Saturday, January 25, 2014

ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு வகைகள்



anaicoddai 
ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு வகைகள்....


உடல் ஆரோக்கியமானது ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதில் தான் உள்ளன. ஏனெனில் உடலின் அனைத்து செ
யல்பாடுகளுக்கு ரத்தமா னது மிகவும் இன்றியமையா தது. எனவே அத்தகைய ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால், உடலில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, உடலின் உறுப்புக்கள் மெதுவாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அதிகப்படியான நச்சுக்கள் ரத்தத்தில் இருந்தால் தான், அலர்ஜி, நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு, தொடர்ச்சியான தலை வலி, சோர்வு போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி, அசுத்த ரத்தமானது உடலில் இருந் தால், உடலில் மட்டுமின்றி, சருமத்திலும் பல பிரச்சனைகள் ஏற்படும்.
அதில் பிம்பிள், முகப்பரு, கருமைப்படிதல், பொலிவிழந்த சருமம் மற்றும் வறட்சியான சருமம் போன்றவை ஏற்படும். எனவே தான், கடைகளில் ரத்தத்தை சுத்திகரிக்கும் பல்வேறு மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த மருந்துகளால் எந்த நன்மையும் கிடைப்பதில்லை.
ஆகவே ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, ரத்தத்தை சுத்தப் படுத்தும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, உடலில் ரத்தத்தை சுத்திகரிக்கும் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நிணநீர் நாளங்கள் நன்கு செயல்பட்டு, ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் ரத்தத்தை சீராக ஓட வைக்கும்.
இங்கு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில உணவு களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றை உணவில் சேர்த்து வந்தால், இரத்தம் சுத்தமாவதோடு, சருமமும் நன்கு அழகாக மின்னும்.
ப்ராக்கோலி :
இந்த பச்சை நிற காய்கறியில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இவை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, உடலில் ஆபத்தை விளைவிக்கும் கொடிய நச்சுக்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
முட்டைகோஸ் :
வாரம் 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜுஸை குடித்து வந்தால், உடலில் உள்ள ரத்தமானது சுத்தமாகும்.
காலிஃப்ளவர் :
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான காலிஃப்ளவரில் குளோரோஃபில் என்னும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் பொருள் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுப்பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
பாகற்காய் :
கசப்புத் தன்மையுடைய பாகற்காய் அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். அதிலும், பாகற்காயை வேக வைத்து சாப்பிட்டால் தான், அதன் முழு நன்மையைப் பெற முடியும்.
வேப்பிலை :
வாரத்திற்கு 2 முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.
பூண்டு :
பூண்டு ஒரு சிறந்த ஆன்டிபயாடிக் மட்டுமின்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மையும் கொண்டது. மேலும் இது உடலில் தங்கியுள்ள நச்சுகளை மட்டுமின்றி, தேவையற்ற கொழுப்புக்களையும் கரைத்து விடும்.
கேரட் :
கேரட் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும் என்று சொல்வார்களே, அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் கேரட் சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்பதால் தான். ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜுஸ் குடித்து, ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருங்கள்.
எலுமிச்சை :
எலுமிச்சையில் உள்ள புளிப்புத்தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் உள்ள அளவையும் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். மேலும் இது உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.
அன்னாசி :
பழங்களில் அன்னாசிப் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. ஆகவே அன்னாசியை டயட்டில் சேர்த்து, ரத்தத்தை மட்டுமின்றி, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
இஞ்சி டீ :
இஞ்சி டீயை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலும், ரத்தம் சுத்தமாக இருக்கும்.
பார்ஸ்லி :
சிறுநீரகத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுத்தப்படுத்தும் தன்மை பார்ஸ்லியில் அதிகம் உள்ளது. மேலும் இது ரத்தத்தை சுத்தப்படுத்தும் வைத்தியங்களில் மிகவும் பிரபலமான பொருளும் கூட.
நெல்லிக்காய் :
நெல்லிக்காயிலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் பொருள் அதிகம் நிரம்பியுள்ளது. ஆகவே தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு, ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்தி யையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களையும் எந்தவித தங்கு தடையின்றி இயங்க செய்வதில் ரத்தத்தின் பங்கு முக்கியமானது. சீரான ரத்த உள்ள மனிதனுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள்.
அந்த வகையில் உடலுக்கு ஒவ்வாத உணவு பண்டங்களை தவிர்த்து மேற்கூறிய உணவு பொருட்களை உண்டு ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, பிறருக்கு தானமாக கொடுக்கும் ரத்தத்தையும் சுகாதாரமானதாக கொடுப்போம்.

சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்..

http://www.anaicoddai.com/wp-content/uploads/2012/02/sun.png

சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்..

நலவாழ்வு வாழ நீங்கள் நாட வேண்டிய `இயற்கை’ மருத்துவர்கள், இரண்டு பேர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உடல் நலனைக் கட்டிக்காப்பதில் கைதேர்ந்த `நிபுணர்கள்’. அவர்கள் யாரென்று அடையாளம் தெரிய இதோ அவர்கள் முகவரி… 1 காலையில் எழுந்ததும் இவரிடம் உடலைக் காட்டுவதுதான், நமது உடலை `செக்கப்’ செய்து கொள்ளும் செலவில்லாத வழி. அவர் உடனே பல வியாதிகருக்கு தடுப்பு மருந்தை உடலில் செலுத்தி விடுவார். காசு எதுவும் கேட்க மாட்டார். அந்த டாக்டர் வேறு யாருமல்ல `சூரிய’பகவான்தான். `சூரிய ஒளி புகாத வீட்டில் டாக்டர் நுழைவார்’ என்பது பழமொழி. சூரிய ஒளி உடலுக்கு என்னென்ன நலன்களைத் தருகிறது தெரியுமா? * சருமத்திற்கு பொலிவு தருகிறது. உடலில் நோய் எதிர்ப்பு பணியைச் செய்யும் ரத்த வெள்ளையணுக்கள் அதிகம் உற்பத்தியாக உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * சூரிய ஒளி, உணவு செரிமானத் தன்மையை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளியேற்ற உதவும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் துணை புரியும். * உடல் ஊட்டச்சத்தில் முக்கிய பங்கு வகிக்கும் `வைட்டமின் டி` கிடைக்கச் செய்கிறது. சமீபத்திய ஆய்வில், மாலை இளம் வெயிலில் நடைபயணம் செய்வது ஆண்மை வீரியம் கிடைக்க உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. * காலை மாலை இளம் வெயிலின் மூலம் உடலில் சூரிய ஒளி படுவதால் புற ஊதாக் கதிர்கள் உடலில்படும். அது வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. உச்சி வெயிலில் கிடைக்கும் அதிகமான புற ஊதாக்கதிர் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். * சூரிய ஒளி படாமல் வாழ்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
* நலத்துடன் வாழ விரும்புபவர்கள் காலை, மாலை வெயிலில் சிறிது நேரம் (குறைந்தது 10 நிமிடங்கள்) உலவும் படியான பணிகளைச் செய்தாலே போதும். இந்த நன்மைகளெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
2 கசப்பில்லா மருந்து தருவது இவரின் வாடிக்கை. எனவே அனைவரும் மகிழ்ச்சியுடனே இவர் தரும் மருந்தை சாப்பிடுவார்கள். நோயில்லாத நேரங்களிலும் எல்லாரும் இந்த மருந்தைச் சாப்பிடுகிறார்கள். மற்ற மருந்துகள் ஒரு நாளைக்கு ஒரு டோஸ்,
3 டோஸ் என்றால் இந்த மருந்தை தினமும் 8 முதல் 10 டோஸ் (டம்ளர்) சாப்பிடலாம். அத்தனை சர்வசஞ்சீகை மூலிகை அது. புரியவில்லையா… தண்ணீர்தாங்க அந்த மருத்துவர். இயற்கை தந்த அற்புத மூலிகை இது. உடல் அதிகப்படியாய் இருப்பது தண்ணீர்தான். உடலில் ஒவ்வொரு செல்லும் பாதிக்குமேல் தண்ணீரைக் கொண்டிருக்கிறது. தண்ணீர் உடலை எவ்வாறெல்லாம் வளப்படுத்துகிறது தெரியுமா? * சோடியம், பொட்டாசியம், குளோரைடு, பைகார்பனேட் அடங்கிய எலக்ட்ரோலைட் என்னும் மூலக்கூறு உடல் இயக்கத்துக்கு அவசியமானது. போதிய தண்ணீர் கிடைத்தால்தான் உணவுகளில் இருந்து எலக்ட்ரோலைட் கிடைக்க ஏதுவாகும். இல்லாவிட்டால் செல்கள் வறண்டுவிடும் அல்லது மாண்டுபோகும். * உடல் தளதளவென்று அழகு பெற தண்ணீர் அவசியம். உடலில் கொலஸ்டிரால் (கெட்ட கொழுப்பு) அதிகமாகாமல் தடுக்கும். * தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு 2 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். * தண்ணீர் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதயம், மூளைக்குச் செல்லும் தமனிகள் தடையின்றி செயல்பட உதவும். * மூளை 85 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் பருகுவதற்கேற்ப மூளை புத்துணர்ச்சி பெறும். இதனால் நீங்கள் உற்சாகமாக செயல்படுவீர்கள். நினைவுத்திறன் அதிகரிக்கும். ஞாபகமறதி வியாதிகள் ஏற்படாமல் தடுக்கும். * தினமும் குறைந்தது 8 டம்ளர் (2 லிட்டர்) நீர் பருகுவது ஆரோக்கியத்திற்கு அவசியம். உங்களின் தாகத்தில்தான் உடல் ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது என்கிறார் புளோரிடா மருத்துவ நிபுணர் பத்மாங்கலிட்ஜ்.

