வேண்டும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேலிருந்தால், ஏதாவது ஒரு சொத்தினை (Tangible Security)சமர்ப்பிக்க வேண்டும்.

5. கடனில் அடங்கும் அங்கங்கள் !
சில வங்கிகள் கல்விக் கடனைக் கணக்கிடும்போது, வெறும் கல்லூரிக் கட்டணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளும். ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, டியூஷன் ஃபீஸ் தவிர்த்து, தேர்வுக் கட்டணம், ஹாஸ்டல் கட்டணம், புத்தக கட்டணம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, கடன் தொகையை மதிப்பிடவேண்டும். இப்படி மதிப்பிடத் தவறினால் முன்னமே சொன்னதுபோல முதலில் புகார் தெரிவிக்க வேண்டியது அந்த வங்கியினுடைய குறைதீர்க்கும் பிரிவில்தான்.

6. கடன் தந்தவுடன் திரும்பக் கட்ட சொல்வது !

ஐ.பி.ஏ. நெறிமுறைகள்படி, படிப்பு முடிவடைந்து ஒரு வருடத்திற்குள் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதத்திற்குள் (எது முதலில் அமைகிறதோ) கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் தொடங்கும். அதற்கு முன் கடனைத் திருப்பித்தர வங்கியானது மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. ஆனால், வேலை கிடைத்தவுடன் கல்விக் கடனை திரும்பக் கட்டுவது மாணவர்களின் கடமை.


- டாக்டர் சுஜாதா எலிசபெத் பிரசாத்


* நாணயம் விகடன்

பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி.... படித்துவிட்டு பகிருங்கள் :


பொறியியல் கவுன்சிலிங் வழிகாட்டி.... படித்துவிட்டு பகிருங்கள் :

பொறியியல் கவுன்சிலிங் வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள் .
 மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக்கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே, முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள்.
இச்சலுகையைப் பெற கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அழைக்கும் கடிதத்தைப் பேருந்து நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும். தவறாமல், அழைப்புக் கடிதத்தின் நகல்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
Counseling Tips :
மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள், கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்துவிடுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்புக் கடிதத்தை காட்டி, ரூ.5 ஆயிரம் கட்ட வேண்டும். நீங்கள் எஸ்.சி. அல்லது எஸ்.டி. மாணவராக இருந்தால், ரூ.1000 கட்டினால் போதுமானது. இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.
நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதைப் பார்த்து, அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம்.
முன்னதாகவே, குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை, அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்றபொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும்) குறித்துக்கொண்டு வாருங்கள்.
உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர்) மட்டுமே கூட செல்ல இயலும்.
உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் பெயர், விண்ணப்ப எண் முதலிய விவரங்களைப் பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.
உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரிபார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும்; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள்.
அதற்குப் பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள். துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று
சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். (கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள். ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).
நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும். நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒருவேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் மாணவர் எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம். அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.
கல்லூரியை தெரிவு செய்ததும், உங்களிடம் அந்தக் கல்லூரிதானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்தக் கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். கூடவே நீங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்ட வேண்டிய மீத தொகைக்கான வங்கி சலானை தருவார்கள். அதையும் வாங்கிக்கொள்ளுங்கள். குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மீதிப் பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவுதான் கவுன்சிலிங்.
பின்குறிப்புகள்:
ஒரு வேளை அழைப்புக் கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை. உங்கள் கவுன்சிலிங் நாள் என்று என்று அறிந்துகொண்டு ஒரு மணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள். என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால், அடுத்த செஷனில் கலந்துகொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய்ய முடியும்.
முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் சீட் வாங்கித் தருகிறேன் என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.
 
கல்லூரிகளைத் தேர்வு செய்யும்போது மாணவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
முறையான அங்கீகாரம்!
 காற்றோட்டமான வகுப்பறைகள், நல்ல முறையில் இயங்கும் பரிசோதனைக் கூடங்கள், நூலகங்கள், விடுதி வசதிகள், விளையாட்டு மைதானங்கள் போன்ற அடிப்படைக் கட்டுமானங்கள் நல்ல முறையில் இருக்கின்றனவா எனக் கவனித்தல்.
 பேராசிரியர்களின் படிப்பு, அனுபவம் ஆகியவை.
கல்லூரி அமைந்திருக்கும் இடத்தில் போக்குவரத்து வசதிகள், மருத்துவமனைகள் போன்றவை.
 படிப்பு முடிந்ததும் சிறந்த ப்ளேஸ்மென்ட் வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றனவா என ஆராய்தல்.
 பிடித்த பாடத்தை, பிடித்த கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். பல சமயங்களில் பிடித்த பாடம் கிடைக்கும். ஆனால், விரும்பிய கல்லூரியாக இருக்காது. இல்லையென்றால், விரும்பிய கல்லூரி கிடைக்கும். ஆனால், பிடித்த பாடத்தில் இடம் கிடைக்காது. இதுபோன்ற சமயத்தில், எது நமக்குக் கிடைக்கிறதோ அதை நாம் விரும்பிப் படிக்க வேண்டும்.
 நான்கு ஆண்டுகள் கடினமாக உழைத்துப் படித்தால், 40 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம். ஆகவே, என்ன பாடம், எந்தக் கல்லூரியில் கிடைத்தாலும், அதை விரும்பிப் படியுங்கள். மாணவர்கள் கவனிக்க வேண்டிய ஒரே விஷயம், சிறந்த முறையில் அடிப்படை வசதிகள்கொண்ட கல்லூரியாக இருக்கிறதா என்பதுதான்!
- பூ.கொ.சரவணன்

Thursday, June 26, 2014

ஒரு திருவிழாவுக்குப் போயிருந்த கணவன் மனைவில மனைவியைக் கூட்டத்துல காணவில்லை. ரொம்ப வருத்தப்பட்ட அவன், பக்கத்தில் இருந்த ராமன் கோயிலுக்குப் போய்
வேண்டினானாம்.
" ராமா.. எப்படியாச்சும் என் பொண்டாட்டியைக்
கண்டுபிடிச்சுக் குடு " ன்னு.
ராமர் டகார்ன்னு அவன் முன்னாடி வந்து சொன்னாராம்: " நேராப் போய் , லெஃப்டுல திரும்பினின்னா ஒரு ஆஞ்சநேயர் கோயில் வரும். அங்க போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணு. ஏன்னா என் பொண்டாட்டி தொலைஞ்சப்பவே அவருதான் கண்டுபிடிச்சார்’ன்னு!”

Wednesday, June 25, 2014

சந்தோஷமாக இருக்கணுமா...! அப்ப காதலிக்காதீங்க...!

சந்தோஷமாக இருக்கணுமா...! அப்ப காதலிக்காதீங்க...!
 சந்தோஷமாக இருக்கணுமா...! அப்ப காதலிக்காதீங்க...!காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம். அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது.

தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று பார்க்கலாம்….

• காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம். நாம் செய்யும் செயல் காதலருக்கு பிடிக்கவில்லை என்றால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட வழிவகுக்கும்.

• பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள்.

• காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும்.

• காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சந்தோஷமாக செலவழிக்கலாம்.

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்...
 தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்1. நம்பிக்கை

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம்.

2. பாதுகாப்பு

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.

3. மரியாதை

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

4. அன்பு

வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

5. நேர்மை

நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு. 

உடல் நலத்திற்கு உடற்பயிற்சி அவசியம்...

உடல் நலத்திற்கு உடற்பயிற்சி அவசியம்...



உடற்பயிற்சி என்பதை உச்சரிக்கும் பொழுதே உற்சாகம் தரக்கூடிய வார்த்தை. ஆனால் அந்த உற்சாகம் தொடர வேண்டுமெனில் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமெனில் அதை நடைமுறைப் படுத்துவது உடற்பயிற்சியை செயல்படுத்துவது முக்கியம்.

நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய கலோரியும், செலவிடக் கூடிய கலோரியும் அதில் உபரியாக இருக்கக்கூடிய கலோரியின் அளவே கொழுப்பு ஆகும். அதனை குறைப்பதற்கு நாம் அன்றாடம் உடற்பயிற்சியை கீழ்க்கண்டவாறு நீங்கள் தொடங்கலாம்.

1. நடைப் பயிற்சி 2. ஓட்டப்பயிற்சி 3. நீச்சல் பயிற்சி 4. சைக்கிளிங்

எந்த ஒரு உடற்பயிற்சியும் நீங்கள் மெதுவாகவும், சீராகவும் தொடங்க வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் ஏரோபிக் என்று அழைக்கப்படும். ஏரோபிக் என்றால் ஆக்சிஜன் ஏரோபிக் உடற்பயிற்சி என்பது எந்த வகையான உடற்பயிற்சிக்கு அதிகப்படியான ஆக்சிஜன் தேவையோ அதனை ஏரோபிக் உடற்பயிற்சி என்கிறோம்.

எனவே நமக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்க நமது உடற்பயிற்சியை அதிகப்படுத்துவதே சிறந்த வழியாகும். சீராகவும் முறையாகவும்., தொடங்கும் உடற்பயிற்சி உங்களுக்கு 3-ம் மாதம் முதல் 1 வருடத்திற்குள் முறையான பலனை கொடுக்கத் துவங்கும்.

விரைவான பலனுக்கு கொழுப்புச் சத்து குறைந்த உணவு பழக்க முறையும் (எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவு வகைகள்) முக்கிய அம்சம், வாரத்திற்கு 4 நாட்களாவது உங்கள் உடற்பயிற்சி நடைமுறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். குறைந்த பட்சம் 10 நிமிடங்களாவது அன்றாடம் உடற்பயிற்சி செய்வது நிறைந்த பலனைத் தரும். இதிலிருந்து உங்கள் உடற்பயிற்சி நேரத்தை உயர்த்திக் கொள்வது நல்லது.

உடற்பயிற்சிக்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நலம். வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத நபர்கள் சிறந்த உடற்பயிற்சி சாதனங்களை தேர்ந்தெடுத்து தங்கள் இல்லத்திலேயே அமைத்து செய்வது, தங்களுக்கு மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் நிறைந்த பலன்களை தரும்.

உடற்பயிற்சியின் மூலம் கிடைக்கும் முக்கிய பயன்கள்

1. அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை சீராகும்
2. கவர்ச்சிகரமான உடல் தோற்றம் கிடைக்கும்
3. உங்களுடைய இருதயமும், நுரையிரலும் பலம் பெறும்
4. வயதின் காரணமாக வரக்கூடிய உடல் உபாதைகள் குறையும்
5. தோற்றப் பொலிவு கூடும்
6. உடல் பலம் கூடும்
7. தன்னம்பிக்கை அதிகரிக்கும்

Tuesday, June 24, 2014

அறிஞர்களின் பொன் மொழிகள்....

அறிஞர்களின் பொன் மொழிகள்

 

* எளிமையும் தூய்மையும் ஒருவனை உயர்ந்த மனிதனாக உயர்த்துகின்றன. அநீதியானது மனிதர்களிடையே சச்சரவுகளை விளைவிக்கிறது. நீதியோ தோழமையை வளர்க்கிறது.
* அறிவுள்ளவன் தன் செல்வத்தை மூளையில் வைத்திருக்க வேண்டும். தன் இதயத்தில் வைத்திருக்கக் கூடாது.
* உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள்.
* சட்டங்கள் ஏழைகளைக் கசக்கிப் பிழிகின்றன. பணக்காரர்களே சட்டத்தை ஆட்சி செய்கின்றனர்.
* அறிவாளிகள் பணத்திற்கு அடிமையாக இருப்பதால் தம் அறிவை விலை கூறுகின்றனர்.
* வேதனையைச் சகித்துக் கொண்டவனே எப்போதும் வெற்றி பெறுவான். ஒருவனிடம் அச்சம் கொண்டால் அவனிடம் அன்பு கொள்ள முடியாது.
* ஒருவனுக்கு நீ செய்த உதவிகளை அவனிடம் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருப்பது அவனைப் பழிப்பது போலாகும்.
* சோம்பலும் சோர்வு கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட ஒருநாள் பெரு முயற்சியோடு வாழ்வது மேலானது.

Monday, June 23, 2014

புதிர்கள்..

புதிர்கள்...



1.அய்ந்து குதிரைகள் 5 மூட்டை ஓட்சைச் சாப்பிட 5 நிமிட நேரம் எடுத்துக்கொண்டன என்றால், நூறு குதிரைகள் நூறு மூட்டை ஓட்சைச் சாப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும் ?



விடைகள்...



அய்ந்து குதிரைகள் அய்ந்து மூட்டை ஓட்சை அய்ந்து நிமிடங்களில் சாப்பிட முடியுமானால், ஒவ்வொரு குதிரைக்கும் ஒரு மூட்டை ஓட்சை சாப்பிட அய்ந்து நிமிடங்கள் வேண்டும். ஆகவே, நூறு குதிரைகளுக்கும் நூறு மூட்டை ஓட்சை சாப்பிட வெறும் அய்ந்து நிமிடங்களே போதும்.



2.
ஆறு அணில்கள் நாவல்பழக் கொட்டைகளைப் பொறுக்கி ஒரு பெரிய கூடையில் போட்டன. அணில்கள் மிகமிக வேகமாக வேலை செய்ததால் கூடையில் போட்ட ஒவ்வொரு நிமிட முடிவிலும் அந்தக் கொட்டைகள் இரட்டிப்பாகின. பத்தாவது நிமிட முடிவில் அந்தக் கூடை முழுதும் நிரம்பி விட்டது. அந்தக் கூடையை அரை அளவு மட்டும் நிரப்பும்போது, அந்த அணில்கள் எவ்வளவு நேரம் எடுத்திருக்கும்?


