Wednesday, December 11, 2013

அதிசயம்...அதிசயம்....


அதிசயம்...அதிசயம்....
.


* ரோலர் கோஸ்டர்சில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் ரத்த அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

* நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.

*சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.

*வெங்காயம் உரிக்கும் போது சூயிங்கம் மென்றால் கண்ணில் கண்ணீர் வராது.



*உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அதேப்போல் மின்சாரமும் 33 சதவீதம் அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர்.

* ஒருமணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்டால் காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.

* வலது கைப்பழக்கம் உள்ளவர்கள், இடது கைப்பழ்க்கம் உள்ளவர்களை விட சராசரியாக் 9 வருடங்கள் அதிகம் உயிர்வாழ்வர்.

*ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

*நமது மூக்கு உடலில் “ஏர் கண்டீசன்” போன்று செயல்படுகிறது, இது உடலுக்குள் குளிர்க்காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது. வெப்பகாற்றை குளிரூட்டி அனுப்புகிறது. காற்றில் உள்ள மாசுக்களைத் தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாக செயல்படுகிறது.

* நமது மூளை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை விட, மிகவும் சக்தி வாய்ந்தது. மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.



* நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது, நமது விழித்திரையானது சாதாரண நிலையை விட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.

* தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம், அது ஏற்கனவே தேனிக்களால் ஜீரணமாக்கப்பட்டிருப்பதுதான்.

*டைட்டானிக் கப்பல் தயாரிக்க வெறும் 7 மில்லியன் டாலர் மட்டும்தான், ஆனால் படம் எடுக்க 200 மில்லியன் டாலர் செலவானது.

* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே ஒரு பகுதி கண்ணின் கருவிழி மட்டுமே.



* உலக அளவில் மனிதனின் இறப்பிற்கு அதிகளவில் காரணமாக இருப்பது கொசுக்கள்தான்.

No comments:

Post a Comment