Wednesday, March 19, 2014

நான் வயிறு வலிக்க சிரித்த கதை...


நான் வயிறு வலிக்க சிரித்த கதை..
#முல்லா ஒரு நாள்
அழுதுகொண்டிருந்தார்.
அவரது நண்பர் கேட்டார்: “முல்லா, ஏன்
அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற
மாதம் எனது பாட்டி ஐந்து இலட்ச ரூபாய்
சொத்தை
எனக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “அட மகிழ்ச்சியான
செய்திதானே, ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: ”
பதினைந்து நாட்களுக்குமுன்
எனது பெரியப்பா இருபது இலட்ச
ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவைத்துவிட்டு
இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “மகிழ்ச்சியான
செய்தி! அதற்காக ஏன் அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “சென்ற
வாரம் எனக்கு 30 இலட்ச ரூபாய்
சொத்தை எனக்கு எழுதிவத்துவிட்டு
எனது அத்தை இறந்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்: “சந்தோஷப்படுவதைவிட்டு ஏன்
அழுகிறாய்?”
முல்லா சொன்னார்:
“மூன்று நாட்களுக்குமுன்
எனது தாத்தா இறக்கும்முன்
50 இலட்ச
ரூபாயை எனக்கு எழுதிவைத்துவிட்டார்.”
நண்பர் கேட்டார்:
“கொண்டாடாமல்
ஏனப்பா அழுகிறாய்?”
முல்லா சொன்னார்: “இனிமேல்
சொத்தை எழுதிவைத்துவிட்டு
இறந்துபோறதுக்கு
எனக்கு பணக்கார
சொந்தக்காரர்கள் இல்லையே,
அதனாலதான் அழுதுகிட்டு இருக்கிறேன்”
கேட்ட நண்பர்
மயக்கம்போட்டு கீழே விழுந்துவிட்டார்.

No comments:

Post a Comment