Monday, February 2, 2015

எச்சரிக்கை...

#‎எச்சரிக்கை‬
தாய் தமிழ் உறவுகளுக்கு மன வேதனையுடன்
என்னைப் போன்ற நாம் தமிழர் பிள்ளைகளுக்கு எங்களின் நலனை விட இனத்தின் நலனே முக்கியம் என்று அதிலும் நான் ஈழத்தையும்,தலைவரையும் என் உயிரினும் மேலாக நேசித்து அவர்களை என் உடலிலே சுமந்துகொண்டு திரிபவன்,ஈழத்து உறவுகளை உயிருக்கு இணையாக நேசிப்பவன்,நான் வைத்துள்ளது ஒரு சிறிய பெட்டிக்கடை தான் இருந்தாலும் எந்த போராட்டம்,கூட்டம்,ஆர்ப்பாட்டம் என்றாலும் கடையை அடைத்துவிட்டு இனத்தின் விடுதலைக்கான பயணத்தில் பயணம் செய்வேன்,என் சக்திக்கு மீறி எனது பங்களிப்பை செய்து வருகிறேன்,இப்படி இருக்கும் நிலையில் இங்கு இருப்பவர்கள் பலர் நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் என்றால் தன்னை ஈழத்து தமிழச்சி என்று சொல்லி பலர் ஏமாற்றுகின்றனர் இதுபோல கடந்த வாரம் அண்ணன் திருச்சி ‪#‎துரைபாண்டியன்‬ சொன்னார் என்பதற்காக அவர் அந்த ஈழத்து அக்கா மீது வைத்த நம்பிக்கையில் என்னிடம் ஒரு பார்சல் வாங்கிவைக்க சொன்னார் தன்னுடைய கணவர் கனடாவில் இருந்தது மருந்து மற்றும் திரவியங்கள் கொடுத்து அனுப்பி உள்ளார் குருவியிடம் 48௦௦பணம் கொடுத்து அந்த அக்கா உன்னிடம் முப்பதாம் தேதி வாங்கிகொள்வார்கள் என்று சொன்னார் உண்மையை சொல்லப்போனால் என்னிடம் அப்போது பணமே இல்லை ஆனால் அண்ணன் சொன்னாரே என்றும் ஈழத்து அக்காவாயிற்றே என்று மாதத்தின் கடைசி நாள் வங்கி கடன் தவணைத் தொகை கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அந்த பொருளை வாங்கி வைத்து விட்டேன்,பொருளை நான் கூட வாங்கவில்லை என் அப்பாவிடம் பணம் கொடுத்துவிட்டு அப்பாவிடம் குருவி எண் கொடுத்து அந்த பார்சல் வாங்கி வையுங்கள் அப்பா என்று சொன்னேன் அவரும் வாங்கி வைத்து விட்டார்,முப்பதாம் தேதி வந்தது துரை அண்ணனுக்கு அழைத்தேன் அண்ணன் சொன்னார் தம்பி அவர்களிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று பின்பு நீண்ட நேரம் அழைத்தும் யாரும் எடுக்கவில்லை பின்பு அலைபேசி அனைத்து வைக்கப்பட்டது உடனே துரைபாண்டியன் அண்ணன் அந்த பார்சல் பிரித்து பார்க்க சொன்னார் எனக்கு அது தவறு என்று தோணியது பின்பு அண்ணன் சொன்னார் என்று பிரித்து பார்த்தல் அதன் உள்ளே மூன்று கோதுமை பாக்கெட்,உப்பு பாக்கெட் இருந்து பார்த்து அதிரிச்சி அடைந்தேன்,கண் தானாக கலங்கியது, அந்த அக்கா தனிசெய்தில் போய் நான் பேசினேன் எனக்கு அம்மை போட்ட காரணத்தால் சென்னைக்கு வர முடியவில்லை,நீங்கள் உங்கள் வங்கி கணக்கு முகவரி அனுப்புங்க பணம் இட்டுவிடுகிறேன் என்று சொன்னார் நானும் கொடுத்தேன்,கடைசிவரை பணம் போடவில்லை என்னை பிளாக் செய்து விட்டு போய்விட்டார்கள்,இதனால் வங்கி கடன் தவணைத் தொகை கூட கட்ட முடியாமல் திணறினேன்,இந்த ‪#‎bhavani_sree_eelam‬ என்ற பெண்மணி என்னை மட்டும் ஏமாற்றவில்லை,இன்னும் மூன்று பேர் ஏமாந்து உள்ளனர் எனக்கு தெரிந்து இவர்கள் மட்டுமே,இன்னும் தெரியாதவர்கள் எத்தனை நபரோ,இன்னும் இவர்கள் எத்தனை பேர் ஏமாற்ற போகின்றன தெரியவில்லை இனி ஏமாறாமல் இருக்க தான் இந்த பதிவு....
‪#‎அக்கா‬ உட்பட ஈழத்து உறவுகள் உங்களுக்கு உதவி தேவைபட்டால் கேளுங்கள்நாம் தமிழர் பிள்ளைகள் முடிந்த அளவிற்கு செய்கிறோம் குறிப்பாக நான் கடனுக்கு வாங்கியாவுது உங்களுக்கு உதவுவேன் அதைவிட்டுவிட்டு இதுபோன்ற நம்பிக்கை துரோகம் மட்டும் இனி செய்ய வேண்டாம்,மீண்டும் மீண்டும் துரோகத்தால் எங்களை வீழ்த்தவேண்டாம்...
‪#‎தமிழரின்‬ தாகம் தமிழீழ தாயகம்..

நல்ல தம்பி

No comments:

Post a Comment