Monday, March 31, 2014

பொன்மொழிகள்.....

  •  வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.
  •  தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. —போவீ. 
  •  வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில். 
  • நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்! தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!- நெப்பொலியன் ஹில் 
  • தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.- கன்ஃப்யூஷியன்
  • மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.- டாக்டர்ஜான்சன் 
  • உடைமையில் உரிமை கோருவது அல்ல அன்பு. உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்- ஸ்ரீ அன்னை
  • கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.
  • நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும்- கிரந்தம்.
  • பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி. 
  • கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர். 

உலக பழமொழிகள்:-

உலக பழமொழிகள்:-

* வெளியே வருவதற்கு வழியைத் தெரிந்துகொண்டு உள்ளே செல். -அரேபியா

* ஆயிரம் உபதேசங்களைவிட ஓர் அனுபவம் பாடம் கற்பிக்கும். -துருக்கி

* உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான். -அமெரிக்கா

* எது நன்மை என்பது அதை இழந்தால்தான் தெரியும். -ஸ்பெயின்

* சிரிக்கும் நேரத்தில் எல்லாம் ஓர் ஆணி உங்கள் சவப்பெட்டியில் இருந்து நீக்கப்படுகிறது. -இத்தாலி

* ஒரு திறமைசாலியின் பின்னணியில் பல திறமைசாலிகளின் உழைப்பு உள்ளது. -சீனா

* ஆத்திரத்தில் கத்துபவர்களுக்குச் சரியான பதிலடி நாம் மௌனமாக இருப்பதே. -ஜெர்மனி

* தூக்கி எறிகிற குதிரையைவிடச் சுமக்கிற கழுதை மேல். -ருமேனியா

* அதிர்ஷ்டம் செய்தவர்க்குத்தான் பிறக்கும் முதல் குழந்தை பெண்ணாக இருக்கும். -போர்ச்சுக்கல்

* அன்புக்கு உற்பத்தி ஸ்தானம் அன்னை. -ஆப்பிரிக்கா

Function Key-....

இதுல இவ்வளவு இருக்கா...?

நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.

F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்


F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

Keyboard Shortcuts (Microsoft Windows) ...




★★★★★ Keyboard Shortcuts (Microsoft Windows) ★★★★★

1. CTRL+C (Copy)

2. CTRL+X (Cut)

3. CTRL+V (Paste)

4. CTRL+Z (Undo)

5. DELETE (Delete)

6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)

7. CTRL while dragging an item (Copy the selected item

8. CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item)

9. F2 key (Rename the selected item)

10. CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word)

11. CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word)

12. CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph)

13. CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph)

14. CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text)
SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document)

15. CTRL+A (Select all)

16. F3 key (Search for a file or a folder)

17. ALT+ENTER (View the properties for the selected item)

18. ALT+F4 (Close the active item, or quit the active program)

19. ALT+ENTER (Display the properties of the selected object)

20. ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window)

21. CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents opensimultaneously)

22. ALT+TAB (Switch between the open items)

23. ALT+ESC (Cycle through items in the order that they had been opened)

24. F6 key (Cycle through the screen elements in a window or on the desktop)

25. F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer)

26. SHIFT+F10 (Display the shortcut menu for the selected item)

27. ALT+SPACEBAR (Display the System menu for the active window)

28. CTRL+ESC (Display the Start menu)

29. ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command)

30. F10 key (Activate the menu bar in the active program)

31. RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu)

32. LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu)

33. F5 key (Update the active window)

34. BACKSPACE (View the folder onelevel up in My Computer or Windows Explorer)

35. ESC (Cancel the current task)

36. SHIFT when you insert a CD-ROMinto the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing)

★★★★★ Dialog Box - Keyboard Shortcuts ★★★★★

1. CTRL+TAB (Move forward through the tabs)

2. CTRL+SHIFT+TAB (Move backward through the tabs)

3. TAB (Move forward through the options)

4. SHIFT+TAB (Move backward through the options)

5. ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option)

6. ENTER (Perform the command for the active option or button)

7. SPACEBAR (Select or clear the check box if the active option is a check box)

8. Arrow keys (Select a button if the active option is a group of option buttons)

9. F1 key (Display Help)

10. F4 key (Display the items in the active list)

11. BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box)

புத்திசாலிகளே... விழிப்புடன் இருங்கள்: இன்று முட்டாள்கள் தினம்.....

புத்திசாலிகளே... விழிப்புடன் இருங்கள்: இன்று முட்டாள்கள் தினம்.....

ஏப்ரல் மாதம் முதல் தேதியை உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் கொண்டாடுகிறார்கள். இன்று காலையிலேயே உங்களை ஏதாவது சொல்லி சிலர் ஏமாற்றக் கூடும்.

அவர்கள் சொல்லும் 'டுபாக்கூர்' தகவல்கள் 100 சதவீதம் அப்படியே உண்மை தான் என்று நம்பும்படியாகவே இருக்கும். அதனை நம்பி, ஏமாந்து விடாதீர்கள்.

சமீப காலமாக, இ-மெயில், எஸ்.எம்.எஸ். மற்றும் இணையத்தளங்கள் மூலமாகவும் ஏப்ரல் 1-ந் தேதியன்று வதந்திகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆகையால், உஷாராக இருப்பது நல்லது.

முட்டாள்கள் தினம் என்பது, எப்போது, எவ்வாறு ஆரம்பமானது? என்பது தொடர்பான, தெளிவான வரலாறு இல்லாத போதிலும், பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் முதல் தேதியே புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ம் ஆண்டு வாக்கில், அப்போதைய போப்பாண்டவரான 13-வது கிரகரி பழைய ஜூலியன் ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கிவிட்டு, புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்த புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சில காலம் ஆனது.

பிரான்ஸ் 1582-ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை அரசுபூர்வமாக ஏற்றுக்கொண்டன.

ஆனால், பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்துடன், நில்லாமல், ஏப்ரல்-1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளை சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இதுதான், காலப்போக்கில் ஏப்ரல்-1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்றதொரு நாளை கடைபிடித்ததாக வரலாறு கூறுகிறது.

1508-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதே போல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. 1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

சில வேளைகளில், ஏப்ரல் 1-ந் தேதியன்று, மக்களை முட்டாளாக்கும் வேலையில் பிரபல நிறுவனங்கள் கூட ஈடுபடுவதுண்டு. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் கூட கடந்த 2005-ம் ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி ஒரு குறும்பு வேலையில் ஈடுபட்டது.

"மார்ஸில் (செவ்வாய் கிரகம்) தண்ணீர்" என்று கொட்டையாக ஒரு தலைப்பில் தன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் எழுதி வைத்து, ஒரு குடுவை தண்ணீர் இருக்கும் படத்தையும் போட்டிருந்தது. பின்னர் அதை 'சும்மா தமாசு' என்றது, நாசா.

ஆனால் சில நேரங்களில் ஏப்ரல்-1 அன்று காமெடி என்ற பெயரில் சிலர் செய்ய முயன்ற காரியங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

1-4-2003-ல் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை கொன்றுவிட்டார்கள் என சில இணைய தளங்கள் பொய் செய்தியை பரப்பி அதனால் தென்கொரியா பங்குச்சந்தையில் மைக்ரோசாப்ட் நிறுவனப் பங்கு 1.5 சதவீதம் சரிந்தது நினைவிருக்கலாம்.