விடை


பெட்டிகளில் போடப்பட்ட ஒவ்வொரு கொட்டையின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நிமிட முடிவிலும் இரட்டிப்பாகுமென்றால், பெட்டி அரை அளவு நிரம்ப 9 நிமிடங்களாகும். பிறகு அடுத்த ஒரு நிமிடத்தில் பெட்டியின் அடுத்த அரைப் பகுதியும் நிரம்பிவிடும்.


3.
ஒரு மனிதன் ஒரு நாள் குதிரை பந்தயம் நடக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு உள்ள குதிரைகளினதும் மனிதர்களினதும் தலைகளின் எண்ணிக்கை 74 உம் கால்களின் எண்ணிக்கை 196 உம் ஆகும். அங்கு உள்ள குதிரைகளினதும் மனிதர்களினதும் எண்ணிக்கை யாது.


விடை


50 மனிதன் 24 குதிரை








 

விடுகதைகள்

விடுகதைகள்


1. தலையைச் சீவினேன்
தாகம் தீர்ந்தது. - அது என்ன?

2. தச்சன் செய்யாத பெட்டி தானே திறந்து மூடும் பெட்டி-அது என்ன?

3. தேடாமல் கிடைப்பது
தேடும் செல்வத்தைக் குறைப்பது. - அது என்ன?

4. நான் ஏறும் குதிரை, நாலு கால் குதிரை
அந்தக் குதிரைக்கு ஆயிரம் கண்கள். - அது என்ன?

5. டாக்டர் வந்தார் கோட்டைக் கழற்றினார்
கேணிக்குள் குதித்தார். - அது என்ன?

6. தளதள மேனிக் கெம்புக்கல்
தவழ்ந்து செல்லும் கெம்புக்கல்
நீரில் மிதக்கும் கெம்புக்கல்
நித்திரை கெடுக்கும் கெம்புக்கல். - அது என்ன?

7. வளைந்த தங்கக் கம்பி
வானத்திலே போட்ட கம்பி
எடுக்க வராத கம்பி
எட்டிப் பிடிக்க முடியாத கம்பி. - அது என்ன?

8. விரிந்தால் நான் அவனுக்குள் அடக்கம்
மடக்கினால் எனக்குள் அவன் அடக்கம். - அது என்ன?

9. நீல நிறத் தோட்டத்திலே
மஞ்சள் பூ பூத்திருக்கு. - அது என்ன?

10. தண்ணீரும் மழையும் இல்லாமல்
பயிர் பச்சையாய் இருக்கிறது
பாக்கு வெற்றிலை போடாமல்
வாய் சிவப்பாய் இருக்கிறது. - அது என்ன?



 விடுகதை விடைகள்

1.இளநீர்

2.கண்

3.சோம்பல்

4.கட்டில்

5.வாழைப்பழம்

6.மூட்டைப்பூச்சி

7.மின்னல்

8.குடை

9.பௌர்ணமி நிலா

10.கிளி


சிந்தனைத் துளிகள்....

சிந்தனைத் துளிகள்....

* பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
* துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
* இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
* நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
* கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
* நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயோ அப்படியானால் நேரத்தை வீணாக்காதே ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் உருவாக்கப்பட்டது.
* இளமையில் தோல்வியடைந்தால் கவலை கொள்ளாதீர். அடுத்தடுத்து முயன்று வெல்லுங்கள். இளமை வெகுவிரைவில் கடந்து சென்றுவிடும்.
* நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு.
* பிறர்படும் துன்பத்தை கண்டு கண்ணீர் விடுவதை விட அவர்களது கண்ணீரை துடைக்க ஏதாவது செய்வதே மேல்.
* ஒரு மணிநேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழந்து விட முடியும். ஆனால் ஓர் ஆண்டு சென்றாலும் ஓர் நல்ல நண்பனை பெற முடியாது.
* நம்பியது தோல்வியடையும் போது எல்லாமே நிலைமாரி விட்டதாக தோன்றும் ஆனால் தோல்வியிலும் முயற்சியை கைவிடக் கூடாது.
* எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது.
* குறைவாக சிந்திக்கும் மனிதர்கள் தான் அதிகமாக பேசுவார்கள்.
* உலகத்தை நேசிக்க கற்றுக் கொள் ஆனால் ஒருவரையும் ஆழமாக நம்பி விடாதே.
* நீ வாழ்க்கையில் உயரும் போது மனிதர்களிடம் சுமுகமாக இரு ஏனெனில் நீ கீழே இறங்கும் போது அவர்களை சந்திப்பாய்.

Saturday, June 21, 2014

 

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
  • அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
  • அகல இருந்தால் பகையும் உறவாம்.
  • அகல உழுகிறதை விட ஆழ உழு.
  • அகல் வட்டம் பகல் மழை.
  • அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
  • அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
  • அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
  • அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
  • அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
  • அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
  • அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
  • அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
  • அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
  • அடக்கமே பெண்ணுக்கு அழகு.
  • அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • அடாது செய்தவன் படாது படுவான்.
  • அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
  • அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
  • அடியாத மாடு படியாது.
  • அடிக்கிற கைதான் அணைக்கும்!
  • அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.
  • அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
  • அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
  • அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
  • அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !
  • அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
  • அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
  • அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
    • அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
  • அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
  • அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
  • அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..
  • அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
  • அந்தி மழை அழுதாலும் விடாது.
  • அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
  • அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
  • அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
  • அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
  • அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
  • அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
  • அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
  • அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
    • இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு
  • அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
    • குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.
  • அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
  • அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
  • அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
  • அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.
  • அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
  • அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
  • அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)
  • அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
  • அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
  • அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
  • அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
  • அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
  • அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
  • அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
  • அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே
  • அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
  • அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
  • அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
  • அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
  • அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
  • அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!
  • அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
  • அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.
  • அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
  • அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
  • அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
  • அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
  • அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
  • அழுத பிள்ளை பால் குடிக்கும்.
  • அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
  • அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
  • அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
  • அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
  • அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
  • அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
  • அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
  • அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
  • அறச் செட்டு முழு நட்டம்.
  • அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
  • அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
  • அறிய அறியக் கெடுவார் உண்டா?
  • அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
  • அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
  • அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
  • அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
  • அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
  • அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
  • அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
  • அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
  • அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!
  • அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
  • அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
  • அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  • அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
  • அற்றது பற்றெனில் உற்றது வீடு.
  • அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
  • அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
  • அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
  • அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
  • அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
  • அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
  • அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
  • அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை
  • அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
  • அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.

  • ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
  • ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
  • ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
  • ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
  • ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
  • ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
  • ஆசை வெட்கம் அறியாது.
  • ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools)
  • ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
  • ஆடிப் பட்டம் தேடி விதை.
  • ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
  • ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
  • ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
  • ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
  • ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
  • ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
  • ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
  • ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
  • ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
    • இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
    • ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
  • ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
  • ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
  • ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
  • ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
  • ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
  • ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
    • மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
  • ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
  • ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
  • ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
  • ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
  • ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
  • ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
  • ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
  • ஆரால் கேடு, வாயால் கேடு.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
  • ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
  • ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
  • ஆழமறியாமல் காலை இடாதே.
  • ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
  • ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
  • ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
  • ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
  • ஆள் பாதி, ஆடை பாதி.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே.
  • ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
  • ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
  • ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
  • ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
  • ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
  • ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
  • ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
  • ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
  • ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
  • ஆனைக்கும் அடி சறுக்கும்.
  • ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
  • ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
  • ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
  • ஆனைப் பசிக்கு சோளப் பொரி
  • ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
  • ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
  • ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
  • ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
  • ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
  • ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
  • ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.

  • இக்கரைக்கு அக்கரை பச்சை.
  • இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
  • இஞ்சி இலாபம் மஞ்சளில்.
  • இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.
  • இஞ்சி தின்ன குரங்கு மாதிரி....
  • இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
  • இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
  • இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
  • இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
  • இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
  • இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
  • இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
  • இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
  • இராச திசையில் கெட்டவணுமில்லை
  • இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
  • இருக்குறவ அள்ளி முடியறா.
  • இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
  • இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
  • இருவர் நட்பு ஒருவர் பொறை.
  • இலவு காத்த கிளி போல....
  • இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
  • இல்லது வாராது; உள்ளது போகாது.
  • இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்)
  • இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  • இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
  • இளங்கன்று பயமறியாது
  • இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
  • இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
  • இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • இறுகினால் களி , இளகினால் கூழ்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு (கேணி) நாறும்.
  • இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
  • இனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே.
  • இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?

  • ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
  • ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.
  • ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
  • ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

  • உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
  • உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
  • உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
  • உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
  • உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
  • உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
  • உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
  • உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
  • உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
  • உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.
  • உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
  • உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
  • உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
  • உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  • உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
  • உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
  • உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
  • .உப்பில்லா பண்டம் குப்பையிலே
  • உள்ள அளவும் உப்பிட்நினைடவரை .
  • உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
  • உரம் ஏற்றி உழவு செய்
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
  • உலோபிக்கு இரட்டை செலவு.
  • உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
  • உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
  • உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
  • உள்ளது போகாது இல்லது வாராது.
  • உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
  • உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
  • உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்.
  • உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
  • உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.

  • ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
  • ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
  • ஊண் அற்றபோது உடலற்றது.
  • ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
  • ஊமை சொப்பனம் கண்டாற் போல..
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  • ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
  • ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
  • ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
  • ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
  • ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
  • ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
  • ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
  • ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
  • ஊசி முனையில் மூன்று குளம்.

  • எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
  • எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
  • எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
  • எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
  • எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
  • எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
  • எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
  • எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
  • எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
  • எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
  • எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
  • எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
  • எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
  • எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  • எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
  • எதிரிக்கு எதிரி நண்பன்.
  • எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
  • எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
  • எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
  • எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
  • எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?
  • எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
  • எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல.
  • எலி அழுதால் பூனை விடுமா?
  • எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
  • எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
  • எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
  • எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
  • எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
  • எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
  • எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
  • எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
  • எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
  • எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
  • எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
  • எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
  • எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
  • எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
  • எறும்புந் தன் கையால் எண் சாண்
  • எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?

  • ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.
  • ஏரி நிறைந்தால் கரை கசியும்.
  • ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம்.
  • ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
  • ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
  • ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
  • ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
  • ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
  • ஏழைக்கேத்த எள்ளுருண்ட.
  • ஏழையின் சொல் அம்பலம் ஏறாது.
  • ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்.
  • ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
  • ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம்.
  • ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
  • ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்)

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐந்தில் விளையாதது, ஐம்பதில் விளையுமா?
  • ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
  • ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
  • ஐப்பசி அடை மழை.
  • ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
  • ஐம்பதிலும் ஆசை வரும்

  • ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
  • ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
  • ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
  • ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
  • ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
  • ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
  • ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
  • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
  • ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
  • ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி.
  • ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
  • ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
  • ஒற்றுமையே பலம்.
  • ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
  • ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
  • ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
  • ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று).......
  • ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்.
  • ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
  • ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.

  • ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
  • ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
  • ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
  • ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்....
  • ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
  • ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
  • ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
  • ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
  • ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
  • ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
  • ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
  • ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.

  • கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
  • கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
  • கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
  • கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
  • கடல் திடலாகும், திடல் கடலாகும்.
  • கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
  • கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றி செத்ததாம் கொக்கு!
  • கடலாழம் கண்ட பெரியோர்க்கும் பெண்கள் மன ஆழம் காணலரிது!
  • கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
  • கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
  • கடன் பட்டார் நெஞ்சம் போல...
  • கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான்.
  • கடமையைச் செய் பலனை எதிர்பாராதே.
  • கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
  • கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
  • கடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது.
  • கடுகு களவும் களவுதான், கற்பூரம் களவும் களவு தான்.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
  • கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவான்.
  • கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல.
  • கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
  • கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
  • கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
  • கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
  • கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கண் உள்ள போதே காட்சி; கரும்பு உள்ள போதே ஆலை!
  • கண் கண்டது கை செய்யும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
  • கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
  • கண்டதைத் தின்றால் பலவான் ஆகலாம்.
  • கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
  • கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
  • கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
  • கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
  • கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய்.
  • கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்தாற் போல
  • கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
  • கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
  • கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
  • கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
  • கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
  • கம்பால் சாய்க்காதவனைக் கயிற்றால் சாய்த்த கதையாக.
  • கரணம் தப்பினால் மரணம்.
  • கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.
  • கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
  • கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
  • கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
  • கரும்பு தின்ன கூலி வேண்டுமா?
  • கருத்த பார்ப்பனனையும், வெளுத்த சூத்திரனையும் நம்பாதே !?
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி!
  • கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருசன்.
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் [ ஒரு நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
  • கல்லாதவரே கண்ணில்லாதவர்.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கல்லடி பட்டாலும் கண்ணடி படாதே!!
  • கல்வி அழகே அழகு.
  • கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.
  • கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.
  • கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர்.
  • கள் குடித்த குரங்கு போல ...
  • கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
  • கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல.
  • கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
  • கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
  • கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும் அபயக் குரலே குரல்
  • களவும் கற்று மர
    • இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி
  • களவும் கத்தும் மற
    • களவையும் சூதாட்டத்தையும் மற
  • களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • கள்ள மனம் துள்ளும்.
  • கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
  • கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
  • கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
  • கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
  • கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே.
  • கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.
  • கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
  • கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
  • கன்றுக்குட்டிக்குத் தெரியுமா, கவணையுடைய உயரம்?
  • கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
  • கனிந்த பழம் தானே விழும்.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
  • கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.

