Sunday, November 24, 2013

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-

பாரதியாரின் நற்சிந்தனைகள்:-

* உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் கடவுளின் வடிவமே. சூரியன், சந்திரன், விண்மீன்கள், மேகம் எல்லாமே கடவுள் அம்சமே.

* உயிர்கள் மட்டுமல்ல; உயிரற்றவையும் கடவுளே. எழுதுகோல், எழுத்தில் கூட கடவுளே உறைந்திருக்கிறார்.

* கடவுள் ஒருவரே. ஆனால் "என் தெய்வம் வேறு! உன் தெய்வம் வேறு!' என்று மக்கள் ஒருவருக்கொருவர் பகையுணர்வு கொள்வது கூடாது.

* மனக்கட்டுப்பாடுடன் வாழ்தல், பிறர் துயர் தீர்த்தல், மற்றவர் நலனுக்காக கடவுளிடம் வேண்டுதல் இவற்றை கடமையாகக் கொண்டிருங்கள்.

* அஞ்சாமை மனிதனுக்கு அவசியம். உச்சி மீது வானம் இடிந்து விழுந்தாலும் துணிச்சலுடன் இருங்கள்.

* சோர்வு, பயம், துன்பம், கவலை இவையெல்லாம் அன்பிருக்கும் இடத்தில் இருப்பதில்லை. அன்பு மனதில் குடிபுகுந்தால் நமக்கென்றும் அழிவில்லை.

* ஜாதியின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பிப்பது பாவம். நீதிநெறி தவறாத நல்லவர்களே உயர் ஜாதி. மற்றவர்கள் தாழ்ந்தவர்கள்.

- பாரதியார்

No comments:

Post a Comment