Wednesday, February 26, 2014

மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும் !!


மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும் !!
(27.02.14)

சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட
வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள்
ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும்.
சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும்
உண்ணாமல் சிவ சிந்தைனையுடன்
இருக்கவேண்டும்.இயலாதவர்கள் இருவேளை பால்,பழம்
சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய
ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008
முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில்
நடைபெறும் நான்குகால
அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும்
விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல்
பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம்,
பொறாமை ஆகியவற்றில்
இருந்து விடுதலை கிடைக்கும்.
விழித்திருந்து சிவபூஜை செய்வதால்
சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம்
செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ
பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம்
நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள
வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப்
போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும்,
என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும்
அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும்.
மகா சிவராத்திரியன்று விரதம்
இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான்
சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும்
என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள்
சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர்
சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும்
நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள்
என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும்
கிடைக்கும்.
ஓம் நமசிவாய

No comments:

Post a Comment