Sunday, October 19, 2014

வெற்றிக்கான வழி...

 

எந்த ஒரு விஷயத்திலும் மனிதன் வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார். அவர் போதித்த வெற்றிக்கான வழியை இங்கு பார்க்கலாம்.

* பட்டினி கிடக்காதீர்கள்.

* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்.

* சோம்பலை துரத்தி அடியுங்கள்.

* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள், அவற்றை அண்ட விடாதீர்கள்.

* அதிக நேரம் உறங்காதீர்கள்.

* மிக குறைவாகவும் உறங்காதீர்கள்.

* பொறாமை அறவே இருக்கக் கூடாது.

* உடல் தூய்மை அவசியம், ஆகையால் தினமும் நீராடுங்கள்.

* பேராசை படாதீர்கள்.

* மகிழ்ச்சியாக இருங்கள்.

* நல்லதையே நினைத்து வாருங்கள். நல்லவையே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடம் உண்டு.

* தைரியமாக இருங்கள்.

* பொறுமையும், விடாமுயற்சியும் நல்ல நண்பர்கள். எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க பழகுங்கள்.

No comments:

Post a Comment