Thursday, March 6, 2014

"வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை!"

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும்,
அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும்.

கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை.

தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.

"வெல்பவர்கள் தளர்வதில்லை! தளர்பவர்கள் வெல்வதில்லை!"
என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.

No comments:

Post a Comment