Saturday, October 18, 2014

என்ன தான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், “ஹிரோ ஹோண்டா” , “ஹிரோயின் ஹோண்டா”வாக ஆகாது.
அதே மாதிரி என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், “லேடீஸ் பிங்கர்”, “ஜெண்ட்ஸ் பிங்கர்” ஆகாது.

“மகளைப்பெற்ற அப்பாகளுக்கே தெரியும்,
முத்தம் காமத்தில் சேராதது என்று”
இந்த வரிகளை சினிமாவில் எழுதுன கவிஞர் யாருயா?
உன் பேச்சை கேட்டு அவ அப்பன் முன்னாடியே அவளுக்கு முத்தம் கொடுத்துட்டேன் அவன் அருவாவோட என்னை இப்ப தேடிட்டு இருக்கான்.

பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணினா பஸ் வரும். ஆன ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா “ஃபுல்லு” வருமா….. குவாட்டர் கூட வராது…..

என்ன தான் மனுஷனுக்கு வீடு, காரு, பங்களான்னு இருந்தாலும், ரயில் ஏறணும்னா பிளாட்பாரத்திற்கு வந்து தான் ஆகணும்…. இது தான் வாழ்க்கை

பேசும் முன் கேளுங்கள்
செயல்படும் முன் யோசியுங்கள்
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
விமர்சிக்கும் முன் பொருத்திருங்கள்
வழிபடும் முன் மன்னியுங்கள்
கைவிடும் முன் முயற்சிசெய்யுங்கள்

நண்பன் 1: ஏண்டா பழத்தை சாப்டுட்டு
தோல மட்டும் எனக்கு தர
நண்பன் 2: தோல் கொடுப்பான் தோழன்
அது இதுதாண்டா உனக்கு தெரியாதா?
நண்பன் 1: ??????? ………..

டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும் ஒரு நாள் தான் வித்தியாசம். ஆனா ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும் ஒரு வருஷம் வித்தியாசம் இது தான் உலகம்.

இட்லி மாவை வைச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வைச்சு சப்பாத்தி போடலாம்
ஆன கடலை மாவை வைச்சு கடலை போட முடியுமா?

செருப்பு இல்லாம நாம நடக்கலாம், ஆன நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது….

No comments:

Post a Comment