Monday, December 2, 2013

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக்
கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறைய
பொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய
இனிப்புகளும் இருந்தது.

அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள்
எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன் நீ வச்சு இருக்கிற
இனிப்புகள் எல்லாத்தையும்
எனக்கு தர்ரியா என்று கேட்டான். குட்டி பெண்ணும்
அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான்.குட்டி பெண்
எல்லா இனிப்புகளையும்
கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள்
எல்லா இனிப்புகளையும் நம்மிடம்
தந்திருப்பாளா இல்லை நாம் ஒளித்து வைத்தது போல்
அவளும் ஏமாற்றி இருப்பாளா என்று நினைத்துக்
கொண்டே உறக்கம் இல்லாமல் அவஸ்த்தைப்பட்டா ன்.

நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல்
நம்பிக்கை வைக்கவில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம்
காட்டும் அன்பின் மீது சந்தேகம்
இருந்து கொண்டே இருக்கும்.

இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும்
இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும்
பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத
அன்பை காட்டுங்கள்.... !!!

1 comment: