Sunday, February 9, 2014

மனதை தொட்ட வரிகள்....

மனதை தொட்ட வரிகள் ( படித்ததில்
பிடித்தது ) :-
* பணத்திற்காக ஒரு பெண்ணைத்
திருமணம் செய்து கொள்ள வேண்டாம்.
உழைத்தால் பணம் நிறைய
சம்பாதிக்கலாம்.
* உழைப்பு வறுமையை மட்டும்
விரட்ட வில்லை; தீமையையும்
விரட்டுகிறது.
* பெண்களில் இரண்டே பிரிவினர் தாம்
இருக்கிறார்கள்.ஒன்று அழகானவர்கள்.
மற்றொன்று அழகானவர்கள்
என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்.
* பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத
பெண்ணும் மதிப்பு இல்லாதவை!!!!!
* ஒரு தகப்பனார் பத்துக்
குழந்தைகளைக் காப்பாற்றலாம்.
ஆனால் பத்துக் குழந்தைகள்
ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும்
என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
* தெரிந்து மிதித்தாலும் தெரியாமல்
மிதித்தாலும் மிதிபட்ட
எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.
* சுயநலம் என்பது சிறு உலகம்.
அதில் ஒரே ஒரு மனிதன்தான்
வாழ்கிறான்
* வெற்றியின் ரகசியம் - எடுத்த
காரியத்தில் நிலையாக இருத்தல்.
*
குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக
எரிந்தாலும் அதன் அடியில்
சற்று இருள் இருக்கத்தான் செய்யும்
* பணம் இருந்தால் உன்னை உனக்குத்
தெரியாது. பணம் இல்லா விட்டால்
யாருக்கும் உன்னைத் தெரியாது.

No comments:

Post a Comment