அதே வேளையில், வரலாற்றில் பல நல்ல விஷயங்களின் துவக்க நாளாக இருந்ததும் இதே ஏப்ரல்-1 தான் என்பதை மறக்கக்கூடாது. காரணம் ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கமாக ஏப்ரல்-1 அமைந்திருப்பதால் தொழிலிலும் வணிகத்திலும் ஏப்ரல்-1 வெகு முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

1935 ஏப்ரல் 1-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது. 2004-ல் கூகுளின் மெயில் சேவை தொடங்கப்பட்டது என ஏகப்பட்ட நல்ல விஷயங்களின் தொடக்கம் ஏப்ரல்-1 தான் என்பது நினைவிருக்கலாம்.

வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் மகிழ்ச்சிக்குரிய நாளும் இந்த ஏப்ரல்-1 தான். யோசித்துப் பார்த்தால் முட்டாள்கள் தினத்தன்று தான் பல புத்திசாலித்தனமான நிகழ்வுகளை சரித்திரம் கண்டுள்ளது.

எனவே, இன்றைய நாளை ஏன் முட்டாள்கள் தினமாக பார்க்க வேண்டும்? புத்திசாலிகள் விழிப்போடு இருக்க வேண்டிய நாளாகவும் பார்க்கலாமே..?..!

கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!

கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!

உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம்.

அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஏனெனில் மாதம் மாதம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால், அதிலேயே பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். மேலும் பிரசவத்தின் போதும் நிறைய் கால்சியமானது போய்விடும்.

எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா!!!

பால்

பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர்

பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

மத்தி மீன்

மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ்

பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

உலர் அத்திப்பழம்

அத்திப்பழத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்

பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

கடல் சிப்பி

பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால்

இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.

எள்

பொதுவாக எள்ளை அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.

பிரேசில் நட்ஸ்

6 பிரேசில் நட்ஸில் 45 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த நட்ஸிலும் அதிகமான புரோட்டீன் உள்ளது.

உலர்த்திய மூலிகைகள்

நிறைய உலர்த்திய மூலிகைகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எப்படியிருப்பினும் இத்தகைய மூலிகைகளை அப்படியே சாப்பிட முடியாது. ஆனால் அவற்றை சூப், குழம்பு போன்றவற்றில் தினமும் சிறிது சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

டோஃபு

டோஃபு என்பது சோயா பாலினால் உருவான ஒரு வகையாக சீஸ். பொதுவாக சோயா பாலிலும் கால்சியம் அதிகம் இருக்கும். எனவே இந்த டோஃபுவிலும் நிச்சயம் கால்சியம் அதிகம் இருக்கும்.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

சாலமன்

சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.

சோயா பால்

சோயா பாலில் சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

அறுகீரை (Arugula)

இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

வெள்ளை காராமணி
பொதுவாக பீன்ஸில் கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!

கால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்!!!

உடலுக்கு வேண்டிய சத்துக்களில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, இரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். தற்போது நிறைய மக்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இவற்றிற்கு காரணம் உடலில் கால்சியம் சத்தானது மிகவும் குறைவாக இருப்பதால் தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளததும் ஒரு வகையில் காரணம்.

அதுமட்டுமின்றி கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால், அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட்டால், கால்சியத்தை உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி சத்தும் மிகவும் அவசியமாகிறது. எனவே கால்சியத்துடன், வைட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

பொதுவாக கால்சியம் குறைபாடானது ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும்.

எனவே ஆண்களை விட பெண்கள் கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது எந்த உணவுகளிலெல்லாம் கால்சியம் சத்து அதிகம் உள்ளது என்பதைப் பார்ப்போமா!!!

பால்

பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

தயிர்

பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

மத்தி மீன்

மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ்

பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

உலர் அத்திப்பழம்

அத்திப்பழத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்

பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

கடல் சிப்பி

பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால்

இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.

எள்

பொதுவாக எள்ளை அதிகமாக சாப்பிட மாட்டோம். ஆனால் ஒரு டீஸ்பூன் எள்ளில், ஒரு டம்ளர் பாலில் இருக்கும் கால்சியம் சத்தானது நிறைந்துள்ளது.

பிரேசில் நட்ஸ்

6 பிரேசில் நட்ஸில் 45 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இந்த நட்ஸிலும் அதிகமான புரோட்டீன் உள்ளது.

உலர்த்திய மூலிகைகள்

நிறைய உலர்த்திய மூலிகைகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எப்படியிருப்பினும் இத்தகைய மூலிகைகளை அப்படியே சாப்பிட முடியாது. ஆனால் அவற்றை சூப், குழம்பு போன்றவற்றில் தினமும் சிறிது சேர்த்து சாப்பிட்டால் நல்லது.

டோஃபு

டோஃபு என்பது சோயா பாலினால் உருவான ஒரு வகையாக சீஸ். பொதுவாக சோயா பாலிலும் கால்சியம் அதிகம் இருக்கும். எனவே இந்த டோஃபுவிலும் நிச்சயம் கால்சியம் அதிகம் இருக்கும்.

ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது.

சாலமன்

சாலமன் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதோடு, இந்த மீன் கடல் நீரில் உள்ள கனிமச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்வதால், இதனை முள்ளோடு சாப்பிட வேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துக்களையும் பெறலாம்.

சோயா பால்

சோயா பாலில் சாதாண பாலை விட அதிக அளவில் கால்சியம் இல்லாவிட்டாலும், ஒரு அவுண்ஸ் பாலில் 300 மில்லி கிராம் கால்சியம் சத்தை பெறலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்.

அறுகீரை (Arugula)

இது ஒருவகையான கீரை வகைகளுள் ஒன்று. இதனை பொதுவாக சாலட்டில் தான் பயன்படுத்துவார்கள். இந்த கீரையில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளதால்,. இதனை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

வெள்ளை காராமணி
பொதுவாக பீன்ஸில் கால்சியம் அதிகம் இருக்கும் என்று கேள்விபட்டிருக்கமாட்டோம். ஆனால் இதிலும் ஓரளவு கால்சியம் நிறைந்துள்ளது. அதிலும் 1/2 கப் வெள்ளைக் காராமணியில் 100 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

 

எலுமிச்சையில் இத்தனை விஷயமா?

எலுமிச்சையில் இத்தனை விஷயமா? 

 

 எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.

தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.

நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.

மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.

நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.

சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.

எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.

சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?



 
 
பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பாதத்தில் போதுமான ஈரப்பசை இல்லாதபோது வெடிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை ‘ட்ரொமாட்டிக் ஃபிஷர்ஸ்’ ( traumatic fissures ) என்று குறிப்பிடுவோம். பித்தவெடிப்பு இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வருகிற ஒன்றுதான்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா... பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4 தடவைகூட பயன்படுத்தலாம்.

* பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

* தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

* கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* ஆலமரப்பால்,அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும் .

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

தேன் .....


* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

Sunday, March 30, 2014

நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?