பார்லித் தண்ணீர் குடியுங்கள்...




 பார்லித் தண்ணீர் குடியுங்கள்...

பார்லித் தண்ணீர் குடிக்கிறார்கள். ஆனால் எல்லோருமே
குடிக்கலாம் அப்படி குடிப்பவர்கள் ஆரோக்கியமான
வாழ்க்கையா இருக்கும் தினமும் முடிந்தால் ஒரு
முறையாவது அருந்த வேண்டும்.

இது மிகச் சிறந்த சத்துணவு ஆகும்.

அதிகமான புரதங்கள், பாஸ்பரஸ்
உப்பு, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் முதலியவை
நிறைந்த பாதையைப் புதுப்பிக்கிறது.
மூளை செல்களை விழிப்புடன் வைத்திருக்கிறது.

பள்ளிக் குழைந்தைகளும்,நீரிழிவு நோயாளிகளும்
பார்லியை காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குறைந்தது
மூன்று வேளையாவது குடிப்பது நல்லது.

மூளை விழிப்படைவதால் கவலைகள் பறக்கும். சுறு சுறுப்பாக வாழ்வார்கள். ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க விரும்புகிறவர்கள்.
தினமும் அதிக பட்சம் 11/2 லிட்டர் பார்லித் தண்ணீரை
ஐந்து வேளையாகப் பிரித்து குடித்தால் உடலுக்கு சக்தி
கிடைக்கும்.

இதற்கு மாற்றாக சாப்பாட்டின் அளவை குறைத்து கொள்ளலாம். அப்படி குறைப்பதால் உடல் எடை குறைந்து விடும் எனவே நீங்கள் பார்லி தண்ணீரை தினமும் அருந்துங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி 8அல்லது 9மாதங்களில்
கால் வீக்கம் வரும் அப்படி வராமல் இருக்க பார்லி
தண்ணீர் அருந்தினால் கால் வீங்காது தினமும்
ஒரு கப் குடிக்க வேண்டும்.

நலமாக வாழ வேண்டுமா? புகைக்காதீர்கள்!

நலமாக வாழ வேண்டுமா? புகைக்காதீர்கள்!