கா

  • காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
  • காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?
  • காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
  • காணி ஆசை கோடி கேடு.
  • காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
  • காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
  • காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும்.
  • காகம் திட்டி மாடு சாகாது.
  • காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும்.
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல.
  • காகிதப்பூ மணக்காது.
  • காப்பு சொல்லும் கை மெலிவை.
  • காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
  • காய்த்த மரம் கல் அடிபடும்.
  • காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
  • காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி..
  • காரண குருவே காரிய குரு!
  • காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
  • காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
  • காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
  • காலத்துக்கு ஏற்றபடி பெருச்சாளி காவடி எடுத்து ஆடிற்றாம்!
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.
  • காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.
  • காலைக் கல்; மாலைப் புல்
    • "காலை நேரத்தில் கல்லின் மேல் உட்காரலாம்; குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் கல்லின் மேல் உட்கார்ந்தால் சுடும். காலை நேரத்தில் புல்லின் மேல் உட்கார்ந்தால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். மாலை நேரத்தில் புல்லின் மேல் அமர்ந்தால் இதமாக இருக்கும்" என்று சிலர் பொருள் கூறுவார்கள்; மாறாக, வேறு ஒரு பொருளும் கூறுவர். காலையில் கற்க வேண்டும். அப்போது மனம் அமைதியாக இருந்து கல்வியை ஏற்கத் தயாராக இருக்கும். காலை என்பது அதிகாலை 4 மணிக்கும் மேல்; அப்போது கற்கும் கல்வி கல்வெட்டு போல் மூளையில் பதியும். "இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து' என்பது கல்வி பற்றிய ஒரு பழமொழி. "மாலைப் புல்" என்பதற்கு, மாலை நேரம் இன்பத்தை அனுபவிப்பதற்கு ஏற்ற நேரம் என்று கூறுவர். (புல்-புல்லுதல்-இன்பம் அனுபவித்தல்). இது பவணந்தியார் என்ற இலக்கண ஆசிரியர் கருத்து. (காலைக் கல்; மாலைப் புல்!, தமிழ்மணி, 12 பிப் 2012)
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
  • காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
  • காற்றில்லாமல் தூசி பறக்குமா?
  • காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

கி

  • கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!
  • கிட்டாதாயின் வெட்டென மற
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
  • கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது.

கீ

  • கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
  • கீர்த்தியால் பசி தீருமா?
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.

கு

  • குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
  • குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
  • குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?
  • குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்னும்.
  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
  • குடியைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பு.
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
  • குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.
  • குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
  • குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
  • குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
  • குப்பை உயரும் கோபுரம் தாழும்.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
  • குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
  • குரங்கின் கைப் பூமாலை.
  • குரங்கு கையில் பூமாலை கொடுத்தாற் போல....
  • குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
  • குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
  • குரங்கு சுன்னியை மருந்துக்கு கேட்டால் அது கொம்புக்கு கொம்புக்கு தாவுமாம்!
  • குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
  • குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
  • குருவிக்கேத்த ராமேஸ்வரம்
    • இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு
  • குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
  • குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
  • குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.
  • குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிட்டாற் போல....
  • குறி வைக்க ஏற்ற ராம சரம்
  • குறைகுடம் ததும்பும், நிறைகுடம் ததும்பாது.
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • குனிய குனியத்தான் குட்டு விழும்.
  • குண்டுமணிக்குத் (குன்றிமணி) தெரியாதாம் தன் குண்டி கருப்பென்று.
  • கும்பி எரியுது, மீசைக்கு சம்பங்கி எண்ணெய்யா?
  • கும்பி கூழுக்கு அழுததாம், மீசை சம்பங்கி எண்ணெய் கேட்டதாம்.
  • கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி........

கூ

  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
  • கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
  • கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
  • கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
  • கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
  • கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
  • கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
  • கூழானாலும் குளித்துக் குடி.
  • கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்.
  • கூடாநட்பு கேட்டில் முடியும்.
  • கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?)

கெ

  • கெடுக்கினும் கல்வி கேடுபடாது
  • கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
  • கெடுவான் கேடு நினைப்பான்
  • கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்.
  • கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.
  • கெட்டும் பட்டணம் சேர்
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

கே

  • கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
  • கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
  • கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
  • கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
  • கேள்விப் பேச்சு மூளா நெருப்பு

கை

  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
  • கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன்
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
    • இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
  • கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
    • கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
  • கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
  • கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
  • கையிலே காசு வாயிலே தோசை
  • கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
  • கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
  • கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

கொ

  • கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?
  • கொஞ்சம் கொஞ்சமாக் குடைஞ்சா குடகு மலையையும் குடைஞ்சிடலாம்
  • கொடிக்கு காய் கனமா?
  • கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
  • கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
  • கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
  • கொல்லைக் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாகாது.
  • கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
  • கொண்டுவந்தால் தந்தை, கொண்டுவந்தாலும் வராவிட்டாலும் தாய்,சீர் கொண்டுவந்தால் சகோதரி,கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன்.
  • கொன்றால் பாவம், தின்றால் போகும்.
  • கொடுங்கோலன் ஆட்சியிலே அம் என்றால் சிறை வாசம், உம் என்றால் வனவாசம்.
  • கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
  • கொசு அடிக்க கோடரி வேண்டுமா?

கோ

  • கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
  • கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
  • கோடாலிக்காம்பு குலத்துக்கு ஈனம்
  • கோடி வித்தையும் கூழுக்குத்தான்
  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
  • கோபம் சண்டாளம்.
  • கோபுரம் தாண்டுகிற குரங்குக்கு குட்டிச் சுவர் என்ன பிரமாதம்!
  • கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
  • கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
  • கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
  • கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?
  • கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும்
  • கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
  • கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது
  • கோயிலில்லா ஊரிலே குடியிருக்கலாகாது
  • கோவிலை கட்டிப்பார், குளத்தை வெட்டிப்பார்.

  • சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
  • சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
  • சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
    • சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், உண்மையில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி.
  • சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
  • சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
  • சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
  • சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சா

  • சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவு.
  • சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.
  • சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.
  • சாண் ஏற முழம் சறுக்குகிறது.
  • சாது மிரண்டால் காடு கொள்ளாது.
  • சாத்திரம் பாராத வீடும் சமுத்திரம் பார்த்த வீடும் தரித்திரம்.
  • சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.
  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
  • சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன?