நீரிழிவு கால்புண்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

காலில் புண்கள் ஏற்படுவது மற்ற எவர்களையும் விட நீரிழிவாளர்களில் அதிகம். அத்துடன் அவர்களுக்கு மிகவும் ஆபத்தானதும் கூட.

நீரிழிவினால் காலுக்கான

*குருதி ஓட்டம் குறைவதனாலேயே அவர்களுக்கு காலில் புண்கள் ஏற்படுகி்ன்றன.

*அதே இரத்த ஓட்டக் குறைபாட்டினால் அவை குணமடைவதும் சிரமம். விரல்களையும் கால்களையும் அகற்ற வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகிறது.

*மற்றொரு காரணம் நரம்புகளின் பாதிப்பால் நீரிவாளர்களுக்கு கால்களில் உணர்ச்சி குறைவு என்பதால் காயம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.

*உணர்வு குறைவு என்பதால் அவை பெருகும்வரை தெரிவதும் இல்லை.

*வெறும் காலுடன் கோயில் கும்பிடப் போய் காலில் ஏதாவது குத்திக் காயங்கள் தேடிக் கொண்ட பலரைப் பார்த்திருக்கிறேன்.கால்களை இழந்தவர்களும் உண்டு.

காலில் புண்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளை The American Podiatric Medical Association வழங்கியிருக்கிறது.

*உங்கள் மருத்துவரை ஒழுங்கான காலக்கிரமத்தில் சந்தியுங்கள்

*புகைப்பதையும், மது அருந்துவதையும் தவிருங்கள்

*குருதியில் கொலஸ்டரோல் மற்றும் சீனியின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள்.

*உங்கள் காலுக்கு ஏற்ற காலணிகளையும் சொக்ஸ்களையும் அணியுங்கள்

*காலணிகள் அணியாது வீட்டு முற்றம், வீதி, காணி எங்கும் காலெடுத்து வைக்காதீர்கள்

*தினமும் உங்கள் பாதங்களை ஒழுங்காக கவனியுங்கள்.

*உரசல்கள், காயங்கள், நிறமாற்றங்கள், வலி, போன்ற எதையும் உடனடியாக மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.

*நகம் வெட்டும்போது மிகுந்த அவதானம் தேவை. குளித்த பின் நகங்கள் மிருதுவாக இருக்கும் நேரத்தில் வெட்ட வேண்டும். நகத்தின் ஓரங்களை வளைத்து வெட்டாது, நேராகவும், அருகில் உள்ள சருமத்தைவெட்டாதபடியும் அவதானம் வேண்டும்.

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்..

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

• வெற்றியில் சிரிப்பவன் வீரன்.
• கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.
• துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.
• மகிமையில் சிரிப்பவன் மன்னன்.
• விளையாமல் சிரிப்பவன் வீணன்.
• இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.
• மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.
• மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.
• கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.
• ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.
• தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.
• நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.
• ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.
• கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.
• கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.
• இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.
• நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.
• தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி.
• இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி.
• குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.
• நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.
• அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.
• தற்பெருமையில் சிரிப்பவன் கோழை
• சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்.
• நிலை மறந்து சிரிப்பவள் காதலி.
• காதலால் சிரிப்பவள் மனைவி.
• அன்பால் சிரிப்பவள் அன்னை.""

Saturday, March 29, 2014

ஆப்ரகாம் லிங்கனுக்கு வந்த கனவு,,

Psychic Powers:
இது ஆப்ரகாம் லிங்கனுக்கு வந்த கனவு.

உங்களில் பலரும் இதை கேள்வி பட்டு இருப்பீர். ஆப்ரகாம் லிங்கன் தனது முடிவை கனவின் மூலம் கண்டார்.

இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு Ward Hill Lamon என்ற நண்பருடன் பேசிக்கொண்டு இருக்கையில் தனது கனவை பற்றி கூறினார்.
அவர் கூறியது "

பத்து நாட்களுக்கு முன்பு மிகவும் தாமதமாக ஓய்வு எடுக்க சென்றேன். மிகுந்த களைப்பின் காரணமாய் உடனே உறங்கி விட்டேன். சிறுது நேரத்தில் கனவில் காண தொடங்கினேன்.

\\ * அங்கே மரண அமைதி இருந்தது. பிறகு நான் விசும்பல்களை கேட்டேன். பலர் அழுது கொண்டிருந்தனர்.

பின்பு மெத்தையை விட்டு கீழ்த்தளத்தில் வந்து அலைந்து கொண்டிருந்தேன் என நினைக்கிறேன்.
அதே உருக்கமான அழுகையால் அங்கிருந்த அமைதி உடைந்தது.

ஆனால் அழுபவர்கள் கண்ணுக்கு புலப்படாமல் இருந்தனர். நான் ஒவ்வொரு அறையாக சென்றேன்.
எங்கும் யாருமே தென்படவில்லை.
ஆனால் அதே துன்பத்தின் ஓசை நான் கடந்தபோது என்னை சந்தித்தது.

அனைத்தும் அறைகளிலும் விளக்கெரிவதை பார்த்தேன்.எல்லா பொருட்களும் பழக்கப்பட்டவையாக இருந்தன.

ஆனால் இதயங்கள் உடைந்துவிடும் அளவுக்கு அழுது கொண்டிருக்கும் மக்கள் எங்கே? எனக்கு புதிராகவும் திகைக்க வைப்பதாகவும் இருந்தது.

இவை அனைத்திற்கும் என்ன அர்த்தம்? இந்த சூழ்நிலையின் காரணத்தை கண்டுபிடிக்க உறுதியாய் இருந்தேன்.அவை மர்மமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

கிழக்குப் பக்க அறைக்கு செல்லும் வரை அப்படிதான் இருந்தது. அங்கே ஒரு வருந்தத்தக்க ஆச்சர்யத்தை சந்தித்தேன்.

எனக்கு முன்னாள் ஒரு பாடை (சவப்பெட்டியை ஏற்றிசெல்லும் வண்டி) இருந்தது. அதன் மேல் ஈமச்சடங்களுக்கான உடையணியப்பட்ட ஒரு பிணம் இருந்தது.

சுற்றிலும் படை வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.கூட்டம் கூட்டமாக மக்கள் பிணத்தை பார்த்து அழுது கொண்டிருந்தனர்.

பிணத்தின் முகம் மூடப்பட்டிருந்தது. "வெள்ளை மாளிகையில் இறந்தது யார்?" என படை வீரர்களுள் ஒருவனிடம் கேட்டேன்.அவன்
"ஜனாதிபதி", "அவர் ஒருவனால் கொல்லப்பட்டார்" என்றான்.

பின்பு கூட்டத்திலிருந்து பெரும் அழுகை
ஏற்பட்டது. * //

நான் விழித்துக் கொண்டேன்.

அதன் பின்பு அந்த இரவு நான் தூங்கவில்லை.அது வெறும் கனவுதான் என்றபோதிலும் எப்போதும் என்னை வித்தியாசமாக நச்சரித்தது." - என்பதாகும் .

இந்த கனவு கண்டு இரண்டாவது வாரம் , ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி John Wilkes Booth என்பவனால் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார் .

அவருடைய உடல் மக்களின் பார்வைக்காக
வெள்ளை மாளிகையின் கிழக்குப் பக்க
அறையில் கிடத்தப்பட்டிருந்தது.

