Thursday, February 27, 2014

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்.

Wednesday, February 26, 2014

மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும் !!


மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும் !!
(27.02.14)

சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட
வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள்
ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும்.
சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும்
உண்ணாமல் சிவ சிந்தைனையுடன்
இருக்கவேண்டும்.இயலாதவர்கள் இருவேளை பால்,பழம்
சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய
ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008
முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில்
நடைபெறும் நான்குகால
அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும்
விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல்
பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம்,
பொறாமை ஆகியவற்றில்
இருந்து விடுதலை கிடைக்கும்.
விழித்திருந்து சிவபூஜை செய்வதால்
சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம்
செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ
பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம்
நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள
வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப்
போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும்,
என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும்
அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும்.
மகா சிவராத்திரியன்று விரதம்
இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான்
சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும்
என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள்
சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர்
சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும்
நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள்
என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும்
கிடைக்கும்.
ஓம் நமசிவாய

ஆன்மிகம் என்றால் என்ன?

ஆன்மிகம் என்றால் என்ன?

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.

அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.

இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.

கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற
உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மஹா சிவன் ராத்திரி மஹிமை :


மஹா சிவன் ராத்திரி மஹிமை :

ராத்திரி எனப் பெயரோடு அழைக்கப்படும் விரதங்களில் சிவனை துதித்து வணங்கப்படும் விரதமே சிவராத்திரியாகும். மகாவிஷ்ணுவுக்காகக் கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி விரதம் - சிவனுக்காக கொண்டாடப்படுவது சிவராத்திரி. சிவராத்திரி நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும். இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும். அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த `ராத்திரி' மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும்.

நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடைïறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை. உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயை யிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங் கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும்.

இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டுë. இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழு முதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமா தேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.

அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் கொள்ளப் படுகின்றது. சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவ ராத்திரி மகிமை கூறப்படுகின்றது. ஸ்கந்த புரா ணத்தில் கூறப்பட்டிருக்கும் ஒரு கதை இவ்வாறு உரைக்கிறது. குருத்ரோகி என்னும் வேடன் பலரிடம் நம்பிக்கைத் துரோகமாக நடந்து அவப் பெயர் பெற்றான்.

அவன் மீது கோபம் கொண்ட சிலர் அவனை பகல் முழுவதும் ஒரு சிவன் கோவிலில் அடைத்து வைத்திருந்தனர். இரவில் வேட்டையாடுவதற்காக வேடன் ஓர் நதியை கடந்து அக்கரை சென்றான். தரையில் தன் வலையை விரித்து வைத்துக் கொண்டே இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டிருந்த வேடன் பொழுது போக்காக தான் அமர்ந்திருந்த வில்வ மரத்தின் இலைகளை உருவி கீழே வீசிக்கொண்டிருந்தான்.

அந்த வில்வ இலைகள் மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது வீழ்ந்து கொண்டிருந்தன. அதிகாலையில் மரத்தை விட்டு இறங்கிய வேடன், முன் சிவகணம் ஒன்று தோன்றி வணங்கி நின்றது. நீ யார்ப ஏன் என்னை வணங்குகின்றாய் என்று வேடன் ஒன்றுமே விளங்காமல் கேட்டான்.

வேடரே நேற்று பகல் முழுவதும் சிவன் கோவிலின் சிவபெருமான் திருவுருவத்தில் முன் இருந்தீர். இன்று இரவு முழுவதும் கண் விழித்து வில்வ இலைகளை பிடுங்கி மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தைப் பூசித்தார். நேற்று சிவராத்திரியானதால் நீ சிவராத்திரிப் பலனைப் பெறுகிறீர். என்னுடன் வாரும் கைலாயத்துக்குச் செல்ல லாம் எனக்கூறி வேடனை மரியாதையுடன் பூத கணம் அழைத்துச் சென்றது.

தான் செய்தது அறியாமலே சிவராத்திரி விரதமிருந்த வேடனுக்கே கைலாய வாசம் கிடைத்ததென்றால் சிவராத்திரியின் மகிமை பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இதனை விட காத்தல் கடவுளாகிய விஷ்ணுவுக்கும் படைத்தல் கடவுளாகிய பிரம்மாவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற கேள்விக்கு விடைகாண வேண்டிய தேவை ஏற்பட்டது.

இருவருக்குமிடையில் நடந்த வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வர திருவுளங் கொண்டு அடி, முடி காணமுடியாதவாறு ஒளிப்பிழம்பாக சிவன் காட்சியளித்தார். அப்பொழுது இந்த ஒளியின் அடியையும், முடியையும் காண்பவர் எவரோ அவரே பரம்பொருள் என ஓர் அசரீரி கேட்டது. எனவே அவ்வாறு அடி முடிகாண முடியாது ஆணவம் அடங்கி ஞான ஒளி பெற்ற இரவும் சிவராத்திரி எனப் படுகிறது.

இதைவிட உமாதேவியார் சிவமூர்த்தியின் திருநேர்த்திரங்களையும் ஒரு முறை மூட உலகங்கள் இருண்டன. அந்த கனமே உருத்திரர்கள் இறைவனை வணங்கினார்கள். அக்காலமே சிவராத்திரி என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் முழு உபவாசம் இருப்பது தான் உகந்தது. முடியாதவர்கள் ஒரு வேளை உணவுடன் விரதத்தை மேற்கொள்ளலாம்.

விரத மிருப்பவர்கள் நாமாவளி சில அஷ்டோத்திரம் மற்றும் சில துதிகளைச் சொல்லி வில்வ இலைகளாலும் உதிரிப் பூக்களினாலும் அர்ச்சனை பண்ண வேண்டும். இரவு முழுவதும் நித்திரை விழித்திருந்து பூஜை செய்ய வேண்டும். சிவன் கோவிலில் நித்திரை விழிப்பது தான் சிறந்தது. இரவு முழுவதும் நித்திரை விழிக்க முடியா தவர்கள் அர்த்த ஜாமப் பூஜையிலாவது விழித்தி ருக்க வேண்டும்.

வில்வ இலையிட்ட நீரை அருந்தி உப வாசமிருந்து சிவபுராணத்தை பாராயணம் செய்வது மிகச் சிறப்பானதாகச் கொள்ளப்படுகின்றது. மகா சிவராத்திரி அன்று தான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சஹ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மனம் ஒரு நிலைப்பட்டு இறை சிந்தனையோடு புனித மாக இந்த விரதத்தை மேற்கொண்டால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். சிவனருள் பெற சிவநாமம் சொல்லி விழித்திருந்து விரதமிருந்து பூஜைகளைக் கண்ணாரக் கண்டு புண்ணியந் தேட வேண்டும். சிவ விரதம் மிகச் சிறப்பு வாய்ந்தது

உலகம் வியக்கும் ஜம்ஜம் கிணறு பற்றிய அதிசய தகவல்...!


உலகம் வியக்கும் ஜம்ஜம் கிணறு பற்றிய அதிசய தகவல்...!

இது மக்காவில் உள்ள ஜம்ஜம் கிணறு . 2000 வருடங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது..

ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர்.

பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.

ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்....

சோடியம் - 133.00ml

கால்சியம் - 096.00ml

மேக்கனிசியம் - 038.80ml

புளோரைட் -000-77ml

பொட்டாசியம் - 043.03ml

நைட்ரேட் - 124.08ml

டைகார்ப்நெட் - 124.00ml

சல்ஃபேட் - 124.00ml

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஹாஜரா (அலை) தன் பச்சிளங்குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் தாகம் தணிக்க - நீருக்காக சஃபா – மர்வா குன்றுகளுக்கிடையே ஏக்கத்துடன் தேடினார்கள். அவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திருக்கு ஓட குழந்தை காலை பூமியில் உதைத்துக் கொண்டிருக்க நீர் வீழ்ச்சியாய் இறையருளால் வந்தது தான் இந்த ஜம்ஜம் கிணறு.


மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட.....

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட

“பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது” என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.

“நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது” என்று விஞ்ஞானம் சொல்கிறது.

நூலகப் புத்தகங்களை அகர வரிசைப்படி தொகுக்காவிட்டால், தனியொரு புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமமோ; அதே போன்று நினைவு அடுக்குகளில் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்கவில்லை எனில் தேவையான போது வெளியே எடுப்பது கடினம்.

சரியான முறையில் படித்தால் தகவல்கள் பிசிறில்லாமல் நேரடியாக மூளையின் நினைவகத்தில் தொகுக்கப்பட்டு விடுகிறது. எனவே, மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி பாடங்களைப் படித்தால் அவர்களின் நினைவாற்றல் திறன் மேம்படும் என்று வல்லுனர்கள் கூறி உள்ளனர்.

சரியான முறையைப் பின்பற்றி பாடங்களைப் படிக்க சில நிபந்தனைகள்:

1. பொருள் உணர்ந்து படி:

ஆர்வம் இருந்தால் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவது எளிது. அதே போன்று படிப்பதை வெறும் கடமையாக நினைக்காமல், ஆர்வத்துடன் கற்க முயற்சிசெய்யுங்கள். மேலும் ஒருவரி படித்தாலும் அதன் உட்பொருளை உணர்ந்து படிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2. படிக்கும் சூழல்:

இரைச்சல் மிகுந்த இடங்களில் வசித்தாலும் கருத்தூன்றி படித்து சிறந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் இருக்கிறார்கள். அமைதியான சூழலில் கவனமின்றி படித்து தேர்வில் தோல்வி கண்ட மாணவர்களும் இருக்கிறார்கள். படிக்கும் இடத்தை விட, படிக்கும் போது உங்கள் மனம் தெளிவாக குழப்பமின்றி இருப்பதே முக்கியம்.

3. நினைவுக்குக் கொண்டு வருதல்:

படிக்கும் பாடத்தை அடிக்கடி நினைவுகூர்வது சிறந்த மாணவர்களுக்கு அழகு. படித்த விஷயங்களை அடிக்கடி மனத்திரையில் ஓடவிட்டு பயிற்சி செய்வது ஞாபகத்திறனை அதிகப்படுத்தும் வழிகளில் முக்கியமானது. இதனால் பாடங்கள் மறக்காமல் இருப்பதுடன், தேர்வு பயமும் தோன்றாது.

4. மனப்பாடம் கூடாது:

மாணவர்களின் கற்கும் முறைகளில் உள்ள பெரிய குறைபாடு மனப்பாடம் செய்தல். பாடப் புத்தகத்தில் உள்ள வரிகளை உருக்குலையாமல் அப்படியே மனப்பாடம் செய்து எழுதுவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதில் மாணவர்களுக்கான எழுத்து நடை கொஞ்சமும் இருக்காது. கல்லூரி மாணவர்களை விட, பள்ளி மாணவர்களே மனப்பாடம் செய்வதில் கில்லாடியாக உள்ளனர். கல்லூரி படிப்பிற்குத் தேவையான அடிப்படை பாடங்கள் பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் நடத்தப்படுகின்றன. அப்போது நீங்கள் பாடத்தைப் புரிந்து படிக்காமல் மனப்பாடம் உத்தியை செயல்படுத்தினால் கல்லூரியில் திண்டாட வேண்டி இருக்கும்.

அதாவது கல்லூரி பேராசிரியர் நீங்கள் பள்ளியில் படித்த அடிப்படை பாடத்தை மேலோட்டமாக நடத்தி விட்டு, அடுத்த பகுதிக்கு சென்றால் கல்லூரியிலும் நீங்கள் விழிக்க வேண்டி இருக்கும். அதே நேரத்தில் புரிந்து படித்தால் அது காலத்திற்கும் மறக்காது என்பதால், கல்லூரியிலும் நீங்கள் கலக்க உதவியாக இருக்கும்.

5. அன்றே படிக்க வேண்டும்:

பாடங்களை அனுதினமும் படித்தால் பாடச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. படிக்கும் போது முக்கிய குறிப்புகளைத் தனியாக ஒரு டைரியில் பாடத் தலைப்பு ரியாக குறித்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்வதால் மொத்தப் பாடத்திற்கான குறிப்புகளும் அந்த டைரியினுள் அடங்கிவிடும். அடிக்கடி அந்த குறிப்புரைகளைக் கொண்டு நீங்கள் படித்ததை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். இதனால் தேர்வின் போது பாடப்புத்தகம் முழுமையையும் மீண்டும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

தெரிந்து கொள்ளுங்கள்..

தெரிந்து கொள்ளுங்கள்...

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு”

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி" ”அல்ஹம்துலில்லா” என்று சொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்.

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !

இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர்.

தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.

ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.

ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.

இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.கல்லீரல் இழைநார் வளர்ச்சி :
இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

2.அதிக இரத்த அழுத்தம் :
பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

3.அதிக எடை :
வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

4.இதய நோய் :
இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

5.அனீமியா :
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

6.மன அழுத்தம் ;
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

7.மூட்டு வலி :
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

8.கணைய பாதிப்பு :
ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

9.நரம்பு பாதிப்பு :
ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.

Tuesday, February 25, 2014

எச்சரிக்கைச் செய்தி...

எச்சரிக்கைச் செய்தி

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும்

Internetல் Photo editing தவறான முறையில் பயன்படுத்துவதால் சமுக வலைத்தளங்கள் சமுகத்தின் மத்தியில் தலைகுனிந்து காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.. Facebookல் வைத்திருக்கும் Profile picture...ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அப் புகைப்படங்களை Download செய்து தவறான முறையில் அப்புகைப்படங்களை பயன்படுத்துவது வேதனை தரும் விடயமாகும்.. இறுதியில் Internetல் சில தவறான தளங்களுக்கு செல்பவர்கள்..அதனை பார்வையிட்டு குறித்த நபருக்கு கூறும் போது மன வேதனை சில நேரங்களில் உயிரை பறிக்கலாம்.. சில சமயங்களில் Chatting மூலம் தவறாகவும் பயன்படுத்தலாம்(பிளாக் மெயில் செய்யலாம்).. இத்தகைய செயற்பாடுகள் கூட சமுக உணர்வுள்ள மக்கள் சமுக வலைத்தளங்களை வெறுக்க காரணமாகவும் அமைகிறது..

இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்.. முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது' (friendship request), அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..

ஏனெனில், உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்.. ஆனால் சில நபர்கள் Facebookல் உள்ளூர் நண்பர்கள் தேவையில்லை என்று கூறுவதுண்டு..ஏற்க்க கூடிய விடயம் தான்.. judgments about that person (“good” or “bad”)..
தெரிவு :- உங்கள் கையில் ...
பகுப்பாய்வு :- உங்கள் மனதில்...
முடிவு:- உங்களை சார்ந்து..
தவறான தெரிவுகளை தவிர்ப்போம்..
friendship requestலும் மட்டுமல்ல வாழ்விலும் தான்..

இருந்தாலும் கூட # Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பதும் பிரச்சினை தான்
இதனை தடுப்பதற்கும் சில நுட்பமுறைகளை அறியாமையும் குற்றம் தான்..

Facebook தொடர்பில் நன்கு தெரிந்தநபர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்ல விடயமாகும்.. settingsயை கையால்வதும் சிறந்தது...

