Saturday, May 31, 2014

தமிழ் எங்கள் உயிர் - தமிழின் சிறப்புகள்:-

தமிழ் எங்கள் உயிர் - தமிழின் சிறப்புகள்:-


மொழியை உயிராய் மதிப்பவர்கள் தமிழர்கள். வேறு மொழிகளில் இல்லாத பெருமை தமிழுக்கு உண்டு. வேறு எந்த மொழிகளிலும் மொழியைத் தன் பெயராய் வைத்துக்கொள்வதில்லை. ஆனால் தமிழர்கள் – தமிழ்ச்செல்வன், தமிழரசி, தமிழ்ச்செல்வி, தமிழாயினி, தமிழன்பன், தமிழரசன், தமிழ், தமிழ் நிலா, தமிழச்சி...

தமிழின் நேர் வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அதன் அர்த்தம் மாறாது. இது தமிழுக்கே உண்டான சிறப்பு. உதாரணம் (ராமன் ராவணனைக் கொன்றான்) இந்த வாக்கியத்தில் எந்தச் சொல்லை எங்கு மாற்றினாலும் அர்த்தம் மாறுவதில்லை. RAMA KILLS RAVANA இதில் சொல்லை மாற்றினால் அர்த்தமே மாறிவிடும். இந்த சிறப்பு வேறு மொழிகளில் கிடையாது.

தமிழ் சொற்கள் அனைத்தும் தொண்டை மற்றும் நாவினால் பேசப்படுபவை. வயிற்றிலிருந்து கத்தும் சொற்கள் இல்லை – உதாரணம் : வயிற்றிலிருந்து கத்தும் ஹிந்தி எழுத்துக்கள் (ஜ், ஹா, gha, kha) போன்றவை கிடையாது. இங்குதான் மொழியின் இனிமை அடங்கி இருக்கிறது. பேசும்போதே கத்துவதெல்லாம் இல்லாமல் மென்மையாக பேசி இனித்தால்தான் அது இனிய மொழியாகும். (ஆனால் இந்த வயிற்றிலிருந்து கத்தும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என குறைகூறும் மூடர்களும் இங்குதான் இருக்கிறார்கள்.)

பேசுவதும், எழுதுவதும், வாக்கியங்களும், வார்த்தைகளும், சொற்களும் ஒன்றேதான். ஒவ்வொரு சொல்லாய்ச் சொன்னாலும் அர்த்தம் மாறுவதில்லை. அம்மா – ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் அ-ம்-மா மாற்றமில்லை. MOTHER ஒவ்வொரு சொல்லாய் சொல்லுங்கள் எம் – ஓ – டி - ஹச் - ஈ - ஆர். இப்படி பேசினால் புரியுமா?

பழங்கால மொழிகளான சீனம், எகிப்து, லத்தீன், பாலி (புத்தரின் போதனைகள் பாலியில்தான் உள்ளது), சமஸ்கிருதம் ஆகியவை இப்போது உலகில் வழக்குமுறை/பேச்சுமுறையில் இல்லை. 19ம் நூற்றாண்டுடன் பழைய சீன மொழி அழிந்துவிட்டது. இப்போது சீனா முழுவதும் பேசப்படும் மொழியாக மாண்டரின் உள்ளது. பழங்கால மொழிகளில் இன்னும் மாறாமல் (இலக்கண இலக்கியங்களில்) அப்படியே இருக்கும் ஒரே ஒரு மொழி தமிழ் மட்டுமே.....

தெரிஞ்சுக்கலாமா?........

தெரிஞ்சுக்கலாமா?...........

நீங்கள் ஒருத்தரை ஒரு நிமிடம்
முத்தமிட்டால் அதனால் நீங்கள்
இருவரும் 2.6
கலோரியை எரிக்கிறீர்கள்.

மும்பையில் நீங்கள் ஒரு நாள்
சுவாசிக்க கூடிய காற்று, 2
1/2பாக்கெட் சிகரெட்
உபயோகிப்பதற்கு சமமானது.
இந்தியாவில்
மனிதனுக்கு வேண்டிய
டாய்லெட்டை விட செல்போன்கள்
அதிகம்.

உங்களால்
முக்கை மூடிக்கொண்டு 'ஹம்" செய்ய
முடியாது.

நீங்கள்
கொட்டாவி விடும்போது நாக்கை தொட்டால்
அது கொட்டாவியை உடனே நிறுத்திவிடும்.

பெண்கள் ஒரு நாளைக்கு 7000
வார்த்தைகள் பேசுகின்றனர் ஆண்கள்
2000 வார்த்தைகள் தான்
பேசுகின்றனர்.

இந்தியாவில் மில்லியன்
மக்களுக்கு 11
ஜட்ஜ் மட்டுமே உள்ளனர்.
இப்போது வழக்கில் உள்ள
எல்லா கேஸுக்களை முடிக்க 466
ஆண்டுகள் பிடிக்கும்.