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்..


சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்

அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மினரல் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள்.

சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கொண்டது. உயரழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அத்திப்பழம் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

இதயம்....


 
 * ஆரோக்கியமான நீடித்த ஆயுளைப் பெற இதயம் தொடர்ந்து சீராக இயங்க வேண்டும். அதற்கு இதயத்தைப் பாதுகாத்துக்கொள்வது மிக அவசியம். இதயத்தைப் பற்றிய சில முக்கியத் தகவல்கள்:
* கருப்பையில் கரு உருவாகும்போது, முதலில் உருவாகும் உறுப்பு இதயம். இதயத் துடிப்பும் ஆரம்பமாகிறது. இது பெரிதாகும்போது, நான்கு அறைகளாகப் பிரிகிறது. வளர்ந்த ஒருவரின் இதயம் சராசரியாக 5 அங்குல நீளம், 3 ½ அங்குல அகலம் இருக்கும்.
* மனித உடலின் தசைகளிலேயே மிக உறுதியானது இதயத் தசை. இதயத் தசைகள் பல ஆயிரக்கணக்கான தசைநார்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், அவை அனைத்தும் இணைந்து ஒரே தசைநாரைப் போலவே வேலை செய்கின்றன.
*இதயம் சீராக ஒரு நாளைக்கு 1,00,000 முறைக்கு மேல் துடிக்கிறது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 70 முறை, ஒரு மணிக்கு 4,200 தடவை துடிக்கிறது. இப்படியாக 24 மணி நேரத்தில் 1,00,800 தடவை துடிக்கின்றன.
* இதயம் ஒரு நாளில் மனித உடலில் இருக்கும் சுமார் 60,000 மைல் நீள அளவுள்ள ரத்த நாளங்களில் 7,200 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 5 லிட்டர் வீதம், ஒரு மணி நேரத்தில் 300 லிட்டரைச் செலுத்துகிறது. 24 மணி நேரத்தில் இது 7,200 லிட்டராகிறது.
*ஒரு நிமிடத்துக்குச் சுமார் 5 லிட்டர் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்கிறது. அதாவது ஒரு நாளைக்குச் சுமார் ஒரு லட்சம் தடவை.
* ஒருவர் வேலை செய்யாமல் இளைப்பாறும்போதும் இதயம் ஒரு நிமிடத்துக்கு 45 முதல் 80 முறை வரை ஒரே சீராகத் துடிக்கிறது. ஆனால், பளுவைத் தூக்கும்போதோ, உடற்பயிற்சி செய்யும்போதோ, ஒரு நிமிடத்துக்கு 4 மடங்கு அதிகமான ரத்தத்தைச் செலுத்துகிறது.
* ஒரு மனிதனின் சராசரி 70 வயது வாழ்க்கையில், இதயம் கிட்டத்தட்ட 25 கோடி முறை சுருங்கி விரிகிறது.

பாஸிடீவ் திங்கிங்...



பாஸிடீவ் திங்கிங்...
-------------------------------------------
டிஸ்கி : Fan ஓடாத ( UPS Down ) ஒரு ராத்திரி
வேளையில் , மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ,
கொசுவோடு கபடி விளையாடிட்டு இருக்கும்
போது என் சிந்தனையில் குதிச்சது..
கரண்ட் கட் ஆகறதால எவ்ளோ நன்மைகள்
இருக்கு தெரியுமா..!?
1. கரண்ட் பில் அதிகமா வராது.,
2. T v ஓடாது.., ஜவ்வு மிட்டாயில இருந்து
கொஞ்ச நேரம் தப்பிச்சுக்கலாம்..!
3. குழந்தைங்க வெளிய போயி விளையாடுவாங்க..
உடம்புக்கு நல்லது தானே..!
4. நாம ரொம்ப Punctual-ஆ இருப்போம்..,
கரண்ட் போறதுக்குள்ள வேலைகளை
Correct-ஆ செய்யணுமில்ல...!
5. கடிகாரத்தை பார்க்காமலே Time
தெரிஞ்சிக்கலாம்..,
கரண்ட் போனா - 8 மணி
கரண்ட் வந்தா - 9 மணி
6. போர் அடிக்குதுன்னு Books படிப்போம்..,
General Knowledge வளரும்..!
7. நைட் கரண்ட் போனா.. வீட்லயே
" Candle Light Dinner " சாப்பிடலாம்..
8. Fan ஓடாது., புழுக்கமா இருக்கும்.,
அதனால வியர்வை வெளியேறும்..
அது உடம்புக்கு நல்லதுன்னு டாக்டரே
சொல்றார்ல..
9. மிக்ஸி., கிரைண்டர், வாஷிங் மெஷின்
எதுவும் ஓடாது.. அதனால மாவாட்டறது,
துணி துவைக்கறது சட்டினி அரைக்கறது
எல்லாம் உடம்புக்கு எக்ஸர்ஸைஸ்
( யார் உடம்புக்குன்னு கேக்க கூடாது.. யார்
ஆட்டினா என்ன... உடம்புக்கு நல்லதுதானே
ஹி., ஹி,,, )
என் husband கிட்ட " நீங்க ஒரு Point சொல்லுங்கன்னு "
சொன்னேன். அப்ப அவர் சொன்னது...
10. கரண்ட் இல்லாததால., நீ Computer
முன்னாடி உட்காராம.., என்கூட நாலு வார்த்தை
பேசிட்டு இருப்ப...!
இப்ப புரியுதா...
" வடையில ஓட்டை இருக்கேன்னு பீல் பண்ணாம..
ஓட்டையை சுத்தி வடை இருக்கேன்னு நினைச்சி
சந்தோஷப்படணும்...!!! "
இதுக்கு பேரு தான் பாஸிடீவ் திங்கிங்..!

Friday, March 28, 2014


1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. மலையாள நடிகர் பிரேம் நசீர் 85 கதாநாயகிகளுடன் நடித்து உலக சாதனை புரிந்தவர்.

8. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

9. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

10. முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

11. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

12. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

13. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

பொது அறிவு,

1.உலகின் முதல் கண் வங்கி 1944ஆம் ஆண்டு நியூயார்க்கில் ‌ நிறுவப்பட்டது.

2.பூச்சிகளில் வேகமாக பறக்கக் கூடியது தும்பி.

3.ஸ்கூட்டரைக் கண்டுபிடித்தவர் கிரேவில் பிராட்ஷா.

4.காகமே இல்லாத நாடு நியூசிலாந்து.

5.ஆறுகள் மற்றும் நதிகள் இல்லாத நாடு சவூதி அரேபியா.

6.50 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலரின் பெயர் கார்டஸ்.

7.விவசாயம் முதன்முதலில் தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டது.

8.உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம்.

9.வெள்ளை யானை பூமி என்று அழைக்கப்படும் நாடு தாய்லாந்து.

10.ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகையை விட‌ 2 மடங்கு அதிகமாக கங்காருகள் உள்ளன.
நாமாக
முன்வந்து நமது
கண்களைத் தானமாக
கொடுக்க
விரும்பினால்,
அருகில் உள்ள கண்
வங்கியில்
பதிவு செய்து, அந்த
விபரத்தை வீட்டில்
உள்ளவர்களிடம்
தெரிவித்துவிட்டு,கண்
வங்கி பற்றிய
விபரங்களை
நிரந்தரமாக வீட்டில்
மற்றவர்கள் கண்ணில்
படும் இடத்தில்
வைத்திருக்க
வேண்டும்.