புகைப்படங்களை Tag செய்வதும் நல்ல விடயமாகும்.. "நம் மூளையில் சராசரியாக 10% தான் நாம் உபயோகப்படுத்துகிறோம்.... அப்போ 90% எப்படி பயன்படுதுவது என்பது நமக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை...

அது எப்படி சாத்தியமாகும்.... நாம்தான் நமக்கு தெரிந்த வரை பயன்படுத்துகிறோமே்".... ஒரு iPhone 5 வாங்கி எங்க பாட்டிகிட்ட கொடுத்தா.. அதிக பட்சமாக... பாட்டிக்கு கால் பன்னுறதும், மிஞ்சி மிஞ்சிபோனா பாட்டு கேட்கவும்தான் தெரியும்.... அதில் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த தெரியாது..... அப்படிதான் இதுவும்... நம்ம மூளையை பொருத்தவரை நாமும் பாட்டிதான்!புரிந்து செயல்படுவோம் நண்பர்களே . .

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு, இங்கே பல கயவர்களும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கவே இதை எழுதியுள்ளோம்

. . . இது பெண்களுக்கு மட்டுமல்ல.. எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்.. தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்.. நன்றி - (சொல்வது எங்கள் கடமை - தீர்மானிப்பது உங்கள் கையில்) இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்.. இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல், இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் # இணையஉலகில் நம்மை நாமே காத்துக்கொள்ளவேண்டும்..

••♦||••••அனைவரையும் விரும்பு... சிலரை நம்பு ... ஒருவரை பின்பற்று... பலரிடம் கருத்துக்கேள்.. ஆனால்... முடிவை நீதான் எடு ...!••••||♦••

Saturday, February 22, 2014

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி?
கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

*****************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************************************************************************************************

கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

******************************************************

கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை
என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன
செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************

கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

**************************************************************************

கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்...

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்

முதல் வீதி ....First rule ...

அதிகாரத்தில் கை வைக்க கூடாது
"No power of the house"
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்
நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension

Second Rule ...

அடிப்பெனு மிரட்ட கூடாது
"No unwanted scaring"

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது

Third rule ...

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்
நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4'வது Rule ....

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது

And then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது
...

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது...

Friday, February 21, 2014

வேலை தர மறுத்த பேஸ்புக்குக்கு,,, "1 லட்சம் கோடி" ஆப்பு வைத்த,,, 'வாட்ஸ் ஆப்' ஆக்டன்...!!! இன்று கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி விலை கொடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது பேஸ்புக்...!!! ஆனால் அதன் இணை நிறுவனரான பிரையன் ஆக்டனுக்கு ஒரு காலத்தில் வேலை கொடுக்க மறுத்த நிறுவனம்தான் பேஸ்புக். அன்று யாரை நிராகரித்ததோ இன்று அவரிடமிருந்தே, அவரது நிறுவனத்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பேஸ்புக். அன்றே பிரையனுக்கு வேலை கொடுத்திருந்தால் இந்த ஒரு லட்சம் கோடி நிச்சயம் பேஸ்புக்குக்கு மிச்சமாகியிருக்கும்.. யார் நம்மை நிராகரித்தாலும்,,, அதிலிருந்து வீறு கொண்டு மீண்டெழுவது எப்படி என்ற தத்துவமே,,, இவரது வாழ்க்கையில் அடங்கியுள்ளது.

அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!....



அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!
*தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

*தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

*அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

*மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

*மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

*அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.

*1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

*வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது கரையாமல் கலங்காமல் அப்படியே அடியில் சென்று படிந்தால் ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.

மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.

நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் தித்திப்பு நாக்கில் நீண்ட நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க நடைமுறைக்கு ஒத்துவரவில்ல என்றால்,

தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை உண்டு:

1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.

2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.

3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.

தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.

மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி/கலப்படம் என்றறிக!

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

8. உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்....

ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்....

1.தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிவதாலும், ஆண்களுக்கு முடிகழியும். இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர். இத்தகைய முடி கழிதலை குறைக்க, உங்களுக்காக நாங்கள் கூறும் 20 தீர்வுகள், இதோ இங்கே.

2.மிதமான ஷாம்புவால் சீரான இடைவெளியில் முடியை கழுவவும் சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும் தலைச்சருமமும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி கழிதலும் குறையும். இது தொற்று மற்றும் பொடுகு பிரச்சினைகளில் இருந்தும் தலையை காப்பாற்றுவதால், முடி உடைதலும், கழிதலும் கணிசமான அளவு குறையும். இது போக சுத்தமான தலை முடி தோற்றத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.

3.முடி கொட்டுதலை தடுக்க வைட்டமின்களின் பங்களிப்பு. வைட்டமின்கள் உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் `ஏ' தலையில் உள்ள மயிரடிச் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் `ஈ', தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவும். வைட்டமின் `பி', முடியின் நிறத்தை பேணுவதற்கு பயன்படும்.

4.ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகள் கொழுப்பில்லா இறைச்சி, மீன்கள் மற்றும் இதர புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணுவதால் முடி உதிர்தல் குறையும்.

5.முக்கிய எண்ணெய்களை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தல் பல காலமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், தலைக்கு முக்கிய எண்ணெய்களை கொண்டு சில நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இது மயிர்ச்சுரப்பிகள் சுறுசுறுப்பாக இருக்க உதவும். அதிலும் பாதாம் அல்லது நல்லெண்ணெயை பயன் படுத்தலாம்.

6.ஈர முடியை சீவ வேண்டாம். முடி ஈரத்துடன் இருக்கும் போது, வலுவிழந்த நிலையில் இருக்கும். அதனால் ஈர முடியை சீவ முயற்சித்தால் முடி கழிதலுக்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் ஈரத்துடன் இருக்கும் போதே முடியை சீவ வேண்டுமானால், அகன்ற பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தவும். அதே போல் முடியை அடிக் கடி சீவுவதையும் நிறுத்த வேண்டும். இது முடியை சேதப்படுத்தி கொட்டவும் செய்யும். முடிந்த வரை முடியில் ஏற்படும் சிக்கல்களை கைகளைக் கொண்டே எடுங்கள்.

7.பூண்டுச்சாறு, வெங்காயச் சாறு அல்லது இஞ்சிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தலைச் சருமத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பின் காலையில், முடியை நன்கு அலசுங்கள். இதை வாரம் முழுவதும் தொடர்ந்து செய்தால், நல்ல பலனை காணலாம்.

8.அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். தலைமுடி தண்டில் நான்கில் ஒரு பகுதி தண்ணீர் உள்ளது. அதனால் தினமும் 48 கப் தண்ணீர் பருக வேண்டும். இது வளமான முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

9.க்ரீன் டீயை தலையில் தடவவும். க்ரீன் டீயை தலையில் தடவினால், முடி கொட்டுதலை தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இரண்டு க்ரீன் டீ பைகளை எடுத்து, ஒரு கப் தண்ணீரில் ஊற விட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை தலையில் நன்கு தடவி, ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். நல்ல பலனைக் காண, இதனை ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

10.தலைமுடிக்கு எது கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும். முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முடியை துண்டை வைத்து துவட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதில் முடியை இயற்கையாகவே காய விட வேண்டும்.

11.மதுபான வகைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முடி கொட்டுவதை உணர்ந்தீர்கள் என்றால், மது பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மது, முடி வளர்ச்சிக்கு தடை போடும். அதனால் குடி பழக்கத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, தலை முடி வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.

12.புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும். புகைப் பிடித்தால், தலைச் சருமத்திற்கு செல்லும் இரத்த அளவு குறையும். இது முடி வளர்ச்சிக்கு தடையாக நிற்கும்.

