Sunday, August 25, 2013

நான்_கொழந்தையா_இருந்தப்ப........

♥நான்_கொழந்தையா_இருந்தப்ப.........
|
>> பஸ்ல போகும்போது மரம் எல்லாம்பின்னாடியே ஓடுதுன்னு நினைச்சேன்.
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> யாரவது வந்தா பயமுறுத்தலாம்னுகதவு பின்னாடி ஒளிஞ்சிகிட்டு இருப்பேன்...ரொம்ப நேரமா யாரும் வராததால கடுப்பாயி வெளிய வந்துருவேன்......
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
> >வயித்துக்குள்ளநாம சாப்பிடறதெல்லாம் அரைக்க மெஷின்இருக்குன்னு நம்பினேன்..................
* நான் குழந்தையா இருந்தப்ப.
|
>> திராட்சை விதையை முழிங்கிட்டேன்...வயித்துக்குள்ளஇருந்து மரம் முளைக்க போகுதுன்னு ஒவ்வொரு நாளும் பயந்தேன்.............
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> லீவுநாள்ல ஓனான பிடித்து மூக்குபொடி போட்டு சாமியாட விடுவேன்..
என்னா டான்ஸ்......
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> நிறைய பொண்ணுக முத்தம் குடுத்தாங்களாம்:-)....
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> ’Foreign’ என்பது ஒரு நாட்டின் பெயர் என நினைத்திருந்தேன்..........
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> வளராம குட்டியா குள்ளமா இருந்தேன் ! எல்லாரும் பெரிசு பெருசா இருந்தாங்க.........
* நான் கொழந்தையா இருந்தப்ப.
|
>> தப்பு செஞ்சா நெஜமாவே சாமி கண்ணைகுத்திடும்னு, தூங்கும் போதும் கண்ணை மூடிகிட்டே தூங்கினேன்............
* நான் கொழந்தையா இருந்தப்ப.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கொழந்தையாதான் இருந்தேன் ..

No comments:

Post a Comment