Tuesday, October 28, 2014

கருப்புப் பணம் என்றால் என்ன? வெளிநாட்டு வங்கிகளில் ஏன் போடுகிறார்கள்?

கருப்புப் பணம் என்றால் என்ன? வெளிநாட்டு வங்கிகளில் ஏன் போடுகிறார்கள்?


மக்களிடம் இருந்து வரிப்பணம் வாங்கி, அந்த வரிப்பணத்தில் இயங்குகிறது அரசு. வெற்றிகரமாக அரசு இயக்க வரிப்பணம் அவசியம். ஆனால் வரியே கட்டாத பணத்தை, கருப்பு பணம் என்று சொல்கிறோம். எந்தெந்த தொழில் செய்ய அனுமதி இல்லையோ, அதாவது தடை செய்யப்பட்ட தொழில் செய்து சம்பாதித்த பணமும் கருப்பு பணமாகிறது.

வரி கட்டாமலும், முறைகேடாகவும் வருவதுதான் கருப்பு பணம். அந்தப் பணத்தை இந்தியாவில் வைத்திருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால், நிறைய பணம் வைத்துள்ளவர்கள், வரி கட்ட விருப்பம் இல்லாதவர்கள் இந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் வைக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ஏன் வைக்கிறார்கள் என்றால், அந்நாட்டுக்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அங்கு யார் எல்லாம் பணம் போடுகிறார்களோ, அவர்களின் பெயர்களை வெளியிடமாட்டார்கள். பணம் போட்டவர்களின் பெயர்களை ரகசியமாகவே வைத்திருப்பார்கள். எந்தவித பிரச்சனையும் இல்லாத நாடு சுவிட்சர்லாந்து என்ற நம்பிக்கையும் உள்ளது.

சுவிட்சர்லாந்து ஒரு கட்டத்தில் யாரெல்லாம் எங்களிடம் பணம் போட்டார்கள் என்ற ரகசியத்தை சொல்ல தயார் என்று தெரிவித்தது. உடனே, சுவிட்சர்லாந்தில் பணம் போடாதீர்கள், அவர்கள் உங்கள் பெயர்களை வெளியிட்டு விடுவார்கள்.

எங்களது நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தை போடுஙகள். நாங்கள் பணம் போட்டவர்களின் பெயர்களை வெளியிட மாட்டோம் என்று 100 சதவிகித உத்தரவாதம் தருகிறோம் என்று சிங்கப்பூர் தெரிவித்தது.

இதனால் பயந்த சுவிட்சர்லாந்து, தங்கள் வங்கியில் பணம் போட்டவர்களின் பெயரை வெளியிட மறுத்தது. தங்களிடம் வரும் வருமானம் சிங்கப்பூருக்கு போய்விடும், தங்களது பொருளாதாரமே வங்கியைத்தான் நம்பியிருக்கிறது. அதனால் எப்படி பெயரை வெளியிடுவது என்று சந்தேகம் எழுந்து பெயரை வெளியிட மறுத்தது. இதனால் தான் காங்கிரஸ் அரசு அமைந்தாலும், பாஜக அரசு அமைந்தாலும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்களின் பட்டியலை வாங்குவதற்கு சிரதமாக இருக்கிறது.

Monday, October 27, 2014

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்

இன்றைய திருக்கோயில் பதிவில் நாம் தரிசிக்க இருக்கும் திருக்கோயில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி.


தமிழகத்தில் முருகப்பெருமான் ஸ்தலங்கள் பல இருந்தாலும், முக்கியமான ஆறு திருத்தலங்களை முருகனின் அறுபடை வீடுகளாக எண்ணி நாம் வழிபட்டு வருகிறோம்.

*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம், மதுரை
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், தூத்துக்குடி
*அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் (குழந்தை வேலாயுதர்)
*அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, தஞ்சாவூர்
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழமுதிர்சோலை, மதுரை
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி, திருவள்ளூர்



திருத்தலம் அமைவிடம்:
அறுபடை வீடுகளில், ''குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்'' என்ற சொல் வழக்கிற்கு ஏற்ப திருசெந்தூரைத் தவிர, ஏனைய அனைத்துப் படைவீடுகளும் குன்றுகளின் மீதும், திருச்செந்தூர் மட்டும் அழகிய கடலோரத்திலும் அமைந்திருக்கின்றன. கடற்கரையில் இருந்து இத்திருக்கோயிலைக் காணும்போது இக்கோயிலின் தோற்றம் பேரழகு. அங்கே ஆர்ப்பரிக்குக்கும் அலைகள் ஓம் ஓம் ஓம் என முருகனை நினைத்து அவன் பாதம் தேடிவருவதாகவே தோன்றுகிறது. அந்த வெள்ளை நுரை அலைகள் செய்த பாக்கியம் தான் என்ன?! நாள்தொறும் தமிழ்கடவுளாம் முருகனை தரிசிக்கும் பேரு பெற்றுள்ளனவே!!

அழகன் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்திருத்தலம், திருநெல்வேலியில் இருந்து 64 km தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 45 km தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரையில் இருந்து 186 km தொலைவிலும் அமைந்துள்ளது.


திருத்தலக் குறிப்பு:
தல மூர்த்தி : சுப்பிரமணிய சுவாமி
உற்சவ மூர்த்தி : அலைவாய் பெருமாள், சண்முகர், ஜெயந்தி நாதர், குமர விடங்கர்
தல இறைவி : வள்ளி, தெய்வானை
தல தீர்த்தம் : சரவண பொய்கை

திருத்தல வரலாறு:
புராணங்களில் திருச்சீர் அலைவாய் என்று போற்றி புகழப்பட்டுள்ளது இத்திருத்தலம். முன்னொரு காலத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் காணச் சென்றனர் கைலாயத்திற்கு. தங்களை அசுரர்களிடம் இருந்து காக்கவேண்டும் என மன்றாடினர். அச்செயலைப் புரிவதற்கு ஒரு சிறந்த வீரனைத் தந்தருளும்படி கேட்டனர். அவர்களது வேண்டுகோளை ஏற்ற சிவபிரான், சத்யோஜாதம், வாமதேவம், சத்புருஷம், ஈசானம், அகோரம், ஆகிய ஐந்துமுகங்கள் மட்டுமல்லாது, ஞானிகளுக்கு மட்டுமே புலப்படும் அதோமுகத்தினையும் சேர்த்து ஆறுமுகங்களோடு காட்சி அளித்தார். அத்தருணத்தில் அவரது ஒவ்வொரு திருமுகத்திலும் இருந்த ஒவ்வொரு நெற்றிக் கண்ணிலிருந்தும் ஒரு ஜோதி உருவானது. இவ்வண்ணம் தோன்றிய ஜோதிப் பொறிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அக்னிப் பிழம்பாக ஆக்கி வாயு தேவனிடமும், அக்னி பகவானிடமும் தந்து கங்கா தேவியிடம் சேர்த்துவிடும்படி பணித்தார்.

எல்லையற்ற ஆனந்தத்துடன் அதனை ஏற்ற கங்காதேவி, இமயமலையில் உள்ள சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தார். கற்பனைகளை மீறிய அழகுடன் திகழ்ந்த குழந்தைகளாகத் தெரிந்தன, அந்த அக்னிக் குஞ்சுகள் விஷ்ணு பகவானுக்கு. கார்த்திகை நட்சத்திரங்களாக விளங்கும் கார்த்திகைப் பெண்களை அழைத்து அந்த தெய்வீகக் குழந்தைகளுக்குப் பாலூட்டுமாறு கூறினார். இவ்வாறு கார்த்திகைப் பெண்களின் அன்பில் வளர்ந்து வந்த இக்குழந்தைகளை சிவனும், பார்வதியும் வந்து பார்த்தனர். அன்பின் மிகுதியால் பார்வதி அக்குழந்தைகளை எடுத்து அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து, ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும், ஓர் உருவத்தில் காட்சி தந்து கந்தன் என்ற பெயருடன் விளங்கினார். முருகனது அருமை, பெருமைகளை கந்தபுராணம் என்ற நூல் அழகாக விளக்குகிறது. கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததினால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றார்.


