Monday, September 29, 2014

தீ விபத்து ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்:-...

தீ விபத்து ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவிகள்:-



தீ விபத்தால் ஏற்படும் சேதங்கள் ஏராளம். இதில் இருந்து உடமை, உயிர் உள்ளிட்ட அனைத்தையும் காப்பாற்ற தேவையான முதலுதவிகள் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

எங்காவது தீப்பற்றிக்கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு “101” என்ற கட்டணமில்லா எண்ணில் தகவல் தெரிவியுங்கள். எண்ணெய் மற்றும் ஆசிட்டால் ஏற்பட்ட தீவிபத்துக்களுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்கலாம். மற்ற தீ விபத்துக்களுக்கு நீரூற்றி அணைக்கலாம்.

விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால், உடனே அவரை கீழே தள்ளி கம்பளம், போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுக்கமாக சுற்றினால், தீ அணைந்துவிடும். ஆடையில் தீப்பற்றினால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். எனவே தீப்பற்றியவர், தரையில் படுத்து உருண்டு கொடுக்க வேண்டும்.

சூடான பாத்திரங்களை தொடுவதாலோ, கொதிக்கும் எண்ணைய் தெறிப்பதாலோ ஏற்படும் சிறுபுண்கள், கொப்புளங்களை கையால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால், விஷக்கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்த கொப்புளங்களின் மீது மருந்து தடவி கட்டுப்போட வேண்டும்.

தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக்கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும். கடுமையான தீக்காயங்களுக்கு அதன்மீது காற்றுப்படாமல் மூடவேண்டும். இது வலியை குறைக்கும். தீவிபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்த துணியை அகற்ற முயற்சிக்கக்கூடாது.

கொதிக்கும் நீரில் இரண்டு கரண்டி சமையல் சோடாவை கொதிக்க வைத்து அதன்பின் தண்ணீர் வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியால் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்து போனால், மீண்டும் அந்த நீரை சொட்டுச்சொட்டாக விட்டு நனைக்கலாம்.

தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்புகலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றை கொடுக்கலாம். தீக்காயங்கள் கடுமையாக இருந்தால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

~~அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய இவ்விசயத்தை படித்ததோடு நின்றுவிடாமல் மற்றவர்களுக்கும் பகிருங்கள்... நன்றி.

No comments:

Post a Comment