13.உடற்பயிற்சியில் ஈடு படவும். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிர்சியில் ஈடுபட வேண்டும். நடை, நீச்சல் அல்லது பைக் ஓட்டுதல் போன்றவற்றை தினமும் 30 நிமிடங்கள் செய்தால், அது உடலில் ஹார்மோன் அளவை சீராக்கி, மன அழுத் தத்தை குறைத்து, முடி கொட்டுதலையும் குறைக்கும்.

14.மன அழுத்தத்தை குறைக்கவும். மன அழுத்தத்திற்கும், முடி கொட்டுதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என்று மருத்துவ சான்றுகளோடு பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தை வளர விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தியானம் கைகொடுக்கிறது. தியானத்தையும், யோகாசனத்தையும் ஒழுங்காக செய்தால், அது ஹார்மோன் அளவையும் சீராக வைத்திருக்கும்

15.ஹேர் ட்ரையரை தவிர்க்கவும். முடியை கருவிகள் மூலம் அடிக்கடி உலர்த்தவோ அல்லது சூடாக்கவோ முயற் சிக்க கூடாது. அடிக்கடி அப்படிச் செய்தால், முடியில் உள்ள புரதச்சத்து வலுவிழந்து போகும். முடியின் சத்தும் குறைந்து, முடி கழிதலுக்கு வழிவகுக்கும்.

16.தலையில் வியர்வை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் பசையுடன் கூடிய முடியை கொண்ட ஆண்களுக்கு, கோடைக்காலத்தில் வியர்வை உண்டாவதால் பொடுகு அதிகரிக்கும். இதுவே முடி கொட்டவும் காரணமாக அமையும். கற்றாழை மற்றும் வேப்ப இலை களைக்கொண்டு செய்யப்பட்ட ஷாம்புவை பயன்படுத்தினால், தலை குளிர்ச்சி யோடு இருப்பதோடு, பொடுகிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

17.. கோடைக் காலத்தில் ஹெல்மெட் அணியும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் அணிவதால், வியர்வையானது தலையில் உள்ள துளைகள் வழியாக உள்ளிறங்கும். அதனால் முடியின் வேர்கள் வலுவிழக்கச் செய்து, முடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே தலையை சுற்றி ஸ்கார்பை கட்டிக் கொண்டால் முடி உதிர்வு குறையும்.

18.தலை முடியின் ஸ்டைலை மாற்றவும் (ஆண்கள் நீளமான முடியை வளர்க்கலாம்) முடி கழிகிறதா, முடியை தளர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் போனி டைல், பின்னல் போன்ற ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்கி முடியை உதிரச் செய்து சீக்கிரமே வழுக்கையும் விழச்செய்யும்.

19.உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நல கோளாறுகள் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். தீராத நோய், கடும் காய்ச்சல் மற்றும் தொற்று போன்றவைகளை ஒழுங்காக கவனித்தால், ஆரோக்கியமான முடியை பாதுகாக்கலாம்.

20.மருந்து உண்ணுதலில் கவனம் தேவை. சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். அதில் ஒன்று தான் முடி உதிர்வு. ஆகவே எப்போதும் மருத்து வரை கலந்தாலோசித்து விட்டு, பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொண்டு, பின் மருந்துகளை வாங்கவும்.

அப்படி முடியை பாதிக்கும் படி பக்க விளைவு ஏற்பட்டால், மருத்துவரை வேறு மருந்துகளை மாற்றி தரச் சொல்லவும். ரசாயனங்களை விட்டு தள்ளியே இருக்கவும் கடுமையான ரசாயனங்கள் மற்றும் நிரந்தர முடிச்சாயங்கள், முடியின் ஆரோக்கியத்தை பாதித்து விடும். முடிகொட்டும் போது தலை முடிக்கு சாயம் பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிரச்சினையை படம் பிடித்து காட்டும் முடி..........

உடலில் உள்ள பிரச்சி னையை முடியை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உடலுக்கு தனக்குள் நடப்பவற்றைச் சொல்லத் தெரியாது. ஆனால் உடல் வெளிப்படுத்தும் சிற்சில அறிகுறிகள், மாற்றங்கள், ஆகியவை நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை நன்கு உணர்த்தும்.

ஆரோக்கியமற்ற தலை முடியானது நமது உடல் நலம் கெட்டுப் போவதை உணர்த்துகின்ற அறிகுறியாகும். தலைமுடி சார்ந்த பிரச்சினைகளான பொடுகு, முடி உதிர்தல், இள நரை ஆகியவை எப்போதுமே சாதாரணமான, முக்கியத் துவமில்லாத பிரச்சினைகளாகவே பார்க்கப்படுகின்றன. தலை முடியில் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகளை வெளிக்காட்டும் வெளிக்காட்டிகளாகும்.

தலைமுடியில் ஏற்படும் பாதிப்புகளானது, எவ்வாறு உடல் நலத்தின் நிலையை நமக்குக் காட்டுகின்றன என்பதைக் கீழே பார்ப்போம்.

1. முடி உதிர்தல்: சாதாரண மனிதனின் உடலில் இருந்து நாள்தோறும் 90 முதல் 100 முடிகள் வரை உதிர்கின்றன என்று தோல் நோய் நிபுணர்கள் சொல்கிறார்கள். நமது உடலில் உள்ள மயிர்க்கால்களில் 90% மயிர்க்கால்கள் சீராக வளர்ந்து கொண்டு இருக்கும் பொழுது, 10% மயிர்க்கால்கள் மட்டும் உறக்க நிலையை, அதாவது டெலோஜென் நிலையை அடைகின்றனவாம்.

இவ்வாறு டெலோஜென் நிலையை அடைந்த மயிர்க் கால்கள் இறந்து போய் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை உதிரத் தொடங்கி விடுகின்றனவாம். இவ்வாறு உதிர்ந்த முடிகள் இருந்த இடத்தில், புதிய மயிர்க் கால்கள் உருவாகி, அங்கே புதிய முடிகள் முளைக்கத் தொடங்கும். இந்த சுழற்சியானது சீரான இடைவெளிகளில் நடந்து கொண்டே இருக்கும்.

உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்றது என்பதை அதிகமாக உதிர்கின்ற முடிகள் வெளிக்காட்டும். தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் `ஏ', ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன.

ஆனால் உணவில் கஞ்சத்தனம் காட்டினால், இச்சத்துக்கள் உணவின் வழியாக கிடைக்காமல் போய்விடும். ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலோ, உணவுமுறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். ஆம், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும்.

2. பொடுகு: தலையின் ஸ்கால்ப் எனப்படும் மேல் தோல் வறண்டு காணப்பட்டாலோ, அல்லது அதிகமாக எண்ணெய் பசையுடன் காணப்பட்டாலோ பொடுகு உண்டாகும். ஷாம்புவை அடிக்கடி உபயோகிப்பதாலோ அல்லது தேவையான அளவு உபயோகிக்காமல் இருந்தாலோ, பொடுகு உண்டாகலாம்.

பொடுகானது, பூஞ்சை களால் ஏற்படுகிறது என்று சரும நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள். பொடுகு இருப்பதால் உடல் நலம் குன்றியுள்ளது என்று பொருளல்ல. ஆயினும், மஞ்சள் பொடுகால் ஏற்படும் செபோரிக் டெர்மா டிடிஸ் எனப்படும், தோலில் காணப்படும் சிவந்த செதில்செதிலான தடிப்புகள், ஹார்மோன் தொடர் புடையவையாக இருக்கக் கூடும் அல்லது பூஞ்சைகளால் ஏற்படக்கூடும் அல்லது குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

3. இளநரை: தலைமுடி நரைத்தல் என்பது எப்போதுமே முதுமையைக் குறிப்பிடுவதில்லை. சிலருக்கு இளமையிலேயே கூட முடி நரைக்கக்கூடும். இளமை யிலேயே தலைமுடி நரைத்தல் என்பது பரம்பரை சார்ந்த நோயாகவும் இருக்கலாம். இளநரையானது உடல்நலம் குன்றியுள்ளதைக் குறிப்பிடு வதில்லை.