காசியப முனிவருக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். அசுர குணத்துடனேயே பிறந்த இவர்கள் தங்களது குருவின் சொல்படி கடும் தவங்கள் புரிந்து பல்வேறு சக்திகளைப் பெற்றனர். இத்தகைய பொல்லாத சக்திகளைக் கொண்டு மூவுலகிலும் எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்தனர். சூரியன், சந்திரன், எமன், குபேரன், இந்திரன், அக்னிதேவன், தேவர்கள் போன்றோர் சூரபத்மனுக்கு அடிமைகள் போல செயல்பட வேண்டியிருந்தது. இதனைக் கண்டு பொறுக்காமல், சிவன், முருகனை அழைத்து இவ்வுலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காக்கும்படி ஆணையிட்டார். தனது தந்தையின் ஆணைப்படி தனது படைகளுடன், மாயபுரிக்குச் சென்ற கந்த பிரான் தன் படைத் தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். தூதுவனையும் தூற்றி அனுப்பினான் அந்த அசுரன்.

கார்த்திகேயன் படைப் பரிவாரங்களுன் தங்கி இருந்த இடமே திருச்செந்தூர். தேவர்களை சிறைபிடித்த சூரபத்மன், அவர்களை விடுவிக்குமாறு முருகன் எத்தனை கேட்டும் செய்யவில்லை. அவர்களைக் காக்க இறைவன் அசுரர்கள் மீது படையெடுத்து போர்புரிந்த இடமும் இந்த திருசெந்தூர்தான். நீண்ட போருக்குப் பின் தர்மத்தை வென்றார் முருகன். கடம்பன், கதிர்வேலன் வீசிய வேல் சூரபத்மனின் தேகத்தை இரு கூருகளாக்கியது. இவ்வாறு பிளவுபட்ட சூரனது உடலின் ஒரு பகுதி சேவலாகவும், மறுபகுதி மயிலாகவும் உருமாறியது. கருணைக் கடலான கந்தன் சேவலை தனது கொடியிலும், மயிலைத் தனது வாகனமாகவும் கொண்டு சூரனை ஆட்கொண்டார்.

திருக்கோயில் சிறப்பு:
முத்துக்குமரனின் திருப்பாதங்கள் பட்ட இடம் தான் இந்த திருச்செந்தூர். பல அரிய நம்மால் காணமுடியாத சூட்சுமங்களைக் கொண்ட பகுதி இந்த திருச்செந்தூர் கடற்பகுதி. இந்த கடல் பகுதிக்கு சண்முக விலாசம் என்ற பெயருண்டு. இங்கே 24 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவை காயதிரி மந்திரத்தின் 24 எழுத்துக்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

ஐப்பசி மாத வளர்பிறை அன்று சூரனை வதம் செய்து வெற்றி கொண்ட தினம் என்பதால், இங்கே நடைபெறும்சூரசம்ஹார விழா மற்றும், கந்த சஷ்டி விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கடல் போல வந்து சேருகின்றனர். சூரசம்ஹாரம் நடக்கும் நேரத்தில் கூடும் கூட்டத்தைப் பார்க்கும் போது கடல் நிலத்தில் உள்ளதோ என்று நினைக்கும் அளவிற்கு அத்தனைக் கூட்டம் கந்தனைக் காண. இத்திருத்தலத்தில் முருகன் மும்மூர்த்திகளுடன் தொடர்புடையவர் என்று விளக்கும் விதத்தில் காட்சி அளிக்கிறார். ஆவணி மற்றும் மாசி மாதங்களில் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாவின்போது 7-ம் நாள் மாலை வேளையில் சிவப்பு நிற ஆடை உடுத்தி சிவபிரானின் அம்சமாகவும், அடுத்தநாள் 8-ம் நாள் அதிகாலை வேளையில் வெள்ளை நிற ஆடை உடுத்தி பிரம்மாவின் வடிவமாகவும், அன்றே மதிய வேளையில் பச்சை நிற ஆடை உடுத்தி விஷ்ணுவின் அம்சமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.


நாங்கள் திருச்செந்தூர் சென்றிருந்த அன்று மதிய வேளையில் பச்சை உடை உடுத்தி எங்களுக்கு காட்சி தந்தார் முருக பெருமான். அன்று ஊரே பச்சை வண்ணமாக காட்சி தந்தது. அங்கு கந்தனைக் காண வந்த அவ்வூர் பெண்கள் முருகன் உடுத்திய பச்சை வண்ணத்திலேயே ஆடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் விசாரித்த போது திருவிழாவின்போது முருகன் அணியும் ஆடை வண்ணத்திலேயே ஒவ்வொரு நாளும் தாங்களும் அதே வண்ணத்திலேயே உடை அணிவது வழக்கம் என்று சொன்னார்கள். இத்தலத்தில் கொடுக்கப்படும் மூலிகை சக்தி நிறைந்த இலை விபூதி அனேக நோய்களை தீர்க்கும் சக்தி உடையது.

முருகன் ஸ்ரீ வள்ளியை மணந்த இடமும் இதுதான். சூரனை போரில் வென்ற பின்பு தெய்வானையை திருக்கல்யாணம் புரிந்த இடமும் இதுதான். இந்த திருக்கோயிலில் முருகனுக்கு நான்கு உற்சவ தோற்றங்கள் உண்டு. இவர்களுக்கு தனித்தனியே சன்னதிகள் உண்டு. சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் போன்றோர் உற்சவர்கள். குமர விடங்கருக்கு மாப்பிள்ளை சுவாமி என்ற பெயரும் உண்டு. இத்திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ''சந்தன மலை''யின் மேல் அமைந்துள்ளது. நாளடைவில், காலப் போக்கில் அது மறைந்து விட்டது. இவ்விடத்தை கந்த மாதன பர்வதம் என்றும் அழைக்கிறார்கள்.

இத்திருத்தலம் ''குரு பரிகார'' தலமாகவும் விளங்குகிறது. சூரனை அழிக்க கந்தன் இங்கு வந்த போது முருகனுக்கு அசுரர்களின் வரலாற்றை குருபகவான் அருளியுள்ளார். திருசெந்தூரிலேயே கோயில் கட்டி இங்கேயே முருகனை இருக்கச் சொல்லியுள்ளார். இத்தலத்தில் கார்த்திகேயன் ''ஞானகுரு''வாக விளங்குவதால், குருபெயர்ச்சி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது.


கடலைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கும் அழகன் முருகன், சூரனை அழித்தது போல இன்று உலகில் நிலவும் அத்தனை கொடியவைகளையும் அழிக்க, வேண்டுவோம் முருகனை, கடம்பனை, கதிர்வேலனை!!!!

****************

Sunday, October 26, 2014

3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம் – க்ரஞ்சஸ் பயிற்சி!

3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம் – க்ரஞ்சஸ் பயிற்சி!



இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.

பல நாட்டு பழ மொழிகள் படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும்!.

பல நாட்டு பழ மொழிகள் படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும்!..




1. கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல. அதிகம் ஆசை படுபவன் தான் ஏழை – ஸ்பெயின்

2. எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம், விரைவில் அதையே தேடி அலைய வைக்கும் – ஸ்காட்லாந்து

3. பயந்தகோலி பத்து தைரியசாலிகளையும் கோழையாக்கி விடுவான் – ஜெர்மன்

4. தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதையே மேல் – ருமேனியா

5. பேசுகிறவனை விட கேட்பவனுக்கே அதிக புத்தி வேண்டும் – துருக்கி

ஜாலியா படித்து பார்த்து சிரியுங்கள் !!

ஜாலியா படித்து பார்த்து சிரியுங்கள் !!




நீங்க வாங்கின புது கடிகாரம் தண்டம்! ஏன்.. என்ன ஆச்சு?

பகல் பத்து மணிக்கு கொஞ்சம் கண் அசந்து விழித்து பார்த்தால் மாலை மூன்று மணியை காட்டுகிறது.

அந்த வீட்டிலிருந்த பூட்டை ஏன் உடைத்தாய்?
வேறு வழியில்லீங்க! நான் கொண்டு போன சாவி எதுவுமே அதுக்கு சரியா இல்லீங்களே!

உனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா?
இருக்கே! இதுவரை 27 இண்டர்வியுவிலே 346 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்!

எங்க வீட்டுக்காரர் ஒருநாள் பீச்சுல காத்து வாங்க வந்தார். அங்கே என்னை பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார்!
கவனிச்சேன்! அடிக்கடி “காத்து வாங்கப்போனேன்! ஒரு கழுதை வாங்கி வந்தேன்”ன்னு பாடறாரே!
.

