Wednesday, May 14, 2014

முடி கொட்டுவதை நிறுத்தி , அடர்த்தியாக வளர - திரிபலாதி தைலம் ...


முடி கொட்டுவதை நிறுத்தி , அடர்த்தியாக வளர - திரிபலாதி தைலம்

தேவையான மருந்துகளும் செய்முறையும்:

1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – 90 கிராம்
2. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – 90 கிராம்
3. நெல்லிமுள்ளி – 90 கிராம்
4. சீந்தில்கொடி – 90 கிராம்
5. தாழம் விழுது – 90 கிராம்
6. வேங்கை – 90 கிராம்
7. சித்தாமுட்டி வேர் – 90 கிராம்
8. ஆமணக்கு வேர் – 90 கிராம்
9. முடக்கத்தான் வேர் – 90 கிராம்
10. தண்ணீர் – 12.800 லிட்டர்


இவைகளைக் கொதிக்கவைத்து 3.200 லிட்டர் ஆகக் குறுக்கி வடிகட்டி அத்துடன்

1. நல்லெண்ணெய் – 800 கிராம்
2. கரிசாலைச்சாறு – 800 கிராம்
3. நெல்லிக்காய்ச்சாறு – 800 கிராம்
4. பசுவின் பால் – 1.600 கிலோ கிராம்

இவைகளைச் சேர்த்து அதில்

1. கோஷ்டம் – 6.750 கிராம்
2. அதிமதுரம் – 6.750 கிராம்
3. பதிமுகம் – 6.750 கிராம்
4. விளாமிச்ச வேர் – 6.750 கிராம்
5. சந்தனம் – 6.750 கிராம்
6. கோரைக்கிழங்கு – 6.750 கிராம்
7. ஏலக்காய் – 6.750 கிராம்
8. இலவங்கப்பத்திரி – 6.750 கிராம்
9. சடாமாஞ்சில் – 6.750 கிராம்
10. அமுக்கராக்கிழங்கு – 6.750 கிராம்
11. சித்தாமுட்டிவேர் – 6.750 கிராம்
12. சீந்தில்கொடி – 6.750 கிராம்
13. நன்னாரி – 6.750 கிராம்
14. தேவதாரு – 6.750 கிராம்
15. இலவங்கம் – 6.750 கிராம்
16. கிரந்தி தகரம் – 6.750 கிராம
17. கிச்சிலிக்கிழங்கு – 6.750 கிராம்
18. நீல ஆம்பல் கிழங்கு மற்றும் , இது போன்ற கிழங்குகள் – 6.750 கிராம்
19. அஞ்சனக்கல் – 6.750 கிராம்
20. அவுரிவேர் – 6.750 கிராம்

இவைகளை அஞ்சனக்கல் நீங்கலாக அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சி மத்யம பாகத்தில் இறக்கி வடிகட்டவும். அஞ்சனக்கல்லைப் பொடித்துப் பாத்திர பாகமாகப் போட்டு பத்திரப்படுத்தவும்.


குறிப்பு:

முடக்கத்தானைக் கஷாயத்தில் உபயோகிப்பதற்கு பதிலாக அதன் பசுமையான சாறு 800 கிராம் சேர்ப்பது சம்பிரதாயம்.


பயன் படுத்தும் முறை:

மேற்பூச்சாக, வெளி உபயோகத்திற்கு மட்டும்.
தீரும் நோய்கள்:

நரை , வழுக்கை, முடியுதிரல் (அ) கொட்டுதல், ஜலதோஷம், பீனிசம், தலைவலி, தலை நோய்கள், கண்நோய்கள் மற்றும் கழுத்திற்கு மேலுள்ள உறுப்பு நோய்கள்.


தெரிந்து கொள்ள வேண்டியவை

1.முடி வளர, முடி அடர்த்தியாக வளர -இந்த தைலம் நன்றாக உதவும்

2.உஷ்ண உடம்பாய் இருந்தாலும் -அடிக்கடி சளி ஜலதோஷம் பிடிக்கும் உடம்பாய் இருந்தாலும் -கவலை இன்றி பயம் இன்றி தேய்க்கலாம் ..

3.குளிர்ச்சி தைலம் என்றாலும் இந்த தைலத்தால் சளி பிடிக்காது

4.திரிபலா தைலம் -கண்களுக்கு ஒளி கூட்டும் -கண்களுக்கு நல்லது

5.மண்டை பீனசதில் வேலை செய்யும் மருந்து -தலை முடி வளர செய்வதில் -ஆச்சிர்யம் ஆனால் உண்மை

6.எனக்கு தெரிந்து இந்த தைலம் -ஏறு நெற்றி உள்ள வழுக்கை தடுப்பதில் நல்ல பலன் தரும்

(Reference-ஸஹஸ்ரயோகம் - தைலப்ரகரணம்)
நன்றி – Ayurvedamaruthuvam.com

No comments:

Post a Comment