மிக
முக்கியமான,
சாத்தியமான
மற்றொன்று, நமக்குத்
தெரிந்து நண்பர்கள்
அல்லது உறவினர்கள்
வீட்டில் மரணம் நிகழும்
போது,
இறந்தவர்களின்
கண்களை தானமாக
கொடுக்க
ஊக்குவிப்பது...

மரணம் நிகழ்ந்த வீட்டில்
முடிவெடுக்கும்
நபரை அணுகி, கண்
தானம் பற்றிய
முக்கியத்துவத்தை
எடுத்துச் சொல்லி,
எப்படியாவது
அவர்களை
ஒப்புக்கொள்ள
வைக்க வேண்டும்.

இதில் அவர்கள் என்ன
சொல்வார்களோ என்று கவலைப்பட
ஒன்றுமேயில்லை.

ஒன்று சரி அல்லது
இல்லையென்று
சொல்வார்கள்
அவ்வளவே,
வேறு எந்த நஷ்டமும்
இல்லவே இல்லை.

ஒரு வேளை நாம்
கேட்காமல் போனால்
நிச்சயம் கண்கள் தானம்
செய்ய
வாய்ப்பில்லாமல் சில மணி நேரங்களில் அந்த
கண்கள்
அழிந்து போகலாம்,
ஒருவேளை நாம்
கேட்டதால் அவர்கள்
ஒப்புக் கொண்டால்
கண்கள் தானமாக
பெற்று அதன் மூலம்
இரண்டு நபர்களுக்கு
பார்வையளிக்க
முடியும்.

கண்களை தானம் அளிக்க
அந்த குடும்பம்
ஒப்புக்கொண்டால்,
உடனடியாக அருகில்
உள்ள கண்
வங்கி அல்லது அரிமா சங்க
(லயன்ஸ் கிளப்)
அல்லது ஏதாவது ஒரு
சேவைச் சங்க
உறுப்பினர்களை
அணுகினால் அவர்கள்
நிச்சயம்
கண்களை தானமாக
எடுத்துச்
சென்று விடுவர்.

கண்களை எடுத்து
இன்னொரு நபருக்கு
பொருத்துவது
என்பது
முழுக் கண்களையும்
பொருத்துவதில்லை.

கண்ணில் இருக்கும்
விழித்திரை (Cornea
மட்டுமே எடுத்துப்
பொருத்தப்
படுகிறது.

இதுபோல்
பார்வையில்லாமல்
விழித்திரை வேண்டி
காத்திருப்போர்
ஒவ்வொரு ஆண்டும்
சுமார் 840000 பேர்
இருக்கிறார்கள்
ஆனால், கண் தானம்
மூலம் அவர்கள்
தேவையை வெறும்
பத்து சதவிகிதமே
பூர்த்தி
செய்யப்படுகிறது.

தற்சமயம்
ஒருவரிடமிருந்து இருந்து
எடுக்கப்படும்
இரண்டு கண்கள்,
இரண்டு பார்வையற்ற
நபர்களுக்குப்
பொருத்தப்படுகிறது.


யார் யார் கண்
தானம்
செய்யலாம்?

கண் தானம் செய்ய
வயது வரம்பு
தடையில்லை.
எந்த
வயதானாலும்
எடுக்கலாம்.

சர்க்கரை நோய்,
இரத்த அழுத்தம், கண்
புரை அறுவை
சிகிச்சை
செய்தவர்கள்
ஆகியோரின்
கண்களை தானமாக
எடுக்கலாம்.

கண்களை இறந்த 6
மணி நேரத்திற்குள்
எடுக்க வேண்டும்.
இறந்த பின் கண்கள் மேல்
ஈரமான பஞ்சு அல்லது
துணியால்
மூடி வைக்கவும்,
இறந்தவர்
உடலுக்கு மேலாக
காற்றாடி (ஃபேன்)
ஓடாமல்
பார்த்துக்கொள்ளவும்.

கண்களை எடுக்க பத்து
நிமிடங்கள்தான்
தேவைப்படும்.
கண்களை எடுத்த பின்
முகத்தில் எந்த
மாறுபாடும்
தெரியாது.


யார் கண்களை எடுக்க
முடியாது?


விஷக்கடி, விஷம்,
புற்றுநோய், மஞ்சள்
காமாலை, எய்ட்ஸ்
நோயால் இறந்தவர்கள்
கண்களை மட்டும்
தானமாகப்
பெறுவதில்லை.

யாரோ ஆங்காங்கே
செய்யும்
தியாகங்களில்தான் உலகம்
வளம்பெறுகிறது...

மரணம்
என்பது தவிர்க்க
முடியாது, எனினும்
ஒரு மரணம்
இரண்டு பார்வையற்ற
நபர்களின் வாழ்வில்
ஒளியேற்றி
வைக்கிறது அந்த
ஒளியேற்றும்
புண்ணிய காரியம் நம்
கைகளில்
மட்டுமே உள்ளது.

இனியொரு மரணம்
நிகழுமாயின், கண்
தானம் நம் முன்
பிரதானமாய்
நிற்கட்டும்.
____________

Wednesday, March 26, 2014

காக்பிட்’ எனப்படும் கருப்பு பெட்டி..


‘காக்பிட்’ எனப்படும் கருப்பு பெட்டி.
விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள்.
இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும். பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும் பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக இருப்பது கருப்புப் பெட்டியாகும். விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம் ( ATR ) என்பதே கருப்புப் பெட்டி என அழைக்கப் படுகிறது. இந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது. மேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப் பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
இதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், எஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
‘கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில்இருக்கும்.
ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.
பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.
சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்.
விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும்.
இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.
2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.
1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.
கடலில் பல மைல் ஆழத்தில் விழுந்தாலும் பாதிக்காது.
இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.
பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். 1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். இருப்பினும் அவரது கண்டுபிடிப்பின் முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்ற பங்காக கருதப்படுகிறது.
விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான். 1960 – ம் ஆண்டில் அது அமலுக்கு வந்த்து. கருப்புப் பெட்டி என அழைத்தாலும் அதன் உண்மையான நிறம் ஆரஞ்சு என்பது குறிப்பிட்த்தக்கது. விபத்துக்கு பிறகு எளிதாக அடையாளம் காண்பதற்காக அந்த பெட்டியின் மீது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயின்ட் அடிக்கிறார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர். மேலும், சாலை விபத்துகளைக் கண்டறிவதற்குக் கூட, வாகனங்களில் அப்பெட்டி பொருத்தப்படுகிறது.

ஸ்கிப்பிங் பண்ணுங்க!..