சி

  • சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம்
  • சித்திரையில் செல்வ மழை.
  • சிரைத்தாலும் தலையெழுத்து போகாது!
  • சிறுதுளி பெரு வெள்ளம்.
  • சிறுதுரும்பும் பல் குத்த உதவும்.
  • சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ்.
  • சித்தன் போக்கே சிவன் போக்கு.
  • சின்ன நாய எறண்டுவானேன் செருப்படி வாங்குவானேன்.

சு

  • சுக துக்கம் சுழல் சக்கரம்.
  • சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.
  • சுட்ட சட்டி அறியுமா சுவை.
  • சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?
  • சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.
  • சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.
  • சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.
  • சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே
  • சும்மா கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பதம் பார்த்தானாம்.
  • சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
  • சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி. (சும்மா கிடக்குற சங்க ஊதி கெடுத்தானாம் பண்டாரி)
  • சும்மா மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தாற் போல.......
  • சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
  • சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

சூ

  • சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்)
  • சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
  • சூடு மண்ட பூனை பாலை குடிக்காது.
  • சூதும் வாதும் வேதனை செய்யும்.

செ

  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  • செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம்.
  • செயவன திருந்தச் செய்.
  • செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
  • செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
  • செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா?
  • செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்.
  • செல்லுமிடம் சினம் காக்க.
  • செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
  • சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
  • செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!
  • செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
  • செய்யும் தொழிலே தெய்வம்.
  • சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

சே

  • சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
  • சேலை கட்டிய மாதரை நம்பாதே !
  • சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
  • சேற்றிலே செந்தாமரை போல.

சை

  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

சொ

  • சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொல் அம்போ வில் அம்போ?
  • சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
  • சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
  • சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
  • சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
  • சொல்வல்லவனை வெல்லல் அரிது.
  • சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
  • சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
  • சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சோ

  • சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
  • சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
  • சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.
  • சோழியன் குடுமி சும்மா ஆடாது!

  • தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
  • தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
  • தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
  • தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ?
  • தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
  • தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
  • தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
  • தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
  • தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தருமம் தலைகாக்கும்.
  • தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
  • தலை இருக்க வால் ஆடலாமா ?
  • தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
  • தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
  • தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
  • தலைக்கு மிஞ்சினால்தான் தானமும், தருமமும்.
  • தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
  • தவளை தன் வாயாற் கெடும்.
  • தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
  • தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!
  • தன் வினை தன்னைச் சுடும் !
  • தலகாணி மந்திரம் குடியைக் கெடுக்கும்.
  • தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை வெட்டுமாம்!!
  • தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகுவலியும்.
  • தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது!
  • தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்(லு)!

தா

  • தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
  • தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
  • தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
  • தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
  • தான் சாகணும் சுடுகாடு பார்க்கணும்
  • தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
  • தானத்தில் சிறந்தது நிதானம்
  • தானிருக்கும் அழகுக்குத் தடவிக்கொண்டாளாம் வேப்பெண்ணெய்
  • தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்.
  • தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை.
  • தாயைப் பார்த்து பெண்ணை கொள்.
  • தாயோடு அறுசுவை உணவு போம்.
  • தாய்க்குப்பின் தாரம்.

தி

  • திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை
  • திரைகடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்)
  • திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல....
  • திருடனுக்கு தேள் கொட்டினாற் போல...
  • திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல...
  • தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்.
  • தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!..

து

  • துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ?
  • துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை
  • துரும்பும் பல் குத்த உதவும்

தூ

  • தூய மனதை திடுக்கிட வைத்தால் ஐயம் இல்லாமல் அனைத்தும் வரும்

தெ

  • தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா? (கட்டியதாம்)

தே

  • தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவான்.
  • தேனெடுக்றது ஒருத்தன் பொறங்கைய நக்றது ஒருத்தன்.

தை

  • தை பிறந்தால் வழி பிறக்கும்
  • தை மாதம் போட்ட விதை தண்ணீரில்லாமல் வளரும்

தொ

  • தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

தோ

  • தோண்டக்குறுணி துக்க முக்குறுணி.

  • நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடாரி கொண்டு வெட்டுகிறான்.
  • நடக்க அறியாதவனுக்கு நடுவீதி காத வழி.
  • நடந்தவன் காலிலே சீதேவி, இருந்தவன் காலிலே மூதேவி
  • நடந்தால் நாடெல்லாம் உறவு , படுத்தால் பாயும் பகை.
  • நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா !
  • நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது.
  • நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும்
  • நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும்.
  • நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  • நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ?
  • நயத்திலாகிறது பயத்திலாகாது.
  • நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும்.
  • நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும்.
  • நரி எடம் போனா என்ன வலம் போனா என்ன நம்ம மெலெ விழுந்து புடுங்காம இருந்தா சரி.
  • நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.
  • நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை.
  • நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும்.
  • நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது.
  • நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ?
  • நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும்.
  • நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.
  • நல்லவனா கெட்டவனா என்பது செத்தால்தான் தெரியும்.
  • நல்லார் பொல்லாரை நடக்தையால் அறியலாம்.
  • நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்(லு).
  • நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை.
  • நதி மூலமும் ரிஷி மூலமும் ஆராயாதே.
  • நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனை.
  • நன்மை கடைபிடி.

நா

  • நா அசைய நாடு அசையும்.
  • நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
  • நாடறிந்த பார்ப்பானுக்கு பூணூல் அவசியமா ?
  • நாம் ஒன்று நினைக்க , தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • நாயைக் கண்டால் கல்லை காணோம், கல்லைக் கண்டால் நாயை காணோம்.
  • நாய் இருக்கிற சண்டை உண்டு.
  • நாய்க்கு வேலையில்லை நிற்க நேரமும் இல்லை.
  • நாய் விற்ற காசு குரைக்குமா?
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • நாள் செய்வது நல்லார் செய்யார்.
  • நரம்பில்லா நாக்கு நாலும் பேசும்.
  • நாற்பது வயதுக்குமேல் நாய் குணம்.
  • நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
  • நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்.
  • நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி.
  • நான்கு பிள்ளை பெற்றவருக்கு நடுத்தெருவில் சோறு, ஒரு பிள்ளை பெற்றவருக்கு உறியில் சோறு

நி

  • நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
  • நித்திய கண்டம் பூரண ஆயுசு.
  • நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
  • நித்திரை சுகம் அறியாது.
  • நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
  • நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
  • நிறை குடம் நீர் ததும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
  • நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

நீ

  • நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
  • நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
  • நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
  • நீர் மேல் எழுத்து போல்.
  • நீரானாலும் மோர், பேயானாலும் தாய்.
  • நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
  • நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
  • நீரில்லா நெற்றி பாழ்.

நு

  • நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
  • நுணலும் தன் வாயால் கெடும்.

நூ

  • நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
  • நூல் கற்றவனே மேலவன்.
  • நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு.
  • நூற்றைக் கொடுத்தது குறுணி.

