Thursday, July 10, 2014



துணிவான நெஞ்சம் போர்க்களத்தில் பாதி வெற்றிக்கு ஒப்பானது

வெளுத்ததெல்லாம் பால் அல்ல.அதுபோல் கறுத்ததெல்லாம் தண்ணீரும் அல்ல.

உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அறிந்துகொள்

தாய்க்காக மனைவியை வெறுப்பவன் பழைய மிருகம்,
மனைவிக்காக தாயை வெறுப்பவன் புதிய மிருகம்  
...
எழும்போது தாங்க வருகின்றவனேல்லாம்
விழும்போது தூக்க வருவதில்லை 
....
மகன்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
சண்டைகளும் அன்பை வெளிப்படுத்துவதற்கான வழி என்று!

துன்பம் வரும் போது
விலக நினைக்கும் உறவை
விட..ுன்பத்தில் நம்முடன்
இணைய நினைக்கும் உறவு
நிலையானது......!!!!
   நீயும் நானும் Tom & Jerry போல எவ்வளவு தான் சண்டை போட்டாலும் நீ இல்லாம நா இல்ல...! நா இல்லாம நீ இல்ல...!


காதல் வந்தாலே கண்ணீரில் தான் வாழ்க்கை...

பொய்யாய் பழகுவதை காட்டிலும் நேர்மையாய் விலகுவதே சிறந்தது!!!

எல்லாரிடமும் அன்பாக இரு
ஆனால்....

யாரையும் நம்பி விடாதே
உயிரிலும் மேலாக நேசித்த உறவு
கூட உன்னை விட்டு காரணம்
இல்லாமல் பிரிந்து விடும்.....!!!

மனைவியிடம் , எதற்கெடுத்தாலும் எடுத்தெறிந்து பேசாதிர்கள் ,,

பின் அவர்கள் எதையாவது எடுத்து, எறிந்து பேசினால் தாங்க முடியாது .



வறட்டுத்தனமாக வாதிட்டு, முரட்டுத்தனமாக
எதிர்த்துச் சண்டை போட்டு சாதிக்க முடியாததை
எல்லாம் ,அமைதியாகப் பேசுவதன் மூலம் ,
அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம்
சாதித்துக் காட்ட முடியும் ....     

இழந்த இடத்தை மீண்டும் பிடித்துக்
கொள்ளலாம் !!!
ஆனால் இழந்த
காலத்தை ஒருபோதும் மீட்டுக்
கொண்டு வர முடியாது!!!....ஆதலால்
காலத்தைக் கடத்தாது காலத்தால்
அனைத்தையும்
செய்து முடியுங்கள்!!!!.

       நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

- அன்னை தெரசா ...

 நேசிக்கும் உறவுகள்
பிரிந்து சென்றாலும்,.

நேசித்த
நினைவுகள் என்றும்
நிலைத்து இருக்கும்...!!!

வாழ்க்கையில் சந்தோசம் வேண்டுமென்றால்
உன்னை நேசி......!!!

ஆனால்

சந்தோசமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை
நேசிப்பவரை உண்மையாக நேசி..!!!

அவரவர் பெறும் அனுபவங்களே
காலம் அவர்களுக்கு கொடுக்கும்
மிகப் பெரும் பரிசாகும்.

நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு
எப்போது குறைகிறதோ
அப்போது அவர் விடும் சிறு பிழைகள் கூட
பெரிய குற்றங்களாகவே தெரியும்..

நாம் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு
எப்போது அதிகரிக்கின்றதோ -
அப்போது அவர் விடும் பெரிய பிழைகள் கூட
சிறிய விடயங்களாகவே தெரியும்..

வெளிப்படையாக
பாசம் வைப்பார் அம்மா
வெளியே தெரியாமல்
நேசம் வைத்தார்
அப்பா

இன்பத்தை பகிர்ந்துக் கொள்பவர்களுக்கு
இதயத்தில் இடம்கொடு...!
துன்பத்தை பகிர்ந்துக் கொள்பவர்களுக்கு
இதயத்தையே கொடு...!

ஒரு நாள் ஆத்திரம்.. பல நாள் துக்கத்தை தரும்......


நூல்களைக் கற்கலாம். சொற்பொழிவுகளைக் கேட்கலாம். பல மணி நேரம் தொடர்ந்து பேசலாம். ஆனாலும் அனுபவமே சரியான ஆசான். அதுவே உண்மையான கல்வி. - சுவாமி விவேகானந்தர்....

மனிதன் சிரிக்கின்ற நிமிடங்கள்
பொய்யாக இருக்கலாம்,
ஆனால் அவன் அழுகின்ற நொடிகள்
நிஜமானவை..!!!


பறவைகள் கூண்டுகளில் இருந்து தப்பிக்க நினைப்பதும்,மீன்கள் மீன் தொட்டியில் இருந்து துள்ளி குதிப்பதும்,அடுத்தவர் உழைப்பில் வாழப் பிடிக்காததால் தான்.

உன் அண்டை வீட்டுக்காரனை நேசி....
ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே!

No comments:

Post a Comment