Wednesday, August 28, 2013

நல்ல தந்தை-மகள் உறவில் இருக்க வேண்டிவை!!!

 
ஒரு பெண்ணின் தந்தை அவள் வாழ்க்கையில் முக்கியமான பங்கை வகிக்கின்றார். அவளுடைய குழந்தை பருவத்திலிருந்து டீன் ஏஜ் பருவம் வரை அவளை பார்த்து பார்த்து வளர்த்து வருபவர் தந்தை. ஒரு தாயை போல் தந்தைக்கும் பல கடமைகள் உள்ளன. அவளின் வாழ்க்கைக்கு அவரே நம்பிக்கையையும், பாதுகாப்பையும் அளிக்கின்றார். பெற்றெடுப்பது தாயின் கடமை என்றாலும், தந்தையும் அதில் முக்கிய பங்கை வகிக்கின்றார். பெண் குழந்தை பிறந்த உடனேயே தாயை விட தந்தைக்கு தான் பொறுப்புகள் கூடுகின்றன. அவளுடைய பள்ளி முதல் வாழ்க்கை வரை அனைத்தையும் தேர்ந்தெடுப்பதை கண்ணும் கருத்துமாக செய்து முடிப்பர் தந்தை. அதுமட்டுமின்றி தனது மகளின் வாழ்வில் ஒரு தந்தையானவர் செல்வாக்கையும், சுய மரியாதையையும், நம்பிக்கையையும் கொடுக்கின்றார். இப்போது ஆரோக்கியமான அப்பா-மகள் உறவை பராமரிப்பது எப்படி என்று இங்கு காண்போம்.

நல்ல நண்பனாக இருங்கள்;
 மகளை தோழியாக கருதி, உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக மகளுடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து கேளுங்கள்
.
உங்கள் மகளை உங்களுக்கு சமமாக நடத்துங்கள் 
உங்கள் மகளுக்கு எதுவும் தெரியாது என்று எண்ண வேண்டாம். குழந்தைகள் இந்த நாட்களில் மிகவும் தெளிவாகவும், அறிவுபூர்வமாகவும் சிந்திக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
 
ஒரு நடுவராக இருங்கள்
 உங்கள் மகளுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையில் வரும் பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள். இரண்டு பெண்களின் பிரச்சனைகளை தீர்க்க ஒரு ஆண் இருந்தால், பிரச்சனை தீர வாய்ப்பு உண்டு
 
.
பேச கற்றுக் கொள்ளுங்கள்
 நீங்கள் நன்றாக பேச அல்லது உணர்ச்சியை காட்ட முடியாத நபராக இருந்தால், குழந்தைகளுக்கு சில சில உதவிகளை செய்ய பழகுங்கள். அதாவது ஷாப்பிங் அழைத்துச் செல்வது, வீட்டு பாடத்தில் உதவுவது போன்ற உதவிகளை செய்யுங்கள்.

மகளை நம்புங்கள் 
 பெண்களை பாதுகாக்கின்றோம் என்று கருதி தந்தைமார்கள் சில நேரங்களில் தொந்தரவு கொடுப்பது உண்டு. இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகள் மீது சந்தேகம் கொள்ள தூண்டும். இது கண்டிப்பாக உங்கள் மகளை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறந்து விடாதீர்கள்
.
தனியாக செயல்பட விடுங்கள் 
 அவர்கள் இனி குழந்தைகள் இல்லை, அவர்களால் சிந்திக்கவும் செயல்படவும் முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதிலும் செய்யும் தவறுகளில் இருந்து கற்று கொள்ளட்டும். எப்பொழுதும் அவர்கள் பின்னால் நின்று போதனை செய்வதை நிறுத்துங்கள்
 
நிபந்தனையின்றி அவர்களிடம் அன்பு செலுத்துங்கள் 
அவள் உங்கள் சொந்த மகள். அவள் சிறந்தவளோ தோல்வியுற்றவளோ உங்கள் மகள் தான். அதிலும் அவள் மீது உங்கள் கனவை செலுத்தாமல் அவளை அவளாக ஏற்றுக் கொள்ளுங்கள்
 
அவர்களது நண்பர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
 உங்கள் மகளின் சமூக வட்டம் கஷ்டமாக கூட இருக்கலாம். அவளின் நண்பர்களின் வட்டம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர்களை ஏற்று கொள்ளுங்கள்
 
பொறுமையாக இருங்கள்
 இளம் வயது என்பதால் சில நேரத்தில் அவர்கள் கத்துவார்கள் கோபப்படுவார்கள். இருந்தாலும் நீங்கள் அமைதியாக இருந்து, அவர்கள் குறைகளை போக்கி, பொறுமையாக எடுத்து கூறுங்கள்
 
ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்
 நேரம் மிக பெரிய பிணைப்பை உண்டாக்கும். உங்கள் நேரத்தை, உங்கள் மகளுடன் செலவிடுங்கள். இதனால் அவர்கள் உங்களை உங்களாகவே ஏற்று கொள்வார்கள் மற்றும் அன்பு செலுத்துவார்கள் என்பதில் ஐய்யம் இல்லை
 
.



திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?

 
பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம். பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா? வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது. இந்திய காவியமான இராமயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற பொழுது, இராமனுக்கு அடையாளமாய் சீதை தன் கால் மோதிரமான மெட்டியை (கணையாழியை) கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அப்பொழுது இருந்தே பெண்கள் மெட்டி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம். மேலும் மெட்டியை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர் மார்ஜொரி போரேல் என்பவர். இந்தியாவில் இருந்து திரும்பி சென்றவுடன் 1973ல் நியூயார்க்கில் மெட்டி வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். அவர் முதன் முதலில் ஆரம்பித்த மெட்டி கடை நியூயார்க் 59வது தெருவில் அமைந்துள்ளது.

Tuesday, August 27, 2013

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.

1.ஏண்டா லேட் ?
லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்)

2.எங்க இருக்க?
பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க ?)

3.எப்ப முடியும்?
இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)

4.சாயங்காலம் எப்ப வருவ?
வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் )
5.சாப்புட என்ன வேணும்?

எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?)
6.எங்க கிளம்பிட்ட?
வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீவரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா)

7.காலைல எப்ப எழுந்தறிப்ப?
முழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..)

8.இங்க இருந்த தைலத்த பாத்தியா?
பாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப.
( இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாளைலவெடிச்சுரும்.

நீங்களும் இப்படி என்றால் நீயும் என் இனமே.

Monday, August 26, 2013

இந்திய நாட்டுப்பண்



ஜன கண மன (மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ)
Janaganamana-score.png
இசையெழுத்து
தேசியக் கீதம் இந்தியாவின் கொடி இந்தியா
இயற்றியவர் இரவீந்திரநாத் தாகூர்
இசை இரவீந்திரநாத் தாகூர்
சேர்க்கப்பட்டது 1950




பாடல்

ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

தமிழாக்கம்

மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்
வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான்
அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன்
வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல
பார்த்தான் தூரத்துல ஒரு மடம்
தெரிஞ்சது உடனே அங்க போய்
எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு
அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம்
வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க
ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ?
பேசாம
இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு .
உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான் .
அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்ப
ோது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரி
சத்தம் . ஆனா ஒருத்தரும்
எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவனும்
அப்படியே படுத்து தூங்கிட்டான் . மறுநாள்
காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது.
அந்த சத்ததுக்கான
காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான்
உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ
போகலாம் அப்படின்னு சொல்லிட்டார் . இவனும்
வந்துட்டான்
அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய
வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர்
ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது .
அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .
இவனும் மறு நாள் காரணம் கேட்டான் .
ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல
கூடாதுன்னு சொல்லிட்டார்
மறுபடியும் மூன்றாவது தடவையும்
இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான் .
அவர் அப்பவும் மறுத்தார் .
உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு .
ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க .
ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான்.
அதுக்கு அவரு நீயும் என்ன
மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் .
உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும்
சொல்லிட்டு துறவியாக வந்துட்டான் . வந்ததும்
அவரு இவன தவம் பண்ண சொன்னார் . இவனும்
பண்ணினான்
ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த
தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய
வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட
கேள்விக்கு பதில்
இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு,
பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி .
அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த
சாவி தருவேன்னு துறவி சொன்னார் . இவனும்
கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார் .
இவன் தொறந்தான் . அப்புறம்
இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில்
கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான்
அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான
காரணத்தை கண்டு புடிச்சான் .
.
.
அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா

நீங்க
துறவியாகனும்.!
( பாவி பயலுக எனக்கும் இப்படிதாங்க
அனுப்புனாங்க)
நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களைகண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள்"ஹிட்லர் " என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு...
ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது " என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றார்...!