நெ

  • நெய் முந்தியோ திரி முந்தியோ.
  • நெய்யை உருக்கு, தயிரை பெருக்கு, உண்டியை சுருக்கு.
  • நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா?
  • நெருப்பு என்றால் வாய்வெந்து போமா?
  • நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ?
  • நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.
  • நேற்று உள்ளார் இன்று இல்லை.

நை

  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.

நொ

  • நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு.
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.

நோ

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • நோய் கொண்டார் பேய் கொண்டார்.
  • நோய்க்கு இடம் கொடேல்.

  • துணியாதே , படபடப்பாகச் செய்யாதே.
  • பனை மர நிழலும் சரி, மறப்பய உறவும் சரி
  • பகைவர் பகலில் பக்கம் பார்த்துப் பேசு இரவில் அதுதானும் பேசாதே.
  • பகுத்தறியாமல் உறவு புகை எழு நெருப்பு.
  • பக்கச் சொல் பதினாயிரம்.
  • பசியுள்ளவன் ருசி அறியான்.
  • பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்
  • பசித்தபின் புசி.
  • பசுவிலும் ஏழை இல்லை பார்ப்பாரிலும் ஏழையில்லை.
  • பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?
  • பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?
  • படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.
  • படிக்குற வரைக்கும் புள்ள பயிறு பயிறுன்னாச்சாம்; படிச்சபெறவு பசறு பசறுன்னுச்சாம்.
  • படைக்கும் ஒருவன் கொடைக்கும் ஒருவன்.
  • படையிருந்தால் அரணில்லை.
  • படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
  • பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும். (Misery loves company)
  • பட்டவருக்கு பலன் உண்டு; பதவியும் உண்டு!
  • பட்டால் தெரியும் பட்ட வலி.
  • பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.
  • பட்டும் பட்டாடையும் பெட்டியிலிருக்கும், காற்காசு கந்தையில் ஓடி உலாவும்.
  • பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்தாற் போல.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.
  • பணத்தைப் பார்க்கிறதா பழைமையைப் பார்க்கிறதா?
  • பணம் என்ன செய்யும் பத்தும் செய்யும்.
  • பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
  • பணம் உண்டானால் மணம் உண்டு.
  • பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
  • பணம் பாதாளம் மட்டும் பாயும்.
  • பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்
  • பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.
  • பண்டிதன் மகன் பரம சூனியம்.
  • பண்டம் ஒரிடம் பழி பத்திடம்.
  • பதறாத காரியம் சிதறாது.
  • பதறிய காரியம் சிதறும் (Haste is waste)
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.
  • பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.
  • பந்திக்கு முந்தி,படைக்கு பிந்தி
  • பல்லு போனா சொல்லு போச்சு.
  • பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை.
  • பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம்.
  • பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான்.
  • பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான்.
  • பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
  • பல்லக்கு ஏய யோகம் உண்டு உன்னி ஏறச் சீவன் இல்லை.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும். (Familiarity breeds contempt)
  • பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்.
  • பழுத்த ஒலையைப் பார்த்துக் குருத்தோலை சிரிக்கிறதாம்.
  • பழுத்த பழம் கொம்பிலே நிற்குமா?
  • பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.
  • பழுத்த மரம்தான் கல்லடி படும்.
  • பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல.
  • பள்ளிக் கணக்குப் புள்ளிக்கு உதவாது.
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?
  • பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
  • பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
  • பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
  • பனை மரத்து நிழல்ல பாய விரிச்சு படுத்த மாதிரி பாடா படுத்துது! நிழலும் ஒரு அடி. நிம்மதியும் அதுக்குள்ளே
  • பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
  • பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னுமாம்.
  • பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
  • பக்கத்து வீட்டு சாம்பாருக்கு ருசி அதிகம்.
  • பகலில் பசுமாடே கண்ணுக்குத் தெரியாது, இரவில் எருமைமாடா தெரியப்போகிறது?

பா

  • பாட்டி சொல்லைத் தட்டாதே.
  • பாண்சேரிப் பற்கிளக்கு மாறு (பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்துவந்தவர் பறையருள், ஒரு பிரிவினரான பாணரே.)
  • பாத்திரமறிந்து பிச்சை இடு, கோத்திரமறிந்து பெண்ணை எடு.
  • பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
  • பாம்பின் கால் பாம்பறியும்.
  • பாம்பும் சாகக் கூடாது கம்பும் உடையக் கூடாது
  • பாம்பு தின்கிற ஊர் போனால், நடுமுறி தமக்கு என்று இருக்க வேண்டும்!
  • பாம்பு என்று அடிக்கவும் முடியாது, பழுதை என்று தாண்டவும் முடியாது.
  • பாம்பு கடித்தால் பத்து நிமிஷம், அரணை கடித்தால் அரை நிமிஷம்.
  • பாம்பு என்றால் படையும் நடுங்கும்.
  • பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.
  • பாலூட்டி வளர்த்தாலும் பாம்பின் குணம் மாறுமா?
  • பானை பிடித்தவள் பாக்கியசாலி.

பு

  • புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி
  • புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
  • புத்திமான் பலவான்.
  • புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
  • புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.
  • புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
  • புலவர் போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூறுவர்.

பூ

  • பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
  • பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
  • பூவிற்றகாசு மணக்குமா?
  • பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
  • புயலுக்குப் பின்னே அமைதி.

பி

  • பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்!
  • பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப் பறிச்சுதாம் அனுமார்

பெ

  • பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
  • பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
  • பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
  • பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
  • பெண்ணுக்கு இடம் கொடேல்.
  • பெண் சிரித்தால் போச்சு, புகையிலை விரிந்தால் போச்சு!!
  • பெண்டாட்டி இல்லை, கருவும் இல்லை மகனின் பெயர் கரிகாலனாம்....
  • பெத்த அம்மா செத்தா பெத்த அப்பன் சித்தப்பன்
  • பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
  • பெருமை ஒருமுறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை!
  • பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
  • பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.

பே

  • பேசப் பேச மாசு அறும்.
  • பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
  • பேராசை பெருநட்டம்.
  • பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்
  • பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் ஏறத்தான் வேண்டும்.

பொ

  • பொங்கும் காலம் புளி , மங்குங் காலம் மாங்காய்.
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
  • பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
  • பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகு இல்லை.
  • பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.
  • பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
  • பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
  • பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல...