அப்பா, எனக்கு கப் ஐஸ் வாங்கி தாப்பா!
அதெல்லாம் விலை அதிகம்! சம்பளம் வரட்டும் வாங்கித்தரேன்
அப்ப இடைக்கால நிவாரணமா ஒரு குச்சி ஐஸாவது வாங்கித்தாப்பா!

நடுக்கடல்ல ஒரு சின்ன தீவு.. அங்கே ஒரு ஆம்பளை, ரெண்டு லேடீஸ் மட்டும் இருக்காங்க.. இருந்தாலும் அவன் மனசுல ஒரு மகிழ்ச்சியே இல்லே! ஏன்?
அந்த ரெண்டு லேடீஸ்ல ஒருத்தி மனைவி, இன்னொருத்தி அம்மாவாயிருக்கும்!

வீட்டுக்கு இவ்வளவு லேட்டா போறியே.. மனைவி ஒண்ணும் சொல்ல மாட்டாளா?
எனக்கு மனைவியே கிடையாது! இன்னும் கல்யாணமே ஆகலை!
பின் ஏன் வீட்டுக்கு லேட்டா போறே?

நான் பிறந்த ஊர் “ரை” என் மனைவி ஊர் “ராந்தகம்”
கேள்விப்படாத ஊருங்களா இருக்கே?
டாக்டர் என்னை “மது” உபயோகப்படுத்த கூடாதுன்னு சொல்லியிருக்காரே!

அப்பா அடிக்கடி அம்மாகிட்டே மன்னிப்பு கேட்பதாலேதான் “அப்பாலஜி”ங்கிற வார்த்தை வந்திருக்குமோ? – ஒரு பையனின் சந்தேகம்.
.

எந்த வண்டிக்கும்மா சைலன்ஸர் வேணும்?
வண்டிக்கில்லே! இதோ இவருக்குத்தான் ராத்திரியிலே ரொம்ப குறட்டை விடறாரு!

போன வருஷ தீபாவளிக்கு உங்க கடையில வாங்கின ஸ்வீட் எல்லாம் நல்லா இருந்துச்சுங்க!
அது அப்படியேத்தான் இருக்குதுங்க! ஒரு ரெண்டு கிலோ கொடுக்கட்டுமா?
.

வேளாவேளைக்கு சாப்பிடுங்க! வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சு குளிங்க! வீட்டை பத்திரமா பாத்துக்குங்கன்னு சொல்லிட்டு உங்க மனைவி எங்க போறாங்க! ஊருக்கா?
இல்லே! ஜவுளி கடைக்கு!

கண் முன்னால சின்ன சின்னதா பூச்சி பறந்தது.. கண் டாக்டரை பார்த்து கண்ணாடி போட்டுகிட்டேன்!
இப்ப எப்படி இருக்குது!
பூச்சி பெருசு பெருசா இருக்குது!

ஆஸ்பத்திரி வாசல்ல குடை ராட்டினம் நிறுத்தி வைச்சிருக்கீங்களே! எதுக்கு டாக்டர்?
திடீர்னு மயக்க மருந்து தீர்ந்துட்டா பேஷண்டை அதுல உட்கார வைச்சு சுத்திவிடத்தான்!

என்ன மாடல் ஜாக்கெட் தைக்கனும்? ஜன்னல் வெச்சா? கதவு வெச்சா?
என்னம்மோ “புல்லட் புருப்” ஜாக்கெட்னு சொல்றாங்களே அந்த மாடல்ல தைச்சுக்கொடுங்க!

மனைவிக்கும் கணவனுக்கும் நடந்து உரையாடல் !! படித்து பாருங்க உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது !!

மனைவிக்கும் கணவனுக்கும் நடந்து உரையாடல் !! படித்து பாருங்க உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது !!



ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்…

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்… அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.

அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க “என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க”என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்…

வித்தியாசமான உதவி ! சுவாரசியமான குட்டி கதை !!


வித்தியாசமான உதவி ! சுவாரசியமான குட்டி கதை !!

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.
தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.
பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.
பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.
பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.
பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்.

கதை சொல்லும் பாடம் !!! இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு …!!

ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.
ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.

அங்கே போன பிறகுதான் தெரிந்தது… சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.
மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.
‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.
‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’
சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.
உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.
‘‘இந்தா… இதை வெச்சுக்கோ… சீக்கிரம் கதவைத் திற… நான் உள்ளே போகணும்!’’
சித்ரகுப்தன் சிரித்தான்.
‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்–& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது… அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’
‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’
‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’
‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’
‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’
‘‘வேறே எப்படி வாங்கறது?’’
‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’
‘‘என்ன சொல்றே நீ?’’
‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’
‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’
‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது… ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’
பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.
பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்…. அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’
‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.
கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.
‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’
‘‘என்ன உத்தரவு?’’
‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’
‘‘அப்புறம்?’’
‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.
ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:
காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!
தகவலுக்கு நன்றி கமல் கண்ணன்
நன்றி : ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன்

Saturday, October 25, 2014

இனிமையாக பேசினால்……….



இனிமை நிறைந்த இன்சொற்கள், இரும்பு மனம் கொண்டவரையும் இளக வைக்கும். தீஞ்சொற்களோ, மென்மை மனம் கொண்டவரையும் கோபமடைய வைக்கும். அதனால் தான், ‘யாவர்க்குமாய் பிறர்க்கு இன் உரை தானே…’ என்று மென்மையாக சொல்கிறார் திருமூலர். கடுஞ்சொற்களை பயன்படுத்தி, நாம் எத்தனை நன்மை செய்தாலும், அதனால், எந்த நன்மையும் விளையாது என்பதற்கு, கந்த மாதன முனிவரின் கதையைக் கேளுங்கள்…
தருமர் ராஜசூய யாகம் செய்த நேரம்… பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு வேலையாக செய்து கொண்டிருந்தனர். பீமன் உணவு கூடத்தில் அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்தான்.
உபசரிப்பு என்கிற பெயரில், இலைகளில் உணவு வகைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டே இருந்தான். எவ்வளவு தான் சாப்பிட முடியும்? சாப்பிட முடியாமல் திணறி மறுத்தவர்களை, கடும் சொல்லால் ஏசியும், கதையை காட்டி பயமுறுத்தியும் சாப்பிட வைத்தான்.
இதன் காரணமாக, நாளுக்கு நாள் உணவு உண்ண வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதை கவனித்த கண்ணன், ‘ஏன் நாளுக்கு நாள் உணவு உண்ண வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது…’ என, பீமனிடம் கேட்டார். பீமனுக்கும் காரணம் தெரியவில்லை.
கண்ணன் ஒரு சில வினாடிகள் யோசித்து, ‘பீமா… இங்கே நான் பார்த்துக் கொள்கிறேன்; நீ கந்தமாதன் மலையில் இருக்கும், கந்தமாதன முனிவரை பார்த்து, வணங்கி விட்டு வா…’ என்று பீமனை வழியனுப்பி வைத்தார். உணவு கூடத்தில் உண்ண வருபவர்கள் யாருமே இல்லை. அதனால், சாப்பிடும் அடியார்களை தேடிச் சென்றார் கண்ணன்.
அடியார்களோ, ‘பீமனின் கொடுமை தாங்கவில்லை; அள்ளி அள்ளி கொட்டி, உண்ணச் சொல்லி மிரட்டுகிறான். இழிவாக பேசுகிறான்…’ என்றனர். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்து வந்து உணவிட்டார்.
அதேசமயம், கண்ணன் சொல்படி கந்தமாதன மலைக்கு சென்ற பீமன், அங்கே கந்தமாதன முனிவரை தரிசித்தான். தங்க உடம்போடு ஜொலித்துக் கொண்டிருந்த அவரை வலம் வந்து வணங்கினான்.
அவனைப் பார்த்த முனிவர், ‘பீமா… அருகில் வா…’ என்றார். அவர் அருகில் பீமன் சென்றபோது, அவர் வாயில் இருந்து தாங்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியது. பீமனால், அவர் பக்கத்தில் போக முடியவில்லை.
‘பீமா… உன் தயக்கம் புரிகிறது; போன பிறவியில் நான் ஏராளமான தான, தர்மங்கள் செய்தேன். அதன் பயனாகவே எனக்கு தங்கம் போல இந்த அழகான உடம்பு கிடைத்தது. ஆனால், யாசகம் பெற வந்தவர்களை திட்டி பேசி, தான, தர்மங்கள் செய்ததால், என் வாயில் துர்நாற்றம் வீசுகிறது…’ என்று வருத்தத்துடன் சொன்னார் முனிவர்.
பீமன் நடுங்கினான். ‘இவரைப் போலத் தானே நானும் செய்தேன்; உணவுண்ண வந்தவர்களை கடுமையாக பேசி, கதாயுதத்தை காட்டி மிரட்டி பயமுறுத்தினேன். எனக்கு என்ன கதி கிடைக்குமோ…’ என்று பயந்தான்.
முனிவரோ, ‘பீமா… கண்ணன் அனுப்பிய உன்னைப் பார்த்ததும், என் பாவம் போய் விட்டது. என் வாயில் இதுவரை இருந்த துர்நாற்றம் நீங்கி விட்டது…’ என்றார்.
அரண்மனைக்கு திரும்பிய பீமன், கண்ணன் திருவடிகளில் விழுந்து, ‘என்னை மன்னித்து விடு கண்ணா…’ என, அழுதான்.
‘பீமா… கொடுப்பது பெரிதல்ல; இனிமையாக பேசி கொடுக்க வேண்டும். அதுதான் உயர்ந்தது…’ என்றார் கண்ணன்.
இனிமையாக பேசுவோம்; இறையருளைப் பெறுவோம்.