ஸ்கிப்பிங் பண்ணுங்க!
10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது,- 30 நிமிடம் ஜாகிங் செய்வதற்குச் சமம்.
ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால், உடலை ஃபிட்&ஆக வைத்துக்கொள்ள முடியும்.
தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்ததும் 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
ஜாகிங்கைவிட ஸ்கிப்பிங்கில் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.
குழந்தைகள் அனைவரும் தவறாமல் வீட்டிலேயே செய்ய வேண்டிய ஓர் எளிமையான பயிற்சி. குழந்தைகள் நன்கு உயரமாக வளரவும் இந்தப் பயிற்சி உதவுகிறது.
எப்போது செய்யவேண்டும்?
இதற்கென குறிப்பிட்ட நேரம் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் செய்வதால், சுத்தமான காற்றும் இயற்கையான சூழலும் டென்ஷன் இல்லாத அமைதியும் உடலுக்கு இன்னும் ஆரோக்கியத்தைத் தரும்.
யாரெல்லாம் செய்யக் கூடாது?
பெரியவர்கள், மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்னை உள்ளவர்கள், கயறைத் தாண்டிக் குதிக்க முடியாது என்பதால், அவர்கள் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
கர்ப்பிணிகள் செய்யவே கூடாது.
வயதான பெண்கள் மற்றும் தொப்பையுள்ள பெண்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது கவனம் தேவை.
பெண்கள் தாண்டிக் குதிக்கும்போது, கர்ப்பப்பை கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தாலும்கூட மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.
எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?
ஸ்கிப்பிங் விளையாடும்போது, வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஏதாவது சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டும்.
வயிறு நிறையச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட உடனே ஸ்கிப்பிங் செய்யக் கூடாது.
குளுகோஸ் அதிகம் உள்ள வாழைப்பழம், மாவுச்சத்து குறைவாக உள்ள கோதுமை பிரெட் இதில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.
டாக்டரின் ஆலோசனைப்படி கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, கொழுப்பு உள்ள உணவுப் பொருள்களை சரிவிகித்தில் சாப்பிடலாம்.

Tuesday, March 25, 2014

விரும்பும் போதெல்லாம்
விரும்புகிறேன் என்பதை விட
வெறுத்த போதும் விரும்பினேன்
என்பதே உண்மையான
அன்பு.....!!!

/====================================
 வார்த்தைகளால் சொல்லும்
அன்பை விட
மௌனத்தால் சொல்லும்
அன்பில் தான்
வலிமை அதிகம்...
 
============================================

காதலிக்காக எதையும்
செய்வது பெரிதல்ல,அவளையே
கல்யாணமும் செய்யனும் அதான்
உண்மையான காதல.

================================================ 
 பிடிச்சவங்க கிட்ட பாசமா
பேசுற நேரத்த விட
காரணமே இல்லாம சண்ட
போட்டு அதுக்கு சமாதானம்
பண்ற நேரம் தான் அதிகம்

==================================================== 
 
நமக்கு நெருக்கமானோர்
நம்முடன் பேசாத
போது ஏற்படும்
வலியை விட அவர்கள்
மற்றவருடன்
நெருக்காமாக பேசும் போது ஏற்படும் வலி அதிகம்...!

======================================================
 நீ நேசிப்பவரை மாற்ற
முயற்சிக்காதே..அந்த
முயற்சியே
உனது நேசம் முழுமையாக
அவரை நீ ஏற்று கொள்ளவில்லை
என்பதைச் சொல்லும்....!!
 
==================================================
 ஆணுக்கு ஓர் மடியும்
பெண்ணுக்கு ஓர் தோளும்
இருந்தால்..எந்த சோகமும்
மறந்து விடும்.....!!!

================================================= 
சிரித்த முகத்தை
அழ வைக்கவும்..அழும ்
முகத்தை சிரிப்பை
வரவழைக்கவும்..இ தயம்
கவர்ந்த ஓர் உறவால்
மட்டுமே முடியும்....!!! !

====================================================
 உலகில் உள்ள
சித்திரவதைக்கெல்லாம்
செல்லப்பெயர் வைத்தால்
அது தான் காதல்...!!!

====================================
 விளக்கங்கள் கொடுத்து
கொடுத்து தக்க வைக்கும்
உறவுகள் நெடுங்காலம்
நீடிப்பதில்லை.. ....!!!

=============================================




 

 
 —


 

Monday, March 24, 2014

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக்கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு, மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி

வெற்றிக்கு வழி.....

வெற்றிக்கு வழி............................................

1.தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்..,

2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்…

3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்…,

4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற்வேண்டும்…,

5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது…,

6.வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது…,

7.பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும்.

8. முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது..,,

9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது…,

10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு…,

11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்…,

12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்..,

13. மற்றவர்களை உங்களுக்கு உழைக்க வைப்பதில்தான் உங்கள் புத்திசாலித்தனம் இருக்கிறது…,

14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்….,

15. எதையும் நாளை என்று தள்ளி போடக்கூடாது..,

16. கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்…,

17. மற்றவர்களை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது…,

18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது…,

19. சந்தோஷத்தை கொடுப்பது பணம் மட்டுமல்ல….,

20. நம்புங்கள் உங்களை !

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா......???


தீக்காயம்
ஏற்பட்டு விட்டதா......???

மருந்தை தேடி அலைய
வேண்டாம்...!
தீக்காயம் பட்ட உடன்,
உடனடியாக குளிர்ந்த
நீரை சூடு குறையும்
வரை காயத்தில்
விடுங்கள்...
பின்னர்
ஒரு முட்டையை எடுத்து அதன்
வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மேல்
படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில்
வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பாகிறது...
சிறிது நேரத்தில்
வலி முற்றிலும்
குறைந்து விடும்...

இதை தொடர்ந்து செய்து வந்தால்.....
அடுத்த 10 நாட்களில்
காயத்தின் தடயம்
மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும்
மீட்பு படையினர்
பயன்படுத்தும் யுக்தியும்
இதுவே.}

தைரியம் (குட்டிக்கதை)

தைரியம் (குட்டிக்கதை)

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.


வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்.

கவிதைகள்,

நம் அன்பை பற்றி நினைத்து பார்க்ககூட
நேரமில்லாதவர்களைத்தான் நாம்
துரத்தி துரத்தி நேசிக்கிறோம்...!!!!

 //////////////////////////////////////////////////////////////////////////////////////
யாரோடு வாழ்ந்தாலும்
நலமாய் இரு என
உன்னை நேசிக்கும் ஒருவர்
உனக்கு வாழ்த்தும் போது
தெரியாது
நீ நேசிக்கும் ஒருவருக்கு
வாழ்த்தும் போதுதான்
தெரியும்
அதன் வலி !
/////////////////////////////////////////////////////////////////////////////////////////
 காதலிக்கும் போது
காதலியை அளவில்லாமல் வர்ணிப்பதும்
ஆண்கள் தான்

அவர்களின் காதல் தோல்வியுற்றால்
சபிப்பதும் ஆண்கள் தான்

இதில் சிக்கிக்கொண்டிர
ுப்பது அப்பாவி பெண்கள்
///
/////////////////////////////////////////////////////////////////////////////////////////// 


பிறர் மீது நாம் வைக்கும்
அதிகமான நம்பிக்கை

சில நேரங்களில் நமது
வாழ்க்கையையே சிதைத்து
விடுகின்றது —
//////////////////////////////////////////////////////////////////////////////////////
 
 
கடவுளே கண்ணீருக்கு
நிறம் கொடுக்காதற்கு நன்றி. !
இல்லையேல். .

