Tuesday, December 10, 2013

சிந்தனைகள்:-

சிந்தனைகள்:-

* நன்றாக வாழ வேண்டுமானால், முன் கூட்டியே திட்டமிடுங்கள். —நெப்போலியன்.

* வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். —எல்லீஸ்.

* தைரியமாக இருக்க வேண்டுமானால் பொய் சொல்லாதிருங்கள். —ஹெர்பர்ட்.

* சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறிகளை மதிப்பதில்லை. —காந்திஜி.

* முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான். —பல்வெர்.

* குணத்தில் மிக உயர்ந்தவனும், அடிமட்டத்தில் இருப்பவனும் மாறவே மாட்டார்கள். —கன்பூஷியஸ்.

* துணிவு இல்லையேல் வாய்மை இல்லை; வாய்மை இல்லையேல், பிற அறங்களும் இல்லை. —காந்திஜி.

* ஆசைகளை அடக்க முடியாத தனி சுதந்திரம் அழிவையே அளிக்கும். —கதே.

* அன்பு குறைந்த இடத்தில், குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன. —பிரதர்டன்.

* அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம். —லாங்பெல்லோ.

* எல்லாவிதமான தவறுகளுக்கும் அடிப்படை காரணம் அகங்காரம். —ரஸ்கின்.

No comments:

Post a Comment