வாயைப் பிளக்கவைத்த வைர கம்பெனி!

வாயைப் பிளக்கவைத்த வைர கம்பெனி!

வீடு இல்லாதவர்களுக்கு வீடு… வீடு வைத்திருந்தால் கார்…. வீடும் காரும் வைத்திருப்பவர்களுக்கு வைர நெக்லஸ்…. என்று தீபாவளி போனஸ் கொடுத்திருக்கிறது மும்பை நிறுவனம் ஒன்று. 50 கோடி ரூபாய் மதிப்பிலான போனஸை, வைரம் வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம் வாரி வழங்கி உள்ளது!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனத்தின் பெயர், ‘ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’. தரமான வைரங்களை
உற்பத்தி செய்து பட்டை தீட்டி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் சாவ்ஜி டோலக்கியா, குடும்பச் சூழல் காரணமாக, பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பைக்கூட தாண்டாதவர். படிப்பைப் பாதியில் முடித்த அவர், 12 வயதில் வைரம் பட்டை தீட்டும் வேலையில் ஈடுபட்டார். அதில் நன்கு அனுபவம் பெற்ற பிறகு, தன் மூன்று சகோதரர்களுடன் இணைந்து 1992-ம் ஆண்டு ‘ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனம் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கிறது. இந்த தீபாவளிக்கு, கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் சமமான போனஸை அது வழங்கியுள்ளது. 1,198 பேர்களுக்கு இந்த லக்கி பிரைஸ் அடித்துள்ளது.
491 பேர்களுக்கு ஃபியட் கார், 500 பேர்களுக்கு ‘கிஸ்னா’ வைர நகை, 207 பேர்களுக்கு 2 படுக்கை அறைகள் கொண்ட  அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவை  போனஸாக வழங்கப்பட்டன. ஃபியட் காரை போனஸாகப் பெற்ற கடைநிலை ஊழியரான முகேஷ் பார்மர், ”கார் வாங்கும் அளவுக்கு சக்தி இல்லாதபோது, அதை கம்பெனி நிர்வாகமே  பரிசாகக் கொடுத்தால் எப்படி இருக்கும்? என்னைவிட என் அம்மாவுக்குத்தான் ரொம்ப சந்தோஷம். எப்போதும் நிறுவனத்துக்கு உண்மையாக இருப்பேன்” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இது எப்படி சாத்தியமாயிற்று? ”ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களுடன்  லாபத்தின் சிறு பகுதியைப் பிரித்துக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எங்கள் நிறுவனத்தில் பணியாற்றுவோரை எங்களில் ஒருவராகவே பார்க்கிறோம். அதனால்தான், எங்கள் நிறுவனம் இன்று 9 ஆயிரம் ஊழியர்களோடு வளர்ந்து நிற்கிறது. 2008-ல் இருந்துதான் ஊழியர்களுக்குப் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. நாங்கள், எங்கள் ஊழியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும் அவர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும்தான், எங்கள் நிறுவனத்தின் பலம்” என்கிறார், இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கன்ஷையாம் டோலக்கியா.
9 ஆயிரம் பேர்களில் 1,198  பேர்களை எப்படி தேர்வு செய்தார்கள்? ”நாங்கள் ஒவ்வொரு ஊழியர்கள் செய்யும் வேலைகளையும் தினமும் கண்காணிக்கின்றோம். தான் செய்யும் தொழில் மீது ஒருவர் காட்டும் அக்கறை, காலத்தோடு சிறப்பாக ஒரு வேலையை செய்து முடிக்கும் திறன், இதைத்தான் நாங்கள் அளவுகோலாக வைத்திருக்கிறோம். அப்படித்தான், இந்த 1,198 பேர்களையும் தேர்வு செய்தோம். நாங்கள் கொடுத்த போனஸைப் பார்த்துவிட்டு தினமும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், எங்கள் நிறுவனத்தில் வேலை கேட்டு விண்ணப்பிக்கின்றனர்” என்றனர் நிர்வாகத்தினர்.
வைரம் பேசுது!

ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரி உருவானது எப்படி?

 



1857-ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்திலிருந்த டிக்ஷனரிகள் போதவில்லை என்ற காரணத்திற்காக ஃபிலோலாஜிகல் சொசைட்டி ஆஃப் கிரேட் பிரிட்டன், நியூ இங்கிலீஷ் டிக்ஷனரி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது. டிக்ஷனரி பற்றாக்குறையை நிவர்த்திப்பதோடு ஆங்கிலோ சாக்ஸன் காலத்திய மொழிகளின் சரித்திரத்தையும் கூடவே அறிமுகப்படுத்தலாமென்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இத்திட்டத்தை முழுமையாக்கி ஒப்புதல் பெற இருபதாண்டுகள் ஆயின.



1879-ஆம் ஆண்டில் இப்பணிக்காக ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடி பிரஸ்ஸýடன் ஒப்பந்தம் செய்து கொண்டதோடு ஜேம்ஸ் முர்ரே என்பவரை ஆசிரியராகவும் அமர்த்தியது. பத்தாண்டிற்குள் நான்கு தொகுப்புகளை வெளியிட வேண்டுமென்பது முதல்கட்ட திட்டமாகும். ஆனால் முர்ரேவும் அவரது உதவியாளர்களும் ஐந்தாண்டு காலத்தில் அ – அசப வரை மூன்று பகுதிகள் மட்டுமே முடித்திருந்தார்கள். 352 பக்கங்கள் கொண்ட அந்தத் தொகுதியைப் புத்தகமாக வெளியிட்டு 12 ஷில்லிங் 6 டாலர் என விற்பனை செய்தார்கள். நாம் திட்டமிடுவதைச் செயல்படுத்துவது கடினமென்பதை இந்த டிக்ஷனரி தயாரிப்பு உணர்த்தியது. "ஆக்ஸ்ஃபோர்டு இங்கிலீஷ் டிக்ஷனரி’ என்ற பெயரில் தயாரித்து முடிக்க மேலும் பல ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டனர். 1928-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கடைசித் தொகுப்பு வரை முழுமையாக வெளியிட 44 ஆண்டுகள் ஆயின.