ரக்ஷாபந்தன்

சில வீடுகளில் சகோதர, சகோதரிகள் இணைந்து பிறக்கிறார்கள். ஆனால், சிலருக்கோ சகோதரரோ, சகோதரியோ இருப்பதில்லை. இது அவர்கள் மனதில் ஒரு ஆதங்கமாகவே இருக்கும். இப்படி ஒரு நிலைமை, விநாயகரின் மகன்களுக்கே இருந்ததாம்.

தமிழகத்தில் நாம் விநாயகரை பிரம்மச்சாரியாகவே காண்கிறோம். வட மாநிலங்களில் சித்தி, புத்தி என்ற தேவியர் அவருக்கு உண்டு. இவர்களுக்கு சுபம், லாபம் என்ற ஆண் குழந்தைகள் பிறந்தனர். ஒருமுறை, இவர்கள் தங்கள் சகோதரர்களின் கையில் ரக்ஷா என்னும் கயிறு கட்டும் சகோதரிகளைக் கண்டனர். தங்களுக்கும் சகோதரி வேண்டுமென தந்தையிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையும் நிறைவேறியது. சந்தோஷப்பட்ட சுபமும் லாபமும், தங்கள் தங்கைக்கு "சந்தோஷி' என்று பெயர் சூட்டினர். சந்தோஷிமாதா வழிபாடு வடமாநிலங்களில் பிரசித்தம். இவர்களைக் குடும்பமாக தரிசிக்க வேண்டுமானால், அகமதாபாத்திலுள்ள அம்பாஜி மாதா கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கே தனி சந்நிதியே இருக்கிறது.

இந்த நிகழ்வின் அடிப்படையில், பெண்கள் யாரை சகோதரர்களாக ஏற்கிறார்களோ, அவர்களுக்கு "ராக்கி' என்னும் கயிறு கட்டுவார்கள். "ரøக்ஷ' என்றால் "பாதுகாப்பு தரும் கயிறு'. இதை அணிவிக்கும் தினமே ரக்ஷாபந்தன். ஆவணி பவுர்ணமியன்று இது கொண்டாடப்படுவது வழக்கம். இன்றும், நாளையும் பவுர்ணமி திதி இருப்பதால், இரண்டு நாட்கள் சகோதரர்களுக்கு கயிறு கட்டலாம். சொந்த சகோதரர்கள் உள்ளவர்களும், அவர்களின் நலன் கருதி இந்தக் கயிறை அணிவிக்கலாம். ரக்ஷா கயிறு கட்டுவதன் மூலம், ஒரு ஆண், குறிப்பிட்ட பெண்ணின் பாதுகாப்பு, எதிர்கால வாழ்வுக்கு துணையாக இருப்பதாக உறுதியளிக்கிறார்.மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வந்த விஷ்ணு, பூலோகம் வந்த போது, அவரைப் பிரிய விரும்பாத லட்சுமியும் பூலோகம் வந்தாள். சாதாரண பெண்ணாக வேடம் தரித்த அவள், ஆவணி பவுர்ணமியன்று மகாபலியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தாள். மகாபலியைத் தன் சகோதரனாக எண்ணி ரக்ஷா கயிறு கட்டினாள். இதனாலும், இந்த விழா நடப்பதாகச் சொல்வதுண்டு.

கி.பி.1303ல் ராஜஸ்தானில் உள்ள சித்தூர்கரை அந்நியப்படைகள் தாக்கும் போது, ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக வரலாறு கூறுகிறது. அந்த மன்னர்களும் சகோதர உணர்வுடன் ராணியைக் காக்க தங்களின் படையை அனுப்பி உதவி செய்தனர். சகோதரத்துவத்தை பேணும் இந்த திருவிழாவை இன்றும் நாளையும் கொண்டாடி மகிழ்வோம்.

வெற்றிக்கு வழி

வெற்றிக்கு வழி
**************

1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.

2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.

3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.

4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.

5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.

6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.

7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.

8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.
சுபா ஆனந்தி:
என்ன காலையில
குரங்கு கூட வாக்கிங்கா?
Raja singh:
ஹலோ இது குரங்கு இல்லை.நாய்...
சுபா ஆனந்தி:
நான் நாய்கிட்ட
கேட்டேன்..
Rajasingh:
அப்ப சரி!!!


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
Wife:
ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே
ஒழுங்கா கல்லைப் பொறுக்க
முடியாதா?
Husband:
முப்பத்திரண்டு பல்லு இருக்கே
மெல்ல முடியாதா

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
Boy 1: நேத்து உங்க
காருக்கு எப்படி Accident ஆச்சு..?
boy 2 : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?
Boy1: தெரியுது...
Boy2:
அது நேத்து எனக்கு தெரியலை..!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 
எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

*
இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான்!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
உன் மனைவியும், மாமியாரும் புலிகிட்ட மாட்டிகிட்டாங்கன்னா முதலில் யாரை காப்பாத்துவ?
இதிலென்ன சந்தேகம்.
.
.
.புலியைத்தான்..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
.Wife:ஏங்க..
சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே
சமைக்கிறேன்...எனக்கு மாச
எவ்வளவு
சம்பளம் கொடுப்பீங்க?
Husband:
உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ
சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என்
இன்சுரன்ஸ் பணம் மொத்தமும்
உனக்குத்தானே...!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 அழகான 2 பொண்ணுங்க போய்கொண்டு இருந்தாக!பின்னாடியே 2 பசங்க போனங்க!?????????????????உடனே 2 பொண்ணுங்களும்ஆளுக்கு 1 பையன் கையில ராக்கி கட்டிட்டு"அண்ணா" னு சொல்லிச்சாம்! # பசங்கஎன்ன சொல்லியிருப்பாங்க ?
?
?
?
டேய் மச்சான்! "என் தங்கச்சிய நீ கட்டிக்கஉன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்"2பொண்ணுகளும்????? !!!! .

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
 எறும்பு தன் கூட்டத்தில் இருந்து பிரிந்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் எறும்புகள் ஒன்றையொன்று சரியாக அடையாளம் கண்டுகொள்ளும்.
.
.
ஏன்னா எறும்புகளுக்கு நம்மள மாதிரி தாடி, மீசை வளராது.

.

1. எதுவும் சில காலம் தான்.....
2. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால்,
ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.
3. நம்பு... யாரையும் முழுமையாக நம்பாதே,
உன்னை மட்டும் வாழ்வில் நம்பு....
4. சிந்தனை செய், கோபப்படாதே....
5. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை,
அதை அர்த்தமுள்ளதாக
வாழ்ந்து விட்டு போ...
தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்

நாயகன் - ஒரு கிலோ
சர்க்கார் - அரை கிலோ
பாம்பே -1 துண்டு
தேவர்மகன் - 6 பல்
இந்திரா - ஒரு தேக்கரண்டி
பில்லா - அரை கப்
புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்
பொல்லாதவன் - தேவையான அளவு

கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிரமாக வரும் வரை வதக்கவும். பொன்னிரமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும். நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.

இதை டிஸ்ஸை நீங்கள் விரும்பிய திரையரங்கில் வாங்கி சாப்பிட்டு விட்டு வாந்தி எடுத்தால் Chef அதருக்கு பொறுப்பில்லை.......