பொழுதுபோக்கிற்காக, நண்பர்களுடன் கலந்துரையாடும்போது பிடிப்பதாக இருந்த இந்த வெண்சுருட்டுகள் இன்று அனைத்து தரப்பிலும், பழக்கமாகிப் போய், அதை விட்டொழிக்க முடியாமல் தள்ளாத வயதிலும் தடுமாற்றத்தோடு அதை தவறாமல் புகைத்து வருகிறார்கள்.

புகைப்பவருக்கு புகை பல்வேறு நோய்களை தருவது மட்டுமின்றி, அருகில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இலவசமாக நோய்களைத் தந்து விடுகிறது என்பதுதான் புகைப்பவர்கள் தன்னையும் அறியாமல் செய்யும் கொடும் செயல்! அப்படி என்னதான் புகையால் தீமைகள் ஏற்படுகின்றன? என்றால், முதலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே தீய எண்ணம்தான்! ஒரு வெண் சுருட்டில் மட்டும் தார், நிக்கோட்டின், துத்தநாகம், சல்பர் போன்ற 148 வகையான வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நூற்றுக்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒரு சேர பாதிக்கும். நச்சுகளின் மொத்த நாசகாரக் கலவைதான் இந்த வெண் சுருட்டுகள்!

உலக நலவாழ்வு அமைப்பின் கூற்றுபடி ஒரு நாளைக்கு 20 வெண் சுருட்டுகள் வீதம், 20 வருடங்களுக்கு தொடர்ந்து புகைத்தால் நுரையீரலில் புற்று நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால் இது பல வருடங்களுக்கு முன்பு வரையறை செய்யப்பட்ட ஒரு கணிப்புதான்! ஆனால் இப்போது காலம் மாறி கிடக்கும்போது, பத்து வருட அளவிலேயே பெரும் கேடுகள் நிகழ்ந்து விடுகின்றன. முதலில் பாதிக்கப்படுவது சுவாச மண்டலம்தான். ஒவ்வாமை, தும்மல், சளித் தொந்தரவுகள், இடைவிடா இருமல், இழுப்பு போன்றவை வரும். பிறகு இது ஆஸ்துமாவாக, மூச்சிரைப்பாக மாறும். சிலருக்கு காசநோயும் வரலாம். இவற்றின் தொடர்ச்சியாக நுரையீரல் புற்றுநோயும் வரலாம். இது விளையாட்டான செயல் அல்ல. கடும் விளைவுகளில் சிக்கிக்கொண்டு சிதறுண்டு போவதற்கான ஒரு முன்னோட்டமாக அமைந்து நம்மை அழித்து விடும். பிறகு பாதிக்கப்படுவது இதயம். இதயத்தின் ரத்தக் குழாயில் நச்சுக்கள் படியும்போது இதயத்தில் சுவர்கள் தடித்து வீங்கி, ரத்தக்குழாயின் அளவு சுருங்கி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகின்றன.

