Thursday, April 24, 2014

ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குத் தண்டனைக் கைதிகள் இருந்தனர்.

தூக்குத் தண்டனை கொடுப்பதற்கு முன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:
1- நல்ல பெண்
2- நல்ல மது
3- லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.

மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசைகள் ;
1- நல்ல பெண்
2- நல்ல உணவு
3- ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.

அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.

மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக

1- மாம்பழம் கேட்டான்.

அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.

2- செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.

அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,

3- ''என் உடல் இங்கிருக்கும் நீதவானின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.

''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,

''என்ன சொல்கிறாய்,நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!

''கைதி அமைதியாகச் சொன்னான்,

''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்

No comments:

Post a Comment