(படித்ததில் பிடித்தது)

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???
1.விடலைப் பருவத்தில் தினமும் காலை எழுந்ததும் தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில் பார்க்கும் போது.
2.இது வரை ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு, இருபாலர் படிக்கும் கல்லூரியில் நுழைந்ததும் அச்சத்தோடும் கூச்சத்தோடும் பெண்களை ஓரக்கண்ணில் பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல், தான் தானாகவே இருக்கும் போது.
4.எவ்வளவு முரடனாக இருந்தாலும் , தன் வீரத்தையும் திமிரையும் ஓரங்கட்டிவிட்டு, பெண்ணிடம் பணிவாய் பேசும் போது.
5. சொந்த உழைப்பில் கிடைத்த தன் முதல் மாத சம்பளத்தை கை நீட்டி வாங்கும் போது.
6.காத்திருக்க முடியாதென்றுச் சொன்ன காதலியை தன் குடுபத்திற்காக தியாகம் செய்யும் போது.
7.தன் தங்கைக்கு தான் இன்னொரு தந்தை என்பதை உணரும் போது.
8.இரு சக்கர வண்டியை உர்ர் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் என உறுமாமல், சிக்னலில் வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில் தலை முடியை சரி செய்யும் போது.
9.வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே நடக்கும் போது.
10.அப்பாவிடம் அதிகம் பேசாவிட்டாலும் கூட அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து வைத்திருக்கும் போது.
# சுயநலமில்லாத,செயற்கைத் தனமில்லாத எல்லா ஆண்களுமே அழகு தான்.
ஆனியன் டி.வி யின் உ(சி)ரிப்பு செய்திகள்....
# சரிந்துவரும்பணமதிப்பை சரிசெய்ய 300 டன் வெங்காயத்தை உலக வங்கியிடம் அடகு வைக்க முடிவு....
# நாட்டுமக்கள் வெங்காயம் வாங்குவதை குறைத்து கொள்ளவும்.. நிதியமைச்சர் உருக்கம்...
# விமானநிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 5கிலோ வெங்காயம் பிடிபட்டது...
# வெங்காயம்வாங்க லோன் வசதி.. அனைத்து வங்கிகளும் முடிவு..
# சென்னையில்துணிகரம்"பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 10 கிலோ வெங்காயம் திருட்டு...
#5 கிலோவிற்கு மேல் வெங்காயம் வைத்தி ருப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்..
# உலககோடிஸ்வரர்கள் மாநாட்டில் ஆம்லேட்டுக்காக 30 கிலோ வெங்காயம்!!! சாமானியர்கள் ஏக்கம்..
# வாரம்1 கிலோ வெங்காயம் தருவதாக சொன்ன நிதி நிறுவனம் ஓட்டம்..ஏமாந்த மக்கள் கண்ணீர்...
# வெங்காயத்தைஅடகு வாங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும்...
# பாகிஸ்தானிலிருந ்துபோலியாக புழக்கத்தில் விடப்படும் வெங்காயத்தை கண்டறியநவீன கருவி வாங்கப்படும்
# பிரிட்டனில்நடந்த உலகின் அதிக பரிசுத் தொகை கொண்ட லாட்டரிகுலுக்கலில் 5டன் வெங்காயம் வென்ற அதிர்ஷ்டசாலி...
# ஐபிஎல்வீரர்கள் சம்பளத்திற்கு பதில் வெங்காயம் தர வேண்டும் கேப்டன்கள் வேண்டுகோள்....
ஆனியன் செய்திகளுக்காக
வெங்காயடேஷ்..
வெங்கியின் லந்து- சந்து.


1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.
2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.
3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.
4. எறும்புகள் உணவு இல்லாமல் 100நாட்கள் வாழும்.
5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.
6.பாம்புகளுக்குகேட்கும் சக்தி கிடையாது.
7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.
8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.
9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில்விழாது இரவில்தான் விழும்.
10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.
11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது
13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.
16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .
17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.
21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

அரிய தகவல்கள் :

அரிய தகவல்கள் :
---------------------------
1.எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எக்ஸாமை பொறுத்து உங்க பிரச்சனைகள் என்னன்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சா எக்ஸாம் ஈசியா இருக்குமாம்! # சைக்காலஜி
2.ஆப்ரகாம் லிங்கனுக்கு தன்னை சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என பத்து நாட்களுக்கு முன்னே கனவில் தோன்றியதாம்!
3.உலகத்திலுள்ள எண்ணை, கேஸ், நிலக்கரி, மரம் இது எல்லாத்தையும் போட்டு எரிச்சாலும் சூரியனின் ஒரு நொடிவெப்பத்தை அடைய முடியாது!
4.இன்னும் உலகிலுள்ள 50% மக்கள்தொலைபேசிகளின் எந்த வடிவத்தையும் பயன்படுத்தியதில்லையாம்!
5.பில்கேட்ஸ் தன்னுடைய 15 வயதிலேயே செயற்கைக்கோள்களுக்கான டிராபிக் கண்ட்ரோல் சிஸ்டத்தை உருவாக்கினாராம்!
6.ஒரு வருடம் என்பது 31,557,600 வினாடிகள்!
7.தமிழகத்தில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்து காத்திருப்போர் 82 லட்சம் பேர்!

அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!

அறியாத தகவல்கள் தெரியாத
விஷயங்கள்!
* பூரண ஆயுள் 120 ஆண்டுகள்
வாழ்வதைக் குறிக்கும்.
* ஒரு யுகம் என்பது பல லட்சம்
ஆண்டுகளைக் கொண்டது.
* வானவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற
7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.
* மாபெரும் விஞ்ஞானியான ஐசக்
நியுட்டன் தீவிரமாக
சிந்திக்கும் போது சில சமயம்
உறங்கி விடுவார்.
அப்படி உறங்கிய போது கணிதப்
பிரச்சினைகள்,
இயற்கை அமைப்பு சம்பந்தமான சில
பிரச்சினைகளுக்குரிய
விடைகளை கனவுகள் மூலம்
அறிந்து கொண்டாரம்.
* மிகச்சிறிய உயிரினமான எறும்புகள்
ராணுவ வீரர்கள் போல்
அணிவகுத்து செல்வதற்கான காரணம்
என்ன? என்று கேட்டால்,
விடை பலருக்கு தெரிவதில்லை.
எறும்புக்கு பார்வைத்திறன்
குறைவு. எனவே எறும்புகளின்
உடலில் சுரக்கும் அமிலங்களின்
வாசனையை நுகர்ந்தபடி ஓர்
எறும்பு மற்றொரு எறும்பினை பின்தொ
கிறது.
* உப்பை விரும்பி சாப்பிடும்
விலங்கினம் - முள்ளம் பன்றி.
* ஒரு நட்சத்திரத்தின்ஆயுள் காலம் -
10 மில்லியன் ஆண்டுகள்.
* திமிங்கலங்கள்
விலங்கினத்தை சேர்ந்தவை.
* திருமணத்தின்போது அட்சதை (அரிசி)
தூவி வாழ்த்தும் முறை -
`உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு
நீண்ட காலம் மணமக்கள் வாழ
வேண்டும்' என்பதுதான்
அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்
" மன்னா.. ஆபத்து.., ஆபத்து.... "

" என்னய்யா ஆபத்து... என் அக்கவுண்ட்டை
யாராவது ஹேக் செய்து விட்டார்களா..? "
......
" இல்லை மன்னா.. பக்கத்து நாட்டு மன்னன்
நம்மீது போர் தொடுக்க போகிறானாம்..
ஸ்டேடஸ் போட்டு இருக்கிறான்... "

" என்னாது போரா..? நாம் தான் அவன் போடும்
எல்லா மொக்கை ஸ்டேடசுக்கும் லைக்
போடுகிறோமே... பிறகு எதற்கய்யா போருக்கு
வருகிறான்.. "

" அவர் அந்தபுரத்தில் இருக்கும் 2 ராணிகளுக்கு
நீங்கள் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினீர்களாமே... "

" ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பினதுக்கெல்லாமா
போர்.. பெரிய அக்கப்போராய் அல்லவா இருக்கிறது..
அவ்வ்வ்..!
 
ஒருவருக்கு திடீரென்று தலைவலி. உடனே மருத்துவமனைக்குப் போனார். அந்த டாக்டர், இவரை ஓர் அறையில் படுக்க வைத்தார். ஒரு மருந்துச் சீட்டு எழுதினார்.

அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து, ‘‘இதை உடனே வாங்கி வா!’’ என்றார்.
மருந்து வாங்கப் போன ஆசாமி வருவார் என்று காத்திருந்தார்கள். ஆனால், போனவர் வரும் வழியாகத் தெரியவில்லை.

படுத்திருந்தவருக்குத் தலைவலி இன்னும் அதிகமாயிற்று. டாக்டர் பார்த்தார். உடனடியாக இன்னொரு மருந்தின் பெயரை எழுதினார்.
‘‘இது கிடைத்தாலும் பரவாயில்லை!’’ என்று அந்தச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து வாங்கி வரச் சொன்னார். அவரும் அவசரமாக வெளியே ஓடினார். ஆனால், வந்து சேரவில்லை.

இந்த சமயத்தில் அந்த மருத்துவமனையின் வாசல் புறத்தில் ஏதோ கூச்சல் கேட்கிறது. அங்கே ஒரு சுழலும் வழி...

ஒருவர் பின் ஒருவராகத்தான் உள்ளே வர முடியும். கால்நடைகள் நுழையாமல் இருக்க அந்த ஏற்பாடு.
அங்கே இரண்டு பேர், ‘நான்தான் முதலில் உள்ளே நுழைவேன்!’ என்று இருவரும் நின்று கொண்டு தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். விளைவு& இரண்டு பேருமே செல்ல முடியவில்லை.
இருவரின் கையில் இருப்பதும் ஒரே நோய்க்கான மருந்துதான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
உள்ளே படுத்திருப்பவரோ, தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான மருந்தை வைத்திருப்பவர்களோ வெளியே சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

விளைவு? தலைவலி தொடர்ந்து கொண்டிருக்கிறது! இதுதான் இன்றைய ஆன்மிகம்! மனித குலம்தான் அந்த நோயாளி. கடவுள்தான் அந்த மருத்துவர். மதவாதிகள்தாம் அங்கே சண்டை போடுகிறவர்கள்.

