Thursday, March 13, 2014

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-

* நிமிடத்திற்கு நிமிடம் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. இந்த எண்ணச் சிதறலை ஒழுங்குபடுத்த தியானம் உதவுகிறது.

* தியானத்தை எளிதாக நினைக்க வேண்டாம். மனிதன் தான் விரும்பிய படியே ஆவதற்கு அது வழிவகுக்கும்.

* "எதிர்மறையான சிந்தனைகள் என் அறிவினுள் நுழைய இடம் கொடுக்க மாட்டேன்' என்று தியானப்பயிற்சியின்போது உறுதியெடுங்கள்

* நல்ல சிந்தனையில் மனதைச் செலுத்துங்கள். அப்போது தொல்லைப்படுத்திய குட்டிச்சாத்தான்கள் தானாகவே ஓடிவிடும்.

* இஷ்ட தெய்வத்தை மனதில் நிறுத்தி தியானம் மேற்கொள்ளலாம். இது உயர்ந்த பிரார்த்தனையும் ஆகும்.

* ஊற்றிலிருந்து நீர் பொங்கி வருவது போல, தியானம் செய்பவர்களுக்கு தெளிந்த அறிவு, வீரம், வலிமை உண்டாகும்.

* சோற்றை விட்டாலும் விடுங்கள். தியானம் செய்வதை ஒருபோதும் கைவிடாதீர்கள். உண்பதைக் காட்டிலும் தியானம் வாழ்விற்கு அவசியமானது.

- பாரதியார்.....

No comments:

Post a Comment