தலையணை பல ரகசியங்களை
வெளிப்படுத்தி இருந்திருக்கும்...
///////////////////////////////////////////////////////////////////////////////////
 
விளக்கங்கள் கொடுத்து
கொடுத்து

தக்க வைக்கும்

உறவுகள் நெடுங்காலம்
நீடிப்பதில்லை......!!!
///////////////////////////////////////////////////////////
 

மணத்தக்காளி கீரை..!

மணத்தக்காளி கீரை..!

மணத்தக்காளி கீரைக்கு.. மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

மணத்தக்காளி கீரையில் புரதம் (5.9 சதவீதம்), கொழுப்பு(1.0 சதவீதம்), சுண்ணாம்பு(210 மி.கி), பாஸ்பரஸ்(75 மி.கி), இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், மருத்துவ குணங்களான கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), டானின் (3.60 சதவீதம்), சப்போனின்(9.10 சதவீதம்) ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) என ஏராளமான தாது உப்புகளும், உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

இத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்.

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!....

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

நண்பர்களே அந்த காலங்களில் நமது வீடுகளில் தண்ணிர் செம்பு குடங்களில் பிடித்து வைப்பார்கள் ஏன் தெரியுமா ?

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர்
கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!''.

''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறதாம்.

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்.

தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’.

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான் !!!

சில அரிய சுவையான தகவல்கள்...



 


நீங்கள் இதுவரை அறிந்திராத சில
சுவையான உண்மைத் தகவல்கள்

1. திருப்பதியில் 200
ஆண்டுகளுக்கு முன்னர்
“புளியோதரை”தான்
பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்”
முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண்
சிங்கம் சாப்பிடும்.

5. வாத்து அதிகாலையில்
மட்டுமே முட்டையிடும்.

6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய
அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும்
ஆவார்.

9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26
ஆகும்.

10. அமெரிக்காவை விட
சகாரா பாலைவனம் பெரியது.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள்
ஆகியோரில் சிலரினை பற்றிய சில
அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன்
பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள்
தான்.

2)தோமஸ்
அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால்
பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும்
எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள்
என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர்
காக்கை வலிப்பு நோய் உள்ளவராக
இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன்
தனது ஒன்பது வயது வரையும்
தங்குதடையின்றி பேசவல்லவராக
இருக்கவில்லையாம், இதனால்
அவரை பெற்றோர்

மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல்
நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை
வழங்க முன்வந்தது, ஆனால்
அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்

Sunday, March 23, 2014

குறட்டை ஒரு ஆபத்தான நோயா ?...

ஆரோக்கியம் பேணுவோம்

குறட்டை ஒரு ஆபத்தான நோயா ?

ஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும் உடனே மறுப்பார். எல்லா வீடுகளிலும் இந்தப் பிரச்னை உண்டு.

நாம் தூங்கும் போது, லேசான தூக்கத்தில் துவங்கி, ஆழ்ந்த தூக்கத்திற்குச் செல்கிறோம். இப்படி தூங்கும் போது, வாயின் மேல் பகுதியில் உள்ள தசைகளும், தொண்டைப் பகுதியும் ஓய்வு எடுத்துக் கொள்ளும் வகையில், தளர்ந்து விடும். அப்போது, மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது, இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்னைகள் ஏற்படும் போதோ, சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்னைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும்.

அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது. கழுத்தைச் சுற்றி, அளவுக்கு அதிகமாக தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன் வரை, குறட்டை விடுபவர்களை கிண்டல் செய்பவர்கள் அதிகம். குறட்டை ஏற்படுத்தும் குழந்தைகள் தொந்தரவு ஏற்படுத்துபவர்களாகக் கருதப்பட்டனர். இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப்படுகிறது. இது உடலில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியத்தின் அடையாளமாகும்.

இது குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் கூறுகையில், ஒருவர் தூங்கும் போது அவரது மூச்சுப் பாதை பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ அடைத்துக் கொள்கிறது. அப்போது, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கலாம். இதனால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.
தூங்கிக் கொண்டிருக்கும் போது இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்பட பெரும்பாலும் இதுவே காரணமாக அமைகிறது.
அதிக உடல் எடை காரணமாக, வயிறு அல்லது கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து விடும். இதனால், நுரையீரலால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிருக்கும் போது தேவையான அளவுக்கு விரிவடைய இயலாமல் போகும். இது, மூச்சை உள்ளிழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த சமயங்களில், ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட நேரிடுகிறது.


ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது, நம் கண்கள் வேகமாக அசையும். அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று, வெளியேறும். இதற்கு, “அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு மணி நேரத்திற்கு, 15க்கும் மேற்பட்ட முறை, நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளி வருகிறது. குறட்டை விடும் போது திடீரென நின்று, திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால், ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய அடைப்பு, திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.


“அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே’ ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

அதிக சத்தம் கொண்ட குறட்டை, பகல் நேரத்தில் மயக்கமாக இருத்தல், இரவில் வியர்த்தல், காலையில் எழுந்ததும் தலைவலி. சாதாரண மயக்க நிலைக்கும், சோர்வுக்கும், குறட்டைக்கும் இது போன்ற ஆபத்தான உபாதைக்கும் “எப்ஒர்த்’ என்ற முறையில், வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.

கீழே உள்ள கேள்விக்கான பதில்களுக்கு, 0, 1, 2, 3 என மதிப்பெண்கள் கொடுங்கள். உங்களுக்கு ஏற்பட்டுள்ளது எந்த மாதிரியான உபாதை எனக் கண்டுபிடித்து விடலாம்.
(0 – எப்போதும் இல்லை, 1 – குறைந்த அளவு வாய்ப்பு, 2 – போதுமான அளவு வாய்ப்பு, 3 – அதிக அளவு வாய்ப்பு).

1. எப்போதெல்லாம் தூக்கம் வருகிறது?
அ) “டிவி’ பார்க்கும் போது.
ஆ) “மீட்டிங்’கில் உட்கார்ந்திருக்கும் போது.
இ) தொடர்ந்து ஒரு மணி நேரம் காரில் பயணிக்கும் போது.
ஈ) மதிய நேரத்தில் படுக்கும் போது.
உ) மதிய உணவுக்குப் பின், சும்மா அமர்ந்திருக்கும் போது.
ஊ) நீங்கள் அமர்ந்திருக்கும் கார், “டிராபிக் சிக்னலில்’ நிற்கும் போது.

மேலே உள்ள பதில்களுக்கு மதிப்பெண் கொடுத்து விட்டீர்களா? இந்த மதிப்பெண்களைக் கூட்டும் போது விடை, 1 முதல் 9 வரை வந்தால், உங்களுக்கு இந்த நோய் ஏற்படவில்லை எனக் கொள்ளலாம். 12 முதல் 16 வரை விடை வந்தால், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கொள்ளலாம்.

நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் பொருளாதார நிலை, மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் எம்.பி.ஏ., பட்டதாரிகளையும், மற்ற பட்டதாரிகளையும் பணிக்கு அமர்த்தி, கற்பனை செய்ய இயலாத அளவு சம்பளம் கொடுக்கிறது.சொந்த தொழில் செய்பவர்கள், பொதுத் துறை ஊழியர்கள், இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டி உள்ளது. இந்த புதிய வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். கவலை, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள், சாதாரண வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர். உடற்பயிற்சி செய்ய அவர்களுக்கு நேரமே இல்லை. பள்ளிகளில் குழந்தைகள் விளையாட ஊக்குவிப்பதில்லை. மாலை நேரங்களில், “டிவி’ பார்க்கவே நேரம் சரியாகி விடுகிறது. உடல் பருமன் அதிகரித்த நிலை, தொற்று நோய் போல பரவி விட்டது.


குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து, “ஸ்லீப் அப்னியே’ நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க, தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன. சற்று அதிக கட்டணம் வசூலித்தாலும், உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதா என்பதை, அவர்கள் கண்டறிந்து விடுவர்.
காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம். டான்சில், அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

ஆல்கஹால் அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்களின் மூளையில், மூச்சு மையம் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு இந்த நோய் ஏற்படலாம். தங்கள் பழக்கத்தை அவர்கள் நிறுத்தி விட்டால், குறட்டை, “ஸ்லீப் அப்னியே’ நோயிலிருந்து மீண்டு விடலாம்.

மீதமுள்ள 70 சதவீதத்தினர், உடல் பயிற்சி மற்றும் சீரான உணவு முறை ஆகியவற்றை மேற்கொண்டு, உடல் பருமனைக் குறைத்தால் போதும்; இப்பிரச்னைகளிலிருந்து விடுபட்டு விடலாம். உடல் பருமனுடன் உள்ளவர்களின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன், ஆபத்தான அளவில் குறைந்து காணப்படும். மூக்குக் கவசக் கருவி மூலம், தொடர் நேர் அழுத்த சுவாசம் (கன்டின்யுவஸ் பாசிட்டிவ் பிரெஷர் வென்டிலேஷன்) மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அதிகரிக்கும்.
தேவையான இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜனை உள்ளிழுத்து, நம் மூக்கின் வழியே உடலுக்குச் செலுத்தும் இவற்றை வீட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
குறட்டையைக் குறைக்க மேலும் சில கருவிகள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. டி-ஷர்ட்டின் பின்புறம், டென்னிஸ் பால் தைத்துக் கொள்ளுதல், விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என, பல வகைகள் உள்ளன. இவற்றின் நம்பகத் தன்மை, விவாதத்துக்கு உரியது. குறட்டை விடுபவரை, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்குத் திருப்பி படுக்க வைத்தாலே, குறட்டை ஒலி குறையும்.

“ஸ்பைரோ மீட்டர்’ கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், புட்பால் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை, தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால், குறட்டை குறைகிறது என்பது, ஆய்வில் கண்டறிந்த உண்மை. யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது.
தினமும் 45 நிமிட யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடைபயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால், இளவயது பருமனைக் குறைக்கலாம்; திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.
தாகத்துக்கு "தாமிரபரணி"

அருவிக்கு "குற்றாலம்"

தமிழுக்கு "பொதிகை மலை"

கடலுக்கு "உவரி"

டேம் க்கு "மணிமுத்தாரு"

பாவம் நீங்க "பாபநாசம்"

எழுமிச்சைக்கு "புளியங்குடி"

அப்பளத்துக்கு "கல்லிடை"

கருப்பட்டிக்கு "உடன்குடி"

பாய் க்கு "பத்தமடை"

தென்றலுக்கு "தென்காசி"

பிரியானிக்கு "சங்கரன்கோவில்"

அழகுக்கு "அம்பை"

பார்த்து ரசிக்க "மாஞ்சோலை"

புலி க்கு "களக்காடு"

பறவைக்கு "கூந்தங்குளம்"

படிப்புக்கு "பாளையங்கோட்டை"

சிமென்ட் க்கு "சங்கர்நகர்"

அன்பா பேசுனா "அல்வா"

வம்பா பேசுனா "அருவா"

இது தாம்லே எங்க திருநெல்வேலி சீமை..!

வெளிநாட்டு வாழ்க்கை...!


வெளிநாட்டு வாழ்க்கை...!

வெளிநாட்டில் வாழ்பவர்களை நாட்டுக்கு வரவிடாமல் தடுப்பது எது? யார் என்ன சொன்னாலும் நாட்டில் இருப்பவர்கள் இன்னும் வெளிநாடு வர துடிப்பதுக்கு எது காரணம்.

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.
...
சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

உண்மை வரிகள் ....

•பிறந்த நாட்டை விட்டு பிரிந்து உறவுகளை விட்டுவிட்டு தனியனாய் உரிமைகள் அற்று சிதறி கற்பனை வாழ்வில் மட்டுமே கனவுகளில் லயித்து நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது எங்கள் வாழ்க்கை..!

•எனக்கொரு கனவு கடனில் இருக்கும் வீட்டை என் காலத்திலாவது கட்டி மீட்டிட வேண்டும்..!

•நண்பனுக்கொரு கனவு தன்னோடு கஷ்டம் போகட்டும் தன் தமையன்களுக்காவது நல்ல படிப்பை நல்கிட வேண்டும்..!

•அறைத் தோழன்னுக்கோர் கனவு அப்பாவின் ஆப்பரேசனுக்கு பணம் சேர்த்து மீளாத் துயரில் இருக்கும் குடும்பத்தை மீட்டிட வேண்டும்..!

•தோழியின் கனவு தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும் தன் தங்கைகளுக்கு திருமணம் செய்து பார்த்து மகிழ்ந்திட வேண்டும்..!

•இப்படியாய் நாங்கள் கனவுகள் வெவ்வேறு பணம் ஒன்றே பிரதானமாய் எல்லோரும் வெளிநாட்டில்..!

•காய்ச்சல் வந்ததென்றால் கஞ்சி கொடுக்க தாயில்லை.
அன்பை பகிர்வதற்கு அருகில் என் தங்கை இல்லை.
அதிகாரம் செலுத்திட அருகாமையில் அப்பா இல்லை.
சோகம் சுமந்தோமேன்றால் ஆற்றுவதற்கு ஆளில்லை.
சொல்லொண்ணா துயரில் நாங்களும் அனாதைகள்தான்.
நாடுகடந்து வாழ்வதால் நாங்களும் அகதிகள்தான்..!

•அம்மா அழைக்கிறாள் உன்முகம் பார்த்து நாளாச்சு.. கண்ணுலையே நிக்குற.. வந்து காட்டிட்டு போ உன் முகத்தைன்னு..!

•தகப்பன் சொல்கிறார் தங்கச்சிக்கு மாப்ள பாத்துட்டேன்.. கல்யாணத்துக்கு பணம் பத்தல அனுப்பி வைப்பான்னு..!

•தம்பி கேட்கிறான் அண்ணா..நான் நடந்தே பள்ளிக்கூடம் போறேன் சைக்கிள் ஒன்னு வாங்கி தாணான்னு..!

•தங்கை கேட்கிறாள் கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வருவியான்னு..!

•முகத்தில் மலர்ச்சி காட்டி உள்ளத்தால் அழுகின்றோம் எப்போ விடியும் எங்களின் வாழ்க்கையென்று..!