Sunday, January 18, 2015

இந்த அனுபவத்தை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?




ன்னும் கொஞ்ச நேரம் 
என்னைத் 
தூங்கவிடேன்,
கெஞ்சும் இமைகளை 
அலச்சியப்படுத்தி எழுந்து,

இன்று ஒரு நாள் 
மட்டும் குளிக்காமல்விடேன்,
கேட்கும் மனசை
புறந்தள்ளி குளித்துவிட்டு,

இன்னும் இரண்டு 
இட்லி தின்னால் 
என்ன குறைந்துவிடப் போகிறாய்?
எச்சில் சுரக்கும் நாவை 
உதாசீனப் படுத்தி கைகழுவி,

ரஜினி பாட்டானாலும்
அன்றைய 
முக்கிய செய்திகளை மட்டும் 
டிவியில் கேட்டே புறப்பட்டு,

ஒரு வாரம் 
முழுதும் பாடங்களில்
ஐயிக்கியமானாலும்
சனிக் கிழமை விடுமுறைக்கு 
தவமிருக்கிறது மனசு...

ஆனால் 
வெள்ளிக்கிழமை, 
வரத்திற்கு பதிலாய்
சாபம்தான் கிடைக்கிறது!!!

நாளை பனிரெண்டாம்  வகுப்பிற்கு மட்டும்
சிறப்பு வகுப்பு.

No comments:

Post a Comment