Tuesday, August 27, 2013

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.

நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும்.

1.ஏண்டா லேட் ?
லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்)

2.எங்க இருக்க?
பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க ?)

3.எப்ப முடியும்?
இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்)

4.சாயங்காலம் எப்ப வருவ?
வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் )
5.சாப்புட என்ன வேணும்?

எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?)
6.எங்க கிளம்பிட்ட?
வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீவரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா)

7.காலைல எப்ப எழுந்தறிப்ப?
முழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..)

8.இங்க இருந்த தைலத்த பாத்தியா?
பாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப.
( இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாளைலவெடிச்சுரும்.

நீங்களும் இப்படி என்றால் நீயும் என் இனமே.

No comments:

Post a Comment