Friday, July 18, 2014

தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்....

தம்பதிகளுக்கு பத்து கட்டளைகள்....

 
 கட்டளை : 1

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன
அதனால்தான் அவ்வப்போது இடியும்
மின்னலும் உண்டாகிறது

கட்டளை : 2

உங்கள் மனைவி உங்கள்
ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக்
கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்க
ளா?
உறங்கும்போது சொல்லுங்கள் -
அதாவது நீங்கள் உறங்கும் போது.

கட்டளை : 3

திருமணம் என்பது பெரும் கொடை
அதனால்தான்
விவாகரத்து 500ரூபாய்க்குள்
கிடைக்கிறது

கட்டளை : 4

திருமண வாழ்வு பெரும் ஏமாற்றம்.
திருமணமான முதல் வருடம் கணவன்
பேச மனைவி கேட்கிறாள். இரண்டாம்
ஆண்டு மனைவி பேச கணவன்
கேட்கிறான். முன்றாம் ஆண்டில்
இருவரும் பேச ஊரார் கேட்கிறார்கள்.

கட்டளை : 5

ஒரு கணவன் தன் மனைவிக்காக தன்
கார் கதவைத்
திறந்து விடுகிறானென்றால்
ஒன்று நிச்சயம்: ஒன்று கார் புதிதாக
இருக்கும் அல்லது மனைவி...

கட்டளை : 6

ஒருவனும் ஒருத்தியும் ஒன்றாகும்
போதுதான் திருமண வாழ்வின்
துவக்கம். எந்த
ஒன்று என்று நிச்சயிக்க
முயற்சிக்கும்போதுதான்
பிரச்னையின் துவக்கம்.

கட்டளை : 7

திருமணத்துக்கு முன், ஆண் நீ
சொன்ன ஒரு வார்த்தையைப்
பற்றி யோசித்துக்
கொண்டே இரவு முழுக்க
விழித்திருப்பான். திருமணத்துக்குப்
பின் நீ பேசி முடிப்பதற்குள் அவன்
உறங்கியிருப்பான்.

கட்டளை : 8

மனிதர்கள் ஒவ்வொரு மனைவியும்
அழகானவளாயும்,
புரிந்து நடப்பவளாயும்,
சிக்கனக்காரியாயும், நல்ல சமைக்கத்
தெரிந்தவளாயும்
இருப்பதையே விரும்புகிறார்கள்.
ஆனால்
சட்டப்படி ஒருவனுக்கு ஒரு மனைவி மட்டும்தானே அனுமதி.

கட்டளை : 9

காதலும் திருமணமும்
இருவருக்கிடையில் ஏற்படும்
வேதி மாற்றமாம். அதனால்தான்
கணவனை விஷமுள்ள கழிவு போல
சில மனைவிகள் நடத்துகிறார்களோ.

கட்டளை : 10

ஒரு ஆண் திருமணம்
செய்து கொள்ளும்
வரை குறை மனிதன்தான். அதன் பின்,
அவன் முழுதாய் முடிந்தான்

No comments:

Post a Comment