Wednesday, April 16, 2014

பாடல்: பாடாத தெம்மாங்கு...

பாடல்: பாடாத தெம்மாங்கு
படம்: பூந்தோட்டக் காவல்காரன்
இசை: இளையராஜா
பாடகர்: பாலுஜி
பாடாலாசிரியர்: திரு. வைரமுத்து
இயக்குநர்: திரு. செந்தில்நாதன்
நடிகர்கள்: விஜயகாந்த், ராதிகா
தயாரிப்பு: ஆஸ்கர் மூவிஸ்
வருடம்: 1988

பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சு
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு
யாராலதான் நடக்குதே இங்கு அண்ணாச்சி
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி

பாடாத தெம்மாங்கு....

முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாடை போல
முன்னாடி வாழ்க்கை கல்லு பட்ட கண்ணாடி போல
என் பொண்டாட்டி வாழ்க்கை முள்ளு மேல பட்டாடை போல

பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம
தள்ளாடி நின்னேனே நான் தானே
பன்னீரும் இல்லாம கண்ணீரும் இல்லாம
தள்ளாடி நின்னேனே நான் தானே

தோளில் போட்டவ என் தாயி
என் சோகம் தீர்த்திட வாதாயி
ஏ சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல
வந்தத விட்டு நின்னேனே
நிம்மதி என்னிக்கி எங்கிட்ட வந்திடுமோ

பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே

புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலைப்போட்ட
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட
புண்ணாகிப்போன நெஞ்சில் ஒரு பூமாலைப்போட்ட
என் பொன்னான மகளே வாழ ஒரு பொன்னாரம் கேட்ட

கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே
கண்ணீரு ஏனம்மா பூமானே
கையெடுத்து தந்தேனே காவலுக்கு நின்னேனே
கண்ணீரு ஏனம்மா பூமானே

சாமி கொக்கல குழந்தை வரம்
உன்னால பிறப்புல நூறுதரம்
அட வந்தது எல்லாம் வந்ததுல்ல
ஹ போவது எல்லாம் போவதுல்ல
இன்னிக்கி நீ தந்த நிம்மதி போதுமம்மா

பாடாத தெம்மாங்கு நான் பாட வந்தேனே
பாட்டோடு சேராத என் சோகம் சொன்னேனே
பாறை விழுந்த விதை தன்னால மரமாச்சு
சேறு இருந்த நிலம் பொன்னான வயலாச்சு
யாராலதான் நடக்குதே இங்கு அண்ணாச்சி ஹ
சீராகத்தான் புரியுதா அது அண்ணாச்சி

பாடாத தெம்மாங்கு..

No comments:

Post a Comment