Monday, June 23, 2014

சிந்தனைத் துளிகள்....

சிந்தனைத் துளிகள்....

* பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்
* துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.
* இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.
* நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.
* கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.
* நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயோ அப்படியானால் நேரத்தை வீணாக்காதே ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் உருவாக்கப்பட்டது.
* இளமையில் தோல்வியடைந்தால் கவலை கொள்ளாதீர். அடுத்தடுத்து முயன்று வெல்லுங்கள். இளமை வெகுவிரைவில் கடந்து சென்றுவிடும்.
* நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு.
* பிறர்படும் துன்பத்தை கண்டு கண்ணீர் விடுவதை விட அவர்களது கண்ணீரை துடைக்க ஏதாவது செய்வதே மேல்.
* ஒரு மணிநேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழந்து விட முடியும். ஆனால் ஓர் ஆண்டு சென்றாலும் ஓர் நல்ல நண்பனை பெற முடியாது.
* நம்பியது தோல்வியடையும் போது எல்லாமே நிலைமாரி விட்டதாக தோன்றும் ஆனால் தோல்வியிலும் முயற்சியை கைவிடக் கூடாது.
* எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது.
* குறைவாக சிந்திக்கும் மனிதர்கள் தான் அதிகமாக பேசுவார்கள்.
* உலகத்தை நேசிக்க கற்றுக் கொள் ஆனால் ஒருவரையும் ஆழமாக நம்பி விடாதே.
* நீ வாழ்க்கையில் உயரும் போது மனிதர்களிடம் சுமுகமாக இரு ஏனெனில் நீ கீழே இறங்கும் போது அவர்களை சந்திப்பாய்.

No comments:

Post a Comment