எனினும், ரத்த சோகை, தைராய்டு பிரச்சினைகள், வைட்டமின் பி12 குறைபாடு, தோலில் வெண்புள்ளிகள்/வெண் குஷ்டம்ஆகியவையும் இள நரைக்குக் காரணமாக அமையலாம்.

அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!

அழகு' நிறத்தால் தோற்றத்தால் வருவது அல்ல!

இயற்கையின் படைப்பில் அனைவரும் அழகுதான். அழகு என்பது நிறத்தால் தோற்றத்தால், வருவது அல்ல. உள்ளத்தின் தூய்மையே, அன்பே முகத்தில் அழகை, அமைதியை வெளிப்படுத்தும்.

அதற்காக தோற்றத்தை சீர்கேடாக வைத்துக் கொள்ளலாமா என்று கேட்கவேண்டாம்... ஒவ்வொருவரும் தன் மேனியை பேணிக்காத்து நோயின்றி என்றும் இளமையுடன் முதுமையை எதிர்கொள்வதே அழகு.

மங்கு:

சிலருக்கு மூக்கின் மேல் பகுதியில் மச்சம் போல் கருப்பாக படர்ந்து காணப்படும். இதனை மங்கு என்பார்கள். முகத்தில் மங்கு வர முக்கியக் காரணம் நாளமில்லாச் சுரப்பிகளின் முரண்பாடாகும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளதால் அவை உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளை பாதிக்கின்றன. இதனால் மங்கு முகத்தில் தெரிகிறது.

இந்த மங்கு தோன்றினால் முக அழகு மாறிவிடும். இதனால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல் சோர்ந்து விடுவார்கள். இப்பிரச்சினை தீர இதோ ஒரு எளிமையான மருத்துவ முறை...

கோக்டம் - 10 கிராம் எடுத்து நார்த்தம் பழச் சாறில் ஊறவைத்து அரைத்து சிறிது தேன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்து உலர்ந்தபின் முகத்தை இளம் சூடான நீரில் கழுவி வந்தால் மங்கு மறையும். (குறிப்பு - முகத்தில் தடவும்போது மங்கு ஏற்பட்ட பகுதியில் அழுத்தமாகத் தடவக் கூடாது)

சருமம் பளபளக்க:

பச்சைப் பயறு - 250 கிராம்
மஞ்சள் - 100 கிராம்
வசம்பு - 10 கிராம்

எடுத்து அரைத்து, குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.

அழகைத் தக்க வைக்க:

* ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும்.

* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

* மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.

* கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.

அழகு கு‌றி‌ப்புக‌ள்,

உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். 'வாட்டர் பேஸ்டு மேக்கப்' போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக குட்டையாக மெயின்டெய்ன் செய்ய முடியாமல் அடங்காப் பிடாரியாக இருக்கிறதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?
ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
உங்கள் சருமத்தில் முகச் சுருக்கம் விழுந்து விட்டதா?
டோன்ட் வொர்ரி.... முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சீர் செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.
டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா?
கெமிக்கல் ஃபேஷியலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.
உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?
கவலையை விடுங்கள். விட்டமின் 'ஈ' ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.
செலவே இல்லாத ஈஸி ஸ்க்ரப்பர் வேண்டுமா உங்களுக்கு?
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை 'நற நற'வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
'ட்ரை ஸ்கின்' உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத 'வெஜிடபிள் ஃபேஸ்பேக்' இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?
பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி!....

பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொடி!....

சருமத்தின் அழனை பாதுகாக்க இயற்கை மூலிகைகளை விட்டு விட்டு செயற்கையாய் விற்பதை வாங்கி பயன்படுத்துகிறோம். சொந்த காசில் சூனியம் வைத்தது போல ஆகிவிடும் நம் சருமம். ஆகையால் சருமத்தை பாதுகாக்க மூலிகை பொடி செய்து பயன்படுதுங்கள். பொலிவான தோற்றம் பெறுங்கள்...

மூலிகைப் பொடி தயாரிக்கும் முறை இதோ:

பச்சைப் பயிறு - 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம், ஆவாரம் பூ அல்லது ரோஜா இதழ் 250 கிராம் ஆகியவற்றை வாங்கி, ஆவாரம் பூவை சுத்தம் செய்து, காய வைத்து, மற்ற பொருள்களோடு சீயக்காய் அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து, ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு தினசரி காலையும், மதியமும், மாலையும், இரவும் முகத்தில் தேய்த்து உடனே கழுவி விடலாம். பளபளப்பும், மினுமினுப்பும் உடனே தெரியும்.

பாசிப் பயறு 250 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், கார்போக அரிசி 250 கிராம், இவற்றை மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும். குளிப்பதற்கு முன் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதில் சில துளி தேனைக் கலந்து முகம், கை, கால், கழுத்து, உடல் முதலிய இடங்களில் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் மேலே கூறிய பொடியைத் தேய்த்து கழுவ பளபளப்பு கிடைக்கும். ஆரோக்கியமானதும் ஆகும்.

வெளியில் அடிக்கடி செல்லும் பெண்களின் முகம் கறுத்து விடும். அப்படிப்பட்ட பெண்கள் இரவில் கோல்டு கிரீமையும், பகலில் வானிஷிங் கிரீமையும் தடவி வந்தால் தோலின் நிறம் மங்காது, கறுக்காது. வீட்டுக்குள்ளேயே இருக்கும் பெண்களுக்கு இவையெல்லாம் தேவையில்லை.

தேநீர், பால், சர்பத் ஆகியவற்றில் சர்க்கரைக்கு பதிலாகத் தேனைக் கலந்து சாப்பிட்டு வந்தாலும் தோல் பளபளப்பாகும். உடலும் கச்சிதமாக இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து, உடலில் தடவி, ஊறிய பின் மிதச் சூட்டு நீரில் குளித்து வந்தால், தோல் பொன்னிறமாகவும், மென்மையாகவும், பட்டுப் போலும் மாறும்.

பாதாம் எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை உடலில் தடவிக் கொண்டு ஊற வைத்த பின் குளியல் பொடியைத் தேய்த்துக் குளித்தால் தோல் பட்டுப் போல் மென்மையாகவும், சிவப்பாகவும் மாறும்.

இதோ தொப்பை மறைய ஒரு ரகசியம்!

இதோ தொப்பை மறைய ஒரு ரகசியம்!

* காலை எழுந்தவுடன் மிதமான சுடுநீரில் தேன் கலந்து குடிங்க; பாருங்க, இரண்டு மாதங்களில் தொப்பை... எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.


* இஞ்சியை சாறு பிழிந்து தேன் விட்டு சூடுபடுத்தி ஆற வைக்க வேண்டும். உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் சேர்த்து அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறையும்.

* அன்னாசிக்கும் இந்த குணம் உண்டு. முதல் நாள் இரவு ஓர் அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் சிக் உடலுக்கு கைகொடுக்கும்.

மருந்துகளில் வீரியம் அதிகமாக இருந்தால், தேனை கலந்து சாப்பிடும் போது குடல்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுத்து நிறுத்திவிடும். தேன் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் மருந்து, நீண்ட நாள் கெடுவதில்லை. தேனில் சர்க்கரை சத்து அதிகமாக இருப்பதால் கடும் உழைப்பாளிகள், விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவோர் அவ்வப்போது தேன் கலந்த பானம் பருகலாம்.