சரி... இப்போது கதையைத் தொடரலாம். டாக்டர் அவசரமாக வெளியே ஓடி அவர்கள் கையில் இருந்த இரண்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே ஓடுகிறார்.

ஒரு பாட்டில் மருந்தை அந்த நோயாளிக்குக் கொடுக்கிறார். இன்னொரு பாட்டில் மருந்தை அவசரமாகத் தானே சாப்பிட்டு விடுகிறார்!

ஆமாம்!
இப்போது டாக்டருக்கும் தலைவலி!

மதவாதிகளே!
தயவுசெய்து கடவுளைக் காப்பாற்றுங்கள்!

நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.

அறிந்து வைத்துக் கொள்வோம்..

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

அறிந்து வைத்துக் கொள்வோம்..

அறிந்து வைத்துக் கொள்வோம்..
.........................................................
*காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.

*அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.

*ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous..

*"The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.

*abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.

*ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.

*ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்.

*ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.

*மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது..

*இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம்.

இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும்.

ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள்.

நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.

* a,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை..

Sunday, August 25, 2013

சிரிக்க சிந்திக்க..

சிரிக்க சிந்திக்க..



ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான் . அவனுக்கு கடவுள்
பக்தி ரொம்ப அதிகம் .
அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்
குவான் .அதுக்கப்புறம்
காட்டுக்கு போவான் .விறகு வெட்டுவான் .அதை கெ
ாண்டுகிட்டு பொய் விற்பனை செய்வான் .
ஓரளவுக்கு வருமானம் வந்தது .
அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திக
ிட்டு இருந்தான் .
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும்
போது அங்கே ஒரு நரியை பார்த்தான் .
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை .
எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு !
அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம்
" இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ...
அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி த
ன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?"
அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்
இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த
பக்கமா ஒரு புலி வந்தது
அதை பார்த்த உடனே ஓடி போய்
ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டான் ,
ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க
ஆரம்பிச்சான்
அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய
மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...
அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக
மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது
புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த
நரி மெது நகர்ந்து கிட்ட வந்தது ...
மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்பதியா போய்ட்டது !
இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள்
கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான
நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் .
அப்படி இருக்கறப்போ .. தினமும் கோவிலுக்கு போய்
சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம
விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம் ,
நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழைலயும்
கஷ்டபடனும் ..? எதுக்காக
வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?
இப்படி யோசிச்சான் .
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான்
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான் .
அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான் .
" கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர்
நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "-
அப்படினு நம்பினான் , கண்ணை முடிகிட்டு .
கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல
சாஞ்சி உக்காந்துகிட்டான் .
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே !
இவன் பசியால வாடி போனான் .
உடம்பு இளைச்சு போச்சு . எலும்பும்
தோலுமா ஆயிட்டான் .
ஒரு நாள் ராத்திரி நேரம் . கோயில்ல யாருமே இல்லை.
இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் ...
" ஆண்டவா ... என்னுடைய
பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான்
இப்படியே பட்டினி கிடந்தது சாக
வேண்டியது தானா ? காட்டுல அந்த
நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே!
அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ...
என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ...
இது நியாயமா ?"..- ன்னான்
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள
வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட
இருந்து ! அப்படின்னாராம் .
இன்னைக்கு பொதுவா கடவுள் பக்தி மக்கள் கிட்ட
எப்படி இருக்குங்கறதுக்காக
இப்படி ஒரு கதையை பெரியவர்கள் சொல்றது உண்டு .

ஒரு குட்டி கதை

ஒரு குட்டி கதை
நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன் வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக் படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

#ஆத்தீ , கடைசியில் நம்மளையே முட்டாளாக்கிட்டாங்களே!!!

கொசு விரட்டிகளால் ஏற்படும் ஆபத்து

கொசு விரட்டிகளால் ஏற்படும் ஆபத்து!"

வெயில் காலம் முடிந்து மழைக் காலம் ஆரம்பித்துவிட்டது. கூடவே கொசுக்களின் தொல்லையும் தொடங்கிவிட்டது. பகல், இரவென்று பாராமல் எப்போதும், எங்கேயும் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கடி, பல அபாயங்களுக்கு இட்டுச் செல்லும் என்பதால், கொசுவர்த்திச் சுருள், மேட், லிக்விட், கிரீம் என்று பலதையும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கொசுக்களுக்கு எதிரான அரணாக விளங்கும் இவற்றில் பல, ஆபத்துகளையும் அள்ளி வந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்களும், ஆய்வாளர்களும். கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்கள், லிக்விட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரசாயனங் களின் அடர்த்தி, இவற்றை நாம் சுவாசிக்கும் அளவு, அறைக்குள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இவற்றால் ஏற்படும் தீங்குகளின் அளவு அமையும். கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு.

மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.

குட்டிக்கதை:

குட்டிக்கதை:

ஒரு ஊர்ல, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி & ஒரு ஐஸ் கிரீம் மூணும் நண்பர்களா இருந்தாங்களாம்.ஒரு நாள் 3ம் கடற்கரைக்கு குளிக்க போனப்ப சொல்ல சொல்ல கேட்காம, ஐஸ் கிரீம் தண்ணியில இறங்கி போயி கறைஞ்சி போயிடுச்சாம்.தக்காளியும், வெங்காயமும் அங்கேயே பொரண்டு பொரண்டு அழுதுச்சாம்.வீட்டுக்கு வர வழியில லாரியில அடிபட்டு தக்காளியும் நசுங்கி செத்துப்போச்சாம்.உடனே வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி “ஐஸ் கிரீம்
செத்தப்ப நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்ப தக்காளி
செத்தப்ப நான் அழுதேன்..ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா
எனக்குன்னு அழ யாரு இருக்கா”ன்னு கேட்டுச்சாம்..அதுக்கு கடவுளும், சரி இனிமே நீ சாகும் போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ அவுங்க எல்லாரும் அழுவாங்கன்னு வரம் குடுத்தாராம்!
அதனாலதான் வெங்காயம் நறுக்கும் போது கண்ணுல தண்ணி
வருதாம்..!! :P:P

நகைச்சுவை


பவர் ஸ்டார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை வந்ததால், மழை கேன்சல் செய்யப்பட்டது.

*பரீட்சையில் கொடுக்கப்பட்ட கேள்வித்தாளில் '200 கேள்விகளில் ஏதேனும் 150-க்குப் பதில் அளிக்கவும்’ என்று இருந்தது. அதைப் பார்த்துக் கடுப்பான பவர் ஸ்டார் 200 கேள்விகளுக் கும் பதில் எழுதிவிட்டு கடைசியில் இப்படி எழுதினார், 'இவற்றில் ஏதேனும் 150 பதில்களை மட்டும் திருத்தவும்.’

*பவர் ஸ்டார் மெயில் ஐ.டி. gmail@POWERSTAR. com

*ஒரு நாள் பவர் ஸ்டார் தனது ஒரு சதவிகித அறிவை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள முடிவு செய்தார். Google பிறந்தது.

*2012-ல் உலகம் நிச்சயம் அழியாது. ஏனெனில் பவர் ஸ்டார் 3 வருட வாரன்டியோடு ஒரு லேப்டாப் வாங்கியிருக்கிறார்.

*And, the POWERSTAR award goes to oscar....

*பவர் ஸ்டார், ஒரே நாளில் 200 பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்றார் - ப்ளூடூத் வழியாக.

*பவர் ஸ்டார் ஒரு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினார். அப்போதில் இருந்து அந்த வங்கி பவர் ஸ்டாரிடம் மாதா மாதம் இ.எம்.ஐ. செலுத்தி வருகிறது.

*பவர் ஸ்டார், இந்தியன் கிரிக்கெட் டீமின் கோச்சராக நியமிக்கப்பட்டார். என்ன நடந்தது என்று யூகிக்க முடி கிறதா? அந்த வருடத்தின் ஹாக்கி கோப்பையையும் சேர்த்து இந்திய அணி வென்றது.

