Sunday, November 16, 2014

கண்களே..கண்களை நம்பாதே..


கண்களே..கண்களை நம்பாதே..
--------------------------------

அவசரமாய் எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் எதையும் நின்று பார்த்து நிதானமாய் யோசித்து முடிவு செய்யும் பொறுமை யாருக்கும் இல்லை.

நம் அறிவுக் கண்களைக் குருடாக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் ஏமாந்து போய் விடக் கூடாது.

காந்தியையும், நேருவையும் இழிவுபடுத்தும் பல்வேறு வகையிலான முயற்சியில் சிலர் திட்டமிட்டு இறங்கியுள்ளனரோ என்கிற ஐயம் எழும்பியிருக்கிறது.

அந்த வகையில் இன்னும் பல புகைப்படங்கள் இணையதளங்களில் அவ்வப் போது உலா வரலாம்.

நாம்தான் கவனமாய் இருக்க வேண்டும்.

கண்ணால் காண்பதுவும் பொய்..காதால் கேட்பதுவும் பொய்..!
 

No comments:

Post a Comment