இதனால், உடலில் ஏற்படும் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய ரத்த நாளங்களை சீராக விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால், இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும். கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம்.

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?!

உங்கள் செல்போன் ஒரிஜினல்தானா..?! கண்டுபிடிப்பது எப்படி..?! 

 நீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.

சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும்போது, அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லா?

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.
இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும். உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்...உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்த IMEI ண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.

இப்பொழுது உங்கள் பதில் SMS ஆக Success என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் இணையத்தின் மூலமும் நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr

என்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்துவைத்துக்கொண்ட IMEI எண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும்.

உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும், தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த IMEI எண்ணில் 7, 8 வது இலக்க எண்கள்
1. 0,2 அல்லது 2,0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம் குறைந்ததாக இருக்கும்.

2. 0,8 அல்லது 8,0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்,தரமானதாகவும் இருக்கும்.

3. 0,1 அல்லது 1,0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.

4. 1,3 என இருப்பின் Azerbaijan நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்,தரம் குறைந்தும், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

 

Thursday, February 20, 2014

நம்மொழியாம் தமிழ்மொழி அது எம் தாய்மொழி வாழ்க தமிழ்..இன்றும் என்றும்!


நம்மொழியாம் தமிழ்மொழி அது எம் தாய்மொழி வாழ்க தமிழ்..இன்றும் என்றும்!

இன்று உலக தாய்மொழி தினம்...

அனைத்துலகத் தாய்மொழி நாள் பெப்ரவரி 21 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது...

எப்படி உருவானது:
----------------------------
இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின், பாகிஸ்தானில் "உருது மொழி' அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்குப் பதிலாக, வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர். 1952, பிப்., 21ம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, டாகா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் பலர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனஸ்கோ அமைப்பு 1999ம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது.

ஒருவொருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டுமெனில் மொழி அவசியம். உலகளவில் மொழியானது நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது. உலகில் பேசப்படும் மொழிகள், பொது மொழி, தாய்மொழி என வகைப்படுத்தப்படுகிறது. உலகில் பல வகையான மொழிகள் உள்ளன. இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்., 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுö னஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

மூன்று மொழி :தாய்மொழி, தேசிய மொழி மற்றும் தொடர்பு மொழி என பொதுவாக மூன்று விதமான மொழிகள் ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும், மொழிகளுக்காக சண்டைகள் கூடாது என மொழி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும். எந்த மொழியையும் அழிக்கக் கூடாது. "ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்கவும்' இத்தினம் வலியுறுத்துகிறது.

அனைவருக்கும்
தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க.

தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது'


"தாய் மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணாடி போன்றது' என்பது, பொன்மொழி. கண்ணாடிகளுக்காக கண்ணை இழக்காமல் வாழ்வது குறித்து, வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்......

சமீபத்தில், தனியார் நிறுவனத்தினர், எளிதாக வாசிக்கும் வகையில், 8 வரிகள் கொண்ட பத்தியை வடிவமைத்து, தமிழகத்தில் உள்ள, 28 மாவட்டங்களில் பயிலும், பள்ளி மாணவர்களிடம் வாசிக்க கொடுத்தனர்.இந்த ஆ#வில், முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவீத குழந்தைகளால் மட்டுமே, தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது. 2ம் வகுப்பு படிக்கும், 43.6 சதவீத குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளை வாசிக்க முடிகிறது. 5ம் வகுப்பு படிக்கும், 29.9 சதவீத குழந்தைகளால் மட்டுமே, 2ம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது. என்ற அதிர்ச்சியான தகவல் தெரிய வந்தது.தமிழை தாய்மொழியாக கொண்ட, தமிழகத்தில், தமிழ் எழுத்துக்களை கூட, மாணவர்களால், வாசிக்க முடியாத நிலையில் இருக்கின்றனர் எனில், நம் தாய்மொழி பற்று குறித்த கேள்வி எழுகிறது. மொழியை அறிதல் வேறு; அறிவை வளர்த்தல் வேறு....

தமிழ்மொழி ஆளும் மொழியாக இருந்த நூற்றாண்டுகளை வரலாற்றில் கண்டிருக்கிறோம்; தமிழ் மக்களிடையே புழங்கும் மொழியாக இருப்பதைக் கண்டிருக்கிறோம்; புலம்பெயர்ந்து பரவிய மொழியாகக் கண்டிருக்கிறோம்; பன்மொழிகட்கும் சொற்கடன் கொடுத்த மொழியாகக் கண்டிருக்கிறோம். இப்படியாகக் கடந்த நூற்றாண்டுகளைக் கடந்து வந்துவிட்ட தமிழ்மொழி இனிவரும் காலத்திலும் வாழும் மொழியாக தமிழ் மக்கள் வழக்கில்.. தமிழ் மக்கள் வீட்டில்.. தமிழ் மக்கள் நாவில் வாழ வேண்டும்.

அதற்குப் பின்வருவனவற்றில் சிலவற்றையேனும் நாம் உடனடியாகச் செய்தாக வேண்டும்:-

1.குழந்தைக்குத் தமிழ்ப் பெயரைச் சூட்டுவோம்.
2.குழந்தைகளுக்குத் தமிழ்க்கல்வி கற்றுக்கொடுப்போம்.
3.குழந்தைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம்.
4.இல்லங்களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டுவோம்.
5.இல்ல நிகழ்ச்சிகளைத் தமிழில் நடத்திக் கொள்வோம்.
6.தமிழரிடம் தமிழில் பேசுவோம்.
7.தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவோம்.
8.தமிழினம் என்ற இன அடையாளத்தை மீட்டமைப்போம்.
9.தமிழ் இனத்தின் பெயரால் ஒன்றுபட்டு நிற்போம்.
10.நாம் தமிழர் என்று மார்தட்டி முழங்குவோம்.
11.தமிழனுக்குத் தமிழன் கைகொடுத்து உதவிடுவோம்.
12.தமிழிய நெறியில் குடும்பத்தை வழிநடத்துவோம்.
13.தமிழால் பூசித்து இறைமையை வழிபடுவோம்.
14.தமிழ் மொழி, இன, பண்பாட்டு, வரலாற்று அறிவு பெறுவோம்.
15.தமிழே மூச்சு, தமிழே உயிர், தமிழே வாழ்வு என வாழ முற்படுவோம்.

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்......

உலகத் தாய்மொழி நாள் வாழ்த்துக்கள்......

தாய் மொழியை போற்றும் அனைவருக்கும் உலகத் தாய் மொழி தின வாழ்த்துகள். அந்நிய மொழியின் தாக்கத்தில் இருந்து நம் தாய் மொழியை காப்போம் . தாய் மொழியில் பெயர் சூட்டுவோம் தாய் மொழியில் கலப்பின்றி பேசுவோம். தாய் மொழியில் கையெழுத்து போடுவோம். உயிரினும் மேலாக தாய் மொழியை நேசிப்போம். இந்திய நாட்டின் மொழித் தீண்டாமை கொள்கையை மாற்றி அமைத்து நம் தாய் மொழியை பேணுவோம் என்று இந்நாளில் சூளுரைப்போம்...

செந்தமிழ் நாடென்ற போதினிலே..
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே..

அனைவருக்கும் தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க.

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை.....