*கிரஹாம் பெல் டெலிபோனைக் கண்டுபிடித்தபோது, ஏற்கெனவே 10 மிஸ்டு கால்கள் பவர் ஸ்டாரிடம் இருந்து வந்திருந்தன.

*பவர் ஸ்டார், தனது தோட்டத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கிணறுகள் வெட்டினார். கேரம் விளையாடுவதற்காக!

*நோக்கியா விளம்பரத்தில் கை குலுக்கிக்கொள்ளும் இரண்டு கரங் கள் யாருடையவை என்பது பவர் ஸ்டாருக்கு மட்டுமே தெரியும்.

*ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தபோது, அதை முதன்முதலில் பவர் ஸ்டாரிடம் காட்டி சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவரைத் தேடி வந்தனர். ஆனால் அப்போது எதிர்பாராவிதமாக பவர் ஸ்டார்குடும்பத்துடன் வெளியூருக்கு சுற்றுலா சென்றுவிட்டார் - தன் ஹெலிகாப்டரில்.

*ரொனால்டினோ: என் காலால் ஒரு முறை பந்தை உதைத்தால், 3 நிமிடங்களுக்கு விடாமல் சுற்றும்...

*பவர் ஸ்டார்: தம்பி, இந்த பூமி ஏன் சுத்துதுன்னு உனக்குத் தெரியுமா?

*கடவுள் பவர் ஸ்டார் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு சொன்னார், 'ஓ மை பவர் ஸ்டார்.’

*பவர் ஸ்டார்ஒருமுறை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து 'ஓவர் ஸ்பீடு’ என்று கைது செய்யப்பட்டார். அப்போது அவர் நடந்துசென்று கொண்டிருந்தார்.

*ஒருமுறை பவர் ஸ்டார் விமானத்தில் சுவிட்சர்லாந்து மீது பறந்துகொண்டிருக்கும்போது தவறுதலாக அவரது பர்ஸ் விமானத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டது. சுவிஸ் பேங்க் உருவானது.

*பவர் ஸ்டார் சிறுவனாக இருந்தபோது எழுதிய டைரிக்குப் பிற்காலத்தில் 'கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்’ என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

*சார்லஸ் பாபாஜ் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்ததன் உண்மைக் காரணம்: பவர் ஸ்டார் வால்பேப்பரை டவுண்லோடு செய்ய.

*பவர் ஸ்டார் பள்ளிக்கூடம் படிக்கும்போது ஒருநாள் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டார். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான கதை இதுதான்.

நான்_கொழந்தையா_இருந்தப்ப........

♥நான்_கொழந்தையா_இருந்தப்ப.........
|
>> பஸ்ல போகும்போது மரம் எல்லாம்பின்னாடியே ஓடுதுன்னு நினைச்சேன்.
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> யாரவது வந்தா பயமுறுத்தலாம்னுகதவு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு இருப்பேன்...ரொம்ப நேரமா யாரும் வராததால கடுப்பாயி வெளிய வந்துருவேன்......
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
> >வயித்துக்குள்ளநாம சாப்பிடறதெல்லாம் அரைக்க மெஷின்இருக்குன்னு நம்பினேன்..................
* நான் குழந்தையா இருந்தப்ப.
|
>> திராட்சை விதையை முழிங்கிட்டேன்...வயித்துக்குள்ளஇருந்து மரம் முளைக்க போகுதுன்னு ஒவ்வொரு நாளும் பயந்தேன்.............
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> லீவுநாள்ல ஓனான பிடித்து மூக்குபொடி போட்டு சாமியாட விடுவேன்..
என்னா டான்ஸ்......
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> நிறைய பொண்ணுக முத்தம் குடுத்தாங்களாம்:-)....
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> ’Foreign’ என்பது ஒரு நாட்டின் பெயர் என நினைத்திருந்தேன்..........
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> வளராம குட்டியா குள்ளமா இருந்தேன் ! எல்லாரும் பெரிசு பெருசா இருந்தாங்க.........
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> தப்பு செஞ்சா நெஜமாவே சாமி கண்ணைகுத்திடும்னு, தூங்கும் போதும் கண்ணை மூடிகிட்டே தூங்கினேன்............
* நான் கொழந்தையா இருந்தப்ப.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கொழந்தையாதான் இருந்தேன் ..

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்

சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க டிப்ஸ்


பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.

உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும்.  வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

பாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.

ரெசிபி

குகும்பர் ரய்தா: வெள்ளரி கால் கிலோ துருவிக் கொள்ளவும். புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கப், துருவிய கேரட் அரைக்கப். பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு ஸ்பூன், உப்பு, மிளகுத்தூள் தேவையான அளவு. அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கலக்கி கொத்தமல்லித் தழை தூவி சாப்பிடலாம். உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் வெப்ப அதிகரிப்பைத் தடுக்கும். அடிக்கடி தாகம் ஏற்படுவது தடுக்கப்படும். தோல் எரிச்சல் போன்ற வெயில் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்கலாம்.

சின்ன வெங்காயக் குழம்பு: சின்ன வெங்காயம் கால்கிலோ உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசல் ஒரு கப். வரமிளகாய் இரண்டு, மிளகாய் தூள் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித் தூள் 1 டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை மற்றும் வறமிளகாய் சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிரமாக வதக்கவும். பின்னர் மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் புளிக்கரைசல் சேர்த்து குழம்புபதத்துக்கு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். சின்ன வெங்காயத்தில் ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

சிக்கன் ஆம்லெட்: 50 கிராம் சிக்கனை மூழ்கும் அளவுக்கு தண் ணீர் விட்டு வேக வைத்து கறியை மட்டும் தனியா எடுத்து மசித் துக் கொள்ளவும். இரண்டு முட்டையில் அரை டீஸ்பூன் மிளகுத் தூள், அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை அரை கப், எலுமிச்சை சாறு ஒரு துளி, வெங்காயம் நறுக்கியது அரை கப், பூண்டுத் துருவல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொள் ளவும். முட்டையை நன்றாக அடித்த பின்னர் சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கலக்கி ஆம்லெட் தயாரிக் கலாம். இப்படி செய்வதன் மூலம் சிக்கனில் இருக்கும் சூடு குறைக் கப்படுகிறது. சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.

டயட்
.
“தி னமும் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். பழச்சாறுகள், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி, கொய்யா ஆகியவற்றை சாலடாக உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளலாம். தண்ணீர்க்காய்கள் புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய், கீரை வகைகள், பழ வகைகளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிர், மோர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். கம்பங்கூழ், கரும்புச் சாறு ஆகியவையும் அருந்தலாம்.

ஊற வைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடி இதில் ஏதாவது ஒன்றை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டைக் குறைக்கலாம். எலுமிச்சையை சாலட், ரசம் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். அதிக நார்ச்சத்து மற்றும் கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும். அதிக மசாலா, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெய்ப் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது. கீரை, வெல்லம், பேரிச்சை, பால், முட்டை, கடலைக்கொட்டை ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் வெயிலால் இழந்த சக்தி உடலுக்கு கிடைக்கும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.


பாட்டி வைத்தியம்

*  கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.
*  கானாம் வாழைக் கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
*  ஐந்து கிராம்பு மற்றும் 20  சீரகத்தைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்தால் உஷ்ணத்தால் ஏற்படும் தலைவலி குறையும்.
*  குப்பைக் கீரையை பருப்பில் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
*  கொத்தமல்லியை நன்றாக அரைத்து உருண்டையாக்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.
*  சர்ப்பகந்தா இலையை வதக் கிச் சாறு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் பாலில் கலந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
*  சீரகத்தை தண்ணீரில் கொதி க்க விட்டுக் குடித்தால் ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
*  சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிமுள்ளி  ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி செய்து கலந்து கொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களைத் தடுக்கலாம்

கொலஸ்டரோல் அளவு இரத்தத்தில்குறைவதும் உண்டா?

கொலஸ்டரோல் அளவு இரத்தத்தில்குறைவதும் உண்டா?

 
மருந்தினாலா நோயினாலா?
இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறைவது 


'எனக்கு கொலஸ்டரோல் அதிகம் என மருத்துவர் சொல்கிறார்' என்று சொல்லும்போதே அவர் முகத்தில் பெருமிதம் கண்சிமிட்டி மறைந்தது போல எனக்குப் பட்டது. ஆம் சிலருக்கு அது சமூக அந்தஸ்தின் சின்னம் போலாகிவிட்டது.



மாரடைப்பு பக்கவாதம் போன்றவை பின்னர் அதன் காரணமாக விளையும்போதுதான் அதன் பாதிப்பு அவர்களுக்குப் புரியும்.

ஆனால் இப்பொழுதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கொலஸ்டரோல் பிரச்சனை என்கிறார்கள். கோயில் ஐயர் முதல் கசாப்புக் கடைக்காரன் வரை எல்லோரையும் பீடிக்கவே செய்கிறது. சொகுசு வாழ்க்கையும் தவறான உணவு முறைகளுமே முக்கிய காரணம் என்றபோதும் பரம்பரைக் காரணிகளும் இல்லாமலில்லை.

அது சரி! கொலஸ்டரோல் அதிகரித்தால் நோய், சரியான பிரச்சனையாகும், உணவுகட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் நாளாந்தம் அவசியமாகும்.
அதேபோல கொலஸ்டரோல் குறையும் பிரச்சனையும் இருக்கிறதா? அது நோயா? மருந்துகள் தேவைப்படுமா?

மருந்துகளால் கொலஸ்டரோல் அளவு குறைதல்

 'என்ரை கொலஸ்டரோல் குறைஞ்சு போச்சு மருந்தை நிப்பாட்டிப் போட்டன்' எனக் கையில் ரிப்போட்டும் முகத்தில் ஆனந்த தாண்டவமுமாக பலர் வருவார்கள். கொலஸ்டரோலுக்கு மருந்து எடுக்கும் நோயாளிகள் அவர்கள்.


ஆனால் அவ்வாறு நிறுத்துவது தவறு. கொலஸ்டரோலைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மருந்து தருகிறார்கள். குருதியில் கொலஸ்டரோல் அளவு குறைவதுதான் இருதய மற்றும் குருதிக் குழாய் நோய்களைத் தடுப்பதற்கான வழியாகும்.

மருந்து சாப்பிடுவதால் கொலஸ்டரோல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மருந்தின் அளவைக் குறைப்பதோ கூட்டுவதோ மருத்துவரின் வேலை. எனவே கொலஸ்டரோல் அளவு குருதியில் குறைஞ்சாலும் நீங்களாக நிறுத்த வேண்டாம். மருத்துவரின் எண்ணப்படி நடவுங்கள்.

மருந்து இல்லாமலும் கொலஸ்டரோல் குறைதல்


மருந்து இல்லாமலும் குருதியில் கொலஸ்டரோல் அளவு குறையுமா? 
குறையலாம்!. குருதியில் கொலஸ்டரோல் அளவு மிகவும் குறைவதை 
Hypolipidemia என்பார்கள். சாதாரண பாசையில் லோ கொலஸ்டரோல் 
(Low Cholesterol) என்பார்கள். ஆனால் அடிக்கடி காணப்படும் பிரச்சனை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இரண்டு வகைகள்

மருந்துகள் இல்லாமலே குருதியில் கொலஸ்டரோல் குறைவது இரண்டு விதங்களிலாகும்.

  1. சிலருக்கு இயல்பாகவே குருதியில் கொலஸ்டரோல் குறைவாக இருக்கும். வேறு நோய்களோ அல்லது மருந்துகளோ காரணமாக இருக்காது. அதற்குக் காரணம் அவரது குடும்பத்தினரிடையே அது பொதுவாக இருப்பதாகும். பரம்பரையில் அவ்வாறிருந்தால் சிகிச்சை எதுவும் தேவைப்படாது.
  2. வேறு பல நோய்கள் காரணமாகவும் சிலரது கொலஸ்டரோல் அளவு குறைவதுண்டு.

காரணங்கள் எவை?


தைரொயிட் சுரப்பி அதீதமாக வேலை செய்தால் (hyperthyroidism) தைரொக்சின் அளவு குருதியில் அதிகரித்திருக்கும். இது கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும். இதற்கு மாறாக தைரொக்சின் அளவு குருதியில் குறைந்திருந்தால் (hypothyroidism) கொலஸ்டரோல் அளவு அதிகரிக்கும்.

அதேபோல சில ஈரல் நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும்.

குருதியில் தாதுப்பொருளான மக்னீசியத்தின் அளவு குறைவதாலும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.

பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கும்போது பசி குறைவதுண்டு. அந்நிலையில் அவரால் போதியளவு போசாக்கான உணவுகளை உண்ண முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாகவும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.

உதாரணமாகப் புற்றுநோய்கள் அதிலும் முக்கியமாக உணவுக் கால்வாயோடு தொடர்புடைய புற்றுநோய்கள் பசியைக் கடுமையாகக் குறைக்கும். அதேபோல சுவாசப் பையோடு தொடர்புடைய நோய்களும் ஹெப்பரைரிஸ் போன்ற நோய்களும் பசியைக் குறைக்கும்.

பலவிதமான தொற்று நோய்கள் பசியைக் குறைக்குமானாலும் அவை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்பதால் கொலஸ்டரோலைக் குறைக்கும் என எதிர்பாரக்க முடியாது. T.B எனப்படும் சயரோக நோயும் பசியை அதிகம் குறைக்கின்ற மற்றொரு நோயாகும். 

பசி குறைவு என்றவுடன் 'எனக்கும் பசி குறைவுதான்' என்கிறீர்களா. சாதாரண பசிக் குறைவைச் சொல்லவில்லை. அதீதமான பசிகுறைவு. வழமைபோல உணவு உட்கொள்ள முடியாது எடை குறைந்து உடல் நலியும் நிலையில் அவ்வாறு கொலஸ்டரோல் குறையும். 

இவற்றைத் தவிர மனவிரக்தி, பதகளிப்பு நோய், பக்கவாதம், பிறவி அங்கயீனக் குறைபாடுகள் உள்ளோருக்கும் போசாக்குக் குறைபாட்டால் கொலஸ்டரோல் குறைவதுண்டு.

மது மற்றும் ஏனைய போதைப் பொருட்களும் பொதுவாக உணவில் நாட்டமின்மையைக் கொண்டுவரும். புகைத்தலும் அவ்வாறே செய்கிறது.

அறிகுறிகள்

எந்த அறிகுறிகளையும் வைத்து இவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறதா என ஐயமுற முடியாது. தற்செயலாகவே கண்டறியப்படுகிறது. வழமையான இரத்தப் பரிசோதனைகள் செய்யும்போதே தெரியவரும். அதாவது கொலஸ்டரோல் இருக்கிறதா எனப் பரிசோதனை (Lipid Profile) செய்யும்போது கண்டறியப்படுகிறது. 

சிகிச்சை

குறைந்த கொலஸ்டரோலை அதிகரிப்பதற்கென தனியான மருந்து மாத்திரைகளோ சிகிச்சை முறைகளோ கிடையாது. அது ஏன் ஏற்பட்டது என அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதே சிகிச்சை முறையாகும்.

இருக்க வேண்டிய அளவு


நீங்கள் கொலஸ்டரோலுக்கு மருந்து சாப்பிடுபவராயின் உங்களது கொலஸ்டரோல் அளவுகள் எந்தளவில் இருக்க வேண்டும். கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்


  •  முழுமையான கொலஸ்டரோல்     200 ற்கு குறைவாக   
  •  LDL  கொலஸ்டரோல்    130 ற்கு குறைவாக, நீரிழிவு மற்றும் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கு        100 ற்கு குறைவாக       
  • HDL  கொலஸ்டரோல்  ஆண்களில் 40 பெண்களில் 50 ற்கு மேல்    
  • ரைகிளிசரைட் 150 ற்கு குறைவாக



DR.M.K.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

கர்ப்பிணிகளுக்கான 12 பயனுள்ள தகவல்கள்!!!

ஒரு பெண்ணின் உள்ளே ஒரு குழந்தை வளர்ந்து வந்து, அதை ஈன்றெடுக்கும் நிலை தான் கர்ப்பம் எனப்படும். குழந்தை உருவாகின்ற இந்த நிலை ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும்.

கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில், பெண்கள் தங்களை கவனமாக பார்த்துக் கொள்வது முக்கியம். ஏனெனில் இந்த நேரத்தில் தான் கருச்சிதைவுக்கான‌ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் அதிகபட்ச ஓய்வு எடுக்க வேண்டும். கர்ப்பத்தின் போது பெண்களின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதால், அவை மிக கடினமான மாதங்கள் ஆகின்றன.

இப்போது கர்ப்பம் பற்றிய பயனுள்ள சில முக்கியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று படித்து பார்த்து, அதனை பின்பற்றி, நல்ல படியாக குழந்தையை பெற்றெடுங்கள்.
உணவுப் பழக்கம் 





கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதிலும் உட்கொள்ளும் சரியான ஊட்டச்சத்தும் மிகவும் முக்கியம். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண் என்ன சாப்பிடுகிறாளோ அதுதான் குழந்தைக்கும் செல்லும்.

உடற்பயிற்சி

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உள்ளன. அதுவும் முதல் மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. மேலும் கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் எடை அதிகரிப்பதைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது





ஒரு கர்ப்பிணிப் பெண் புகைப்பதோ அல்லது மது அருந்துவதோ கூடாது. இந்த இர‌ண்டும் குழந்தைக்கு மிகவும் ஆபத்தானவை. ஒரு கர்ப்பிணிப் பெண் உட்கொள்ளும் மது குழந்தைக்கு செல்கிறது. அது குழந்தைக்கு கடுமையான சேதம் விளைவிக்கும். குறிப்பாக இதனால் குழந்தைக்குப் பிறப்பிலேயே குறைபாடுகள் ஏற்படலாம். ஆகவே நன்கு விழிப்புடன் இருக்க வேண்டும்.

அனுபவத்தை கேட்பது

சம வயது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெற்றோர்களாக யாராவது இருந்தால், அவர்களின் அனுபவங்களை பற்றி அவர்களுடன் பேசவும். இதனால் தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும்.

மருந்துகள் எடுத்து கொள்ள கூடாது





பொதுவாக கர்ப்பிணிகளுக்கு குமட்டல், வாந்தி, சோர்வு போன்றவை இருப்பது இயற்கை. இதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ள கூடாது. அதற்கு பதிலாக இயற்கை தீர்வு பெற‌ முயற்சிக்க வேண்டும்.''

நிறைய தண்ணீர் குடிக்கவும்



அதிக நீர் உட்கொள்வது முக்கியம். தினமும் குறைந்தது ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீச்சல் செய்யவும்



கர்ப்பக் காலத்தில் வலிகள் நிறைய இருப்பதால், நீச்சல் உகந்த‌து. ஏனெனில் நீச்சல் செய்வதால் வலியின்றி இருப்பதோடு, உடல் பாரமும் தெரியாமல் இருக்கும்.

காரமான அல்லது வறுத்த உணவு தவிர்க்கவும்



கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல் போன்ற சிக்கல்கள் இருந்தால், வறுத்த மற்றும் காரமான உணவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உயர்த்தப்பட்ட தலையணைகள் வைத்துத் தூங்கவும்

ஒரு கர்ப்பிணிப் பெண் சற்றே உயர்ந்த தலையணைகள் வைத்துத் தூங்க வேண்டும். அதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு எனக் கிடைக்கும் சிறப்பு மெத்தை வாங்க முடியும் என்றால் வாங்கி பயன்படுத்துவது நல்லது. இல்லையெனில், இரண்டு தலையணைகள் வைத்து உயர்வான நிலையில் தூங்குவது மிகவும் வசதியாக இருக்கும்.
போட்டோ

போட்டோக்கள் சிறந்த நினைவுச் சின்னங்கள் ஆகும். ஆகவே கர்ப்ப காலத்தில் பல படங்கள் எடுத்துப் பின்னர் அவற்றை ஆல்பம் போன்று செய்து நினைவாக வைத்து, எதிர்காலத்தில் பார்த்து மகிழலாம்.

நல்ல புத்தகங்கள் படிக்கவும்

ஒரு கர்ப்பிணிப் பெண் நல்ல நேர்மறையான புத்தகங்களைப் படிக்க வேண்டும். அதிலும் புத்தகங்கள் நிறைய படிக்கும் பழக்கம் இருந்தால், கர்ப்ப காலத்தில் சோகமானப் புத்தகங்கள் படிப்பதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, பிரசவம் மற்றும் குழந்தைகள் பற்றிய‌ புத்தகங்களை வாசிக்கவும். இல்லையெனில் கர்ப்பம் பற்றிய பல்வேறு புத்தகங்களை படிக்கலாம். இதனால் தெரியாத பல விஷயங்கள் தெரிய வரும்.
பெற்றோருடன் பேசவும்'
பெற்றோர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும். அவர்கள் உங்களுக்குத் தெரியாத பல‌ விஷயங்களை சொல்வர். அவர்கள் பல கதைகளைப் பற்றிச் சொல்வார்கள். அவர்கள் நீங்கள் குழந்தையாக‌ எப்படி இருந்தீர்கள் என்று சொல்வார்கள். ஆகவே அவர்களிடம் இருந்துக் கேட்டுக் கற்கவும். கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தொற்றுநோய் பெறுவதன் வாய்ப்பு அதிகம். இது இன்னும் பலவீனமாக உணர வைக்கும். அதனால், சுற்று வட்டாரத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்து, கர்ப்ப காலத்தை மகிழ்ச்சியாகக் களிக்கவும்.

வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கான உணவுகள்

 
வேலைக்கு போகும் கர்ப்பிணிகளுக்கான உணவுகள் 

கர்ப்பமாக இருக்கும் போது உடலுக்கு நிறைய சத்துக்கள் தேவைப்படும். அதற்கு சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு அவ்வப்போது சிறு இடைவெளி சாப்பிடுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, கர்ப்பமாக இருக்கும் போது செரிமான மண்டலமானது மெதுவாக இயங்கும்.

மற்றொன்று, கர்ப்பத்தின் போது வயிறு பெரியதாவதால், ஒரே நேரத்தில் முழு உணவையும் சாப்பிட முடியாது. வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் எழக்கூடும்.

குறிப்பாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதால், அவர்கள் போதிய இடைவெளியில் எதையேனும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும். எனவே வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகளின் உடலில் சத்துக்கள் நல்ல நிலையில் இருப்பதற்கு, அவ்வப்போது சிறு சிறு ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்.

• கர்ப்பிணிகள் அலுவலகத்திற்கு செல்லும் போது 2-3 வித்தியாசமான பழங்களை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் பேரிக்காய் மிகவும் சிறந்த பழங்கள்.

எனவே இத்தகைய பழங்களை வெட்டி ஒரு டப்பாவில் கொண்டு செல்லாமல், அதனை அப்படியே கடித்து சாப்பிடுவது தான் சிறந்தது. பொதுவாக பழங்களை எப்போதும் வெளியே செல்லும் போது வெட்டி எடுத்துச் செல்லக் கூடாது.

அதிலும் குறிப்பாக சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்றவற்றை அறவே வெட்டக்கூடாது. இவை அனைத்தையும் நறுக்கிய உடனே சாப்பிட வேண்டும். பழங்களை எடுத்து செல்ல முடியாவிட்டால், ஜூஸாக செய்து சாப்பிடலாம். இதனால் எளிதில் வயிறு நிறைவதோடு, உடல் வறட்சியை தடுக்கலாம்.

• அலுவலகம் அல்லது வெளியே செல்லும் போது எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 1-2 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். இதனால் நீர் வறட்சியை தவிர்க்கலாம்.

• கர்ப்பிணிகளுக்கு உலர் பழங்கள் உடலுக்கு ஆற்றல் தரக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். மேலும் இவை எளிதில் எடுத்துச் செல்ல கூடியதாக இருக்கும். குறிப்பாக வேலை அதிகமாக இருக்கும் போது, இதனை வாயில் போட்டு மெதுவாக மென்று சாப்பிட வசதியாக இருக்கும்.

• கர்ப்பிணிகள் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைய ஆரம்பித்துவிடும். எனவே எப்போதும் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்துக் கொள்வது நல்லது. சாப்பிட எதுவும் இல்லாத போது இந்த பிஸ்கட் அவ்வப்போது ஒவ்வொன்றாக சாப்பிடுவது நல்லது.
 



                                                                     

கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??

 கொழுப்புக்கு குட்பை. உடல் கொழுப்பு அதிகமானால் ??
 http://www.bestsupplements.com/wp-content/uploads/2011/08/cholesterol15.gif
 நாம் உண்ணும் உணவில் தினமும் கிடைக்கக்கூடிய கலோரியில் ஏழு சதவிகிதத்திற்கும் அதிக அளவில் கொழுப்பு இருக்கக்கூடாது.வாய்க்கொழுப்பு அதிகமானால் செல்போனில் நாள் முழுவதும் அரட்டை கச்சேரி செய்யத் தோன்றும். உடல் கொழுப்பு அதிகமானால் யாரையாவது அடிக்கத் தோன்றும்.ஆனால் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாகிவிட்டால் இதயநோய்கள் தாக்க ஆரம்பித்துவிடும். எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு நாளைக்கு நமக்கு 1200 கலோரி உணவு போதும். இந்த அளவுடைய உணவை தினமும் உண்டால் நம இரத்தத்தில் கொழுப்பு சேராது.காலையில் காபியோ அல்லது தேனீரோ அருந்தலாம். ஆனால் அதில் ஆடை நீக்கிய பாலும், சர்க்கரையும் குறைவாக இருக்கவேண்டும்.நினத்தபோதெல்லாம் காபி அல்ல தேநீரை அருந்துவது, நண்பர்களுக்கு கம்பெனி தருவதாக நொண்டிச்சாக்குச் சொல்லிச் சொல்லி அடிக்கடி தேநீர் குடிப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.‘வேறு வழியில்லாமல் குடித்து விட்டேன் இப்போ நெஞ்செரிச்சல் ஆரம்பித்து விட்டது’ என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம். கொழுப்பக் குறைப்பது என்பது மற்றவர்களின் ஆரோக்கியத்திற்காக அல்ல என்பதை மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் குடும்ப நன்மைக்காகவும்தான்.சாப்பிடத்தெரிந்து கொள்ளுங்கள்என்னங்க இது கூடவா தெரியாது? ரொம்பத்தான் ... என்று சிலர் முணுமுணுப்பது காதில் கேட்கிறது. காலை டிபனுக்கு எல்லாவற்றயும் வளைத்துக்கட்ட வேண்டாம். மூன்று இட்லி அல்லது இரண்டு தோசை போதும். போதுமா என்கிறீர்களா? போதும்தான். உழைப்புக்கு ஏற்ற ஊதியம்தான் கிடக்கும் என்பதைப்போல உழைப்பிற்கு ஏற்ற உணவுதான் உண்ணவேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.தோசைக்கு எண்ணெய் விடாமல் இருப்பது நல்லது. சட்னிக்கு தேங்காய் வேண்டாம். காரம், புளி, உப்பு இவை குறைவாக வைத்துச் செய்த ஏதாவது ஒரு சட்னியைத் தொட்டுக் கொள்ளுங்கள். தோசைக்கு சொத சொதவென்று எண்ணெய் விட்டுக் கொண்டும் மிளகாய்ப்பொடியை ஏராளமாக எண்ணெய் விட்டு குழைத்துக் கொண்டும் இதுவரையில் சாப்பிட்டவர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டபடி சாப்பிடப் பிடிக்காது.உண்மைதான் ஆனாலும் என்ன செய்வது? நீங்கள் இதுவரையில் உங்கள் விருப்பப்படி சாப்பிட்டுவிட்டீர்கள். அது போதும். இனிமேல் உங்கள் ஆரோக்கியத்திற்காக நாக்கை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். காலை டிபனோடு ஒரு டம்பளர் தண்ணீரில் பாதி மூடி எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, சிறிது உப்பு சேர்த்து ஜூஸாக குடியுங்கள்.எனக்கு டிபன் சாப்பிட்டால் சூடாக ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் திருப்தி என்ற கதையெல்லாம் வேண்டாம். காலை ஒன்பது மணிக்குள் டிபனை முடித்துக் கொண்டு சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபடுங்கள்.பகல் உணவை வெந்த காய்கறிகள், கீரை, ஒரு சப்பாத்தி, இவற்றோடு குறைவான அளவு சாதத்துடன் முடித்துக் கொள்ளுங்கள். ஒரு கப் சாம்பார், ஒரு கப் ரசம், இரண்டு கப் காய்கறிகள், ஒரு கப் மோர் இவற்றோடு ஒரு கப் சாதம் என்று சாப்பிடுவ மிகவும் நல்லது.இவ்வாறு சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகும். மூன்று மணிநேரத்திற்கு பசி இல்லாமலும் இருக்கும். நன்றாகக் கடைந்த மோர் ஒரு தம்ளர் குடியுங்கள். இதற்குப் பிறகு எதுவும் வேண்டாம். மாலை டிபன் வேண்டும் என்றால் காய்கறிகள பச்சையாக நறுக்கி அவற்றுடன் ஒன்று அல்லது இரண்டு பிரட் துண்டுகளச் சாப்பிடுங்கள். அவசியமானால் பால் குறைவான தேநீர் அல்ல காபி அருந்தலாம். சர்க்கரையை குறைவாக உபயோகிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் அல்ல எல்லோருக்குமே அவசியம்தான்.இரவு நேரத்தில் நெய் விடாத சப்பாத்தி, முளைகட்டிய கடலையில் மிளகும் உப்பும் தூவி செய்த டிஷ் செய் சாப்பிடுங்கள். இது வேண்டாம் என்றால் கோதுமை ரவையுடன் பாசிப்பயறு கலந்து மிளகுத்தூள் சேர்த்து பொங்கலாக்கிச் சாப்பிடுங்கள். இது என்ன ஏக கெடுபிடியாக இருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இவ்வாறு திட்டமிட்டுச் சாப்பிட்டால் உடம்பில் அதிக எடை சேராது. கொழுப்பும் ஏறாது. இதயநோய்களுக்கு டாடா சொல்லிவிட்டு ஆனந்தமாக வாழலாம்.கொழுப்பு என்ன செய்யும்?இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டால் இரத்தக்குழாய்களின் உட்புறச் சுவர்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கிறது. எனவே இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத்தசைகள் ஓவர்டைம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் இதயம் பலம் குறைந்து நோய்களுக்கு ஆளாகிறது.இரத்தத்தில் கலந்த கொழுப்பு இரத்தக்குழாய்களில் அங்கங்கே சிறுசிறு கட்டிகளாகத் தேங்கிவிடும். இதனால் இதயம் மற்றும் மூளக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைந்து விடும் அல்லது முழுவமாக தடைபட்டுவிடும். அதுபோன்ற நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த அடைப்புகள் பெரிய அளவில் இருக்கும்போது திடீர் இறப்பும் நேரிடுவதுண்டு.கொலஸ்டிரால் மற்றும் உடல் எடையக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலமாக இதன் நோய்த் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். புகை பிடிப்பவராக இருந்தால் அந்தப் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுங்கள். இப்போது எல்லாவற்றையும் ஒருகை பார்ப்பது என்று இறங்கி கண்டபடி சாப்பிட்டு விட்டால் இதய நோய்களுக்கு ஆளாகிவிடுவது உறுதி.

இதய அறுவ சிகிச்சை என்று போய்விட்டால் வலியும், வேதனையும், பணச்செலவும், உயிர்ப்பயமும் ஒருபக்கம் இருக்க, உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் வேளைக்கு வேளை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படும். வாழ்க்கையே வெறுதுத்ப்போய்விடும். இவைகளை மனதில் கொண்டு ருசிக்கு மட்டுமே சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்.

இளசுகளுக்கான எச்சரிக்கை

நம நாட்டில் நாகரிக மோகத்தின் தாக்கத்தினால் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது இளம் வயதினரிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அதிக எடை கூடுவதோடு, இரத்தத்தில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. மேலும் தற்போது கணிப்பொறியின் சந்நிதியிலேயே காலத்தக் கழிப்பதை ஆண்களும் பெண்களும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

உடல் உழைப்பே இல்லாத நிலையில் இந்த உணவு வகைகள் உடல் எடையக் கூட்டுவதற்கும், ஊளைச்சதை போடுவதற்கும் அடிப்படையாக அமைகின்றன. இது மட்டும் அல்லாமல் இந்த உணவு வகைகள் இவர்கள கொலஸ்டிராலின் அளவை கணிசமான அளவிற்கு உயர்த்தி இதயநோய் தாக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவை இன்றைய இளசுகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். கணிப்பொறி வேலையப் பற்றியும், கைநிறையப் பெறும் வருமானத்தைப் பற்றியுமே கவலைப்படும் இவர்கள், தங்கள் ஆரோக்கியத்தை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். மிதமிஞ்சிய இத்தனை உணவினால் எதிர்காலம் இவர்களுக்கு இருண்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே ஃபேஷனுக்கு அடிமையாகி மோசம் போகாமல் இளைய தலைமுறயினர் தவறான உணவு முறையைத் தவிர்ப்பது நல்லது.

ஃபாஸ்ட் ஃபுட்டுக்குப் பதிலாக இவர்கள் பழங்களைச் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தினமும் திராட்சைச் சாறு குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது பல் சொத்தயைத் தடுக்கிறது. மேலும் இது நன்மை செய்யும் கொழுப்பான எச்.டி. எல்லின் அளவை ஏழு சதவீதம் வரையில் உயர்த்துகிறது. ஆகவே தினமும் திராட்சையை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

மேலும் இரத்த சோகைஉள்ள பெண்கள் தினமும் 500 கிராம் அளவிற்கு திராட்சப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் இரண்டு வாரங்களில் அவர்களின் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். எனவே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு விடைகொடுத்து பழங்களை உண்ணும் பழைய வழக்கத்திற்குத் திரும்புவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

அப்புறமென்ன கொழுப்புக்கு குட்பைதானே!
NANDRI TO: KUMUDAM HEALTH