Saturday, August 2, 2014

ஆடி மாதத்தின் முக்கிய சிறப்பு ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.

ஆடி மாதத்தின் முக்கிய சிறப்பு ஆடி மாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்கு நாள்.



ஆடிப் பெருக்கு நன்னாளில், நதிப் பெண்ணான காவிரியை வணங்கினால் விவசாயம் செழிப்பது போல், கன்னிப்பெண்கள் இந்த நாளில் காவிரி நதிக்கரையில் வழிப்பட்டால் மனசுக்கு ஏற்ற மன்னவர் வாய்ப்பர், சுமங்கலிகள் வழிபட்டால் வம்ச விருத்தி, கணவனின் ஆயுள் கூடும் என்பதும் ஐதீகம்.

தமிழகத்தில் காவிரி நதி ஓடுகிற ஊர்களில் ஆடிப் பெருக்கு வைபவம் நடக்கிறது. காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலை, திருமாங்கல்யம், பழங்கள், கருமணி, சீர்வரிசை பொருட்கள், காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரியை வணங்கி, படைத்த மஞ்சள் சரடை பெரியவர்களிடம் கொடுத்து, பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகையிலும் கட்டிக்கொள்வார்கள்.

இதனால் வாழ்வில் தொட்டதெல்லாம் வளமாக அமையும் என்றும், குறிப்பாக புதுமணத் தம்பதியர்கள் காவிரிக் கரையில் குடும்பத்தோடு வந்து, திருமணத்தின் போது அணிவித்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு, தாலிபிரித்து கட்டும் சடங்கு காவிரிக் கரையில் செய்வதால், காவிரிக் கரையில் தண்ணீரில் புரண்டோடுவதுப் போல் நம் வாழ்விலும் இன்பம் பெருகுமாம்.

ரெடிமேட் காவிரித் தண்ணீர் பாக்கெட்'ங்கறது இப்ப கேட்க புதுசா இருந்தாலும், போற போக்கை பாத்தா வரப்போற வருஷங்கள்ல காவிரித் தண்ணிய பாக்கெட்ல வித்தாலும் ஆச்சர்யப்படறதுக்கில்லை..!

No comments:

Post a Comment