தாய்(மொழி) இல்லாமல் நாம் இல்லை:

மொழியின் பிறப்பிடம் எது? தாயின் கருவறை. கருவறை இருளில் கண்கள் மூடியிருக்கும் கருக்குழந்தை, சும்மா இருப்பதில்லை. தாயுடன் பேசுபவர்களின் குரலை, சூழ்ந்து ஒலிக்கும் சத்தங்களை சதா கேட்டுக் கொண்டேயிருக்கும்.
மனிதனின் அடையாளம், அவனது தாய்மொழி தான். மொழியில் மூத்த, தமிழ்மொழியைப் பேசுவதே பெருமையான விஷயம். அதுவே, தாய்மொழியாய் நமக்கு அமைந்தது பெரும்பேறு.

அம்மா தான், மொழியை கற்றுத் தரும் முதல் ஆசிரியை. உறவை, உணவை, உணர்வை கற்றுத் தருவது அவள் தான். எத்தனை மொழிகள் படித்திருந்தாலும், காதலையும், வேதனையையும் தாய்மொழியில் தான் முழுமையாகச் சொல்ல முடியும். ஆபத்து சமயத்தில் தானாக வருவது தாய்மொழி தான். உலகநாடுகளில் அனைவருமே, அவர்களது தாய்மொழியில் தான் பேசுகின்றனர். சொல்வங்கி உருவாவது, தாய்மொழியில் தான். வீட்டில் பெற்றோர், உறவினர்கள் தமிழில் குழந்தைகளிடம் பேசாவிட்டால், மொழியில் சங்கடம் தான் ஏற்படும். மொழி அழிந்தால், அந்த இனமே அழிந்து விடும். நமது அடையாளமே தமிழ்மொழி தான். மென்மையான உறவுகளைச் சொல்வது, தகுதியான சொல்லை வெளியிட முடிவது, தாய்மொழியில் தான். மூத்தோரிடம் இருந்து உடம்புக்குள், உயிருக்குள் ஊறிவரும் விஷயம் தாய்மொழியே. தாய்மொழியில் சிந்திப்பவர்களே, என க.ஞானசம்பந்தன் பேராசிரியர், (தியாகராஜர் கல்லூரி, மதுரை) கூறுகிறார்....

:தாய்மொழி தெரியாவிட்டால் எந்த மொழி படித்தாலும், புரியாது. தாய்மொழியில் தான் சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும்.

கருவில் கற்கும் மொழி :
---------------------------------

தாயின் வயிற்றுக்குள் கருவாக இருக்கும் போதே மொழியை, குழந்தை கற்றுக் கொள்கிறது என்கிறார், மதுரை மனோதத்துவ நிபுணர் ராணி சக்கரவர்த்தி.

அவர் கூறியதாவது: தாய்மொழியை அறிமுகப்படுத்துவது, தாயை அறிமுகப்படுத்துவதற்கு சமம். கருவில் உள்ள குழந்தைகள், வெளியில் உள்ள சத்தத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும். எந்த மொழி அதிகம் பேசப்படுகிறதோ, அதை கிரகித்து கொள்ளும். அந்த மொழியை வேகமாக பின்பற்றும். முதல் மூன்று ஆண்டுகள் வரை ஒரு மொழியை மட்டுமே, குழந்தைகளால்
கற்றுக் கொள்ள முடியும். மொழியை நன்கு பழகிய பின், மூன்றரை வயதுக்கு மேல், இரண்டாவது மொழியை கற்றுத் தரலாம். அப்போது தான் குழப்பமின்றி தெளிவாக பேசமுடியும்.
தமிழ்மொழியில் நிறைய சப்தங்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு உச்சரிப்பு வேறுபாட்டை நாக்கை சுழற்றுவதன் மூலம், கற்றுத் தருவது எளிது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கு தமிழ் மொழியே உதவும். வாயின் எல்லாப் பகுதிகளையும் நாக்கு தொட்டு, மடங்கிப் பேசமுடிவது, தமிழ்மொழியில் தான். பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும்.வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் தாய்மொழியில் தான் பேசவேண்டும். அப்போது தான் குழந்தை எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்ளும். வீட்டில் பல மொழிகள் பேசினால், மூன்று வயது வரை, மொழி வளர்ச்சி இல்லாமல், பேச்சு மொழி தாமதப்படும். ஒரே மொழியில் பேசும் போது, பழகும் போது மொழி வளர்ச்சி வேகமாக, தெளிவாக இருக்கும்...

நம்மொழியாம் தமிழ்மொழி அது எம் தாய்மொழி வாழ்க தமிழ்..இன்றும் என்றும்!

அனைவருக்கும்
தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.

தமிழ் வாழ்க.

உணவு ஜீரணமாகும் நேரம்....

உணவு ஜீரணமாகும் நேரம்

உண்ணும் உணவு ஜீரணமாக... எத்தனை மணி நேரம் பிடிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

சைவம்
* நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்
* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்
* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்
* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்
* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்
* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்
* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்

அசைவ உணவுகள்
* மீன் - அரை மணி நேரம்
* முட்டை - 45 நிமிடங்கள்
* கோழி - 2 மணி நேரம்
* வான் கோழி - இரண்டரை மணி நேரம்
* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்

Wednesday, February 19, 2014

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.
மொரீசியசில் மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.!!!

Tuesday, February 18, 2014

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்…!

உயிருக்கு உலை வைக்கும் உணவுகள்…!

மக்களே எச்சரிக்கையாக இருங்கள்..!

ஆரோக்கியமான உணவுகள் அனைத்தையும் எப்போதுமே நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்ற நினைத்தால் அது தவறு.

ஏனெனில் சில உணவுகள் உயிர் போகும் அளவிலான தீமையை கூட விளைவிக்கலாம்.

எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது.

ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அந்த உணவுகளை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.

இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும்.

குறிப்பாக இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு:-

பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான்.

அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.

மேலும் உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும்.

அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

ஆப்பிள்:-

என்ன அதிர்ச்சியாக உள்ளதா?

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.

ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும்.

ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

ருபார்ப்:-

இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும்.

பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.

செர்ரி:-

பெரும்பாலான மருத்துவர்கள் செர்ரி பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று சொல்வார்கள்.

இருப்பினும் இந்த பழங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் தான் விஷம் உள்ளது.

அதுமட்டுமின்றி அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.

பாதாம்:-

பாதாம் ஆபத்தான உணவுப் பொருள் என்று சொன்னால், பலரும் நம்ப மாட்டார்கள்.

ஆனால் உண்மையில் கசப்பாக இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம்.

ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.

ப்பர் மீன் (Puffer Fish):-

மீன் ரொம்ப பிடிக்குமா? அப்படின்னா பஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது.

இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

காளான்:-

காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன.

அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது.

ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்

காதல் கொலைகள் காரணம் என்ன?...

காதல் கொலைகள் காரணம் என்ன?

இந்த உலகத்திலேயே மிகவும் துயரமான விஷயங்கள் இரண்டு. ஒன்று… காதலில் தோல்வி அடைவது! இன்னொன்று? காதலில் வெற்றி பெறுவது!

இரண்டாவது துயரத்துக்கு உதாரணம்… நீதிமன்ற வாசல்களில் விவாகரத்து வேண்டி வரிசையில் காத்திருக்கிற காதல் திருமண தம்பதிகள்.

முதல் துயரத்துக்கு உதாரணம், தினசரி தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகிற காதல் கொலைகள்.

காதலுக்காக கையை அறுத்துக்கொண்ட, நாக்கை அறுத்துக்கொண்ட, இவ்வளவு ஏன்? தன்னையே அழித்துக்கொண்ட ஆண்களைத்தான் இதுவரை பார்த்திருப்போம். அதெல்லாம் ஓல்டு ஸ்டைல்! காதலை ஏற்க மறுக்கிற பெண்ணைக் கதறக் கதற கொலை செய்வது, அதே வெறியுடன் தற்கொலை செய்து கொள்வது…

இதுதான் காதலில் லேட்டஸ்ட்!