சுருங்கச் சொன்னால் சுத்தமான குடிநீரில் அசுத்தமான கழிவு நீர் இரண்டறக் கலப்பது போலத்தான் இங்கும் நடக்கிறது. இதயத் தமனியின் வீக்கம், நுரையீரல் நீர்க்கோவை, இதயத் தசைகளின் செயலிழப்பு என்று ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகின்றன. சில சமயங்களில் மூச்சு மண்டல – இதய செயலிழப்பும் ஒரு சேர ஏற்பட்டு அது உயிரை உடன் பறித்து விடுகிறது. புகைப்பவர்கள், தேநீர் குடித்துக்கொண்டே புகைக்கும்போது பசி உணர்வு இல்லாமல் போகிறது. இப்படி தொடர்ந்து வினைகள் நடக்கும்போது எதிர்வினையாக குடற்புண்ணும், குடற் சுருக்கமும் ஏற்பட்டு பசி இல்லாமல் போகிறது. இந்நிலை நீடித்தால் குடற்புற்று நோய் வரும். இதில் சிக்கல் என்னவென்றால் ஒரு முறை புகையை உள்ளிழுத்து வெளியில் ஊதிய பிறகு மனம் முழுவதாக நிறைவடைவதில்லை. மூளையின் முன் பக்க செல்கள் வேதிப் பொருட்களை தொடர்ந்து சுரந்து மீண்டும், மீண்டும் புகைக்கும் ஆவலை ஏற்படுத்துகின்றன. இல்லை என்றால் ஒரு விதமான பயம் – பதட்ட உணர்வு நிலைக்கு அழைத்து செல்கின்றன. இந்த நரம்பு சார்ந்த வேதிகளின் அதாவது ‘கார்ட்டிசால்’, ‘அட்ரீனலின்’ போன்றவை பழக்கத்திற்கு அடிமையாக்குகின்றன. இல்லை என்றால் மனம் குழம்பிய நிலையை தற்காலிகமாக தோற்றுவித்து விடுகின்றன. இந்த நிலைமைகளை சமாளிக்க முடியாத மனிதன் மீண்டும் அந்த நெருப்பை பற்றவைத்து விடுகிறான். அதே நெருப்பிலேயே வெந்தும் சாகிறான். மன உறுதி, தியானம், உடற்பயிற்சி, மனநல ஆலோசனை, சுயக் கட்டுப்பாடு, யோகா போன்றவற்றால் மட்டும்தான் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும். புகை பிடிக்காமல் இருந்தால் எப்போதும் நிம்மதி கிடைக்கும். அந்த பழக்கத்திற்கு அடிமையானால், அதற்கு என்றென்றும் அடிமைதான். எதற்கும் அடிமையாகாமல் புகையை அடியோடு மறப்போம்.

மாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்…

மாரடைப்பு வராமல் இருக்க சில வழிகள்…

நீரிழிவு நோய் உடையவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.
* சரியான சர்க்கரையின் அளவு: சாப்பிடுவதற்கு முன்பு: 70-லிருந்து 110 மி.கி./ டெ.லி வரை சாப்பிட்ட இரண்டு மணிகளுக்குப் பிறகு: 100-லிருந்து 140 மி.கி./ டெ.லி. வரை.
* அதிக எடை உள்ளவராயின் உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்.
* கொழுப்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.மொத்த கொழுப்பின் அளவு 200-க்கும் குறைவாக இருப்பது நல்லது.கெட்ட கொழுப்பின் அளவு 130-ம் குறைவாக இருப்பது நல்லது. நல்ல கொழுப்பின் அளவு 35-க்கு மேல் இருப்பது நல்லது.
* புகைப்பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டும்.புகைப்பதை விடுவதுடன் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதையும் தவிர்த்தல் வேண்டும்.
* மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மன அழுத்தத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சிலவற்றை அதாவது யோகா, தியானம், இசை, சிரிப்பு பயிற்சி மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி பெட்டி முன் அமரும் நேரத்தை விட விளையாடும் நேரம் மிக மிகக்குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட செய்ய வேண்டும். சிறார்கள் கொழு கொழு என்று இருப்பது நல்லதல்ல. தினமும் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல், நீந்துதல், மிதிவண்டி பயிற்சி) மேற்கொள்ள வேண்டும்.
* சமச்சீரான, நல்ல ஆரோக்கியமான உணவு முறைகள் தேவை. உணவை மருந்தைபோல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிட வேண்டியது இல்லை.
*கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணை குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் உணவே ஆரோக்கியமானது.
* மஞ்சள் கரு இல்லாத முட்டை, வேகவைத்த மீன், தோல் உரித்த கோழி அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நீரிழிவு நோயாளிகள் · காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.

நீரிழிவு நோயாளிகள் · காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.

மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.
· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.

· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.
· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.
· தினசரி நடப்பது அவசியம்.
· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.
· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.
உடற்பயிற்சி : நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதாவது உடல் பருமன், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்து நீரிழிவு நோயின் கடும் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரை கலந்து ஆலோசித்து என்ன மாதிரியான உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைப் பிடித்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த கட்டுப் பாடுகளுடன் இருந்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் வெகு நாட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சுகமாக வாழலாம். நிதானமான நடை உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்