பன்னிரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்ட இந்த டிக்ஷனரியின் மொத்த பக்கங்கள் 15 ஆயிரத்து 487. இதில் இடம்பெற்ற மொத்த வார்த்தைகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 18 ஆயிரத்து 825. இந்தப் பகுதிகளைத் தவிர துணைப்பகுதியொன்றும் 1933-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1957-ஆம் ஆண்டு பர்ச்ஃபீல்ட் தலைமையில் மீண்டும் புதிய தொகுப்புகளை உருவாக்கும் குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவினரின் முயற்சியால் 1972 மற்றும் 1986 ஆண்டுகளிலும் 1993-ஆம் ஆண்டில் வெளிவந்த துணை தொகுப்பு உள்பட நான்கு தொகுதிகள் வெளியிடப்பட்டன. 732 பக்கங்கள் கொண்ட இந்த தொகுப்புகளில் சுமார் 70 ஆயிரம் புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. கடைசித் தொகுப்பு வெளியாவதற்கு முன்பே இரண்டாவது பதிப்புக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணகர்த்தாவான முர்ரே, இந்த டிக்ஷனரி தொகுப்பில் ஈடுபடுவதற்கு முன்பு மற்றவர்கள் தொல்லை இருக்கக் கூடாதென்பதற்காக தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ரகசிய அறையொன்றை அமைத்துக் கொண்டார். அந்த அறைக்குள் அவரும் அவரது மகள்களும் அமர்ந்து வேலை செய்வது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்குக்கூட தெரியாது. மற்றவர்கள் இடையூறிலிருந்து தப்பிக்க இவர்கள் அமைத்த அறை, குளிர்காலத்தில் அதிக ஈரத்தையும் கோடையில் அதிக வெப்பத்தையும் தரவே அது, காற்று வசதியின்றி மாட்டுத் தொழுவம் போலாகிவிட்டது. இதனால் முர்ரேவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. குளிர்காலங்களில் கதகதப்பாக இருக்க அறைக்கு நடுவே ஸ்டவ் ஒன்றை வைக்க வேண்டியதாயிற்று. எங்கே தீப்பிடிக்குமோ என்ற பயமும் இருந்தது. கனமான ஓவர்கோட் ஒன்றை அணிந்து ஈரம் காலில் படாதபடி மரப்பெட்டியொன்றை போட்டு அதன்மீது அமர்ந்து எழுதுவாராம். இப்படி வாரத்திற்கு 80 முதல் 90 மணி நேரம் உழைத்து டிக்ஷனரி தொகுப்பைத் தயாரித்தார். ஓய்வின்றி தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டதால் நினைத்தபடி டிக்ஷனரியை முழுமையாக முடிக்க முடியாமல் 70-ஆவது வயதில் காலமானார்.

இவர் பெரிய படிப்பாளியும் அல்ல. ஸ்காட்லாந்தில் ஹாலிக் என்ற சிற்றூரில் தையல் தொழிலாளி ஒருவரின் மகனாகப் பிறந்த முர்ரே, தானே சொந்தமாக முயற்சித்து கல்வி கற்று தேர்ச்சி பெற்றார். பள்ளியைவிட்டு வெளியே வந்தவர் வங்கி ஊழியராகப் பணியாற்றினார். பின்னர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் டிக்ஷனரி உருவாக்கும் பொறுப்பு இவருக்குக் கிடைத்தது.

தானே சொந்தமாக நியூ இங்கிலீஷ் டிக்ஷனரி ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட இவர், முதல் பதிப்பில் பாதி டிக்ஷனரிவரை தானே எடிட் செய்தார். அதையும் முழுமையாக முடிக்க முடியாமல் காலமாகிவிடவே அவரது உதவியாளர்கள் அதை முழுமைப்படுத்தி வெளியிட்டனர்.

போக்குவரத்து சிக்னேல் விளக்குகள் ஏன் சிவப்பு, பச்சை,மஞ்சள்,நிறங்களில் உள்ளன என்று தெரியுமா?


போக்குவரத்து விளக்குகள்!...

போக்குவரத்து சிக்னேல் விளக்குகள் ஏன் சிவப்பு, பச்சை,மஞ்சள்,நிறங்களில் உள்ளன என்று தெரியுமா?


பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரெயில்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த வெள்ளோட்ட முயற்சியாக சிவப்பு, பச்சை, மஞ்சள் வண்ண விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. விபத்துகளையும், ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதுவதையும் தவிர்ப்பதற்கு எச்சரிக்கை விளக்கு தேவைப்பட்டது. அபாயத்தைக் குறிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சிவப்பு வண்ணம் பயன்படுத்தப்பட்டு வந்ததால், `நிறுத்துவதற்கு’ அது எளிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

எச்சரித்து, செல்ல அனுமதிப்பதற்கு பச்சை வண்ணத்தைப் பயன்படுத்த 1830-களில் பொறியாளர்கள் முயன்றனர். ஆனால் சூரிய வெளிச்சம் பட்டபோது அவை தவறான சிக்னல்களை பிரதிபலித்தன. அதனால், எச்சரிப்பதற்கு மஞ்சள் வண்ணத்தையும், `செல்லலாம்’ என்று தெரிவிப்பதற்கு பச்சை வண்ணத்தையும் தேர்ந்தெடுத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டனர். முதன்முதலாக அமெரிக்காவின் கிளீவ்லாந்தில் போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்டன. சராசரியாக ஒருவர் தனது வாழ்நாளில் இரண்டு வார காலத்தை போக்குவரத்து விளக்குகளுக்காகக் காத்திருப்பதில் செலவிடுகிறார்.

Friday, October 24, 2014

ஆன்மீகம், கந்த சஷ்டி கவசம், கந்த சஷ்டி, கந்தகுரு கவசம்





கந்தகுரு கவசம்

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே

முஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

... செய்யுள் ...

ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்பேர்ருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்க்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களைக் கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155

கழுத்தைக் கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160

ஹ்ருதயத்தில் கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லெளம் ஸெளம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
முலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
முலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190

முவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பழம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வை ஆனந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பாரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊ ட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265

உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270

அன்பே ஹாந்யும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275

அன்பே மெளனம் அன்பே மோக்ஷம்
அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
முவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதமுல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்சிகொண்டாய் தமிழகத்தை ...... 330

கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340

உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
முவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான
இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415

உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425

ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
முன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்முறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமட ஓதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447

Sunday, October 19, 2014

வெற்றிக்கான வழிகள்...

வெற்றிக்கு வழி

 

 

1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.
4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது,
மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.
8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.

வெற்றிக்கான வழிகள் ....


1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.
 
 

வெற்றிக்கான வழி...

 

எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம்.

* பட்டினி கிடக்காதீர்கள்.

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்.

* சோம்பலை துரத்தி அடியுங்கள்.

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள்.

* அதிக நேரம் உறங்காதீர்கள்.

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள்.

* பொறாமை அறவே இருக்கக் கூடாது.

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள்.

* பேராசை படாதீர்கள்.

* மகிழ்ச்சியாக இருங்கள்.

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

* தைரியமாக இருங்கள்.

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

Saturday, October 18, 2014


அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்..


1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை ...

2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???

3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின என்னையோ கலந்து செய்றோம் ..

4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை .. பாமாயில் தான் யூஸ் பண்றோம் ..

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..

6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க ... அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..

7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக யூஸ் பண்றோம் .. உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..

8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..

9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம் ..

10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும் ..

இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு ஏன் உடல
ும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரெனெ என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் ...

- - தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்,


குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்,

சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.

கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்குவரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன''என்று வாதிட்டார்.

ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில்,

'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ என்று தீர்ப்பானது.
அதிர்ச்சியளிக்கும் உண்மை..! படியுங்கள்....!



அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு
உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..?

முடியும்..!!

20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில்
அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக
கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தோராய கணக்கு மட்டுமே,

உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல்
நடந்திருக்க வாய்ப்புண்டு..

சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே
பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது.

அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம்
அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும்
வரி செலுத்தியுள்ளோம்.

காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே
கணக்கிடப்படுகிறது.

ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி
சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு
சுங்கவரி செலுத்த வேண்டும்.

ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள்
இந்த சாவடியை கடக்கிறது,

சிறிய வாகனத்திற்கு ரூ.35ம்,

நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம்,

பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம்,

கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு
ரூ.210ம் வசூலிக்க படுகிறது.

நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.

90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.

63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.

18,90,00,000×12= 226, 80,00,000

ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.

226,80,00,000×10 = 2,268,00,00,000.

வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு
தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல்
செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.

ஒரு சாலையில் இவ்வளவு என்றால்

இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள்
கொள்ளை நடக்கிறது..?

இப்போது சொல்லுங்கள்

இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..?

