Sunday, January 25, 2015

சுதந்திர போராட்ட நாட்களிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகள்.

சுதந்திர போராட்ட நாட்களிலிருந்து சில வரலாற்றுக் குறிப்புகள்.
இந்திய குடியரசு தினம் என்றால்”முதன் முறையாக இந்திய மக்களுக்கான சட்டத்தை இயற்றிய நாள் –  ஜனவரி  (26 Jan 1950)” என்று ஒரு வரியில் கூறிவிடலாம். ஆனால், இந்த ஒரு வரிக்கு பின் இருக்கும் வரலாற்றை கவனிக்கும் பொழுது, இந்திய அரசியல் குறித்த தெளிவான புரிதல் ஏற்படுகிறது
வரலாறு  (1857) ஆண்டு, இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டத்தில் இருந்து தொடங்குகின்றது,
  • (1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.
  • (1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.
  • (1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.
  •  (1919) – இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.
  • (1920) – தீர்மானத்தை தொடர்ந்து – முதல் தேர்தல்
  • (1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்
  • (1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள்  சி.ஆர்.தாஸ்,  சத்யமூர்த்தி, முகமது அலி ஜின்னா,  புலாபை தேசாய்.
  • (1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது
  • (1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு –  காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.
  • (1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.
  • (1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.
  •  (1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.
  • (1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.
  • (1947) – ஆகஸ்டு (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.
இந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில்  நவம்பர்  (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.
  • (1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.
இந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.
  • (1952) – முதல் குடியரசு பொது தேர்தல்!

No comments:

Post a Comment