Wednesday, June 11, 2014

தெரியுமா உங்களுக்கு . . .

தெரியுமா உங்களுக்கு . . .


*மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம்.

*200 கோடி பேருக்கு ஒருவர்தான் 116 வயதைக் கடந்து வாழ்கிறார்களாம்.

*நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம்.

*மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது.

*நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம்.

*நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும்.

*ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம்.

*வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன.

*மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு.

*கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன.

*ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும்.

*பெண் சிலந்திப் பூச்சிகள் ஆண் சிலந்தியுடனான உறவுக்குப் பின் அதைக் கொன்று விடுகின்றன.

*நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன.

*ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடுமாம்.

*ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்குமாம்.

*ஒரு சிலந்தி ஒரு மணி நேரத்தில் சுமார் 450 அடி நீளம் கொண்ட வலையைப் பின்னுகிறது.

*புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது.

*சூரியனுடைய ஒளியில் முப்பதினாயிரத்தில் ஒரு பகுதிதான் சந்திரனின் ஒளி.


*ஒவ்வொரு வகை சிலந்தியும் ஒவ்வொரு வகை வலை பின்னும்.

*வித்தைகாட்ட பயன்படும் குரங்குக்கு 'பரட்டைத் தலை குரங்கு' என்று பெயர்.

*ஒரு யுகம் என்பது 43, 20, 000 ஆண்டுகளாகும்.

*வளர்பிறை கோடுகள் மேல்நோக்கியும், தேய்பிறை கோடுகள் கீழ்நோக்கியும் இருக்கும்.

*கண்ணீர்புகை குண்டு, குதிரைக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது.

*கிறிஸ்தவர்களின் "போப் ஆண்டவர்" மூன்று மகுடங்களை அணிந்திருப்பார்.

*எலிக்கும், முயலுக்கும் பற்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

*"O" குரூப் ரத்தம் உடையவர்களை 'யுனிவர்சல் டோனர்' என்பர்.

*பாகிஸ்தான் - சீனா நாடுகளுக்கு இடையே உள்ள மலைத்தொடர் 'காரகோரம்'.

*அதி உயர விமானப் போர்ப் பயிற்சிப் பள்ளி காஷ்மீர் மாநிலம் 'குல்மார்க்'-ல் உள்ளது.

*நெப்போலியன் - 'Man of Destiney" என்று அழைக்கப்படுவார்.

*குருவியின் கழுத்திலுள்ள எழும்புகள் 23

*வரிக்குதிரையின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

*அணிலின் ஆயுட்காலம் 82 வருடங்கள்

*செம்மறி ஆட்டின் ஆயுட்காலம் 16 வருடங்கள்

*சிம்பன்சியின் ஆயுட்காலம் 41 வருடங்கள்

*பெருங்கரடியின் ஆயுட்காலம் 20 வருடங்கள்

*தீக்கோழியின் ஆயுட்காலம் 50 வருடங்கள்

*பென்குயினின் ஆயுட்காலம் 22 வருடங்கள்

*திமிங்கிலத்தின் ஆயுட்காலம் 30 முதல் 40 வருடங்கள்

*கடலாமையின் ஆயுட்காலம் 200 வருடங்கள்

*மூக்கில் பல் உள்ள விலங்கு முதலை

*பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு ஒட்டகம்

*ஈருடகவாழிகள் ஆமை, தவளை, முதளை

*பறக்க முடியாத பறவைகள் கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்

*தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு தேரை..

No comments:

Post a Comment