இதை நாம் எதிர்க முடியாது காரணம்

தனியார் முதலீட்டை வரவேற்கும்
அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி,

தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை
அரசு வரவேற்க காரணம் புரிகிறதா.?
சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம்.
....
தீபாவளிக்கு சீனப்
பட்டாசுகளை வாங்காதீர்கள்.
சிவகாசிப்
பட்டாசுகளை மட்டுமே வாங்கி 5
இலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ
வையுங்கள்....
வெளியுறவுக் கொள்கையின்
ஒரே காரணத்தால்
இந்தியா சீனத்துப்
பொருட்களை இங்குள்ள
வியாபாரிகள் இறக்குமதி செய்ய
அனுமதி கேட்டால் அரசாங்கத்தால்
தடை சொல்ல முடியாது.
ஆகவேதான்
வடநாட்டு வியாபாரிகள் சீனாவில்
இருந்து மலிவு விலையில்
ரூ 2000
கோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து தமிழன்
தலையில் கொளுத்திப் போடப்
பார்க்கிறார்கள்.
அரசாங்கத்தால் தடை செய்ய
முடியாததை தமிழர்களாகிய நாம்
செய்வோம். சீனத்துப்
பட்டாசுகளை நீங்கள்
வாங்கவில்லை என்றால் அடுத்த
வருடம் அதை இறக்குமதி செய்ய
அந்த சுயநல வணிகர்கள்
தயங்குவார்கள். வியாபாரம்
குறையும். மெல்ல மெல்ல சீனப்
பொருட்கள்
நம்மை விட்டு விலகும்.
தமிழர்களே... விழித்தெழுங்கள்....
சீனா உங்கள் தேசமல்ல, சீனப்
பொருட்கள் உங்கள் உள்நாட்டுத்
தயாரிப்பல்ல....
சிவகாசி உங்கள் ஊர்...
சிவகாசிக்காரர்கள் நம் மக்கள்...
தமிழர்கள்.... அவர்களது பரம்பரைத்
தொழிலை நசிக்கப் பார்க்கும்
சீனாவை நாம் உள்ளே நுழைய
விடலாமா?
நீங்கள் சிவகாசிப்
பட்டாசு வாங்கவில்லை என்றாலும்
பரவாயில்லை !... ஆனால்
சீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின்
தலையிலும் தயவுசெய்து தீ
வைக்க வேண்டாம்....
அதுமட்டும் இல்லை.... ஒருவருடம்
இந்த தீபாவளிக்காக,
உங்களுக்காகவே உழைத்து,
வெடிவிபத்தில் சிக்கி சீரழிந்து,
தினம் செததுப் பிழைக்கும்
சிவகாசிப் பட்டாசுத் தொழிலில்
ஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க்
குடும்பமும்
உங்களை காலமெல்லாம்
வாழ்த்தும்.....
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம்
பகிருங்கள்...


என்ன தான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், “ஹிரோ ஹோண்டா” , “ஹிரோயின் ஹோண்டா”வாக ஆகாது.
அதே மாதிரி என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், “லேடீஸ் பிங்கர்”, “ஜெண்ட்ஸ் பிங்கர்” ஆகாது.

“மகளைப்பெற்ற அப்பாகளுக்கே தெரியும்,
முத்தம் காமத்தில் சேராதது என்று”
இந்த வரிகளை சினிமாவில் எழுதுன கவிஞர் யாருயா?
உன் பேச்சை கேட்டு அவ அப்பன் முன்னாடியே அவளுக்கு முத்தம் கொடுத்துட்டேன் அவன் அருவாவோட என்னை இப்ப தேடிட்டு இருக்கான்.

பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணினா பஸ் வரும். ஆன ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா “ஃபுல்லு” வருமா….. குவாட்டர் கூட வராது…..

என்ன தான் மனுஷனுக்கு வீடு, காரு, பங்களான்னு இருந்தாலும், ரயில் ஏறணும்னா பிளாட்பாரத்திற்கு வந்து தான் ஆகணும்…. இது தான் வாழ்க்கை

பேசும் முன் கேளுங்கள்
செயல்படும் முன் யோசியுங்கள்
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
விமர்சிக்கும் முன் பொருத்திருங்கள்
வழிபடும் முன் மன்னியுங்கள்
கைவிடும் முன் முயற்சிசெய்யுங்கள்

நண்பன் 1: ஏண்டா பழத்தை சாப்டுட்டு
தோல மட்டும் எனக்கு தர
நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன்
அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?
நண்பன் 1: ??????? ………..

டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும் ஒரு நாள் தான் வித்தியாசம். ஆனா ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும் ஒரு வருஷம் வித்தியாசம் இது தான் உலகம்.

இட்லி மாவை வைச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வைச்சு சப்பாத்தி போடலாம்
ஆன கடலை மாவை வைச்சு கடலை போட முடியுமா?

செருப்பு இல்லாம நாம நடக்கலாம், ஆன நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது….

2050-ல் உலகம் எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை:

2050-ல் உலகம் எப்படி இருக்கும்?
ஒரு சின்ன கற்பனை:

* பையன்: அம்மா இவன்தான் உன் பேரன்.
அம்மா: கல்யாணத்துக்கு ஏன்டா எங்கள கூப்டல….!
* பலசரக்கு கடை: அண்ணாச்சி 2,000ரூபாக்கி சீரகம் குடுங்க.
* சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்அடுத்த படத்தில் ரஜினியின் அம்மா வேடத்தை த்ரிஷா ஏற்றார்.
* பேஸ்புக்கின் நிர்வாக பொறுப்பை, திரு.மார்க் (திஙி ஷீஷ்ஸீமீக்ஷீ) அவரது இளைய மகனிடம் ஒப்படைத்தார்.
* 35 வருடங்களுக்குமுன் காணமல் போன மலேசிய விமானத்தை திரு.விஜயகாந்த் கண்டுபிடித்தார்.
* இலங்கை தமிழர்களை காப்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக போர்க்கொடி.
* இன்று மாலை சரியாக 5 மணிக்கு சென்னை அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அம்மா இலவச கார் வழங்குகிறார்.

* சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
* கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன் உபயோகித்த ழிஷீளீவீணீ 1100 47 கோடிக்கு ஏலம் போனது.
* தமிழக அரசு வழங்கிய இலவச மிஜீலீஷீஸீமீ 10s செல்போனில் ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.
* உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடு என சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்தது.
திருமணம் ஒரு அருமையான விஷயமாக இருக்க  5 விதிகள்
1.         அதிகாரத்தில் கை வைக்க கூடாது
2.         அடிப்பேன் என்று மிரட்ட கூடாது
3.         அவர்களால் என்ன சமைக்க முடியுமோ அதை மட்டும் சமைக்க சொல்லி சாப்பிடணும்
4.         எக்காரணம் கொண்டும் ஆயுதம் ஏந்தக்கூடாது
5.         சண்டை வந்தா தப்பு அவங்க மேலயே இருந்தாலும் சாரி கேட்டிடணும் மானம் ரோஷம் அறவே கூடாது.
 

Sunday, October 12, 2014

மூன்று குரங்குகள் அமைத்து, அதில் ஒரு குரங்கு காதுகளை மூடிக்கொண்டும், இன்னொரு குரங்கு கண்களை மூடிக் கொண்டும், மற்றொன்று வாயினை மூடியபடியும் அமைக்கப்பட்டிருக்கும்.
இவற்றின் விளக்கங்களாக, தீயவற்றைக் கேட்காதே, தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே என்று அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் கணினி யுகத்தின் தன்மைக்கேற்ப, அதிக ஒலியைக் கேட்காதே; அதிக ஒளியைப் பார்க்காதே; துரித உணவுகளைச் சாப்பிடாதே என்றும் எடுத்துக் கொள்ளலாமே!
இதன் மூலம், காதுகளும், கண்களும், உடல்நலமும் பாதுகாக்கப் படுமல்லவா?
கிரிக்கெட் மாட்சில் மற்ற நாடுகளோடு போட்டியிட்டு
ஜெயித்தால் விளையாடிய ஒவ்வொரு இந்திய கிரிக்கேட்
வீரருக்கும் கிடைக்கும் பரிசுத் தொகை ரூ 3 கோடி.
ஆனால் இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் மற்ற நாடுகளோடு
போரிட்டு மரணம் அடைந்தால் கிடைக்கும் இழப்பீடு தொகையோ
1 லட்சம்..நம் ஆட்சியாளர்களின் நாட்டு பற்றை நினைக்கும்போது
புல்லரிக்குது....
அன்பார்ந்த facebook நண்பர்களுக்கு // கண்டிப்பாக படித்து பகிரவும் //



சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28 நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான்,

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று.

ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும்
ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் 31 OCT 31 அக்டோபர் அன்று MOBILE DATA CONNECTION. DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம், 31 அக்டோபர் அன்று

கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது, ஆகவே 31oct internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் FORWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்,

நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
Ignore (நிறாகரிப்பு) செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். Please Share all friends

தவிர்ப்பீர் சீனப்பட்டாசுகளை! ஆதரீப்பீர் சிவகாசி பட்டாசுகளை!