போ

  • போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
  • போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்.
  • போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
  • போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

  • மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.
  • மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
  • மடை திறந்த வெள்ளம் போல ......
  • மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
  • மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    • இது 'மண்குதிரை (மண்குதிர்) நம்பி ஆற்றில் இறங்கலாமா' என்பதன் திரிந்த வழக்கு
  • மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
    • மண்குதிர் என்பது புதுமணல் மேடு. அதை நம்பி ஆற்றில் இறங்கினால் புதைந்துவிட வாய்ப்புண்டு.
  • மண்டையுள்ள வரை சளி போகாது.
  • மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை பொல்லாது.
  • மணி அடித்தால் சோறு, மயிர் முளைத்தால் மொட்டை.
  • மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
  • மதியாதார் வாயிலை மிதியாமை கோடி பெறும்.
  • மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.
  • மரம் சும்மாயிருந்தாலும் காற்று விடுமா?
  • மரம் செவனேன்னு கெடந்தாலும், காத்து கடனேன்னு அலைகழிக்குமாம்
  • மரம் வெட்டுகிறவனுக்கு நிழலும்..., மண் தோடுகிறவனுக்கு இடமும் கொடுக்கும்.
  • மரம் வைத்தவன் த்ண்ணீர் வார்ப்பான்.
  • மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மருந்தும் விருந்தும் மூன்று வேளை.
  • மருந்தே யாயினும் விருந்தோடு உண்.
  • மலிந்த சரக்குக் கடைத் தெருவுக்கு வரும்.
  • மலை அத்தனை சாமிக்குக் கடுகு அத்தனை கர்ப்பூரம் .
  • மலையைத் துளைக்கச் சிற்றுளி போதாதா?
  • மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்
  • மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?
  • மல்லாந்து உமிழ்ந்தால் மார்மேல் விழும்.
  • மவுனம் கலக நாசம்
  • மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.
  • மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
  • மனதிலிருக்கும் இரகசியம் மதி கேடனுக்கு வாக்கிலே.
  • மனமுரண்டிற்கு மருந்தில்லை.
  • மனம் உண்டானால் இடம் உண்டு.
  • மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு.
  • மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.
  • மனம் போல வாழ்வு.
  • மன்னன் எப்படியே மன்னுயிர் அப்படி.
  • மண்ணுயிரை தன்னுயிர்போல் நினை.
  • மணலை கயிறாக திரிப்பது போல. ..
  • மந்திரத்தால் மாங்காய் விழாது!
  • மழை விட்டும் தூவானம் விடவில்லை!

மா

  • மாடம் இடிந்தால் கூடம்.
  • மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?
  • மாடு கெட்டால் தேடலாம் மனிதர் கெட்டால் தேடலாமா?
  • மாடு மேய்க்காமற் கெட்டது பயிர் பார்க்காமற் கெட்டது.
  • மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்.
  • மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மாட்டுப் பெண்தான்.
  • மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம்.
  • மாமியார் மெச்சின மருமகளில்லை, மருமகள் மெச்சின மாமியாரில்லை.
  • மாரடித்த கூலி மடி மேலே.
  • மாரிக்காலத்தில் பதின்கல மோரும் கோடைக்காலத்தில் ஒருபடி நீருஞ் சரி.
  • மாரி யல்லது காரியம் இல்லை.
  • மாவுக்குத் தக்க பணியாரம்.
  • மாற்றானுக்கு இடங் கொடேல்.
  • மானம் பெரிதோ? உயிர் பெரிதோ?
  • மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
  • மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு.

மீ

  • மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?

மு

  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ?
  • முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)
  • முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும்
  • முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)
  • முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டாற் போல...
  • முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!
  • முயற்சி திருவினையாக்கும்.
  • முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
  • முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

மோ

  • மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.

யா

  • யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்.
  • யானைப் பசிக்கு சோளப் பொரி
  • யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).

யோ

  • யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.

  • மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல

மா

மாடு எளைச்சாலும் கொம்பு எளைக்குமா?

மி

  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
  • மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
  • மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
  • மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
  • மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

மீ

  • மீ தூண் விரும்பேல்.

மு

  • முகத்துக்கு முகம் கண்ணாடி
  • முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?
  • முட்டையிடுகிற கோழிக்கு வருத்தம் தெரியும்.
  • முட்டிக்கு (பிச்சைக்கு) போனாலும் மூன்று பேர் ஆகாது.
  • முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா
  • முதல் கோணல் முற்றுங் கோணல்
  • முத்தால் நத்தைப் பெருமைப்படும் , மூடர் எத்தாலும் பெருமை படார்.
  • முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
  • முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?
  • முன் ஏர் போன வழிப் பின் ஏர்
  • முன்கை நீண்டால் முழங்கை நீளும்.
  • முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
  • முட்டாள் தனத்துக்கு முதல் பாக்குக்காரன்.
  • முதலியார் டம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு.

மூ

  • மூட கூட்டுறவு முழுதும் அபாயம்.
  • மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
  • மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முதலில் கசக்கும்.
  • மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்ன இனிக்கும்.
  • மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்.
  • மூர்க்கனுக்கு செய்யாதே உபதேசம்.
  • மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது.

மெ

  • மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
  • மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.

மே

  • மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
  • மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.

மொ

  • மொழி தப்பினவன் வழி தப்பினவன்.

மோ

  • மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
  • மெளனம் மலையைச் சாதிக்கும்.

ரா

  • ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது.

  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
  • வடக்கே கருத்தால் மழை வரும்.
  • வட்டி ஆசை முதலுக்கு கேடு.
  • வணங்குன புல்லு தைக்கும்.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • வந்த வேலெயப் பாக்காம பந்தக்காலெ ஆட்னானான்.
  • வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
  • வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
  • வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
  • வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
  • வருந்தினால் வாராதது இல்லை.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
  • வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
  • வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே?
  • வளவனாயினும் அளவறிந் தளித்துண்
  • வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் போல.....
  • வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
  • வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
  • வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.
  • வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்)

வா

  • வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
  • வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை.
  • வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
  • வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
  • வாழ்வும் தாழ்வும் சில காலம்.
  • வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்.
  • வாழையடி வாழையாக .........
  • வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது

வி

  • விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
  • விரலுக்குத் தகுந்த வீக்கம்.
  • விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
  • விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
  • விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம்.
  • விதி எப்படியோ மதி அப்படி.
  • விதியை மதியால் வெல்லலாம்.
  • வித்தைக்கு அழிவில்லை.
  • வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
  • விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
  • விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
  • வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
  • விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
  • விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
  • விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்.
  • வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
  • விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

வீ

  • வீட்டுக்கு வீடு மண் வாசற்படி
  • வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது.
  • வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது.

வெ

  • வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல....
  • வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
  • வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
  • வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
  • வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!!
  • வெளுத்ததெல்லாம் பாலல்ல.
  • வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான்.
  • வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல....

வே

  • வேலிக்கு ஓணான் சாட்சி.
  • வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு.
  • வேலியே பயிரை மேய்ந்தாற் போல...
  • வேலை வரும்போதுதான் பேல வரும்.
  • வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!
  • வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
  • வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

வை

  • வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
  • வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
  • வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.