Wednesday, September 4, 2013

ஆசிரியர் தின வாழ்த்துகள்....






 ஆசிரியர் தின வாழ்த்துகள்....
 


கல்வி என்னும் கரும் பலகையில்
கற்ற உயிர் மெய் எழுத்தை நம்
கைவண்ணம் தொட்டு காகித தட்டில்
எழுதி படிக்க கற்று கொடுத்து

நம் தமிழ் மொழி சிறக்க நம்மை
அடிமனதில் ஆணி அடித்தார் போல்
அறிமுகம் பதித்து இன்முக சிரிப்புடன்
பொன் முக கனவில் என் முகம்
மேல் அறிவு கண்டு மென் மேலும் சிறக்க

அதே இடத்தில நின்று தான்
கற்று தெளிந்ததை என் தலைமுறை
தாண்டியும் பின் தலைமுறை தளிர்க்கவும்
உழைக்கும் ஆசானே உன்னை குருவே
தெய்வமாய் வணங்குவதில் பெருமை கொள்கிறேன் 


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

 ஆசிரியர் தின வாழ்த்துகள்....

கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்

நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்

நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள் !
என் ஆசிரியர்கள்;;;;;;;;;;;;

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

 


ஆசிரியர் தின வாழ்த்துகள்............

நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்

எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே

எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்

உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு
தண்டனை எங்களுக்கு தந்து
வேதனையை - நீங்கள்
அல்லவா அனுபவித்தீர்கள்

எத்தனை அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே

எததனை நாள்
மழையில் நனைந்தீர்கள்
வெயிலில் காய்ந்தீர்கள்
பசியை மறந்தீர்கள்

உங்கள் குடும்பத்தைவிட
எங்கள் நலனில் தானே
அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்
இறந்த காலங்களில் ஓராயிரம் முறை
உங்களை திட்டி தீர்திருந்தாலும்
நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை

No comments:

Post a Comment