சம்பவம் 1

கோவையைச் சேர்ந்த ரம்யா 24 வயது எம்.சி.ஏ. பட்டதாரி. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும், இவரது உறவினர் மதன்குமாருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக காதல். வேலை கிடைத்ததும் மதன்குமாரைவிட்டு, ஒதுங்கினாராம் ரம்யா. ஆத்திரமடைந்த மதன்குமார், அலுவலகம் செல்லும் வழியில் ரம்யாவை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.

சம்பவம் 2

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அசீம். அவருக்கு, வடவள்ளியைச் சேர்ந்த தொழிலதிபர் சஜீவ்மேனன் மகள் ஸ்ருதி மீது காதல். இருவரும் இளங்கலை படிக்கும்போதிருந்தே காதலித்துள்ளனர். முதுகலையில் சேர்ந்த நிலையில் இருவரிடையே கருத்துவேறுபாடு ஏற்படவே, காதலனைத் தவிர்த்திருக்கிறார் ஸ்ருதி. இதனால் ஆத்திரமடைந்த அசீம், ஸ்ருதியின் வீட்டுக்குச் சென்று ஸ்ருதியின் தாயார் லதாவுடன் வாக்குவாதம் செய்து, அவரைக் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு, காதலி ஸ்ருதி இருந்த அறைக்குள் நுழைந்து, அவரையும் குத்தியிருக்கிறார். கொலைவெறி அடங்காமல், ஸ்ருதியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயும் வைத்தார். நெருப்பு பற்றி எரிய, தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு, காதலியின் உடல் மீது விழுந்து உயிரை விட்டிருக்கிறார்.

சம்பவம் 3

திருவொற்றியூரைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் செந்தமிழ்ச்செல்வனின் 21 வயது மகள் கார்த்திகா. கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி புரிந்த அவரை, அதே பகுதியைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் ராஜரத்தினம் காதலித்தார். இந்தக் காதலில் கார்த்திகாவின் பெற்றோருக்கு உடன்பாடில்லை. மகளிடம் விஷயத்தை விளக்கியதை அடுத்து, அவரும் ராஜரத்தினத்தை விட்டு விலகினார். வேலைக்குச் செல்ல, பிராட்வே பேருந்து நிலையத்தில் காத்திருந்த கார்த்திகாவை, வழிமறித்து, காதலை ஏற்கக் கட்டாயப்படுத்தினார் ராஜரத்தினம். கார்த்திகா அதற்குச் சம்மதிக்காததால், அந்த இடத்திலேயே கத்தியால் கழுத்தை அறுத்து, கொலை செய்திருக்கிறார். அதே கத்தியால் தன்னையும் குத்திக்கொண்டு இறந்து போனார்.

சம்பவம் 4

கோவையைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அபிநயா. தன் காதலை ஏற்காத காரணத்துக்காக அபிநயாவை, வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்துக் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்திருக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் வேணுகோபால்.
காதல் திருமணங்கள் தவறில்லை என்கிற மன நிலைக்கு மாறிக் கொண்டிருக்கிற பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கின்றன சமீபத்தில் ரத்த வெறிச் செயல்கள். ஏற்கனவே காதலில் விழுந்து விட்ட பல பெண்களும் பீதியில் உறைந்து கிடக்கிறார்கள்.

‘காதல் ஒன்றும் கடவுள் இல்லையடா… இந்த இழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா…’ என இவர்களுக்கெல்லாம் எப்படித்தான் புரிய வைப்பது?

கொலை வெறிக் காதலர்களுக்கு என்னதான் பிரச்னை?

‘‘காதலை ஏற்கவும், மறுக்கவும் அந்தப் பெண்ணுக்கு முழு உரிமை உண்டு. அவளைக் கட்டாயப்படுத்துவதையோ,
காதலை ஏற்க மறுக்கிற பட்சத்தில்
வன்முறையில் ஈடுபடுவதையோ, ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய வெறிச்செயலில் ஈடுபடுகிற ஆண், சிறு வயதிலேயே வன்முறை நிறைந்த சூழலில் வளர்ந்தவனாக இருப்பான்.

அப்பா குடித்துவிட்டு, அம்மாவை அடித்துத் துன்புறுத்துவதையும், தான் வைத்ததுதான் சட்டம் என முடிவுகளைத் திணிப்பதையும் பார்த்து வளர்ந்திருப்பான். அல்லது அடி, உதைகள் வாங்கியே வளர்ந்தவனாக இருப்பான். இந்த மாதிரி இளைஞர்களுக்கு வன்முறையை வெளிப்படுத்துவது மிகச் சுலபம்’’ என்கிறார் பிரபல பாலியல் மருத்துவர் காமராஜ்.

வன்முறை உணர்வுள்ளவர்களை அடையாளம் கண்டு தவிர்க்க சில ஆலோசனைகளையும் முன் வைக்கிறார் அவர்.

‘‘காதலிக்கிற போது, ஒவ்வொரு இளைஞனும் தன்னை ஒரு சினிமா ஹீரோ மாதிரிதான் கற்பனை செய்து கொள்கிறார்கள். சினிமா ஹீரோ பத்து பேரை அடிப்பார். பறந்து பறந்து தாக்குவார். தன்னையும் அப்படி கற்பனை செய்து கொள்வார்கள்.

பலருக்கு அது வெறும் கற்பனையோடு நிற்பதில்லை. காதலியுடன் ஓட்டலுக்குப் போகும் போது, சர்வர் செய்கிற சிறிய தவறுக்குப் பொங்கி எழுந்து, தகராறு செய்வது, சாலையில் செல்லும் போது, சக பயணிகளுடன் பிரச்னை செய்து, அடிதடியில் இறங்குவது எனக் கூடுதலாக உணர்ச்சிவசப்படுகிற இந்த கேரக்டர்களை ‘ஜெர்க்’ என்கிறோம்.

நடைமுறையில் வன்முறை உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத இந்த நபர்களைக் கல்யாணம் செய்கிற பெண்களுக்கு திருமண வாழ்க்கை நிச்சயம் நரக மாகத்தான் அமையும்.
காதலிக்கிற போது மற்றவர்களிடம் வெளிப்பட்ட அதே வன்முறை, திருமணத்துக்குப் பிறகு மனைவியிடமும் கட்டாயம் வெளிப்படும்.

எழுதப்படாத சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு, அவற்றை யாராவது மீறும் போது, யாராக இருந்தாலும், அவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கத் தயங்காத அரக்கர்கள் இவர்கள். இப்படிப் பட்டவர்களுடன் வாழ்வது போராட்டம்தான்.

இந்த கேரக்டரை அடையாளம் கண்டுவிட்டால், அந்தக் காதலைத் தொடர்வது பெண்களுக்கு நல்லதல்ல. அதைவிட முக்கியமானது, காதலை முடிவு செய்ய குறைந்த பட்சம் 2 வருடங்களாவது அவகாசம் அவசியம்.

அந்த 2 வருடங்களில் அந்த ஆணின் குணாதிசயங்களைக் கவனிக்க வேண்டும். யாரிடம், எப்படிப் பழகுகிறார், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவரா என்பதைக் கண்காணிக்க வேண்டும். கல்யாணத்துக்குப் பிறகு சரியாகி விடும் என்றோ, திருத்திவிடலாம் என்றோ தப்புக்கணக்கு போட்டு, தியாகிப் பட்டம் சுமக்க வேண்டாம்’’ – எச்சரித்து முடிக்கிறார்.

நன்றி-தினகரன்