நீல நிற
கண்களை உடையோற்கு மற்றவர்களை விட
இரவில் பார்வை திறன் துல்லியமாக
இருக்கும்
காகிதப் பணம் தயாரிக்கப்படுவத
ு காகிதம்,பருத்தி ஆகியவற்றின்
சிறப்பான கலவைகளால்தான்.

உலகில் பயன்படுத்தப்படும்
பெட்ரோலில் 29 சதவீதம்
அமெரிக்காவில் பயன்படுத்தப்படு
கிறது.அது போல் உலகின்
பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33
சதவீதம் பயன்படுத்தப்படுவதும்
அமெரிக்காவில்தான்.

ஒரு முறை புன்னகை புரிவதன்
மூலம்
குறைந்தப் பட்சம் 30
தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத
பகுதி எது தெரியுமா? கண்ணின்
கருவிழி.ஏனென்றால்
கருவிழி அதற்கு தேவையான
ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப்
பெற்றுக்கொள்கிறது..

இன்று - மே 31 : உலக புகையிலை எதிர்ப்பு நாள். .

இன்று - மே 31 : உலக புகையிலை எதிர்ப்பு நாள். .


உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

புகை பிடிப்பதை நிறுத்தினால்..!

புகைப் பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் 55 லட்சமாக இருக்கிறது. இதில், 5 லட்சம்பேர் இந்தியர்கள் என்கிறது புள்ளி விவரம். எய்ட்ஸ் நோய், காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படும் சைலென்ட் மரணம் அதிகமாக இருக்கிறது.

புகையிலையில் சுமார் 4,000 ரசாயனப் பொருட்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 30-க்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஹைட்ரஜன் சயனைட், அமோனியம், ஆர்சனிக், மெத்தனால், கார்பன் மோனாக்ஸைட், தார், நிக்கோடின், நைட்ரிக் ஆக்ஸைட், பாதரசம் போன்றவையாகும்.

சிகரெட், பீடி பழக்கத்தை கைவிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் இருதய மருத்துவர் ஆர்.ரவிக்குமாரிடம் கேட்டோம்.

''சிகரெட் பழக்கத்தை விட்ட, உடனே ரத்த அழுத்தம் மற்றும் இருதய துடிப்பு மேம்பட ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, புகைப்பதை விட்ட இருபதாவது நிமிடத்தில் ரத்த அழுத்தமும் நாடி துடிப்பும் நார்மல் நிலைக்கு வந்துவிடுகிறது. ஆறுமாத காலத்துக்குள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. மேலும், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று பாதிப்பு போன்றவை குறைகிறது. நீண்ட காலத்தில் ஆண் மற்றும் பெண் களின் குழந்தை பிறப்புக்கான ஆற்றல் அதிகரிக்க தொடங்கும். இப்படி ஏராளமான நன்மைகள் புகைப் பழக்கத்தை விட்ட நேரத்திலிருந்து தொடங்கி விடுகிறது.'' என்றார்.

பலர் புகைப் பழக்கத்தால் தங்கள் உடம்பை கெடுத்துக் கொள்வதோடு, தங்களின் பர்ஸையும் இளைக்க வைக்கிறார்கள். சிகரெட் ஒரு மனிதனின் பொருளாதாரத்தை எப்படி பாதிக்கிறது என்கிற விவரத்தை பார்ப்போம்.

ஒரு சின்ன கணக்கீடு உங்களுக்காக...!

பொதுவாக சிகரெட்டுக்காக சாதாரணமாக மாதத்துக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை செலவிடுகிறார்கள். இந்த தொகையை சேர்த்து வைத்தால் வாழ்க்கையின் பல விஷயங்களை, இதைக் கொண்டே சமாளிக்க முடியும். உதாரணத்துக்கு ஒருவர் தன் 20-வது வயதில் சிகரெட்டுக்காக மாதம் 500 ரூபாய் செலவிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். தன் 50-வது வயது வரையில் சிகரெட்டுக்காக மட்டும் 1.8 லட்ச ரூபாய் செலவழித்திருப்பார். இதை 8% வருமானம் தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டிருந்தால் அது 7.09 லட்ச ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே வயதுள்ள ஒருவர் மாதம் 1,000 ரூபாய் சிகரெட்டுக்காக செலவிட்டு இருந்தால் அவர் 50-வது வயது வரையில் 3.6 லட்ச ரூபாய் செலவிட்டிருப்பார். இதை அவர் முன் குறிப்பிட்ட 8% வருமான திட்டம் ஏதாவது ஒன்றில் போட்டிருந்தால் அது 10.58 லட்ச ரூபாயாக பெருகி இருக்கும். இந்தத் தொகையை கொண்டு சிறு நகரமாக இருந்தால் மனையோ, வீடோ கூட வாங்கி இருக்கலாம். பெருநகரங்களில் கூடுதலாக சில லட்சங்களைப் போட்டால் மனை வாங்க முடியும்.'' என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

என்ன யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? விரல்களில் சிகரெட் இல்லாமல்தானே?