Sunday, February 9, 2014

ஆற்றல் தரும் வாழைப் பழம்...

ஆற்றல் தரும் வாழைப் பழம்

முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தைப் படைக்கிறோம். கல்யாணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியே இது.

வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. இவ்வளவு சத்துகள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.

வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலைத் தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகியுள்ளது. அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளனது.

வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் என்னும் சத்து மன அழுத்தத்தைக் குறைத்து மனத்தை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது. இரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

மலச் சிக்கலுக்கும் வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டின் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைரேட் சத்தும் 3 மடங்கும் அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு விட்டமீன் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. ஆனால் விலையே ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.

No comments:

Post a Comment