தவிர்ப்பீர் சீனப்பட்டாசுகளை! ஆதரீப்பீர் சிவகாசி பட்டாசுகளை!



சிவகாசிக்கு வேட்டு வைக்கும் சீனப் பட்டாசுகள்: இந்த ஆண்டு மட்டும் ரூ.1500 கோடி வருவாய் இழப்பு;

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் சீனப் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் அழிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகாசி மற்றும் அதையொட் டிய பகுதிகளில், சுமார் 780 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகள் மூலம் 2 லட்சத் துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், உபதொழில்கள் மூலம் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 90 சதவீதத்தை சிவகாசிதான் பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடை பெறுகிறது. ஆனால், சிவகாசியை அச்சுறுத்தும் டிராகனாக உரு வெடுத்துள்ளன சீனப் பட்டாசுகள். பொம்மைகள் மற்றும் இரும்புக் கழிவுகள் என்ற பெயரில் சீனாவி லிருந்து ஏராளமான கண்டெய் னர்களில் கள்ளத்தனமாக சீனப் பட்டாசுகள் வந்த வண்ணம் இருக் கிறது. இந்த ஆண்டு, சுமார் 2 ஆயிரம் கண்டெய்னர்கள் வர வழைக்கப்பட்டு சில்லறை விற் பனைக் கடைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளி யாகி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அபிரூபன் கூறும்போது, ‘சீனப் பட்டாசு வருகை யால் சில்லறை வியாபாரிகள் கொள்முதல் அளவைக் குறைத்து விட்டனர். இதனால் மொத்த வியா பாரிகளும் கொள்முதல் அளவை குறைத்து கொண்டனர். இதனால் இந்த ஆண்டு 35 சதவிகிதம் பட்டாசு விற்பனை சரிந்து, சுமார் ரூ. 1,500 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.

முன்னாள் தலைவர் ஏ.பி. செல்வராஜனிடம் கேட்டபோது, ‘சீனப் பட்டாசை தடுக்க துறைமுகங் களில் அனைத்து கண்டெய்னர் களும் 100 சதவிகிதம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதைத் தாண்டி கொண்டு வரப்படும் சீனப் பட்டாசுகளை பறிமுதல் செய்து அழித்து விட்டால் அவற்றை இறக்குமதி செய்த நபருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு, மீண் டும் இதுபோன்ற வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்யும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்ய வேண்டும். சீனப் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் குளோரைடு என்ற வேதிப்பொருளுக்கு நம்மூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் கைகளில் சிக்கினால், இதனை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கும் அபாயமும் உள்ளது.

நாம் தரமான பட்டாசுகளை உற்பத்தி செய்தால், அதோடு சீனப் பட்டாசுகள் போட்டியிட முடியாது. பட்டாசுக்கான விலை நியாயமாக இருக்க எம்.ஆர்.பி. அச்சிடப்பட்டால் சீனப் பட்டாசுகள் நமது தயாரிப்போடு போட்டியிட முடியாது’ என்றார்.

இந்திய பட்டாசு தயாரிப்பாளர் கள் சங்க பொதுச் செயலர் கண்ணனிடம் கேட்டபோது, சீனப் பட்டாசுகளை தயாரிக்க பொட்டா ஷியம், குளோரைடு, சல்பர், சிவப்பு பாஸ்பரஸ் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. இந்த ரசாயனங்கள் வெப்பநிலை அதிகரித்தால், தானாக வெடிக்கும். குளோரைடு ஒரு கிலோ விலை ரூ. 40 முதல் ரூ. 50 வரைதான். ஆனால், சிவகாசி யில் பட்டாசு தயாரிக்க பயன் படுத்தப்படும் அலுமினிய பவுடரின் விலை ஒரு கிலோ ரூ. 450.

இதனால், குறைந்த விலையில் சீனாவில் பட்டாசுகளை தயாரித்து, இந்தியாவுக்கு கொண்டு வரு வதில் பெரிய கும்பலே ஈடுபட்டுள் ளது. சீனப் பட்டாசுகளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே கருதுகிறோம். சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை காக்க சீனப் பட்டாசு இறக்குமதியை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும் என்றார்.
ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகிறான்.

ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமைகொள்ளும் கணத்தில் முட்டாள் ஆகிறான்.

அன்பை ஆயுதமாக ஏந்தியவனுக்கு தோல்விகள் இல்லை…
மறக்காமல் இருப்பது மட்டுமே அன்பல்ல…
என்ன நடந்தாலும் வெறுக்காமல் இருப்பதே உண்மையான அன்பு…

உங்களது உண்மையான உறவுகளை மறந்தும் வெறுக்க வேண்டாம்,
பிரிவும், முறிவும் உயிர் போவதை காட்டிலும் அதிக வலியைத் தரும்…

முயற்சிகள்பலமுறை என்னை கைவிட்டது; ஆனால் முயற்சியை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை.
ஆயிரம் தடவை உன் வாழ்க்கை உன்னை அழவைத்தால், ஆயிரம் வழிகளில் நீ சிரிப்பதற்கு வழி தேடு.

குறை சொல்லுபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்
ஏனென்றால் உங்களை நீங்களே செதுக்கிக் கொள்வதற்கு அவர்கள் தான் உளிக்கொடுக்கின்றனர்.

இந்த உலகில் எவரும் பரிசுத்தமானவர்களோ, முழுமையான நல்லவர்களோ இல்லை. ஒரு சிறிய குற்றத்திற்காகவோ அல்லது சிறிய தவறுக்காகவோ, நீ ஒருவரை ஒதுக்கிவைக்க ஆரம்பித்தால், நீ எப்போதும் தனிமையாக தான் இருக்க வேண்டியதிருக்கும். எனவே குறைந்த மதிப்பீட்டை செய்… அதிக அன்பு செய்…

பெட்ரோல் விலை – புலி
தங்க விலை – மான்
காய்கறி விலை – கங்காரு
தொலைப்பேசி கட்டணம் – முயல்
என் வருமானம் – ஆமை

நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் நமது இறப்பு ஒரு சரித்திரமாக அமைய வேண்டும்.

கடமையை செய்தால் வெற்றி…
கடமைக்கு செய்தால் தோல்வி…

மற்றவர்களுடன் உன்னை ஒப்பிட்டு பார்க்காதே! அவன் வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறான்… நீ வேறு நோக்கத்திற்காக பிறந்திருக்கிறாய்… இரண்டு மனிதர்களை ஒரு நோக்கத்திற்காக படைக்க கடவுள் முட்டாள் இல்லை.

Saturday, October 4, 2014

* சிந்திக்கிறவன், உயர்வுக்கு வழி வகுக்கிறான்.,

நிந்திக்கிறவன் தாழ்வுக்கு வழி வகுக்கிறான்..

* நல்ல நட்பு, நல்ல பண்புகளை வளர்க்கிறது.,

தீய குணங்களை துரத்துகிறது..

*பிறர் குறையை காண்பவன் அரை மனிதன்.,

தன் குறையை காண்பவன் முழு மனிதன்..

*பயிற்சியும், முயற்சியும் வெற்றியின் இரு கண்கள்…

*இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.,

நிரந்தரமாக இருக்கும் அன்பை யாரும் மதிப்பதும் இல்லை.

*செய்யும் உதவியை சொல்லிக்காட்டாதீர்கள.,

சொல்லிக்காட்டும் வழக்கம் இருந்தால்

உதவி செய்யாதீர்கள்..

*ஒருவரின் வேதனை, பலருக்கு தகவல்.,

இதுதான் தற்போதைய நிலை…

 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ...
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.
01. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.
02. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.
03. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.
04. பஸ்ஸு போயிடுச்சா, அதனால என்ன? அடுத்த பஸ் இருக்குல்ல
05. பணம் தான போச்சு. கை கால் இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல
06. சொல்றவங்க நூறு சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?
07. அவன் அப்படித்தான் இருப்பான். அப்படித்தான் பேசுவான். அதையெல்லாம் கண்டுக்கலாமா? ஒதுங்கு. அப்பதான் உனக்கு நிம்மதி.
08. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.
09. கஷ்டம் தான் … ஆன முடியும்.
10. நஷ்டம் தான் … ஆன மீண்டு வந்திடலாம்.
11. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?
12. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?
13. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு.
14. ஒக்காந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதப் பார்.
15. இவன் இல்லேன்னா வேற ஆளே இல்லியா?
16. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?
17. இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.
18. இது கஷ்டமே இல்லையே. கொஞ்சம் யோசிச்சா வழி தெரியுமே.
19. முடியுமா…ன்னு நினைக்காதே. முடியணும்…னு நினை.
20. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இத விட நல்லதாகவே கிடைக்கும்.
21. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு.
22. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.
23. திருப்பித் திருப்பி அதயே பேசாதே. அது முடிஞ்சு போன கதை.
24. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே.குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.
25. ஆகா, இவனும் அயோக்யன் தானா?சரி,சரி.இனிமே யார் கிட்டயும் நாலு மடங்கு ஜாக்ரதையாத்தான் இருக்கணும்.
26. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?
27. ஊர்ல ஆயிரம் பிரச்சனை. என் பிரச்சனைய நான் தீர்த்தா போதாதா?
28. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.
29. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?
30. அவனை ஜெயிச்சாதான் வெற்றியா? நான் தான் தினம் வளர்றேன, அதுவே வெற்றி இல்லையா?
31. அடடே, இதுவரை நல்லா தூங்கிட்டேனே, பரவாயில்ல. இனிமே முழிச்சிருந்தாலே போதும்.
32. நாலு காசு பாக்குற நேரம். கண்டதப் பேசிக் காலத்த கழிக்கலாமா?
ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். ஒன்பது முறை விழுந்தவனுக்குஇன்னொரு பெயர் உண்டு-. எட்டு முறை எழுந்தவன். எழுந்திருங்கள். உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். எவ்வளவு உயரம் தொட முடியும் என்பதைக் காட்டுங்கள்.
 

Thursday, October 2, 2014

சென்னை வெள்ளை ரிப்பன் மாளிகை பற்றிய வரலாற்று தகவல்-



சென்னை வெள்ளை ரிப்பன் மாளிகை பற்றிய வரலாற்று தகவல்-




சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ரிப்பன் மாளிகைக் கட்டிடம்.
ஆங்கிலேயர் காலத்தைச் சார்ந்த பல கட்டிடங்களும் செக்கச் சேவல் என்று நின்று கொண்டிருக்க இது
மட்டும் பவுடர் போட்ட பெரிய பாப்பா மாதிரி வெள்ளை வெளேரென்று பிரம்மாண்டமாக காட்சி
அளிக்கும் இப்போது சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக பரமர்த்து வேலை நடைபெற்று வருகிறது

சென்னையின் இந்த வெள்ளை மாளிகை உருவான கதையைத் தேடிப் போனால் அது 1688இல் போய்
நிற்கிறது. அப்போதுதான் இந்தியாவின் முதல் மாநகராட்சியாக மெட்ராஸ் மாநகராட்சி
உதயமானது. கிழக்கிந்திய கம்பெனியின் தலைவராக இருந்த சர் ஜோசய்யா சைல்ட் என்பவரின்
மூளையில் உதித்த யோசனைதான் இது. உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கென்றே ஒரு தனி
அமைப்பு தேவை என்று அவர் கருதினார். இது குறித்து அப்போது இங்கிலந்தை ஆட்சி செய்த
மன்னர் இரண்டாம் ஜேம்சிடம் அவர் எடுத்துக் கூற, மன்னரும் உடனடியாக ஒப்புதல்
அளித்துவிட்டார். இதனையடுத்து 1688ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மெட்ராஸ் மாநகராட்சி
தொடங்கப்பட்டது.

நதானியேல் ஹிக்கின்சன் (Nathaniel Higginson) என்பவர் முதல் மேயராக பதவியேற்றுக்
கொண்டார். அவருக்கு உதவி செய்வதற்காக ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், யூதர்கள்,
இந்துக்கள் என பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.
இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அதே செப்டம்பர் 29ஆம் தேதி புதிய மேயர் தேர்வு
செய்யப்பட்டார். இப்படித் தான் இந்தியாவின் முதல் மாநகராட்சி தனது பணியைத் தொடங்கியது.
அப்போது ரிப்பன் மாளிகை கட்டப்படவில்லை. கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் தான் முதல்
மாநகராட்சி செயல்பட்டது.

உற்சாகமாகத் தொடங்கப்பட்டதே தவிர அதன் செயல்பாடுகள் அத்தனை உற்சாகமாக இல்லை. ஆறே
மாதத்தில் முதல் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அடுத்ததாக லிட்டில்டன்
என்பவர் மேயரானார். மாநகராட்சி தனது பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி இல்லை என்ற
குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த சர் எலிஹூ யேலுக்கும்
மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே அதிகார மோதல்கள் வெடித்தன. அப்படியே சண்டை
சச்சரவுகளுடன் போய்க் கொண்டிருந்த மாநகராட்சி நிர்வாகம் 1727இல் மறுசீரமைக்கப்பட்டது.
நகரம் வளர வளர மாநகராட்சியின் பணிகளும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இந்நிலையில் டவுன் ஹால் பகுதியை அரசு எடுத்துக் கொண்டதால் அங்கிருந்த மாநகராட்சி
அலுவலகம், ஜார்ஜ் டவுன் பகுதியின் எர்ரபாலு செட்டி தெருவுக்கு மாற்றப்பட்டது. பின்னர்
சில ஆண்டுகளில் அந்த இடம் போதவில்லை எனக் கருதப்பட்டதால் புதிய இடம் தேடும் படலம்
தொடங்கியது. அப்போதுதான் பீப்பிள்ஸ் பார்க் பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி மாநகராட்சிக்கென
புதிய கட்டிடம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்படித்தான் அந்தக் காலத்திலேயே ரூ.
7.5 லட்சம் செலவு செய்து தற்போதுள்ள ரிப்பன் மாளிகை கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளாக
இதைப் பார்த்துப் பார்த்து இந்தோ – சாரசனிக் பாணியில் பிரம்மாண்டமாக கட்டித்தந்த லோகநாத
முதலியார் கூலியாக வாங்கிய தொகை ரூ. 5.5 லட்சம்.

1913இல் இந்த கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் மூவாயிரத்திற்கும்
அதிகமான முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மாநகராட்சி கட்டிடம் என்பதால் உள்ளாட்சி
நிர்வாகத்தில் பல்வேறு சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயரையே இதற்கும்
வைத்துவிட்டனர். அவரை நினைவு கூறும் வகையில் அவரது சிலை ஒன்றும் இங்கு நிறுவப்பட்டது.

252 அடி நீளமும், 126 அடி அகலமும் கொண்ட இந்த கட்டிடத்தின் முக்கியமான அம்சம், அதன்
நடுவில் இருக்கும் கோபுரம். 132 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தின் நடுவில் எட்டு அடி
விட்டத்தில் ஒரு பிரம்மாண்ட கடிகாரமும் அமைக்கப்பட்டது. இதற்கு தினமும் கீ கொடுப்பார்கள்.
அந்தக் காலத்தில் மெட்ராசிற்கு வரும் நிறைய பேர், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்த இந்த
மெகா சைஸ் கடிகாரத்தை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மாநகராட்சி இந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு முதல் தலைவராக இருந்தவர் (அப்போது
மேயர் பதவியை தூக்கிவிட்டார்கள்) பி.எல். மூர். பின்னர் 1919இல் தான் மெட்ராஸ்
மாநகராட்சிக்கு முதல் இந்தியத் தலைவர் கிடைத்தார். அவர்தான் சர் பி. தியாகராய செட்டி.
மீண்டும் 1933ஆம் ஆண்டு மேயர் பதவி உயிர் பெற்று எழுந்தது. அப்போது முதல் மேயரானவர்
குமார ராஜா எம்.ஏ. முத்தையா செட்டியார். அதன் பிறகு இதுவரை மேயர் என்ற பதவி
தொடர்ந்து நீடித்து வருகிறது.

தற்போது ரிப்பன் அலுவலக வளாகத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது
நிறைவடைந்துவிட்டால், இதுவரை அருகில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்கள் வந்து
செல்லும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ரிப்பன் மாளிகை, தனது வளாகத்திற்குள்ளேயே
ரயில் வந்துசெல்லும் காட்சியையும் காணலாம்.

* இந்தியாவின் முதல் பெண் மேயரைத் தந்ததும் சென்னை மாநகராட்சிதான். அவர்தான் தாரா செரியன்.

* கிழக்கிந்திய டச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தைப் பார்த்துதான் சர் ஜோசய்யா சைல்ட்டுக்கு
மாநகராட்சி ஏற்படுத்தும் யோசனை பிறந்ததாக கூறப்படுகிறது.